-
22nd November 2014, 10:58 PM
#111
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2014 10:58 PM
# ADS
Circuit advertisement
-
22nd November 2014, 11:01 PM
#112
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd November 2014, 11:02 PM
#113
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd November 2014, 11:03 PM
#114
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2014, 11:04 PM
#115
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2014, 11:06 PM
#116
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd November 2014, 01:39 PM
#117
Junior Member
Seasoned Hubber
Thanks to Mr Raghavendar
இளமை வேகத்தில் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று வாழ்க்கையை அவசர கதியில் துவக்குவது, பின் குழந்தைகள் வளர்ப்பு, அவர்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது போன்று கடமைகளை முடித்த பின்னரே தம்பதிகள் தங்களுடைய வாழ்க்கையின் பொருளை புரிந்து கொள்ளத் துவங்குகின்றனர். அப்படிப் பட்ட காலத்தில் தான் அந்நியோன்யம் என்றால் என்ன என்று புரிகிறது. கணவன் மனைவி இருவருமே தாங்கள் அப்போது தான் ஒருவரை ஒருவர் ஆழமாக அன்பு செலுத்தத் துவங்குகிறார்கள். உண்மையான காதல் வாழ்க்கையில் புரியும் வயது ஐம்பதிற்குப் பிறகு தான். Romance என்பதன் பொருளே புரிந்து கொண்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பைத் தான். காதலர்களிடம் வருவது புரிந்து கொண்ட அன்பு அல்ல. இதனை வித்தியாசப் படுத்தாமலே நடித்தவர்கள் தான் காதல் மன்னர்கள் என்றும் காதல் இளவரசர்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள். வாழ்க்கையில் எப்படிப் பட்ட குணம் கொண்டவர்களும் காதல் வசப் பட்டதுண்டு. அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் போது அது நிச்சயம் அவரவர் குணாதிசயங்களுக்கேற்றவாறே இருக்கும். மென்மையான இசையும் மென்மையான பாடலும், மென்மையான குரலும் காதலை மென்மையாக காட்டுமே தவிர உண்மையாக சித்திரித்து விடாது. இப்படி பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதற்கேற்ப, காதலை அந்த பாத்திரத்திற்கேற்றவாறு உருவகப் படுத்தி உயிர் கொடுத்தவர் நடிகர் திலகம்.
அந்த ஐம்பது வயதில் வரும் புரிந்துணர்வின் அடிப்படையிலான உண்மையான அன்பினையும் காதலையும் வெளிப்படுத்த இந்தப் பாடல் மிகச் சிறந்த உதாரணம். இளைய ராஜா ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்தப் பாடலின் போது ஐம்பது வயதைத் தாண்டியவர்கள். ஆனால் இந்தப் பாடலின் ஜீவன் ... அதற்கு வயதே இல்லை.
ROMANCE என்ற வார்த்தைக்கு விளக்கமே இந்தப் பாடல் தான் ...
ஐம்பதிலும் ஆசை வரும்,
ஆசையுடன் பாசம் வரும் - இதில்
அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல
சுகம் தானம்மா
பாடல் வரிகளைப் பாருங்கள். கவியரசரின் வரிகளில் ... அந்த ஐம்பது வயதில் மனிதன் உடலில் ஏற்படக் கூடிய மாற்றத்தை இரண்டே வார்த்தைகளில் சொல்லி விட்டார். அந்தரங்கம் கிடையாதம்மா..
ஒரு ஐம்பது வயதில் மனிதன் காதல் வசப்படும் போது ... கணவன் மனைவி இருவருக்கிடையில் வெளிப்படக் கூடிய அந்நியோன்யத்தை இதைவிட சிறப்பாக இது வரையில் தமிழ்த் திரைப்படத்தில் சித்தரித்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஸ்கூல் மாஸ்டர் படத்தில் தன்னந்தனிமையிலே பாடல் ஓரளவிற்கு இந்தக் கருத்தைக் கூறலாம் ஆனால் முழுமையாக அல்ல, காரணம், அந்தப் பாடலில் அந்தப் பாத்திரத்தின் பொருளாதார நிலை, குடும்ப சூழ்நிலை போன்ற துன்பங்களையும் துயரங்களையும் சேர்த்து வெளிப்படுத்தும்.
ரிஷிமூலம் படத்தில் இடம் பெற்ற இப்பாடலை பார்ப்போமா..
குரல் சௌந்தர்ராஜன்
வரிகள் கண்ணதாசன்
இசை இளையராஜா
நடிப்பு நடிகர் திலகம், கே.ஆர்.விஜயா
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th December 2014, 08:06 PM
#118
Junior Member
Seasoned Hubber
When the picturaisation of this song to take place in Singapore during the month of May and they are waiting for for the kavignar to give the song so that
they can finish the shooting in the month of May. When they are pointing out to this to kavignar that the song to be shooted in the month of May because of
the sun light and for that the kavignar replied how many May you want and now we are watching this wonderful song from the movie
Avan Than Manithan. This was the story behind the birth of this Superb Song.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th December 2014, 11:09 PM
#119
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan - Definition of Style - 1
Style என்கிற வார்த்தை இடத்திற்கு இடம் Contextஐப் பொறுத்து பல்வேறு விதமான Interpretationகளில் அர்த்தம் செய்து கொள்ளப்படுகிறது. சரியாக சொன்னோமானால் BAணி என்பதைக் கொள்ளலாம். ஆனால் நடிப்பைப் பொறுத்தவரையில் நடிகர் திலகம் தனக்கென எந்த ஒரு பாணியும் கடைப்பிடிக்கவில்லை. தொலைக்காட்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் செய்யப்படும் மிமிக்ரியில் நடிகர் திலகத்தைப் போல் செய்ய முயன்று தோல்வி கண்டவர்களே அதிகம். வெற்றி பெற்றோர் ஒருவர் கூட இல்லை என்பதே உண்மை. அதிக பட்சம் அவருடைய குரலை வேண்டுமானால் செய்திருக்கலாம்.
இவ்வாறு யாராலும் கடைப்பிடிக்க முடியாத ஸ்டைலை செய்ததினால் தான் இன்று வரை அவர் இமயமாய் உயர்ந்திருக்கிறார்.
அவருடைய உடல் மொழியில் அவர் செய்து காட்டும் ஒய்யாரங்கள் மக்களிடம் மிகப் பெரிய ஈர்ப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அவரைப் போல் உடையலங்காரம், நடை, பார்வை கையசைவு போன்றவை அவருடைய ரசிகர்களால் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன. இதை மிமிக்ரி என கொச்சையாகக் கொள்ள முடியாது. அவருடைய பாதிப்பின் விளைவே இதைப் போன்ற செய்கைகளில் ரசிகர்களின் ஈடுபாடு.
இந்த உடல் மொழியில் அவருடைய ஒய்யாரங்களே மக்களிடம் சிவாஜி ஸ்டைல் என்று மிகப் பரவலாக சென்றடைந்து, கலாச்சாரத்தின் இலக்கணமாகவே மாறியுள்ளன என்றால் மிகையில்லை.
இந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்திய அவரது ஒய்யாரமான உடல் மொழிகளடங்கிய காட்சிகள், குறிப்பாக பாடல் காட்சிகளை இத்தொடரில் நாம் கண்டு மகிழலாம். ரசிக்கலாம்... மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம்.
மங்களமான குங்குமத்துடன் துவங்குவோமே...
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை எந்தக் காலமானாலும் சரி, இரு கைகளையும் பாக்கெட்டுகளில் நுழைத்து வைத்துக் கொண்டு ஒய்யாரமாய் நடந்து வந்தால் பாருய்யா, சிவாஜியாட்டம் ஸ்டைல் காட்டுகிறார் என்று கமெண்ட் வருவது சகஜம். இந்த ஸ்டைலை அவர் தன் முதல் படத்திலேயே காட்டி விட்டார். என்றாலும் இது மிக மிக பிரபலமானது இந்தப் பாடலுக்குப் பிறகு தான்.
பருத்திக் காட்டில் பழம் கிடைக்கும் பசி தீரும் என்று எண்ணி... இந்த வரிகளில் அவர் காட்டும் ஸ்டைல் இருக்கிறதே.. இன்றும் தியேட்டர் இரண்டு படும் அளவிற்கு அளப்பரை எழும். ஸ்டைல் என்றால் சிவாஜி என்பதற்கு இன்னொரு உதாரணமாய்த் திகழும் இப்பாடலை என்றும் ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள்..
சூப்பர் ஸ்டைல் மன்னன். நடையைப் பாருங்களேன்.. கண்ணடிப்பதும் தலையை ஒய்யாரமாய் ஆட்டி வருவதும்..
வர்ணித்துக் கொண்டே இருக்கலாம்.. பார்த்து மகிழுங்கள்..
Last edited by RAGHAVENDRA; 9th December 2014 at 11:39 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th December 2014, 11:28 PM
#120
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan - Definition of Style - 2
ஸ்டைல்.. இது உருவத்தில் மட்டுமல்ல... உடல் மொழியில் மட்டுமல்ல. தன் குரலிலும் கூடகொண்டு வர முடியும் என்பதற்கு ஒரு சான்று.. இப்பாடல் காட்சிக்கு முன் வரும் உரையாடலைக் கேளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள்.. கேட்கும் போதே மனம் நெகிழும் காதல் உணர்வு... இதுவும் யாராலும் இமிடேட் செய்ய முடியாத அசல் ஸ்டைல்... அந்த முகத்திலுள்ள வசீகரம்... அந்த முகத்திற்கு ஈடு செய்யும் அந்த நாயகியின் Reciprocation...அந்த உடையலங்காரம் அந்த சூழலை மிகவும் தத்ரூபமாக பிரதிபலிப்பதும் ஒரு ஸ்டைல் தான்.. The body language is reflective of the inner self...இரு கைகளையும் இருபுறமும் விரித்து அனாயாசமாக அந்த சூழலை அனுபவித்து ஒரு காதலின் மனோநிலையை அருமையாக பிரதிபலிக்கும் இந்த ஸ்டைல்.. காதலர்களின் அடையாளச் சின்னமாக இப்பாடலை காட்டுகின்றன.
ஆஹா... எங்கள் தேவிகா அண்ணிக்குப் பிறகு ரசிகர்களின் நெஞ்சில் கூடாரம் போட்டு அமர்ந்து மற்றவர்கள் அனைவரையும் துரத்தியடித்து விட்ட நாயகி வாணிஸ்ரீ..
அது என்னமோ சிவாஜி வாணி என்றாலே எனக்கு முதலில் பிடித்தது சிவகாமியின் செல்வன் தான்.. மாளிகை அப்புறம் தான்..
போதும் போதும் என்கிறீர்களா..
பார்த்து மகிழுங்கள் பாடல் முழுதும் ஸ்டைலின் இலக்கணத்தை..
முக்கியமான பின்குறிப்பு..
வழக்கமான ஸ்டைலான நடை பற்றி நாம் சிலாகித்து எழுதக் கூடிய பாடல்களுக்கான தொடரல்ல இது ... நடிகர் திலகத்தின் நடிப்பில் அமைந்துள்ள பல்வேறு பாத்திரங்கள் அவற்றின் குணாதிசயங்கள் அவற்றில் அவர் பிரயோகித்துள்ள ஸ்டைலையே இது குறிக்க உள்ளது. எனவே பாப்புலரான பாடல்களை அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.
Last edited by RAGHAVENDRA; 9th December 2014 at 11:38 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
Bookmarks