-
15th June 2014, 06:09 PM
#301
Senior Member
Diamond Hubber
முரளி சார்,
மிக்க நன்றி! எங்களது ஆசையைத் தீர்க்க இவ்வளவு விரைவாக வந்து, நாங்கள் சற்றும் எதிர்பாராவகையில் அபாரமான, தங்களுக்கே உரித்தான, விவரணங்கள் கொண்ட சுவாரஸ்யமான 'தூண்டில் மீன்' படத்தைப் பற்றியும், அதில் ஜொலிக்கும் சொர்ணா பாடலைப் பற்றியும் ஜோராகப் பதிவிட்டுள்ளீர்கள். ஞாயிற்றுக் கிழமைக்கு நன்றி!
நம் ஆண்டவனின் கட்டளையை செவி மடுக்கச் செல்லும் வேளையிலும் இந்தத் திரிக்கு நேரம் ஒதுக்கி நல்லதொரு பதிவைத் தந்து பெருமைப் படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி!
அதே போல ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் பாடல் பற்றிய விவரமும், வைரமுத்துவை நீங்கள் சிலாகித்ததும் நன்றாக இருந்தது.
நீங்கள் இதுபோல் நிறைய எழுதி பெரும்பான்மையான உங்களின் எழுத்துக்கள் இத்திரியின் இடங்களை அடைக்க வேண்டும் என்பது என் ஆவல் மட்டுமல்ல எல்லோருடைய ஆவலாகவும் இருக்கும்.
பாடல்கள் மட்டும் தராமல் பாடலைப் பற்றியும், அதுசார்ந்த சம்பவக் கோர்வைகள் பற்றியும், தங்கள் தங்கள் நண்பர்களுடன் அதில் லயித்த கதையும் படு சுவாரஸ்யமாய் இருக்கின்றன.
தொடருங்கள் எங்கள் இன்பத்திற்காகவே!
-
15th June 2014 06:09 PM
# ADS
Circuit advertisement
-
15th June 2014, 06:13 PM
#302
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Stella_Rock
Mr. Vasudevan,
I appreciate your sincere and dedicated way to run this thread to reach the top. Yours and all hubbers posts about songs of middle 70s are wonderful.
Amazing memory power for you and Mr. Krishna about the songs and its situations in movies. Beautiful.
When you reply to Mr.Murali Srinivas, you have mentioned my name also which gives more happy and joy to me, but my contribution for this thread is nothing, except some enquiries about the songs.
I feel much happy to be a follwer of this thread and lucky to be my name in your good books.
Thank you sir.
stl.
நன்றி ஸ்டெல்லா அவர்களே!
தாங்கள் திரியில் அதிகம் எழுதாமல் இருக்கலாம். ஆனால் ஆர்வத்துடன் பங்கு கொள்வது, விடாமல் படிப்பது என்று தங்கள் பணியைச் செவ்வனே சிறப்பாகச் செய்து வருகிறீர்கள்.
தொடர்ந்து தங்கள் ஆதரவை நாடும்
அன்புச் சகோதரன்
வாசுதேவன்.
-
15th June 2014, 06:23 PM
#303
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
தமிழ்த்திரையுலக ஆரம்ப கால பாடலாசிரியர்கள் பற்றிய தங்கள் தொடர் களை கட்டுகிறது.
ஆரம்பமே சுவையோ சுவை. கிடைத்தற்கரிய தகவல்களைத் தொகுத்துள்ளீர்கள்.
அதுவும் 'பூங்கோதை' திரைப்படத்தில்
'நான் ஏன் வர வேண்டும் ஏதுக்காகவோ யாரைக் காண்பதற்கோ'
என்று ஜிக்கியின் குரலில் அட்டகாசமாய் ஒலிக்கும் பாடலை எழுதியது கம்பதாசன் எனும் போது இன்னும் ஆர்வம் மேலிடுகிறது. D.b. .ராமச்சந்திரன் ஜிக்கியுடன் சேர்ந்து பாடியிருப்பார் என்று நினைவு.
'பாட்டாளியின் வெற்றி' பற்றி சொல்லவே வேண்டாம். அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் அலசலாம்.
Last edited by vasudevan31355; 15th June 2014 at 07:48 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
15th June 2014, 07:01 PM
#304
Senior Member
Senior Hubber
கம்ப தாசன் பற்றிக் கேள்விப் பட்டதில்லை.. நன்றி ராகவேந்திரர் சார்..
-
15th June 2014, 07:57 PM
#305
Junior Member
Platinum Hubber
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அன்னலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
ஓ.ஓ..ஓ.ஓஓ.ஓ
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th June 2014, 08:12 PM
#306
Junior Member
Platinum Hubber
வாசு சார்
இசை அரக்கியின் அட்டகாசமான மயக்கும் குரலில் இந்த பாடல் நாம் கேட்காத -பார்க்காத நாளே இல்லை என்று
சொல்லலாம் .அந்த அளவிற்கு பாடலில் ஈஸ்வரியின் குரலும் , மெல்லிசை மன்னரின் பிரமாண்ட இசையும்
விருந்தோ விருந்து .
-
15th June 2014, 09:12 PM
#307
Junior Member
Newbie Hubber
Originally Posted by
vasudevan31355
வினோத் சார்,
காலத்தால் அழியாத டி.எம்.எஸ். அவர்களின் சாகாவரம் பெற்ற பாடல்களின் லிஸ்ட்டை தங்கள் கடின உழைப்பின் மூலமும், அபார ஞாபக சக்தி மூலமும் தந்துள்ளீர்கள். நன்றி! நாம் இருவரும் அலைபேசியில் நிறைய பாடல்களை அலசியுள்ளோம். ஆனால் ராட்சஸி பற்றி மிக அதிகமாக. ஏனென்றால் தாங்களும் என்னைப் போல ஈஸ்வரி பைத்தியமே!
இந்த கிண்டல்தானே வேண்டாங்கிறது?குழந்தை மனம் கொண்ட நண்பர்,குழந்தைகளுக்கும் கூட தெரிந்த பாடல்களை லிஸ்ட் போட்டதால் ,கடின உழைப்பு(ஞாபக சக்தி வேறு ) அது இது என்று.... பாவம் ,அப்பாவி ,வினோத்,இதை நம்பி நண்பர்களுக்கு டின்னெர் கொடுத்து கொண்டாடி களிக்கிறார்.
Last edited by Gopal.s; 16th June 2014 at 05:30 AM.
-
16th June 2014, 05:44 AM
#308
Junior Member
Platinum Hubber
மகா கவி ''காளி '' ''தாஸ் '' அருள் பெற்ற நண்பர் கோபாலரே
உங்கள் இசை ஞானம் உண்மையிலே பாராட்டுக்குரியது . இதுவரை கேள்வி படாத ராகங்கள் பற்றிய செய்திகள் வியப்பை அளிக்கிறது .நீங்களும் ஒரு விதத்தில் சகல கலா வல்லவர் என்பது புரிகிறது .பல ராகங்கள் பற்றிய பெயர்கள் -வட மொழியில் இருப்பதால் புரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது .குழந்தைகளுக்கு புரியாது .
நீங்கள் தரும் குறிப்புகளில் முடிந்த அளவிற்கு எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் தமிழில் பதிவிடவும் .
-
16th June 2014, 06:01 AM
#309
Junior Member
Newbie Hubber
கவலையே படாதீர்கள். உங்களுக்கு நன்கு புரிந்த,பிடித்த மலையாளத்திலேயே வேண்டுமானாலும் எழுதி விடுகிறேன்.எல்லாம் காளி தாஸ்(ஓய்வு பெற்ற)அருள்!!!
-
16th June 2014, 08:11 AM
#310
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (5)
மிக மிக அரிய பாடல்
1973 -ல் வெளிவந்த, தாயகம் பிக்சர்ஸ் தயாரித்த 'வள்ளி தெய்வானை' படத்தின் மிக மிக அபூர்வ பாடல். அபூர்வ பாடகர்கள் இப்பாடலைப் பாடியுள்ளார்கள். தனசேகர், மல்லிகா என்ற பாடகர்கள்தான் அவர்கள்.
'மலர்களின் ராஜா
அழகிய ரோஜா'
என்று தொடங்கும் மிக அழகிய பாடல்.]
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வின்
தங்கராஜா ராஜா ராஜா மகராஜா
காதலின் ராணி
கலைதரும் வாணி
என் இதய வானில்
இன்ப ராணி ராணி ராணி மகராணி
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வின்
தங்கராஜா ராஜா ராஜா மகராஜா
ஊரினில் உறவைத் தேடிடும் நினைவு
பருவத் தேரினில் ஆடும் தெய்வத்தின் கனவு
ஆசையின் பாசம்
பேசிடும் உரிமை
தன்மானத்தில் விளையும்
உலகினில் பெருமை
பூங்கொடி முகத்தில் புன்னகை வெள்ளம்
அமுதத் தமிழிசை பாடும் கவிதைகள் சொல்லும்
தலைமுறை புகழின் குலம் நலம் காப்போம்
ஓராயிரம் காலத்து பயிர்வளம் சேர்ப்போம்.
பாரத வீரர் மார்பினில் இணையும் (தேசிய நடிகர் சசிகுமாருக்கு புகழ்க் கிரீடம்)
பாவையின் மனமே கனி போல் கனியும்
வேதங்கள் ஓதி வளர்த்திடும்
பேதம் அதை வென்றிட வேண்டும் தேசிய கீதம்
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
என் இதய வானில்
இன்ப ராணி ராணி ராணி மகராணி
லா ல லா லாலா....லா ல லா லாலா
கேட்க கேட்க அவ்வளவு இனிமை.
மல்லிகாவின் மந்திரக் குரல். (அதுவும் 'பாரத வீரர் மார்பினில் இணையும்' எனும் போது ஒரு ஹை பிட்ச் தூக்குவார் பாருங்கள்! வார்ரே வா!)
சற்றே நடுங்கும் குரலில் எம்.எல்.ஸ்ரீகாந்தை நினைவு படுத்தும் தனசேகரன்.
என்.எஸ்.தியாகாராஜன் என்பவர் இப்படத்தின் இசையமைப்பாளர்.
இப்பாடலை வீடியோவில் அப்லோட் செய்த TFM Lover அவர்களுக்கு மிக்க நன்றி!
இப்பாடலுக்கு youtube ல் comment பட்டியலைப் பார்க்கும் போது ஒரு இன்ப ஆச்சர்யம்.
இப்பாடலுக்கு இசை அமைத்திருந்த என்.எஸ்.தியாகராஜன் அவர்கள் தன் கருத்தை இங்கு பதிவு செய்து TFM Lover அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்த போது என் நெஞ்சு நெகிழ்ந்தது உண்மை.
(I am the music director N.STheyagarajan of this song and was looking for it.Thanks a lot for uploading TFML!)
அதுவும் பாடலின் ஆரம்ப இசையும், இடையிசையும் அட்டகாசமான அட்டகாசம். இப்படிப்பட்ட திறமைசாலிகள் எல்லாம் எங்கு போனார்கள்?
அதுவும் மல்லிகா 'மலர்களின் ராஜா' என்று கொஞ்சுவதும் தொடர்ந்து
அழகிலே 'ர்ர்ர்ர்ரோஜா'... என்று ரோஜாவுக்கு அழுத்தம் தந்து பாடுவதும் நம்மை வியக்க வைத்து விடும்.
தேசிய நடிகர் சசிகுமாரும், குமாரி பானுமதியும் பாடும் டூயட் பாடல் இது. நான் கூட இப்பாடலைப் பார்ப்பதற்கு முன் பயந்தேன் அருமையான இப்பாடலை எப்படிப் படமாக்கியிருப்பார்களோ என்று. நல்லவேளையாக பாடலைக் கெடுக்காமல் எடுத்திருப்பார்கள். ]
'அகத்தியர்' திரைப்படத்தில் சிவக்குமாருடன் பானுமதி.
எம்.பானுமதி நடிகர் திலகம் நாடகக் குழுவில் பெரும் அங்கம் வகித்தவர். நிறைய படங்களிலும் நடித்துள்ளார். கோபால் உச்சி குளிர்ந்து மகிழ்வாரே 'காதல் ஜோதி' படத்தில் 'ஓம் மேல கொண்ட ஆச' ன்னு. அந்தப் படத்தில் விதவையான இளம்பெண்ணாக (!) பானுமதி நடித்திருப்பார். சற்று முற்றிய முகம் இவருக்கு. இதனால் இளமை மிஸ்ஸிங். 'வியட்நாம் வீடு' படத்தில் நாகேஷுடன் ஜோடியாக 'மை லேடி... கட் பாடி... நீயே எந்தன் ஜோடி' பாடலுக்கு ஆடியிருப்பார். 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' படத்தில் சூலமங்கலம் சகோதரிகள் பாடும் புகழ் பெற்ற பாடலான 'திருத்தணி முருகா... தென்னவர் தலைவா!' பாடலுக்கு நாட்டியம் சிறப்பாக ஆடியிருப்பார் பானுமதி. நிறைய தொலக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.
காதலர்கள் டூயட்டிலேயே நமது தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்துவது அற்புதம். இப்போது படங்களில் தேசியக் கொடியை யார் காட்டுகிறார்கள்? டாஸ்மாக் கடைகளைத் தான் காட்டுகிறார்கள். ]
பல பேர் இப்பாடலைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. கேட்டிருந்தாலும் மறந்திருக்கக்கூடும். இப்போது கேளுங்கள். ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.]
இப்படத்தில் ரவிச்சந்திரன் பிரமிளா இணை. (பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே) திரைக்கதை இயக்கம் தில்லை ராகவன்.
Last edited by vasudevan31355; 1st May 2016 at 11:04 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks