-
9th June 2014, 12:24 PM
#31
வாசு சார்
நம்ம திரியில் எழுதும் போது சற்று யோசித்து எழுத வேண்டி இருக்கிறது
நீங்கள் மறு பிறவி பாடலில் சொன்னது போல் கம்பை தூக்கி கொண்டு வந்து விடுவார்கள் எல்லோரும்
நாம் ஏதோ தவறு செய்தது போல
நாம் வெறும் அம்பு தானே
-
9th June 2014 12:24 PM
# ADS
Circuit advertisement
-
9th June 2014, 12:47 PM
#32
அதே போல் தொட்டதெல்லாம் பொன்னாகும் திரைபடத்தில்
இன்னொரு பாடல் பாலா சுசீலா combination விஜய பாஸ்கர் மியூசிக்
ஜெய் ஜெயசித்ரா ஜோடி
பாடல் தான் யார் என்று தெரியவில்லை
இந்த கால கட்டத்தில் நிறைய பாடல் பஞ்சு அருணாசலம் எழுதினர் என்று கேள்வி
"பனி மழை மேகங்கள் பொழிகின்ற குளிரினால் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புது குரல் or குறள் கொடுக்கட்டுமா "
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா கெட்டது
-
9th June 2014, 04:10 PM
#33
vairam
திரு ராகவேந்தர் சார்
வைரம் படத்தில் உள்ள "இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோஹம்" பாட்டை பற்றி
எழுதி இருந்தீர்கள் . ரொம்ப மகிழ்ச்சி மிக அருமை யான பாடல்
பாடல் இறுதியில் வரும் ஒரு பருகா சான்சே இல்லை
"இது காமன் பூஜை என்றால் ஆரத்தி எங்கே" - ஜெய
"அதை காமன் கேட்டு விட்டான் அவனிடம் தந்தேன்" - பாலா
"எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பதை கண்டேன்" - ஜெயா
"இங்கே நாள் பார்கவா இல்லை நான் பார்கவா " - பாலா
"ஆ ஆ ஹ " ஹம்மிங்
"அவசரம் என்ன"
கொஞ்சம் கவாலி டைப் கலந்தது
-
9th June 2014, 05:21 PM
#34
Junior Member
Newbie Hubber
Mr. Vasudevan,
On my request, you have posted oh mere dhil rupa from the movie suriyagandhi, for that my many many thanks for you.
You posted complete details about the story, song situation, still photos, complete lyric lines and the video, a complete treat from you.
I like your dedication in your passion.
stl.
-
10th June 2014, 03:18 AM
#35
Junior Member
Newbie Hubber
வாசு,
நிச்சயம் இங்கு பங்கு பெற்று ,அபூர்வ பாடல்கள் பற்றி அலசுவேன்.நீ குறிப்பிட்டது போல 55 முதல் 80 வரை தமிழ் திரை கண்ட அனைத்து பாடல்களையும் prompt இல்லாமல் முழுக்க என்னால் பாட முடியும்.
ரவி திரியிலும் பங்களிப்பேன்.(ஜெமினி திரியிலும்).
ஆனால் ,இதெல்லாம் வார இறுதி பொழுது போக்கு போன்றது. நம் தாய் வீடு நம் திரிதானே?ஆயிரம் சச்சரவுகள் வந்தாலும் தாய் வீடு தாய் வீடுதான்.உன்னுடைய ஆடை அழகர்,கதாயகியர் வரிசை,சண்டை காட்சி எல்லாம் தொங்கலில் விட்டு,இங்கு வந்து முழு நேரம் இருப்பது.....என்னமோ போ. ரவி சொல்வது போல,துளி விஷம் நீ வெளியேற காரணமாக முடியாது.அதிக பாராட்டு பெற்ற பதிவு அது.கொண்டாட பட்டது.
பாராட்டுதல்களை எதிர்பார்த்திருந்தால் நான் இரண்டாயிரம் பதிவுகளை இட்டே இருக்க முடியாது.என் உழைப்புக்கேற்ற அளவு நான் ஒன்றும் பெரிதாக கொண்டாட பட்டதில்லை.ஆனால் ,நம்மிடையே வாழ்ந்த ,உலகத்திலேயே கண்டிராத,காண முடியாத அபார திறமையுள்ள தமிழ் தெய்வத்தை போற்றும் ,அவர் எனக்களித்த மாலை கொடைகளுக்கு காணிக்கையாக,அந்த தெய்வத்துக்கு நான் பண்ணும் சத்திய பூஜை.
உனக்காக நாங்கள் அங்கு காத்திருக்கிறோம் .வந்து விடு.
-
10th June 2014, 07:36 AM
#36
Senior Member
Seasoned Hubber
கிருஷ்ணா
தாங்கள் மிக அருமையாக இரு மாங்கனி பாடலை விவரித்து எழுதியிருப்பது ரசிக்க வைக்கிறது. அது மட்டுமல்லாமல் பழைய பாடல்கள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் எந்த அளவிற்கு ஆழமாய் ஊடுருவியுள்ளன என்பதற்கு சான்றாகவும் விளங்குகிறது.
வாசு சாரின் பதிவுகளை நடிகர் திலகம் திரி எந்த அளவிற்கு மிஸ் பண்ணுகிறது என்பதற்கு இந்த்த் திரியின் வரவேற்பே கட்டியம் கூறும்.
நம் மனதை மயக்கும் மற்றோர் பாடல், இதுவும் எல்.ஆர்.ஈஸ்வரியின் மயக்கும் கானமே. எதிர்காலம் திரைப்படத்தில் இடம் பெற்ற மௌனம் தான் பேசியதோ.. இப்பாடலை விவித்பாரதியில் தினமும் இரவு 8.30 மணிக்கு விளம்பரம் செய்வார்கள். இரண்டாம் சரணத்தில் இருப்பது ஒரு மனது வரிகளுக்கு முன் ஒரு இசைக் கருவி ஒலிக்கும். அது தான் விளம்பரத்தில் இடம் பெறும். அப்படியே பசுமையாக நினைவில் உள்ளது.
மறக்க முடியாத பாடல், மனதை விட்டு அகலாத பாடல்
இப்பாடலின் ஆடியோ மட்டும் கேட்க
http://www.inbaminge.com/t/e/Ethirkalam/
Last edited by RAGHAVENDRA; 10th June 2014 at 07:40 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th June 2014, 07:47 AM
#37
Senior Member
Seasoned Hubber
மாடர்ன் தியேட்டர்ஸ் வேதா இணையில் ஒவ்வொரு படமும் பாடலும் காலத்தை வென்று நிற்பவை. அந்நிய மெட்டை எடுத்தாலும் அதிலும் தன் ஆளுமையைப் புகுத்தி தனித்துவமாக சில சமயம் ஒரிஜினலை விட அருமையாக பாடலை அமைத்து விடுவார் வேதா. என்கிற வேதாச்சலம் அவர்கள். அப்படி ஒரு பாடல் தான் காதலித்தால் போதுமா படத்தில் இடம் பெற்ற கொஞ்சம் நில்லடி பாடல், டி.எம்.எஸ்., பி.சுசீலா இவர்களின் குரலின் சிறப்பை இன்னும் அருமையாக சித்தரிக்கும். இப்பாடலின் சிறப்பை விவரிக்க பல பக்கங்கள் தேவை. இதோ நமக்காக இப்பாடல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th June 2014, 10:17 AM
#38
அன்பு ராகவேந்தர் சார்
இனிய காலை வணக்கம்
உங்கள் reply மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது
"மௌனம் தான் பேசியதோ " என்ன படம் என்று தெரியாமல் சென்ற வருடம் சில நாள்கள் தவித்து கொண்டு இருந்தேன் . பிறகு ஒரு நாள் ஈஸ்வரி ஹிட்ஸ் பாடல்களை பற்றி ஒரு ப்ளாக் படித்த போது
எதிர்காலம் என்று அறிந்தேன் இப்போது அதை நினவு படுத்தி விட்டர்கள் . இந்த பாடலில் கூட ஒரு ஹம்மிங் முதல் சரணம் முடிவில் என்று நினவு "ல ல " என்று வரும்
மிக்க நன்றி
இதே போல் "உனக்கும் எனக்கும் உறவு தந்தது யாரோ " என்று ஒரு பாடல் ஜெய் நடித்த காதலிக்க வாங்க என்று நினவு
TMS ஈஸ்வரி combination
இறுதியில் ஒரு சூப்பர் ஹம்மிங் "ஆஹா ஓஹோ
-
10th June 2014, 10:20 AM
#39
வாசு சார்
நீங்கள் எழுதிய சூரிய காந்தி படம் நேற்று இரவு சன் லைப் தொலை கட்சியில் நீங்கள் எழுதிய படியே வரிக்கு வரி காட்சி அமைப்பு
வாசுவா கொக்கா
-
10th June 2014, 10:46 AM
#40
Junior Member
Seasoned Hubber
Dear Vasu sir,
Its a pleasure to see you back, thread is too good
Bookmarks