Page 397 of 400 FirstFirst ... 297347387395396397398399 ... LastLast
Results 3,961 to 3,970 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3961
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இன்னுமொரு பாட்டு வ. நி. சி யில் ..எப்போது கேட்டாலும் கொஞ்சம் மனசை உருக்கும்..

    *

    தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில்
    செண்பகதோ ட்டத்திலே,
    பார்த்திரு ந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
    பாங்கியோ டெ ன்றுசொன்னாய்.
    வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா
    மார்பு துடிக்குதடீ!

    பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே
    பாவை தெரியுதடீ!

    மேனி கொதிக்குதடீ-தலை சுற்றியே
    வேதனை செய்குதடீ !
    வானி லிடத்தையெல்லாம்-இந்த வெண்ணிலா
    வந்து தாழுவுது பார்.
    மோனத் திருக்குதடீ-இந்த வையகம்
    மூழ்கித் துயிலினிலே.
    நானொருவன் மட்டிலும் -பிரிவென்பதோர்
    நரகத் துழலுவதோ?

    *
    மகாகவி மகாகவிதான்..

  2. Likes gkrishna liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3962
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நேரான நெடுஞ்சாலை ஓரிடத்தில் இரு கூறாகப் பிரிவதுண்டு
    கூறாகப் பிரிந்தது வேறிடத்தில் மீது நேராக இணைவதுண்டு..

    இது மட்டும் தான் நினைவுக்கு வருது..பாட்டு ஹையாங்க்.. நினைவுக்கு வல்லையே..

    அதே மாதிரி இடமோ சுகமானது.. மட்டும் நினைவில் வருது..

  5. #3963
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த பாடலில் பாடகர் திலகத்தின் அட்டகாசமான குரல் + மெல்லிசை மன்னரின் சூப்பர் இசை +
    அருமையான் கோரஸ் + எம்ஜிஆரின் சிறப்பான டான்ஸ் - மொத்தத்தில் முழுமை பெற்ற
    மதுர கானம் .
    எங்கள் தங்கம்- 1970

    ஒரு நாள் கூத்துக்கு ....

    மோகம் பிறந்ததம்மா முந்தா நாள் பார்க்கையிலே
    நேசம் பிறந்ததம்மா நேத்து நீ நடக்கையிலே
    ஏக்கம் பிறந்ததம்மா இன்று நீ சிரிக்கையிலே
    இன்பம் பிறக்குமம்மா நாளை இந்த வேளையிலே


    ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
    மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
    ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
    மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
    ஆஹா மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

    குண்டு விழி மண்டு மொழி
    சிண்டு முடி நண்டு நடை போட்டான் பாரம்மா
    கட்டு விழி முத்து மொழி
    சித்திரத்தில் உத்தரவை கேட்டான் பாரம்மா

    ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
    மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

    ராணியம்மா ஆசைப்பட்டா ஆடச்சொல்லி ஆணையிட்டா
    மறுப்பேச்சென்ன மூச்சென்ன வந்தேனே என்றான்
    அவன் யாரென்று பேர் சொல்லி நெஞ்சோடு நின்றான்
    அவன் யாரென்று பேர் சொல்லி நெஞ்சோடு நின்றான்
    சுற்றத்தாரின் மத்தியிலே
    கத்துவெச்ச வித்தைகளை படிச்சான் பாரம்மா
    பொம்பளைய தோற்க வெச்சு
    பக்கம் வந்து நிக்கவெச்சு சிரிச்சான் பாரம்மா

    ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
    மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

    பாட்டுக்கெல்லாம் தலை அசைச்சான்
    பாக்குறவன் அதிசயிச்சான் அவன் ஆட்டத்தில்
    மோகத்தை உண்டாக்கி வெச்சான் இந்த கூட்டத்தில்
    நோட்டத்தை உன் மேல வெச்சான் இந்த கூட்டத்தில்
    நோட்டத்தை உன் மேல வெச்சான்
    புன்னகையும் பொன்னகையும் மின்னலொரு
    அன்ன மகள் உசுரா நெனச்சானே
    சொல்லியதை சொன்னபடி எண்ணியதை எண்ணப்படி
    நெனச்சா முடிப்பானே
    புலி வேஷம் போட்டவன்தான் பூனையை போல் மாறி வந்தான்
    எலி வேட்டைக்கு நாள் வைத்து போராட வந்தான்
    வெளி வேஷத்தை மோசத்தை பொய்யாக்க வந்தான்
    வெளி வேஷத்தை மோசத்தை பொய்யாக்க வந்தான்
    கம்பு சண்டை வம்பு சண்டை
    கத்தி சண்டை குத்து சண்டை போட்டான் தனியாக
    பத்து பேரு மத்தியிலே ஒருத்தனாக
    சுத்திவந்து ஜெயிச்சான் முடிவாக

    ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
    மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
    ஆஹா மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே


  6. Likes gkrishna liked this post
  7. #3964
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    "தீயே உனக்கென்ன தீராத வினையோ? நீ தின்ற உடல் எத்தனையோ கணக்கிடவில்லையோ"

    இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்தியத் திருநாயகா.....

    * எதற்கும் ஒரு காலம் உணடு, பொறுத்திரு மகளே! ... இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே ..

    * இக்கரைக்கு அக்கரைப்பச்சை .... அது தேடி இது தேடி அலைகின்றாய், வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிர்க்கின்றாய் ...

    இதை எல்லாம் மறக்க முடியுமா
    வினோத் சார் சீ கே சார்

    நேரான நெடுஞ்சாலை ... தாயேனும் சுமைதாங்கி அழாதவனும் அழுதுறுவான் sir

    http://www.youtube.com/embed/HaAu26mYIJA?
    Last edited by gkrishna; 14th August 2014 at 10:39 AM.
    gkrishna

  8. #3965
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    நேரான நெடுஞ்சாலை ஓரிடத்தில் இரு கூறாகப் பிரிவதுண்டு
    கூறாகப் பிரிந்தது வேறிடத்தில் மீது நேராக இணைவதுண்டு..

    இது மட்டும் தான் நினைவுக்கு வருது..பாட்டு ஹையாங்க்.. நினைவுக்கு வல்லையே..

    அதே மாதிரி இடமோ சுகமானது.. மட்டும் நினைவில் வருது..
    இந்தாங்கோ சிக்கா


  9. Thanks gkrishna thanked for this post
  10. #3966
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    ஆமாம் பொன்னு மாப்பிள்ளே மிகச்சிறந்த ஃத்ரில்லர் மற்றும் காமெடி படம்.. படத்தின் கடைசி பகுதி தான் கொஞ்சம் இழுவை அ
    ஆனாலும் வி.கே.ஆர், ஜெய், காஞ்சனா, நாகெஷ், ஏ.வீரப்பன் , மனோரமா என எல்லாமே தூள்..
    கரீட்டு... கடைசியில் சேலம் ஜில்லா தாம்புக்கயிறு போல நீஈஈஈளமாக இழுபடும் க்தையை ஓடித் தப்பிக்கப் பார்க்கும் நாகேஷ், வீரப்பன் கூட்டணி ( தொடரும் இன்ஸ்பெக்டர் விஜயன் (?) ) ஆகியோரின் நகைச்சுவைதான் கொஞ்சம் காப்பாற்றும்.

  11. #3967
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அப்படியே கண்ணிய பாடகியின் காந்த குரல்

    ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் (வாசுதேவன் ) வந்தாள்
    கண்ணா (சி கே,மது ) சுகமா 'கிருஷ்ணா' சுகமா
    கண்மணி (ராஜேஷ்) சுகமா சொல் என்றேன்



    gkrishna

  12. Likes Russellmai liked this post
  13. #3968
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    wow. ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு..என்னா பாட்டு தாங்க்ஸ் க்ருஷ்ணாஜி..

    நேரான நெடுஞ்சாலை தாங்க்ஸ் க்ருஷ்ணா ஜி மதுண்ணா..

    க்ருஷ்ணா ஜி ..என்ன பாட்டு நினைவு படுத்திட்டீங்க

    இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்தியத் திரு நாயகா
    முருகா
    எததனை மனமுண்டோ அத்தனை குணமுண்டு ஏனென்று சொல்வேலவா

    எம்.எஸ்.வி.. சில பாட்டுக்கு அவர் குரல் தான் பொருத்தமா இருக்கும்..அதுவும் உ.உ.வி.எல அவரோட கேரக்டர் ரொம்ப பவர்ஃபுல் ஏன்னு கேளு..கேப்பியா படவா ..அடிப்பேன்.. உன்பேரு..தாமஸ் தியாகராஜன்..ஓ தாமல் தியாக ராஜனா..என்னப்பன் முருகனோட அப்பன்..வா.. \ படக் கடைசியில் ஃபாதர் என்கிட்ட உண்மையைச் சொல்லியிருக்கலாம் என உருகுவது..வி.கே.ஆரின் சூபர்ப் நடிப்பிற்கு உதாரணப் படம்..

  14. #3969
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே// ஏற்ற இறக்கங்கள் கொண்ட பா.தி குரல். நன்றி எஸ்விசார்..

  15. #3970
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    ஆரம்ப இசை இப்படி எல்லாம் கூட ஒரு பாட்டை ஆரம்பிக்க முடியுமா என்று நினைக்க வைக்கும் 70 களில் வந்த எங்க மாமா திரை படத்தில் அதிகமாக பேசப்பட்டதா என்று நினைவில் இல்லை ஆனால் மெல்லிசை மன்னரும் கண்ணிய பாடகியும் நேர் கோட்டில் இணைந்து டபுள் பங்கோ triple பங்கோ என்று சொல்வார்களே அந்த வாத்தியத்தை தனியாக அதிகம் உபயோகித்து பாடப்பட்ட பாடல் .

    பாங்கோஸை மிக அருமையாக பயன்படுத்தி பாடல்களுக்கு மெருகேற்றியவர் மெல்லிசை மன்ன்ர். அவரது 'பாங்கோஸ் ஸ்பெஷல்' பாடல்களை பட்டியலிடுவது ரொம்பவே சிரமம். ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல.

    "பார்த்த ஞாபகம் இல்லையோ" (புதிய பறவை). அதிலும் அந்த மூன்றாவது சரணம் முடிந்து பல்லவி துவங்கும்போது, நிற்காமல் முழங்கும் ஸ்பீட் பீட்ஸ்.

    "அழகு ஒரு ராகம்" (படகோட்டி) இதிலும் கூட கடைசியில் வரும் வேக நடை.

    இதுபோக ரொம்ப ரொம்ப அபூர்வமான, வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்திராத, திரைப்படத்தில் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு பெற்ற ஒரு அற்புத 'பாங்கோஸ் சூப்பர்'..... 'நிச்சய தாம்பூலம்' படத்தில் வரும்..

    "இது வேறுலகம்... தனி உலகம்...
    இரவினில் விடியும்... புது உலகம்

    மக்கள் திலகத்தின் ' ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் ' (தெய்வத்தாய்) ஆரம்ப பேங்கோ இசை


    ஹிந்தியில் வெளிவந்த பிரம்மச்சாரி படத்தின் தழுவல் என்று நினைவு ஜேயார் மொவீஸ் சங்கரன் ஆறுமுகம் தயாரிப்பில் வெளிவந்த படம் .மேலும் மன்னவன் வந்தானடி திரைப்படத்தையும் தயாரித்தார்கள்.இவர்கள் மக்கள் திலகத்தை வைத்து புதிய பூமி,அண்ணா என் தெய்வம் (பின்னாட்களில் அவசர போலீஸ் என்று பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டார்கள் என்று நினைவு ) என்ற படங்களையும் தயாரித்தார்கள்

    நடிகர் திலகமும் கலைச்செல்வியும் போட்டி போட்டு நடித்த படம் .இருவரும் மிக அழகாக தோன்றிய படங்களில் ஒன்று 70 களில் நடிகர் திலகத்தின் தொடர் வெற்றியினை ஆரம்பிக்க கட்டியம் கூறிய படம் என்று சொன்னால் அது மிகை ஆகாது

    கண்ணிய பாடகி சரணம் முடியும் போது ஒரு echo என்பார்களே எதிரொலி ஒலிக்கும் பாருங்க சம்திங் marvellous .அதிலும் ஒரு இடத்தில 'கொஞ்சலாம் கொஞ்சலாம் ' என்று பாடும் போது கொஞ்சும் குரல்

    ஆரம்ப இசை

    பல்லவி

    பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
    பார்த்து பேசினால் ஏக போகம் தான்
    தானே வந்தால் வாசம் இல்லையோ

    (பேங்கோ தனியாக ஒலிக்கும்) 'ரொடட் ரொடட் '

    அணைக்கும் பழக்கம் கொடுக்கும் மயக்கம்
    அணைக்கும் பழக்கம் கொடுக்கும் மயக்கம் (எதிரொலி )
    ஆண் பெண்ணிடம் தந்ததோ கண்டதோ
    எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
    எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் (எதிரொலி)
    யார் யாரிடம் கண்டதோ தந்ததோ

    (பேங்கோ தனியாக ஒலிக்கும்) 'ரொடட் ரொடட் '

    பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
    பார்த்து பேசினால் ஏக போகம் தான்
    தானே வந்தால் வாசம் இல்லையோ

    (பேங்கோ தனியாக ஒலிக்கும்) 'ரொடட் ரொடட் '

    இடை இசை

    முதல் சரணம்

    பொன்னை தட்டி போட்டு கொண்டால்
    நெஞ்சில் மட்டும் மின்னலாம் ...
    என்னை கட்டி போட்டு கொண்டால்
    மஞ்சம் தொட்டு கொஞ்சலாம் கொஞ்சலாம் கொஞ்சலாம்
    கசப்பும் இனிப்பும் மனதின் நினைப்பு
    ஓர் பெண்ணிடம் உள்ளதே நல்லது

    (பேங்கோ தனியாக ஒலிக்கும்) 'ரொடட் ரொடட் '

    பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
    பார்த்து பேசினால் ஏக போகம் தான்
    தானே வந்தால் வாசம் இல்லையோ

    (பேங்கோ தனியாக ஒலிக்கும்) 'ரொடட் ரொடட் '

    இடை இசை

    இரண்டாவது சரணம்

    எந்த பெண்ணை சொந்தம் என்று
    உந்தன் கண்கள் சொல்லுமோ ...
    அந்த பெண்ணை முன்னே வைத்தால்
    நெஞ்சம் எங்கே செல்லுமோ செல்லுமோ செல்லுமோ
    ஜொலிக்கும் விளக்கில் இருக்கும் நெருப்பு
    பாதையும் காட்டலாம் தீயையும் மூட்டலாம்

    (மீண்டும் பேங்கோ தனியாக ஒலிக்கும்) 'ரொடட் ரொடட் '

    பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
    பார்த்து பேசினால் ஏக போகம் தான்
    தானே வந்தால் வாசம் இல்லையோ

    ( இசை )

    பாடலின் முடிவில் மீண்டும் மீண்டும் அந்த பேங்கோ இசை தொடராதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் 'ரொடட் ரொடட் '

    Last edited by gkrishna; 14th August 2014 at 01:06 PM.
    gkrishna

  16. Thanks chinnakkannan, Russellmai thanked for this post
    Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •