Page 394 of 400 FirstFirst ... 294344384392393394395396 ... LastLast
Results 3,931 to 3,940 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3931
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    முதல் பால்லையே அவுட் ஆகி விட கூடாது
    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி எஸ்வி சார்
    ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3932
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பெண்ணுக்கு யார் காவல்

    நடிகர் திலகமே தெய்வம்

  4. #3933
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    super comedy .

  5. #3934
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    பெண்ணுக்கு யார் காவல்

    எஸ்.பி.பி. ஜானகி...

    கண்ணே கண்ணான கண்ணா


  6. #3935
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க..
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks gkrishna thanked for this post
    Likes Russellmai, chinnakkannan, madhu liked this post
  8. #3936
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    முரளி சார்,

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு? வாருங்கள் சார்.

    தங்களுக்குக் கீழ்தான் நாங்கள் எல்லோருமே!

    நீங்களும் சைட்டை பத்தி பேச வந்தது மிகவும் சந்தோஷம். ஐ மீன் நம்ம 'மதுரகானங்கள்' வெப் சைட் பற்றி.

    கிராதகர் வந்தால் மட்டுமே டோஸ்.

    முரளி சார்! எப்படி இருக்கிறீர்கள்? ரொம்ப நாட்களாயிற்று. விரைவில் செல்லில் தொடர்பு கொள்கிறேன். தாங்கள் ஒன்றுமே பதிவிடா விட்டாலும் முரளி ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் பார்த்தாலே கரை புரண்ட வெள்ளம் போல் மகிழ்ச்சி. அது எங்கள் முரளியால் மட்டுமே முடிந்த ஒன்று.

    அடுத்த பாகத்திற்கு தங்கள் மனமுவந்த வாழ்த்துக்கள் தேவை.
    வாசு,

    எனக்குதான் மகிழ்ச்சி. உணமையிலே இந்த திரி ஒரு அசுர சாதனை. நீங்கள், கிருஷ்ணாஜி, கார்த்திக், கோபால். ராகவேந்தர் சார், சின்ன கண்ணன், ராஜேஷ், மதுஜி, வினோத் சார்,மற்றும் அண்மையில் வந்து இணைந்து கொண்ட sss என்று பலரின் அசுர உழைப்பு உண்மையிலே பிரமிக்கத்தக்கது, அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். பாகம் இரண்டிற்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள். கிருஷ்ணாஜி மிகப் பொருத்தமானவர். கிருஷ்ணாஜி, தைரியமாக தொடங்குகள். இதற்கு அடுத்து நடிகர் திலகத்தின் திரி ஒன்றையும் நீங்கள் துவங்க வேண்டும்,

    வாசு, இந்த திரியின் என்னுடைய தலையாய சந்தோஷம் சென்ற வாரம் நிகழ்ந்தது. ஆனால் நான் பங்கு பெற முடியவில்லை. பிறகுதான் பார்த்தேன். அதான் நமது இசையரசி இசைக் குயிலின் அற்புதமான பாடல்களை ராஜேஷ், கோபால் மற்றும் நீங்களும் பட்டியலிட்டதை படித்த போது அவ்வளவு பூரிப்பு. நான், நண்பர் ராஜேஷ் மற்றும் மதுஜி போன்றவர்கள் ஏற்கனவே PSusheela Fans @ yahoo groups -ல் உறுப்பினராக இருக்கும் காரணத்தினால் ஏராளமான பாடல்களை share செய்திருக்கிறோம். ஆனால் அவை அங்கே இங்கே போல் விவாதிக்கப்படவில்லை.

    குறிப்பாக கோபால் பதிவு செய்த மனம் படைத்தேன் பாடல் என் மனதுக்கு மிகவும் நெருங்கிய பாடல். முதல் சரணமான மத்தள மேளம் முரசொலிக்கவையும் மூன்றாவது சரணமான செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் ஆகியவற்றை மாமா ஒரு விட மெட்டில் தந்திருப்பார். ஆனால் இரண்டாவது சரணத்தை வேறு மாதிரி தந்திருப்பார். அதில்

    பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்

    பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்

    துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்


    பாடி விட்டு வார்த்தைகளை நிறுத்தி

    தோழி தூக்கத்தில் கனவென்றுதான் உரைத்தாள் என்று சரணத்தை முடித்து மனம் படைத்தேன் பல்லவியை ஆரம்பித்து ஒரு ஆலாபனை செய்வாரே! அதை விட இனிமையானது உலகத்தில் இருக்கிறதா என்ன?

    நம்முடைய தலைவன் easy chair-ல் சிந்தனை வயப்பட்டவாறே கண் மூடி கிடக்க சௌகார் அவர் காலை தொட்டு வணங்கும்போது அபிநய சரஸ்வதி வாயசைக்க

    பேச மறந்து சிலையாய் நின்றால்

    அதுதான் தெய்வத்தின் சன்னதி

    அதுதான் காதல் சன்னதி
    [இங்கே காதல் என்ற வார்த்தை உச்சரிக்கப்படும் விதம் இருக்கிறதே]

    என்று சரணத்தை முடித்து ஒரு ஆலாபனை செய்வாரே அப்போது வைரமுத்து சொன்னதுதான் நினைவிற்கு வரும். என் உயிர் கூட்டை விட்டு வெளியே போய் சஞ்சரித்து விட்டு மீண்டும் கூட்டில் வந்து சேரும்.

    மூன்றாவதாக ஒன்று

    உன் விரல்கள் என் அழகை மீட்டும்

    உன் விழிகள் என் உயிரை வாட்டும்
    (அதிலும் இரண்டாவது வரி இரண்டாவது முறை பாடும்போது ஓஹோ!)

    உன் குரலும் என் பெயரை கூட்டும்

    அது கோடி கோடி இன்பம் காட்டும்!


    உண்மையிலே அது கோடானு கோடி இன்பம்.

    ஒரு முறை ஸ்கூட்டர் ஒட்டிக் கொண்டிருக்கும் போது சாரதி ஏதோ விஷயத்திற்கு போன் செய்தார். ஓரமாக நிறுத்தி விட்டு பேசினேன். பேச்சு சுசீலாவின் பாடல்களுக்கு தாவியது. இந்த பாடல் பற்றி இந்த வரிகள் பற்றி பேசினோம், பேசினோம். அப்படி பேசினோம். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக. இரவு 10 மணிக்கு மேல் வேறு. தன்னிலை உணர்ந்து பார்த்த போது தெருவில் ஈ காக்கை இல்லை. அப்படி மனதை இழுத்த பாட்டு.

    இது போல் எத்தனையோ பேசலாம். நேரம்தான் கிடைக்கவில்லை. மறுபடியும் வாழ்த்துகள். நன்றி. பாகம் 2-ல் சந்திப்போம்..

    அன்புடன்

  9. Thanks gkrishna thanked for this post
    Likes chinnakkannan, Russellmai, madhu liked this post
  10. #3937
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    அடேயப்பா ஒரு குட்டி தூக்கம் (8 மணி நேரம்) போட்டு விட்டு வருவதற்குள் எத்தனை எத்தனை பதிவுகள்.. 5 லட்சம், சுருளி ராஜன், நெல்லு என பதிவுகள் விரிந்து கிடக்கின்றன..

    ஆஹா சுருளியின் அந்த வில்லு பாடு சிலோன் ரேடியோவிலும் , மதுரை வானொலியிலும் தேய்த்தவை .. “ரூபா ரூபா ... வேட்டையையே என “ பட்டைய கிளப்பிய பாடல் அது ..

    கிருஷ்ணா ஜியின் முகம் கண்டேன் .... இப்படி பக்தி ஸ்ரத்தையாக இருக்கும் இந்த முகமா இப்படி பதிவுகளை இடுவது ... ஹ்ம்ம்ம்

    முரளி ஜி , வாங்கோ வாங்கோ .. ஆமாம் இசையரசியின் பாடல்களை மற்ற இடத்தில் இவ்வளவு விரிவாக பேசப்படவில்லை . இங்கே பேச வழி வகுத்து கொடுத்த வாசு ஜி, கோபால் ஜி, கிருஷ்ணா ஜி மற்றும் என்றுமே அன்பிற்குறிய மது அண்ணா விற்கும் நன்றி

    ஆஹா என்ன பாட்டை அலசியுள்ளீர் முரளி ஜி .. மத்தளம் மேளம் முரசொலிக்க .... அந்த தோழி தூக்கத்தில் ... அடேயப்பா (அவர் பாடிய வரி போலவே இருக்கும் இதயத்தை மெல்ல மெல்ல மீட்டிவிட்டான் .. இவரும் குரலால் மீட்டிவிடுவார்)

  11. #3938
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    ஜூன் 8 ம் ஆம் தேதி.

    அந்த நாள்.

    ஒரு நம்பிக்கையில் சும்மா கொளுத்தி வைத்த ஒரு விளக்கு இங்கு உள்ள நண்பர்களின் கடும் உழைப்பாலும், ரசனைகளாலும் இன்று அணையா விளக்காய் சுடர் விட்டு பிரகாசித்து எட்டுத் திக்கும் ஒளி வீச ஆரம்பித்து விட்டது.

    65 நாட்களில் ஒரு பாகம் முடிவுற்றே விட்டது. பிரம்மிப்பாய் இருக்கிறது.

    ஒவ்வொருவரும் தத்தம் உழைப்பை இங்கு வெளிப்படுத்தி அதே சமயம் செம ஜாலியாக, ஜோவியலாக யாரும் யார் மனமும் புண்படாத வகையில் பதிவுகள் இட்டு மதுரகானத்தைப் பிரிய மனமிலாமல் இருக்கும் ஆனந்த நிகழ்வுகள்.

    எத்தனை பாடல்கள்... அதுவும் அபூர்வ அபூர்வமாக மலைக்கச் செய்யும் அளவிற்கு.

    மது அண்ணா அவர்களின் பங்களிப்பு திரிக்குக் கிடைத்த தலையாய பெருமை.

    திரியில் அண்ணா எல்லாம் பங்கு கொள்வார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. அற்புத, மிக அரிய பதிவுகள் தந்து, தவறுகள் கண்டால் அழகாகத் திருத்தி அம்சமாக இத்திரியை பரிமளிக்கச் செய்த விதம் மறக்க முடியாது. ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.

    டியர் கார்த்திக் சார்,

    ஜனரஞ்சக பதிவுகளின் கிங். தெரியாத விஷயமே இல்லை. ஜாம்பவான். எங்களுக்கெல்லாம் வழிகாட்டி. ரசனைகளின் உச்சம் தொட்டவர். மேலதிக விவரங்களுக்கு இவரை விட்டால் எவர்?
    ராமுவுக்கேற்ற ராஜாவாய் இங்கு வந்து அசுரப் பதிவுகள் அளித்து ஆனந்தமடையச் செய்த ஆசான். பாடல்களை ரசிப்பது ஒரு புறம் இருந்தாலும் யார் பதிவையும் பாராட்டி மகிழும் பெரும் குணம். போட்டி பொறமை எதுவுமே நெருங்காத நெருங்கிய நண்பர். அதனால்தான் எப்போதுமே எனக்கு டியர்.

    இந்த நல்ல நேரத்தில் நீங்கள் இங்கு இருக்க வேண்டும் கார்த்திக்ஜி.

    கோபால். என்ன சொல்வது? ஹப்பிற்கே கிடைத்த பொக்கிஷம். என் உயிர் நண்பர். ராகங்கள் பற்றிய கலக்கல் பதிவுகள். போனில் மனம் திறந்த வாழ்த்துக்கள். அறிவுறுத்தல்கள். அபூர்வ பாடல்களின் தொகுப்புகள். மறந்து போன கலைஞர்களின் பொக்கிஷங்களையும் , அவர்களையும் நினைவு கூர்ந்த நன்றி மறவா வியட்நாம் தமிழன். கொஞ்சம் சண்டை வம்பு , அதிக பயனுள்ள பாடல்கள் என்று அறிவுஜீவித்தனம் அமர்க்களம்.

    அன்பு ராகவேந்திரன் சார்.

    என்ன ஒரு ஆதரவு! பலத்த வேலைகளுக்கிடையிலும், இணைய இணைப்பு கிடைக்காத சங்கடங்களிலும் அழகான 'பொங்கும் பூம்புனல் தந்து' குளிர்ச்சியடச் செய்த விந்தை. அதுவும் மிக மிக அபூர்வ பழைய பொக்கிஷப் பாடல்கள். தேடித் தேடிக் கொணர்ந்து இன்னிசை விருந்து படைத்த தன்மை

    ஆஹா! என்னருமை ராஜேஷ்ஜி!

    என்ன சொல்ல. 60 நாட்களில் எனக்குக் கிடைத்த ஆருயிர் நட்பே!

    பல இரவுகள் உங்களைக் கண்டு வியந்து தூங்காமல் அதிசயத்திருக்கிறேன். இவ்வளவு திறமைகள் உள்ளடக்கிய ஒரு மாமனிதர். மிகச் சிறந்த நண்பர். பதிவாளர். பண்பாளர். குறுகிய காலமே என்றாலும் சோழன் பிசிராந்தையார் நட்பல்லவோ நமது.

    இசையரசியின் மேல் எனக்கிருந்த வெறித் தீயின் மீது பெட்ரோல் ஊற்றி அவர்கள் மேல் எனக்கிருந்த ஆர்வத் தீயைப் பெருக வைத்தவர். மலையாள, கன்னட அறிவைக் கொடுத்தவர். குரு போல.

    அனாவசிய வள வள (என்னைப் போல) இருக்கவே இருக்காது. நச் நச் நச் தான். எதுவும் வரம்பு மீறாமல் அளவோடு. குறும்பு கொப்பளிக்கும் ஒரு வார்த்தையிலேயே.

    மதுர கானத்தில் கடவுள் எனக்களித்த சிறப்புப் பரிசு என் ராஜேஷ்ஜி.

    முக்கயமாக கன்னடப் பட பாடல்களின் பைத்தியமாகி விட்டேன் ராஜேஷ்ஜி.

    கோபு சார்.

    எத்தனை 'லைக்' கிளிக்குகள். ஒரு பதிவு விடாமல் பார்த்து பாராட்டி அப்பப்பா! அதுவும் சலிக்காமல். எப்படி நன்றி நவில்வது?

    வினோத் சார்

    விதவிதமான நடிகையர் படங்கள் உற்சாக டானிக்காக. நிறைய வீடியோக்கள். அபூர்வ ஆவணங்கள். உன் ஆள் என் ஆள் என்ற பேதமில்லாமல். தினம் பங்களிப்பு பல்வேறு வேலைகளுக்கு இடையில். தினம் போனில்.

    சின்னக் கண்ணன்

    எங்கள் செல்லக் கண்ணன். அழகான தமிழில். நிறைய டரில் வாங்கிய மகானுபாவர். நாரதர் கலகம் போல. தெரிந்தாலும் தெரியாதது போல கேட்டு வாங்கும் சாமர்த்தியம். அடுத்தவர்களுக்கும் தெரிய வேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில். அழகான ரசனை. உடல் நிலை சற்று சிரமம் கொடுப்பினும் மதுர கானங்களை மறக்காத மாமனிதர்.

    எஸ்.எஸ். சார்.

    இரண்டு மூன்று பதிவுகள்தான். ஆனால் வாழ்நாள் முழுக்க பேசும்.

    யுகேஷ்பாபு சார்.

    கொஞ்சமே வந்தாலும் இங்கு வந்தவுடன் ரசனையை நன்கு உணர முடிந்தது. நல்ல பாடல்கள் அளித்து பெருமைப் படுத்தினார்.

    வெங்கிராம்ஜி

    தன்னுடைய கருத்தை இங்கு ஆழமாகப் பதித்து பெருமை அளித்தவர்.

    இப்போது

    இன்றைய 'கதாநாயகன்' கிருஷ்ணாஜி.



    வார்த்தைகள் வரவில்லை. என்ன ஒரு நுண்ணறிவு. எவ்வளவு ஞாபக சக்தி. அறிவுத்திறன். கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல். பணிவுக்கு இன்னொரு பெயர். எவர் மனமும் புண்படக் கூடாதே என்றே எப்போதும் சிந்தனை. அதைவிட மதுர கானங்களில் எந்தப் பிரச்னையும் வந்து விடக் கூடாதே என்று வேண்டுதலே உண்டு.
    வெளியே வராத மறக்கடிக்கப்பட்ட பல திரைக் கலைஞர்களை திரியில் கொண்டு வந்து நினைவு படுத்திய சாமர்த்தியம். வாலி புகழ் பாடும் ஆவணப் பதிவுகள்.

    மிடில் சாங்க்ஸ் கலக்கல்கள். எத்தனை எத்தனை படங்கள். பாடல்கள் இந்த கிருஷ்ணா என்னும் அறிவுச் சுரங்கத்திலிருந்து தங்கப் புதையல்களாய் நமக்குக் கிடைத்தன. எல்லாரையும் ஜாலியாக ஹேண்டில் செய்து கொண்டு. திரி நான் தொடங்கியபோது ஓடோடி வந்து என்னை ஆதரித்து தோளோடு தோளாய் நின்று திரியை சுமந்த சுமைதாங்கி. அதுவும் மகிழ்ச்சியோடு... மனநிறைவோடு
    .
    முரளி சாரின் ஆசீர்வாதங்கள், ஸ்டெல்லா மேடத்தின் வாழ்த்துக்கள், பார்த்தசாரதி சாரின் பங்களிப்புகள், பாலா சாரின் பங்களிப்புகள், சித்தூர் வாசுதேவனின் உற்சாக டானிக், ரவி சாரின் உற்சாகப்படுத்தல் என்று மேலும் மெருகு.

    வெறும் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மட்டுமா?

    எத்தனை எத்தனை அற்புதமான மலையாளப் பாடல்கள்

    கன்னடப் படப் பாடல்கள்

    தெலுங்கு சலன சித்திரப் பாடல்கள்

    இனிமையான இந்திப் பாடல்கள்...அதைப் பற்றிய விவரங்கள்

    அப்பாடல்களில் நடித்த நடிக நடிகையர்கள் பற்றி விவரங்கள்.

    இசையமைப்பாளர்கள் பற்றிய அனைத்து அரிய விவரங்கள்.

    படங்களைப் பற்றிய ஆய்வுகள்

    பத்திரிகை ஆவண செய்திகள்

    நகைச்சுவை செய்திகள், சங்கதிகள்.

    பல்வேறு மொழி நடிக நடிகையர்கள், டெக்னீஷியன்களின் புகைப்படங்கள்

    'இன்றைய ஸ்பெஷல்' தொடர், ஜஸ்ட் ரிலாக்ஸ் பகுதிகள்.

    இன்னும் ஏராளமான இதர செய்திகள்

    என்று பல்சுவை விருந்து படைத்த 'மனதை மயக்கும் மதுரகானங்கள்' பாகம் 1 இன்றோ நாளையோ முடிந்து பாகம் 2 தொடங்கவுள்ளது.

    இதற்கு உறுதுணையாய் நின்ற அனைத்து நல்லுலங்களுக்கும், (வெளிப் பார்வையாளர்களாக மிகக் குறுகிய காலத்தில் அதுவும் 65 நாட்களில் 61733 பார்வையாளர்கள்...Replies: 3,935 என்று அபார 'திரிசூல' வெற்றி) இருந்து பேராதரவு தந்த உலகில் உள்ள அனைத்து திரைப்படப் பாடல்கள் ரசிகர்களுக்கும், சில கிடைக்காத பாடல்களை வேறு தள நண்பர்கள் நமக்காகத் தரவேற்றி தந்ததற்கும்,

    குறிப்பாக இந்தத் திரி பொலிவோடு திகழ உதவிய யூ ட்யூப் இணைய தளத்திற்கும், 'இன்பமிங்கே' இணையதளத்திற்கும், 'ராகா' இணையதளத்திற்கும்

    கோடானு கோடி நன்றி.

    மற்றும் விடுபட்டுப் போன அன்பர்களின் ஆதரவிற்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி!

    என்றும் நன்றி மறாவா உங்கள் நண்பன்
    நெய்வேலி வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 13th August 2014 at 09:19 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Thanks madhu, chinnakkannan, Russellmai thanked for this post
  13. #3939
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like




    எல்லாவற்றுக்கும் மேல் 'உன்னை வணங்கித் தொடங்குகிறேன்... வாழ்த்துவாயாக' என்று என்றும் 'நான் வணங்கும் என் இதயதெய்வம்' நடிகர் திலகத்தை மனதில் தியானித்து இத்திரியைத் தொடங்கினேன். அந்த இதய தெய்வம் இவ்வளவு பெரிய வெற்றியையும், ஆசீர்வாதத்தையும் எனக்கு அளித்து எனக்கு பேரருள் புரிந்து விட்டார் மீண்டும்.

    அந்த தெய்வத்தின் தெய்வத்திற்கு, அவரின் பொற்பாத கமலங்களுக்கு

    என்னுடைய கோடானு கோடி நன்றி! நன்றி! நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes madhu, rajeshkrv, Russellmai liked this post
  15. #3940
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    நன்றி என்ற வார்த்தை சிறியது ஆனால் அதை சொல்லும் மனது பெரியது என்பார்கள்.. அதைப்போல ஆஹா உங்கள் நன்றி தோரணம் பலே ஜோர்... ஒவ்வொரு பங்களிப்பாளரையும் நினைவு கூர்ந்து ஒரு வரியில் சொல்லிவிடாமல் அதையும் அழகாக பாங்காக சொல்வது அருமை அருமை. வாசு ஜி தமிழ் உமது கைகளில் விளையாடுவதற்கு என்ன பாக்கியம் பெற்றதோ ..
    வாழ்க .. இரண்டாம் பாகத்தை விரைவில் தாரும் ...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •