Page 398 of 400 FirstFirst ... 298348388396397398399400 LastLast
Results 3,971 to 3,980 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3971
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    உணமையிலேயே மலைக்க வைக்கும் சாதனைதான் என்பதில் எள்ளளவும் ஐயமேயில்லை. இத்தகைய சாதனையை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திய தங்களையும், இச்சாதனைக்கு மிக மிக உறுதுணையாக நின்ற கிருஷ்ணாஜி, ராஜேஷ் சார், ராகவேந்தர் சார், மதுசார், சின்னக்கண்ணன் சார், வினோத் சார், தூக்கத்திலும் என்னை மறக்காத கோபால் சார், முரளி சார் மற்றும் இந்த திரியில் பங்களிப்பு செய்த அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும், அந்த அளவுக்கு அனைவரும் தங்கள் உழைப்பக் கொட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நன்றிகள்.

    வேலைப்பளுவினாலும், உடல்நலக் குறைவினாலும் கடந்த சில நாட்களாக பங்கேற்று பதிவுகள் இட முடியவில்லைஎன்றாலும், அனைத்துப்பதிவுகளையும் படித்து முடித்து விட்டேன். மலைத்துப்போனேன் என்பதே உண்மை. எவ்வளவு விவரமான, விஷயமுள்ள பதிவுகள்..!!!. அவற்றையெல்லாம் நீங்கள் அழகாக பட்டியலிட்டு விட்டீர்கள். தமிழ்ப்பாடல்கள் சம்மந்தமான (ஏன்..., கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி சம்மந்தமாகக்கூட) தேவைப்படும் விவரங்களும் இந்த திரிக்குச்சென்றால் கிடைக்கும் என்ற அளவில் பாடல்கள் அலசப்பட்டிருக்கின்றன.

    தங்களின் 'இன்றைய ஸ்பெஷல்' மற்றும் 'ஜஸ்ட் ரிலாக்ஸ்' பாடல் வரிசைகளும், கோபால் அவர்களின் 'ராக ஆலாபனை' பதிவுகளும், ராகவேந்தர் அவர்களின் 'பொங்கும் பூம்புனல்' மற்றும் 'உள்ளத்தை அள்ளித்தா' பதிவுகளும், ராஜேஷ், மது, சின்னக்கண்ணன் ஆகியோரின் அருமையான தமிழ் மற்றும் பன்மொழிப் பாடல் ஆய்வுகளும், வினோத் அவர்களின் பொம்மை இதழ் ஸ்டில்களுடன் கூடிய வீடியோக்களும் (சினி டைரி ஆவணப் பதிவுகளுக்கு ஸ்பெஷல் நன்றி வினோத் சார்) திரியை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றுள்ளது.

    கிட்டத்தட்ட பாதிக்கு மேல்வரை ஆக்டிவ்வாக இருந்த நான், மேற்கூறிய காரணங்களால் பாகத்தின் இறுதியில் சுறுப்பாக பங்கேற்க முடியாமல் போனதற்காக பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். மேலும் நான் துவங்கிய 'நாயகியரின் போதைப்பாடல்கள்' வரிசையையும் தொடர்ந்து தர முடியவில்லை. மன்மதலீலைப் பதிவுகளையும் முழுமையாக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. இரண்டாம் பாகத்தில் நிச்சயம் சுறுசுறுப்பாக பங்கேற்க முடியும் என்று நம்புகிறேன்.

    எந்த வித சலசலப்பும், சண்டைகளும் இன்றி திரி கலகலப்பாக சென்றதற்குக் காரணம், நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற கர்வம் இல்லாமையும், 'சில' திரிகளில் காணப்படுவதுபோல ஒருவரை ஒருவர் காலைவாரும் செயல்கள் இல்லாமையுமே. பி.சுசீலா - எஸ். ஜானகி சர்ச்சை கூட அருமையாக தவிர்க்கப்பட்டது.

    துவக்கத்தில் ராட்சசி புகழை அதிகம் பாடுவதாக அமைந்த திரி இறுதியில் இசையரசியின் புகழ்க்கொடியை உயர்த்திப்பிடித்ததில் முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக முரளி சார் எழுதிய 'மனம் படித்தேன்' பாடலுக்கான மேலதிக ஆய்வு. (முரளி சார்.., நானெல்லாம் மாங்கு மாங்கென்று நூறு பதிவுகள் எழுதுவதும் சரி, நீங்கள் ஒரு பதிவு எழுதுவதும் சரி. அத்தனை முழுமை உங்கள் பதிவில். 'மனம் படைத்தேன்' என்ற இடத்தில் வரும் ஆலாபனை போலவே 'அம்மம்மா ஆ.ஆ.ஆ. அம்மம்மா காற்றுவந்து ஆடைதொட்டுப்பாடும்' என்ற இடத்திலும் இசையரசி அசத்தியிருப்பார்).

    வாசு சார், ஒவ்வொன்றையும் எப்படிச்செய்ய வேண்டும் என்பதை தங்களிடம் கற்றுக்கொள்வது போலவே 'நன்றிப்பதிவு' எப்படிப்பதிவிட வேண்டும் என்பதையும் தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஒரு முழுமையான நன்றிப்பதிவு. எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு, இறுதியில் ஒரு தனிப்பதிவிட்டு நடிகர்திலகத்துக்கு நன்றி தெரிவித்தீர்கள் அல்லவா?. அங்கு நிற்கிறீர்கள் வாசு சார்.

    அடுத்த பாகத்தை அருமையாக துவக்கி வைக்க இருக்கும் அன்பு கிருஷ்ணாஜி அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்...

  2. Thanks gkrishna thanked for this post
    Likes Richardsof, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3972
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாங்கோ வாங்கோ கார்த்திக் சார்.. உடல் நிலை இப்போ தேவலையா..

    என்ன தான் சர்க்கரைப் பொங்கல்ல வெல்லம் (சட்னு இங்க்லீஷ் பெயர் நினைவில் வரலை ஹை நினைவுக்கு வந்துடுச்சு ஜாக்கரி சரி இங்க்லீஷ்லயே jaggery), மில்க், ரைஸ்,நெய் இன்ன பிறன்னு போட்டாலும் குங்குமப் பூ போட்டா தான் ஜம்னு நாவைச் சுண்டி இழுக்கற மணம்+கலர்+சுவை இன்னும் கூடி இருக்கும்.. அதே போலத்தான் இவ்ளோ நாளா குங்கும்ப் பூ போடாமயே கொஞ்சம் அஜிஸ் செய்து கொண்டிருந்தோமாக்கும்

    குங்குமப் பூவே.. தங்கமே உம்மைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே..

    //மேலும் நான் துவங்கிய 'நாயகியரின் போதைப்பாடல்கள்' வரிசையையும் தொடர்ந்து தர முடியவில்லை. மன்மதலீலைப் பதிவுகளையும் முழுமையாக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. // எங்களுக்கும் தான்..

    வாங்க வந்து இரண்டாம் பாகத்தில் உங்கள் பங்கினைத் தருக தருக..
    Last edited by chinnakkannan; 14th August 2014 at 01:20 PM.

  5. #3973
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like


    1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்த வாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது. எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாக இருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
    இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியை சுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு பொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

    இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர் கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும் இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

    எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப் பயன்படுத்தியிருப்பார்கள்.

    இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத் தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின் தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.

    பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரை அட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

    பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26 நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவது இடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி 2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம் தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46 நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09 நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில் பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசை கேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.

    அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால் யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின் எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் கணேஷும் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் அற்புதமாக இசைத்துள்ளார்.

    Courtesy- ilavenirkaalam
    Last edited by esvee; 14th August 2014 at 12:57 PM.

  6. Thanks gkrishna thanked for this post
    Likes chinnakkannan, gkrishna liked this post
  7. #3974
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அருமை எஸ்வி சார்
    மன்னிக்க வேண்டுகிறேன் .இந்த பாடலை நான் குறிப்பிட மறந்து விட்டேன் நிச்சயம் பதிவை எடிட் செய்ய முடியுமானால் இந்த பாடலையும் சேர்த்து விடுகிறேன்
    gkrishna

  8. #3975
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //பாவை பாவை தான் ஆசை ஆசை தான் //
    //ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு //

    க்ருஷ்ணா சார் எஸ்வி சார்..சூப்பர் பாடல்கள்.. அழகிய ரைட் அப்ஸ்.. நன்றி

  9. #3976
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாங்கோஸ் இசையில் வேறு பாடல்கள்.. எங்கே சொல்லுங்கள்.. இன்னும்

  10. #3977
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    புதிய வரிசையைத் தொடங்கும் கிருஷ்ணாஜி அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    வாணி ஜெயராம் பாடிய ஒரு ஆங்கில பாடல் , :HAPPIEST MOMENT" என ஆரம்பிக்கும் வெள்ளை மனைவி (BiLi Hendthi ) படத்தின் பாடல் உங்களுக்கு பரிசு.
    பெங்களுரு மேல் நாட்டு மருமகளா ?? தெரியவில்லை..



    பார்த்து மகிழுங்கள். வாணி அவர்களின் பல மொழி புலமைக்கு இது அச்சாரம்.

    நன்றி
    SSS என்கிற ச.சுந்தரபாண்டியன்
    Last edited by sss; 14th August 2014 at 02:44 PM.

  11. Thanks gkrishna thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #3978
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    vasu ji

    லேட்டஸ்டாக நம்ம திரியில் பதிந்திருந்த "அவளும் பெண்தானே" பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருது.
    " நன்றியைச் சொல்ல நான் என்ன செய்தேன்.
    'நன்றியைச் சொல்ல நான் என்ன செய்தேன்'- இது மதுண்ணா.

    'உண்மையை மதித்தேன்
    வேறென்ன செய்தேன்?

    இது வாசு.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #3979
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பொழுதும் விடியும் பூவும் மலரும்
    பொறுத்திருப்பாய் கண்ணா

    ஆகா! அருமையான பாடல். 'நெஞ்சுக்கு நிம்மதி' தரும் ஆறுதல் பாடல். தேங்க்ஸ் மதுண்ணா.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #3980
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    மிக்க நன்றி! 'பொண்ணு மாப்பிள்ளை'யை ரசித்ததற்கு இன்னும் நன்றி!

    //ஒரு சினிமா பாடலை அதுவும் நகைச்சுவையான பாடலுக்குள் ஒரு ஜூகல்பந்தியே நடத்தி விட்டார் இசையமைப்பாளர்//

    சத்தியமான வார்த்தை! இனிமை என்றால் அப்படி ஒரு இசைக்கருவிகளின் இனிமை. இடையில் ஒலிக்கும் டீங்டிடிடிடிங் டிடிடிடிங் கிடாரின் ஓசை சுகமோ சுகம்.

    ஆளுக்கொரு வீடு படப் பாடலை அன்புப் பரிசாக அளித்து ஆனந்தப் படுத்தியதற்கு நன்றிகள் சார். ஷிபிட்டில் இருக்கும் போதே டவுன்லோட் செய்து கேட்டு விட்டேன். உங்கள் பதிவை இரண்டு முறை படித்துவிட்டு பின் இப்பாடலைக் கேட்கும் போதுதான் புரிகிறது நீங்கள் சொல்லியிருந்தபடி இந்தப் பாடலில் இசைக்கருவிகளின் ஆதிக்கம் எந்த அளவிற்கு பங்கு வகித்து இருக்கிறது என்று. அருமை.

    பாடலின் முழு வரிகளுக்கும் தேங்க்ஸ். எல்லோரையும் பாடல் மூலம் வாழ்த்தும் நீங்களும் வளமோடு வாழ அனைவருடனும் சேர்ந்து வாழ்த்துகிறேன். அடுத்த வீட்டுப் பெண்ணும் அமர்க்களமாக இருக்கிறாள்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •