Page 19 of 54 FirstFirst ... 9171819202129 ... LastLast
Results 181 to 190 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

  1. #181
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Thanks krish. Welcome back Viji Manuel. Hope Viji will get to work with Raja sir too, which he did not mention in the interview.

    Raja sir should work with people who will inspire him like Kamal used to.
    (All the younger generation directors may be great too, but they may not be in a comfortable level to be in front of him to extract what they want, due to fear? respect? I think, very few like Gowtham Menon broke the ice with him and got close, but there is no way he will come back to Raja sir, unless a miracle happens)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #182
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    மேகாவில் புத்தம் புது காலை பாடலை எப்படி படமாக்க போகிறார்கள் என்ற குறுகுறுப்பு ஒரு வருடமாகவே இருந்தது.

    நாயகியின் சகோதரனனுக்கு திருமணம். அங்கே புகை படம் எடுக்கும் ஆளாய் நாயகன். திருமண வரவேற்ப்பு விழாவில் இந்த பாடலை ஒரு வாத்திய குழுவினர் பாட, சந்தோஷமாய் உறவினர்கள் உலாவும் பின்புலத்தின் மத்தியில், நாயகியும் அவர் தோழிகளும் அழகாய் நடனமிடுகிறார்கள். இடை இடையில் நாயகனும் நாயகியும் நோக்கி கொள்ள, திருமண அரங்கின் ஜொலிஜொலிப்பு சூழ்நிலைக்கு அழகூட்ட , பாடலின் முடிவில் நாயகன் நடனமாதுகளுக்கு மருதானியிடுகிறார், பாடலும் முடிகிறது.

    கொசுறாக, இந்த பாடலின் முடிவில் மருதானியிட்டுகொண்ட நாயகி அதை கழுவிக்கொண்டு, தண்ணீர் நிறைந்த ஒரு வெண்கல பாத்திரத்தில் கை விரிக்க ராஜா சார் கோரஸ் குயில்களை கொண்டு 15 நொடிகள் சொக்க வைப்பதாக படம் பார்த்த நண்பன் கைபேசியில் வெறுப்பேற்றியது வேறு விஷயம்.

    ஒரு வழியாய் படம் வெளிவந்து இப்போது பாடல்கள் அனைத்தும் யூடியூபில் ஒலியும் ஒளியுமாய் ஏற்றி இருக்கிறார்கள்..படம் எப்படி என்று தெரியவில்லை, ஆனால் பாடல்களை நல்லவிதமாய் எடுத்திருக்கிறார்கள். முகிலோ மேகமோ பாடல் டைட்டில் கார்ட் போடும் போது வருகிறதாம். அதிசயமாய் யுவன் இந்த பாடலை நன்றாய் பாடி இருந்தும், மியுசிக் சேனல்களில் பார்ப்பது கஷ்டம் தான்.





  4. Likes mappi liked this post
  5. #183
    Senior Member Regular Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    117
    Post Thanks / Like
    Not sure if this will ever happen... but the thought itself is noble...

    http://www.galatta.com/tamil/news/il...ng-hand/80582/

  6. Likes rajaramsgi liked this post
  7. #184
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by K View Post
    அகிலன் சொன்ன கருத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும், சில விஷயங்கள் புரிபடவில்லை. இவர் மீது ராஜா சார் தரப்பு ஏன் காவல் துறையில் புகார் செய்தது? எக்கோ போன்று இவரும் தவறேதும் செய்து விட்டாரா?

    இசைஞானியின் பாடல்கள் அனைத்தும் தனது மேற்பார்வையிலும் தனது சிந்தனையிலும்தான் உருவானது. அதை இளையராஜா மெருகேற்றினார். அதனால்தான் இன்றளவும் அவைகள் பிரபலம் என்று சொன்ன அந்த மேதா விலாசி யார்? அப்படி சொன்னவரை நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும் அகிலன்? சட்டப்படி அவருக்கு சாட்டை அடி குடுத்திருக்க வேண்டாமா? சட்டையை பிடித்து இழுத்து முகத்தில் காரி உமிழ்ந்திருக்க வேண்டாமா?

    அகிலனுக்கும் ராஜா சாருக்கும் எப்படி தொடர்பு ஏற்ப்பட்டது, பின்னர் அகிலன் பொருளாதார ரீதியாக சறுக்கிய போதெல்லாம், ராஜா சார் எப்படி அவருக்கு உதவி செய்து இந்த தொழிலை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார் என்று வெகு நாட்களுக்கு முன்னரே அகிலன்ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை வைத்து தான் நானும் ஆப் ஸ்டோரில் அகி பேனர் மூலமாய் வெளிவந்த ராஜா சாரின் பாடல்களை பல நூறு பவுண்டுகள் கொடுத்து பதிவிறக்கம் செய்தேன். என்னை போன்று இன்னும் எத்தனை பேரோ?

    ராஜா சார் இல்லை என்றால், தான் இன்று ஒன்றுமே இல்லை என்கிற ரீதியில் இருந்த அந்த கட்டுரைக்கும் இப்போது அவர் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசங்கள். அந்த ப்ளாக் கட்டுரையை என்னால் இப்போது கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், இசை இன்பம் பகுதியில் நானும் இசைஞானியும் என்று அவர் எழுதி உள்ள 3 பாகங்களை படிக்க, அகிலன் மீது எனக்கு மரியாதை குறைந்து விட்டது. கால்புர்ணர்ச்சி ஓங்கி வருகிறதோ இவருக்கு என்று என்ன தோன்றுகிறது.

  8. Likes K liked this post
  9. #185
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    See their comfort space..




  10. Likes K, rajaramsgi liked this post
  11. #186
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜாவும் ஆண்டாளும்....

    ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
    நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

    வாழ்க வளமுடன்

    அனைவருக்கும் வணக்கம்...

    ஆண்டாள் அருளால் இசை சித்தர், இசைஞானி இளையராஜா அவர்களுடன் இன்று (05-09-2014) சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை வடபழனி Prasad Studio – வில் வைத்து 1½ மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து உரையாடினேன்.

    இளையராஜாவை பற்றி ஒரு வார்த்தை பேசுவதற்கு கூட என்னை போன்ற சாமானியனுக்கு தகுதி இல்லை என்பது மட்டும் நிஜம் என புரிந்தது அவரை சந்தித்த பிறகு....

    இளையராஜாவுடன் என்ன பேசினேன்; எதற்காக சந்தித்தேன்; இசைஞானி என்ன சொன்னார் என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சொல்வேன் – வெகு விரைவில்...

    எல்லா புகழும் ஆண்டாளுக்கே....
    எல்லாம் ஆண்டாள் சித்தப்படி....

    வாழ்க வளமுடன்

    என்றென்றும் அன்புடன்

    ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

    http://https://m.facebook.com/andalp...id=52&__tn__=E

  12. Likes K, rajaramsgi liked this post
  13. #187
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    கொசுறாக, இந்த பாடலின் முடிவில் மருதானியிட்டுகொண்ட நாயகி அதை கழுவிக்கொண்டு, தண்ணீர் நிறைந்த ஒரு வெண்கல பாத்திரத்தில் கை விரிக்க ராஜா சார் கோரஸ் குயில்களை கொண்டு 15 நொடிகள் சொக்க வைப்பதாக படம் பார்த்த நண்பன் கைபேசியில் வெறுப்பேற்றியது வேறு விஷயம்.
    LoL
    Putham Puthu Kalai - For years I had been 'mentally' pictorising this amazing song, that played in Loop in Winamp during my night shifts. Can't say much about what all I had imagined, but I can say that this is an OUTDOOR song, for sure. An early morning under the clouds that can be touched beside a waterfall, the flowers on the green grass wispering to the heroine Putham Puthu Kalai to which she gives her voice ...
    ... Athu oru Kanna Kalam.

    Quote Originally Posted by rajaramsgi View Post
    முகிலோ மேகமோ பாடல் டைட்டில் கார்ட் போடும் போது வருகிறதாம். அதிசயமாய் யுவன் இந்த பாடலை நன்றாய் பாடி இருந்தும், மியுசிக் சேனல்களில் பார்ப்பது கஷ்டம் தான்.
    So its not the IR version ?
    Have not seen the movie yet, waiting for the DVD to get the full profit from IR music.
    Last edited by mappi; 7th September 2014 at 12:55 AM.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  14. #188
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    அகிலன் சொன்ன கருத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும், சில விஷயங்கள் புரிபடவில்லை. இவர் மீது ராஜா சார் தரப்பு ஏன் காவல் துறையில் புகார் செய்தது? எக்கோ போன்று இவரும் தவறேதும் செய்து விட்டாரா?

    இசைஞானியின் பாடல்கள் அனைத்தும் தனது மேற்பார்வையிலும் தனது சிந்தனையிலும்தான் உருவானது. அதை இளையராஜா மெருகேற்றினார். அதனால்தான் இன்றளவும் அவைகள் பிரபலம் என்று சொன்ன அந்த மேதா விலாசி யார்? அப்படி சொன்னவரை நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும் அகிலன்? சட்டப்படி அவருக்கு சாட்டை அடி குடுத்திருக்க வேண்டாமா? சட்டையை பிடித்து இழுத்து முகத்தில் காரி உமிழ்ந்திருக்க வேண்டாமா?

    அகிலனுக்கும் ராஜா சாருக்கும் எப்படி தொடர்பு ஏற்ப்பட்டது, பின்னர் அகிலன் பொருளாதார ரீதியாக சறுக்கிய போதெல்லாம், ராஜா சார் எப்படி அவருக்கு உதவி செய்து இந்த தொழிலை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார் என்று வெகு நாட்களுக்கு முன்னரே அகிலன்ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை வைத்து தான் நானும் ஆப் ஸ்டோரில் அகி பேனர் மூலமாய் வெளிவந்த ராஜா சாரின் பாடல்களை பல நூறு பவுண்டுகள் கொடுத்து பதிவிறக்கம் செய்தேன். என்னை போன்று இன்னும் எத்தனை பேரோ?

    ராஜா சார் இல்லை என்றால், தான் இன்று ஒன்றுமே இல்லை என்கிற ரீதியில் இருந்த அந்த கட்டுரைக்கும் இப்போது அவர் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசங்கள். அந்த ப்ளாக் கட்டுரையை என்னால் இப்போது கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், இசை இன்பம் பகுதியில் நானும் இசைஞானியும் என்று அவர் எழுதி உள்ள 3 பாகங்களை படிக்க, அகிலன் மீது எனக்கு மரியாதை குறைந்து விட்டது. கால்புர்ணர்ச்சி ஓங்கி வருகிறதோ இவருக்கு என்று என்ன தோன்றுகிறது.

    http://meedpu.blogspot.in/2010/02/blog-post_03.html

    I think this is the one you say.

    ராஜா நம்பும் நபர்கள் எல்லாம் அவரை ஏதோ ஒரு நாள் ஏமாற்றித்தான் இருக்கிறார்கள். நாம் நல்லதை எடுத்துக்கொண்டு மற்றவை விடுப்போம்.
    Isai ellaigal kadanthathu engum nirainthathu

  15. Thanks mappi, rajaramsgi thanked for this post
    Likes Russellhaj liked this post
  16. #189
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by K View Post
    http://meedpu.blogspot.in/2010/02/blog-post_03.html

    I think this is the one you say.

    ராஜா நம்பும் நபர்கள் எல்லாம் அவரை ஏதோ ஒரு நாள் ஏமாற்றித்தான் இருக்கிறார்கள். நாம் நல்லதை எடுத்துக்கொண்டு மற்றவை விடுப்போம்.

    Thanks for finding this K. Yes, this is the original blog I was talking about.

  17. #190
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    டைரக்டர் மகேந்திரன் தமிழ்த்திரையுலகில் (1978-90)ஒரு முக்கியமான ஆளுமை.சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியவர்களுள் ஒருவர்.

    முக்கியமாக சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை காட்சிகளினூடே பார்வையாளனை பயணிக்க வைத்துக் கதைச் சொல்பவர்.காட்சிகளே கதாபாத்திரமாக,ஓவியமாக திரையில் தீட்டப்பட்டு உணர்ச்சிகள் பார்வையாளனைத் தீண்டும்.அவன் கதாபாத்திரங்களுடன் உலாவுவான்.

    மிக முக்கியமாக காட்சிகளில் விரவிக்கிடக்கும் மெளனம் அர்த்தபுஷ்டியானது.






    இப்படிப்பட்ட படைப்பைப் படைப்பவன்தான் உண்மையான படைப்பாளி. சிருஷ்டி கர்த்தா.டைரக்டர் மகேந்திரன் ஒரு சிருஷ்டி கர்த்தா.பார்த்துப் பார்த்துச் செதுக்கும் ஓவியர்.இப்படி இவருடன் இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் கைக்கோர்த்து ஒரு கவிதையை ஓவியமாக தீட்டி இருக்கிறார்கள் அல்லது ஒரு ஓவியத்தைக் கவிதையாக எழுதி இருக்கிறார்கள்.

    அந்தக் கவிதை ஜானி திரைப்படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்ற பாடல் காட்சி.இவருடன் இணைந்த மற்ற இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் இசைஞானி இளையராஜா ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.





    இந்தப் பாடலின் காட்சி உள்ளும் புறமுமாக விரிக்கப்படுவதில் அசோக்குமாரும் ராஜாவும் தங்கள் கற்பனைத் திறனை அள்ளித்
    தெளித்திருக்கிறார்கள்.பாடலை எழுதிய கங்கை அமரனும் பாராட்டுக்குரியவர்.நேரடியாக எதையும் சுட்டாமல் கவித்துமாக உள்ளது.

    காட்சி நேர்த்தியாக romanticize செய்யப்பட்டு இருக்கிறது.






    இந்தக் கவிதைக்கு யதார்த்தமான பின்னணி உண்டு.

    குற்றப் பின்னணி உள்ள கதாநாயகன் ஜானி ஒரு இசை ரசிகன்.பிரபல பாடகி அர்ச்சனாவின் ரசிகன்.அன்று கேட்ட”ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்” பாடல் இவனுக்காகவே பாடப்பட்டதுபோல் உணர்கிறான்.மனம் குதூகலிக்கிறது.இசை நிகழ்ச்சி முடிவில் அவளைப் பாராட்டி பூங்கொத்து கொடுக்க முடியாமல் கூட்டம் இவனை தடுத்து விடுகிறது.

    மறு நாள் அவள் வீட்டிற்கு தொட்டி தொட்டியாக வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டமே அனுப்பி வைக்கிறான்.மற்றொரு நாள் இருவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.கடற்கரையில் அர்ச்சனா உலா போகையில் தான் பாடிய “ஒரு இனிய மனது” பாடல் காற்றில் அலைந்து வருகிறது.அதை நோக்கி போகையில் ஒரு படகில் ஜானி மெய் மறந்துப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறான்.பரஸ்பர அறிமுகத்தில் இவன்தான் பூக்கள் அனுப்பியவன் என்று தெரிகிறது.தானும் அர்ச்சனாவைப் போல தனி இருவருக்கும் தங்களைத் தவிர யாரும்இல்லை என்பதில் இருவருக்குள்ளும் மெலிதான பிணைப்பு ஏற்பட்டு ஒரத்தில் ஒரு மொட்டு அவிழ்கிறது.

    ”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை... எனக்கு மட்டும் எனக்காக மட்டும்.. தனியாக நீங்க பாடனும்.தனியா கேட்கனும்.எல்லார்கிட்டயும் சொல்லி பெருமைப் படனும்” ஜானி ஆர்வத்துடன் கேட்கிறான்.

    ”நிறைவேறுவது கஷ்டம்தான்...மாட்டேன்னா என்ன செய்வீங்க....” செல்லமாக சீண்டிவிட்டு ...”நாளைக்கு வீட்டுக்கு வாங்க" புன்னகையுடன் சம்மதிக்கிறாள்.ஜானியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

    (ஒரு பாமர ரசிகனின் வெகுளித்தனமான ஆசையை நிறைவேற்றுவதில் அர்ச்சானவுக்கு ஒரு fatal attraction இருக்கிறது)


    மறுநாள்: ஜானி சட்டைக்குள்ளே “MUSIC THE LIFE GIVER" என்ற வாசகம் எழுதிய மஞ்சள் பனியன் (பாமரத்தனமாக??) அணிந்து அவளை சந்திக்கச் செல்கிறான்.

    வீட்டில் நுழைந்ததும் ஒருஅழகான பியானவும் அதைச் சற்றி அவன் கொடுத்த வண்ணப் பூக்களும் பார்வையில்பட்டு ”பியூட்டி புல்... பியூட்டி புல்...” நெகிழ்ந்துப்போய்விடுகிறான்.





    பியானோ வாசிக்க முயற்சிக்கச் சொல்லி அவனும் மொன்னையாக மெட்டுவாசிக்க முயற்சிக்க ” no.. no... just listen..!" என்று பியானவில் அவள் விரல்கள் மீட்ட நாதங்கள் மீன்களாய் துள்ளி கவிதையாக எழ ஆரம்பிக்கிறது.

    பாடல் முழுவதும் அவன் உடல்மொழி இயல்பாக இருக்கிறது.

    காட்சி......





    கேமரா ஊர்ந்து தூரிகையால் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்க உயிர் துடிப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது காட்சி.இசை மென்மையான வெஸ்டர்ன் கிளாசிகலில் காட்சியை நகர்த்துகிறது.அர்ச்சனாவின் வானில் வெண்ணிலாவும் காதல் மேகங்களும் கவிதை தாரகைகளும் ஊர்வலம் போக ஆரம்பிக்கிறார்கள்.

    அர்ச்சனாவின் உடை ஒரு தனி மொழியே பேசுகிறது.காட்சியின் பின்னணி ஒரு பாத்திரமாக பரவசப்படுத்துகிறது.காட்சிகள் உள்ளேயும் வெளியேயுமாக வழுக்கிக்கொண்டு பயணித்தப்படி போகிறது.ஜானி ” எல்லாம் எனக்குத்தான் எனக்குத்தான் ... எனக்குத்தான்...”கற்பனைச் சிறகடித்துப் பறக்கிறான்.

    அர்ச்சனாவின் குரலில்(ஜென்சி) இருக்கும் மழலைத்தனத்தில் காதல் இருக்கிறது.காட்சியை ஆழப்படுத்துகிறது.


    முதல் இடை இசையில் ரஜினி மனம் குதூகலித்தப்படி மேகத்தில் பறக்கிறது. உச்சக்கட்டமாக 1.22 ல் சொர்க்கத்திலிருந்து ஆசிர்வதிக்கப்படுகிறான்.Absolutely bliss..!

    முதல் சரணத்தில் ”நீரோடை போலவே’ 1.30 -1.56 ஆரம்பித்து முடியும் வரை ரஜினி,ஸ்ரீதேவி,பிரேமி மூவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.
    குறிப்பாக 1.46-1.47ல் கேமரா திரும்ப, படிக்கட்டில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தபடி பிரேமி ஸ்ரீதேவியைப் பார்க்கும் (பெருமிதம்?) பார்வை யதார்த்தம்.

    அடுத்து 1.56ல் ”நீராட வந்ததே என் மென்மை” என்று ஸ்ரீதேவி தன் குண்டு விழிகளில் எதையோ தேக்கி (காதல்?காமம்?)புன்சிரிப்போடு காட்டிவிட்டு தலைகுனிவது அருமை.

    3.26ல் வாசித்துக்கொண்டே பிரேமியை எட்டிப்பார்க்கும் இடம் ரொம்ப சுட்டி.





    இளையராஜாவின் வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்/பியானோ இழைகள் காட்சி முழுவதும் சில்லென்று வீசிக்கொண்டே இருக்கிறது.

    பாட்டை அதன் பரிமாணத்தில் உள்வாங்கி மகேந்திரனும் அசோக்குமாரும் கவிதையாக செதுக்கி இருக்கிறார்கள்.

    காவியக் காதல்களில்இரவு, நிலவு,பூஞ்சோலை, அருவி,அன்னம், புறா,மயில்,உப்பரிகை என்று காதலர்கள் உலா வருவார்கள்.

    தமிழ் திரையுலகில் இப்படி உணர்வுபூர்வமாக மென்மையாக மிகைப்படுத்தாமல் இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை பின்னணியுடன் பின்னி பினைந்து இசை வழியாக சொல்லி காட்சியை ஆழப்படுத்தியது அபூர்வமான ஒன்று.

    -AR

  18. Likes rajaramsgi liked this post
Page 19 of 54 FirstFirst ... 9171819202129 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •