Page 12 of 54 FirstFirst ... 2101112131422 ... LastLast
Results 111 to 120 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

  1. #111
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    உங்கள் அரைகுறை "3" படத்தை பார்த்து தெரிந்து கொண்டதை எல்லாம் பிரயோக படுத்த வேண்டாம். கீழ்த்தரமான செய்கைகளை பேச்சை கண்டிப்பது அகந்தை என்றால், அது அகந்தையாகவே இருக்கட்டும்.கோழை போல ஒளிந்து பர்சனல் abuse செய்தல் என்ன வியாதியில் சேரும்?காற்றிலடித்த காகிதம் போல எந்த ஊருக்கு சென்றாலும் குறுகிய புத்தி சிலருக்கு விடுவதில்லை.

    உங்கள் குடும்பத்தை பற்றி பேச வேண்டுமானால் சௌகரியமாய் பேசலாம்.அங்கு வந்து விடுகிறீர்களா?
    ஹா.. வேண்டாங்க... நீங்கள் வெட்டெரன் ஹப்பர். சீனியர். நீங்கள் வென்றதாகவே வைத்துகொள்வோம்... உங்கள் எழுத்தால் நல்ல விஷயங்களை நான் தெரிந்து கொண்டால் மட்டும் போதும். carry on.

    by the way, 3 படம் நான் பார்க்கவில்லை. நான் கோழையும் இல்லை. மேலும் மேலும் வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டாமே..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    https://m.facebook.com/story.php?sto...00002203075390 … pic.twitter.com/K9Rul61nGB


    இன்று எனது வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான மூன்று நிகழ்வுகள் நடந்தது.

    ஒன்று : இன்று இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளவிருக்கும் அருணகிரிநாதர் திருவிழாவிற்கு ராஜா சார், என்னை அவசியம் வரச் சொன்னதாக நண்பரொருவர் தொலைபேசியில் சொன்னார். கண்டிப்பாக வந்து விடுகிறேன் என சொல்லிவிடுங்கள் என்றேன்.

    இரண்டு : விழா மேடையின் அருகே அவரை வரவேற்ற என்னை அழைத்து, மேடையில் அவரருகில் அமரச் சொல்லி, விழாக் குழுவினரை அழைத்து, கருணாவை பேசுவதற்கு அழையுங்கள் என்றார். அதன்படி என்னிடம் மைக் கொடுக்கப் பட, திடீரென பேச அழைக்கப் பட்டதால், முன் தயாரிப்பின்றி பேசிய சுருக்கமான பேச்சு இது.

    "இசைஞானி இளையராஜா அவர்களை இங்கே அழைத்து, அவரை மன சிம்மாசனத்தில் வைத்திருக்கும் வெகு ஜனங்களின் மத்தியிலே அமரவைத்து இந்த விழாவினை நடத்தும் விழாக்குழுவினருக்கு எனது நன்றியும், பாராட்டுதல்களும்.

    சில மாதங்களுக்கு முன் நான் துபாய் சென்றிருந்த போது, அங்கே எனக்கு கார் ஓட்டிய ஓட்டுநர் ஒரு தமிழர். அவரிடம், நீங்கள் எப்போது கடைசியாக தமிழகம் சென்றீர்கள் நாக் கேட்டதற்கு, ஏழு ஆண்டுகள் என்று பதிலளித்தார். அவருக்கு மகன் பிறந்த அன்று இரவு புறப்பட்டு துபாய் வந்தவர் இன்னமும் திரும்பிச் செல்ல முடியவில்லையாம். நான் அதிர்ந்து விட்டேன். எப்படி உங்களால், ஏழு ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து இருக்க முடிகிறது? எனக் கேட்டதற்கு, அவரது காரின் டேஷ்போர்டைச் சுட்டிக் காட்டினார். அங்கே இசைஞானி இளையராஜாவின் படம் ஒட்டப்பட்டிருந்தது.
    நான் மனம் நெகிழ்ந்து போன அந்த வேளையில், உரத்த குரலெடுத்து 'தென்பாண்டிச் சீமையிலே! தேரோடும் வீதியிலே!' பாடலைப் பாடினார். இந்தப் பாடல்தான் சார், எனக்கு ஏழு வருடமாக மகன் என்றார்.

    இப்படி, புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும், தாயகம் வாழ் தமிழர்களுக்கும், பெற்றத் தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக, மனைவியாக, காதலியாக, உற்றத் தோழனாக வாழ்ந்து வரும் எங்கள் இசைஞானியை பாதம் தொட்டு வணங்கி வரவேற்கிறேன்.

    சில மாதங்களுக்கு முன் அவர் உடல்நலமில்லாமல் இருந்த சமயத்தில், எமன் அவரை அழைத்துச் செல்ல வந்திருந்தான். ஒருவேளை இசைஞானியும் கூட, அவனுடன் செல்ல தயாராக இருந்திருக்கலாம். ஆனால், அவரது உயிர் கயிறு நேராக எங்கள் அண்ணாமலையாருடன் பிணைக்கப் பட்டிருந்ததைக் கண்ட எமன் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டான்.

    அண்ணாமலையார் விரும்பும் வரையிலும், இசைஞானி,ராகதேவன் எங்கள் இளையராஜா எங்களுடனே இருந்து, மேலும் மேலும் காலத்தினால் அழியாப் பாடல்களை தர வேணுமாய் எங்கள் திருவண்ணாமலை மக்கள் சார்பில் கேட்டு அமர்கிறேன்."

    ( இதை எழுதும்போது தெளிவாக எழுதியிருந்தாலும், மேடையில் ராஜாவின் முன்னே பேசும்போது லேசாக நா தழுதழுத்து கண்கள் கலங்கி விட்டேன்.)

    எதிரில் அமர்ந்திருந்த சில ஆயிரம் பேர்களிடம், எனது பேச்சுக்கு நல்ல கைத்தட்டல்களும், ஒரு சில கண்ணீர் துளிகளும் கிடைத்ததைக் கண்டேன். பேசி முடித்து இடம் திரும்பிய என்னை அழைத்து, 'ஒரு வார்த்தை கூட குறைவாக இல்லாமல், கச்சிதமா இருந்தது உன் பேச்சு! சமீபத்தில் நான் ரொம்ப ரசித்த பேச்சு இதுதான் என்று பாராட்டினார் இசைஞானி!'

    ஆக, ஒரு பேச்சாளனாகவும் நான் பாஸாகி விட்டேன்.

    அந்த மூன்றாவது விஷயம் என்ன எனக் கேட்கிறீர்களா?

    வேறென்ன? இசைஞானியுடன் நான் எடுத்துக் கொண்ட 'செல்ஃபிதான்'!

    இனி யாராவது என்னிடத்தில், உலகத்திலேயே உயரமான இடத்தில், உலகத்தின் ஆழமான இடத்தில், உலகத்தின் அழகான இடத்தில், என்று கேப்ஷன் போட்டு செஃல்பி எடுத்துப் போடட்டும்!

    அவனிடம் சொல்வேன்! அட முட்டாள்! நான் அத்தனையும் சேர்ந்த மூளை கொண்ட ஒரு மேதையுடனேயே, செல்ஃபி எடுத்து விட்டேன் என்று.

    -எஸ்கேபி. கருணா.

  4. Likes rajaramsgi liked this post
  5. #113
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by poem View Post
    After A very long thinking, I am posting this comment !!

    யாரோ எழுதி யாரோ இசை அமைத்து யாரோ பாடி யாரோ நடித்த பாடல்களுக்கு இத்தனை அக்கப்போர். எல்லாம் தெரிந்தது போல், எல்லோரையும் தரம் தாழ்ந்த விமர்சனம் , அடுத்த நொடியே போலியான அரவணைப்பு புகழ் மாலை ரசிகர் என்ற அடை மொழி வேறு !!! சிவாஜியே தோற்றுவிடுவார்.
    Thanks.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #114
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    ஹா.. வேண்டாங்க... நீங்கள் வெட்டெரன் ஹப்பர். சீனியர். நீங்கள் வென்றதாகவே வைத்துகொள்வோம்... உங்கள் எழுத்தால் நல்ல விஷயங்களை நான் தெரிந்து கொண்டால் மட்டும் போதும். carry on.

    by the way, 3 படம் நான் பார்க்கவில்லை. நான் கோழையும் இல்லை. மேலும் மேலும் வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டாமே..
    Bye Bye.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #115
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like


    ராஜா சார் பேச்சில் குறை ஒன்றும் இருப்பதாய் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.


    முதல் மரியாதை படம் பார்த்து விட்டு, படத்தை இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் மாற்றம் செய்ய அறிவுறுத்தியதாகவும், பாரதிராஜா கதையில் பிடிவாதமாக இருந்து எதையும் தனக்காக மாற்றவில்லை என்று ஏற்கனவே ராஜா சார் சொல்லி இருக்கிறார். படம் ஓடாது என்று தனக்கு தோன்றியதால் சம்பளமே வாங்கவில்லை என்றும் கூறி இருக்கிறார்.

    மேலும், பாடல்களும் பின்னணி இசையும் பிரமாதமாய் வந்து படமும் நன்றாக ஓடி லாபத்தை ஈட்டி விட்ட பிறகு பாரதிராஜா பிரசாத் ஸ்டுடியோ வந்து தான் எதிர் பார்க்காத வேளையில் ஒரு பெரிய தொகையை கையில் கொடுத்ததாகவும் 2007 ஏப்ரல் மாதம் தினத்தந்தியில் பல நாட்கள் வெளிவந்த வரலாற்று சுவடுகளில் பதிவு செய்திருக்கிறார்.


    முன்பே ஒருவர் கூறியுள்ளது போல், ராஜா சார் "அன்றைய மன நிலையில்" தனக்கு படம் பிடிக்கவில்லை என்று சொன்னதில் என்ன தவறு? தனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் படத்தில் வேலை செய்ய ஒப்பு கொண்ட பிறகு தன் வேலையை சரியாக செய்வது என்பது இது முதல் முறை அல்ல. அவர் வேலை செய்த படங்களில் முக்கால் வாசி அவருக்கு மட்டும் இல்லை, நமக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும் பாடல்கள் நம் மனதில் இன்றும் நிலைத்திருப்பது எதனால்?


    அவர் சிறந்த பேச்சாளர் அல்ல, மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறார், அதனால் விமர்சனத்துக்கும் ஆளாகிறார். உண்மையில் சொல்ல போனால் பாரதிராஜாவின் படங்களில் காதல் ஓவியம், மண்வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் எல்லாம் காவியங்கள். எல்லா அம்சங்களும் அழகாய் பொருந்திய படங்கள். 1991 வரை வந்த அவருடைய மற்ற படங்களும் ஏற குறைய அப்படி தான். ராஜா சாரும் நண்பர் என்கிற தகுதிக்காக அல்ல, அனுபவித்தே அந்த படங்களுக்கு அள்ளி கொடுத்திருக்கிறார், கிள்ளி கொடுக்கவில்லை.







  8. #116
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #117
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post

    ராஜா சார் பேச்சில் குறை ஒன்றும் இருப்பதாய் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.


    முதல் மரியாதை படம் பார்த்து விட்டு, படத்தை இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் மாற்றம் செய்ய அறிவுறுத்தியதாகவும், பாரதிராஜா கதையில் பிடிவாதமாக இருந்து எதையும் தனக்காக மாற்றவில்லை என்று ஏற்கனவே ராஜா சார் சொல்லி இருக்கிறார். படம் ஓடாது என்று தனக்கு தோன்றியதால் சம்பளமே வாங்கவில்லை என்றும் கூறி இருக்கிறார்.


    முன்பே ஒருவர் கூறியுள்ளது போல், ராஜா சார் "அன்றைய மன நிலையில்" தனக்கு படம் பிடிக்கவில்லை என்று சொன்னதில் என்ன தவறு? தனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் படத்தில் வேலை செய்ய ஒப்பு கொண்ட பிறகு தன் வேலையை சரியாக செய்வது என்பது இது முதல் முறை அல்ல. அவர் வேலை செய்த படங்களில் முக்கால் வாசி அவருக்கு மட்டும் இல்லை, நமக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும் பாடல்கள் நம் மனதில் இன்றும் நிலைத்திருப்பது எதனால்?


    அவர் சிறந்த பேச்சாளர் அல்ல, மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறார், அதனால் விமர்சனத்துக்கும் ஆளாகிறார். உண்மையில் சொல்ல போனால் பாரதிராஜாவின் படங்களில் காதல் ஓவியம், மண்வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் எல்லாம் காவியங்கள். எல்லா அம்சங்களும் அழகாய் பொருந்திய படங்கள். 1991 வரை வந்த அவருடைய மற்ற படங்களும் ஏற குறைய அப்படி தான். ராஜா சாரும் நண்பர் என்கிற தகுதிக்காக அல்ல, அனுபவித்தே அந்த படங்களுக்கு அள்ளி கொடுத்திருக்கிறார், கிள்ளி கொடுக்கவில்லை.
    இளைய ராஜா என்னதான் மகேந்திரன்,பாரதிராஜா,பாலுமகேந்திரா படங்களுக்கு தன் அபார பின்னணி இசையால் உயிர்ப்பூட்டி இருந்தாலும் ,ரசனையளவில் கப்பங் கிழங்கை தாண்டி வராதவர் என்பது ,திரையுலக நண்பர்களுடன் பழகி நான் அறிந்தது.இவர் சொந்தமாக தயாரித்த அலைகள் ஓய்வதில்லை,கோழி கூவுது ,ராஜாதி ராஜா ,சிங்காரவேலன் போன்றவை ,இதற்கு கட்டியம் கூறும்.நல்ல விஷயங்களை ,உன்னத விஷயங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும்,அறியாமையை கட்டியம் கூறி,விளம்பர படுத்தி,தரம் தாழ்த்தி கொள்ளும் போக்கையே நான் எதிர்க்கிறேன்.

    இவருக்கு பிடிக்கும் வகையில்,மலைச்சாமி ,கட்டை வண்டி பாடி குயிலை கலாய்க்க முடியுமா? அல்லது குயில்தான் பொட்டை பிள்ளை எல்லாருக்கும் என்று குத்து டான்ஸ் ஆட முடியுமா?இதுதான் இளைஞர்களுக்கு தேவை என்பது ராஜாவின் பரந்த அறிவு திறன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #118
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஓஹோ... இளைய ராஜா செய்வதையெல்லாம் ஒப்பு கொண்டால் மேற்குடி மக்கள். இல்லையென்றால் வெகு சனமா? பேஷ்,பலே,புதிய தீண்டாமை உருவாகி வருகிறதே?

    இந்த மாதிரி ,சொன்ன கருத்தை நோக்காமல்,சொன்னவனை நோக்கி ,அம்பு எய்வதெல்லாம் ,பழைய கதைகள் சார்.
    அய்யா வந்துட்டிங்களா மறுபடியும் சண்டை கட்ட? நான் மறுபடியும் மறுபடியும் சொல்வேன். இளையராஜா சொன்னதை தவறாகவே அர்த்தம் கொண்டிருக்கிறீர்கள். முன்பாவது ஒரளவு இசை சம்பந்தப் பட்ட விஷயத்தில் ( ராஜா ஒரு தன்னிகறறவர் என ஏன் நான் நினைக்கிறென் - திரியில் ) முரண்டு பிடித்தீர்கள்.. அப்போது இசை பற்றிய கருத்துக்களை/அபிப்ராயங்களை எடுத்து வைத்தும் எங்கும் உரையாட முன்வரவில்லை.. எனக்கு எல்லாமே தெரியும், ராஜா ரசிகர்களை விட என்ற ஒற்றைப் பரிமாணத்திலேயே உங்களது பதிவுகள் இருந்தது. இப்போது ராஜா அடுத்தவர்களை விமர்சித்து பேசியது என்பது உங்களுக்கு ஒரு தோதான கருத்துக்களம். ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட ராஜா மீதான உங்களது அபிப்ராயங்களுக்கு தீனி போடும்வகையில் / அல்லது எரியிற தீயில் எண்ணையை ஊற்றும் வகையில் வந்துள்ளது. வசமா சிக்கிட்டான்யா என வசைமாறி பொழியவேண்டியதுதான்!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #119
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    அய்யா வந்துட்டிங்களா மறுபடியும் சண்டை கட்ட? எரியிற தீயில் எண்ணையை ஊற்றும் வகையில் வந்துள்ளது. வசமா சிக்கிட்டான்யா என வசைமாறி பொழியவேண்டியதுதான்!
    வெங்கி ராம்,

    அப்படியெல்லாம் இல்லை. சிலையை உடை ,காற்று வரட்டும் ,இடம் சுத்தமாகட்டும் வகை நான்.

    அன்று பல வைரங்களை ,அன்றைய இசையமைப்பாளர்கள்,பழைய தினத்தந்தி பேப்பர் ஓரம் கிழித்து கட்டி கொடுப்பது போல packaging செய்து வந்த போது ,வைரங்களை அதற்கேற்ற பேழைகளில் இட்டு முழுமை செய்த பெருமைக்குரியவர் இளையராஜா.

    பாடல்களும் B .G .M , Recording Quality ,எல்லாவற்றிலும் அற்புதமான மாறுதல்கள்.1976 முதல் அதை ரசித்து ருசித்தவன்.

    ஆனால் மார்க்ஸ் ,பெரியார் வழி வந்தவன் என்பதால் துதி பாடலில் பரிச்சயம் அற்று ,issue based critic ஆக விளங்குகிறேன்.(இன்று பெரியாருக்கே சிலைகள் வைத்து,துதி பாட ஆரம்பித்தாயிற்று என்பது வேறு விஷயம்.)

    படைப்பு திறன் உள்ள, அறிவு நமைச்சல் கொண்ட அனைவருக்கும் Bi Polar Disorder இருக்க வாய்ப்புள்ளதோ?எனக்கு மௌனி மாதிரி அடிக்கடி தோன்றும் பிரமை. "எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்".
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #120
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இளைய ராஜா என்னதான் மகேந்திரன்,பாரதிராஜா,பாலுமகேந்திரா படங்களுக்கு தன் அபார பின்னணி இசையால் உயிர்ப்பூட்டி இருந்தாலும் , ரசனையளவில் கப்பங் கிழங்கை தாண்டி வராதவர் என்பது , திரையுலக நண்பர்களுடன் பழகி நான் அறிந்தது. இவர் சொந்தமாக தயாரித்த அலைகள் ஓய்வதில்லை,கோழி கூவுது ,ராஜாதி ராஜா ,சிங்காரவேலன் போன்றவை ,இதற்கு கட்டியம் கூறும்.நல்ல விஷயங்களை ,உன்னத விஷயங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும்,அறியாமையை கட்டியம் கூறி,விளம்பர படுத்தி,தரம் தாழ்த்தி கொள்ளும் போக்கையே நான் எதிர்க்கிறேன்.

    இவருக்கு பிடிக்கும் வகையில்,மலைச்சாமி ,கட்டை வண்டி பாடி குயிலை கலாய்க்க முடியுமா? அல்லது குயில்தான் பொட்டை பிள்ளை எல்லாருக்கும் என்று குத்து டான்ஸ் ஆட முடியுமா?இதுதான் இளைஞர்களுக்கு தேவை என்பது ராஜாவின் பரந்த அறிவு திறன்.
    பேஷ் பேஷ்! ! "அன்றைய மனநிலையில் முதல் மரியாதை கதைபிடிக்கல" - என வெளிப்படையாக சொன்னதற்கு "ரசனையளவில் கப்பங் கிழங்கை தாண்டி வராதவர் " என்றெல்லாம் சான்றிதழ் அறிக்கை வேறு கொடுத்தாகிவிட்டதா? அதுவரை சமகால நட்சத்திர அந்தஸ்து கொண்ட/ அல்லது முற்றிலும் புதிய இளைஞர் பட்டாளங்களுடன் திரைப்படங்களை கொடுத்த ஒரு நெருங்கிய நண்பன் சிவாஜியை வைத்து அதுவும் முதிய வயதுள்ள பிரதான கதாபாத்திரத்தில் ஒரு படைப்பில் இறங்கியிருக்கானே இது மக்களிடத்தில் செல்லுபடியாகுமா? வியாபார ரீதியில் வெல்லுமா? என்ற சந்தேகம் வந்திருக்கலாம். இதையே பாரதிராஜாவே ஒரு சபையில் பகிர்ந்திருக்கிறார். "அன்றைய மனநிலையில்" எனச் சொல்லியும் வரிந்து கட்டிக்கொண்டு கப்பங்கிழங்கு, சேனைக் கிழங்கு வரையெல்லாம் செல்வதேன்? மாபெரும் ஆளுமையை இப்படியெல்லாம் வீழ்த்தி தனது நடுநிலையை(!) பாரெங்கும் தெரியப்படுத்தணும் என்ற மனநிலையா?

    யாரும் இங்கே அறியாமையை கட்டியம் கூறவில்லை. மாறாக தனக்குப் பிடிக்காத கதைக் களத்திலும் ஆகச் சிறந்த வரிசையில் இன்னொன்றாக பாடல்கள், பின்னணி இசையினை வழங்கிய ஞானத்தை/ ஆற்றலைத் தான் வியந்து பார்க்கிறோம். இதை வசதியாக புறக்கணித்து "பாருய்யா! இவனுக்கு முதல்மரியாதை பிடிக்கவில்லையாம், எவ்வளவு கீழ்த்தரமான ரசனை கொண்டவன்" என பதிவதின் நோக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 12 of 54 FirstFirst ... 2101112131422 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •