-
1st March 2014, 02:50 PM
#101
Junior Member
Diamond Hubber
தேர்தல் காரணமாக எம்ஜியார் சமாதி முகப்பில் உள்ள இரட்டை இலை சின்னத்தை மறைக்க வேண்டும்: திமுக நீதிமன்றத்தில் புகார்
---------------------------------------------------------------------------------
தேர்தல் காலத்தில் மரங்களில் இலைகள் இருந்தால் அது இரட்டை இலையை குறிக்கும் , அதனால் மரங்களை எல்லாம் மறைக்க வேண்டும் ....
தேர்தல் காலத்தில் யாரும் வாழை இலையில் சாப்பாடு பரிமாறக் கூடாது எல்லோரும் மண் சோறு சாப்பிடுவதைப் போல தரையில் போட்டுத் தான் சாப்பிட வேண்டும் , வாழை இலை இரட்டை இலையை குறிக்கும்
தேர்தல் காலத்தில் யார் வீட்டு விசேஷங்களுக்கும் வீட்டு வாசலில் மாவிலை தொங்க விடக் கூடாது , மாவிலை இரட்டை இலையை குறிக்கும் ....
இபப்டியே சொல்லிட்டு திரிய வேண்டியது தான் .... ஆனால் மக்கள் திலகம் என்கிற மாபெரும் மனிதர் இன்றைக்கும் உங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் பாருங்கள் ... அது தான் அந்த மாமனிதரின் சாதனை
-
1st March 2014 02:50 PM
# ADS
Circuit advertisement
-
1st March 2014, 02:51 PM
#102
Junior Member
Diamond Hubber
கவிஞர் கண்ணதானுக்கு உதவி
இதை போல் பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார். யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அவருக்கு வேண்டிய ஒருவர் நம்ம மாதிரி ஆள்களுக்கு உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார். அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார். இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள், அய்யய்யோ வேண்டவே, வேண்டாம் அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன். நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல, இவர் சொல்கிறார், மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர், மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர் அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை எனவே எதையும் யோசிக்காமல் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம் என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார். அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார். ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க அவர் ரொம்பவும் தாழந்த குரலில் எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன் மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார். இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல் சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார் என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார். பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில் பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று, மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார். தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன். ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம் நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்.
-
1st March 2014, 02:53 PM
#103
Junior Member
Diamond Hubber
டாக்டர் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் குழுக்களின் பட்டியல்...
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி
கிருஷ்ணன் நினைவு நாடக சபா
உறையூர் முகைதீன் நாடக கம்பென
எம்.ஜி.ஆர். நாடக மன்றம்
டாக்டர் எம்.ஜி.ஆர். நடித்த சரித்திர நாடகப் பாத்திரங்கள் மற்றும் நாடகங்கள்
கதாபாத்திரங்கள்
இராமாயணம்
அகத்தியர்
மகாபாரதம
விகர்ணன், சத்ருகணன், அபிமன்யு, சத்ருகணன்.
ரத்னாவளி
நடனக் காட்சி
நல்லதங்காள்
ஏழாவது குழந்தை
இராசேந்திரன்
லட்சுமி
சந்திரகாந்த
ஆங்கிலேயப் பெண்
சத்தியவான் சாவித்திரி
தவில் சுண்டுர் இளவரசன்
மனோகரா
மனோகரன் சந்திரகாந்தா
தசாவதாரம்
சத்ருகன், பரதன், இலட்சுமணன்
பக்தராமதாஸ்
நவாப்
கபீர்தாஸர்
முதியவர், மாறுவேடத்தில் ராமர்
சக்குபாய்
பெண்வேடம்
மார்க்கண்டேயா
மேனகா
மற்ற நாடகங்கள்
கோவலன்
கற்பின் வெற்றி
பவளக்கொடி
வள்ளித்திருமணம்
ராசாம்பாள்
கதர்பக்தி
கதரின் வெற்றி
பதிபக்தி
தேசபக்தி
தேசியக்கொடி
கவர்னர்ஸ்கப்
பம்பாய் மெயில்
அரிச்சந்திரா
லீலாவதி
மோகனசுந்தரம்
ராஜேந்திரா
இன்பக்கனவு
சுமைதாங்கி
இடிந்தகோவில்
அட்வகேட்அமரன்
கள்வனின் காதலி ஆகிய நாடகங்களில் பல வேடங்கள்.
-
1st March 2014, 06:09 PM
#104
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st March 2014, 06:35 PM
#105
Junior Member
Diamond Hubber
-
1st March 2014, 06:38 PM
#106
Junior Member
Platinum Hubber
-
1st March 2014, 06:51 PM
#107
Junior Member
Diamond Hubber
-
1st March 2014, 09:11 PM
#108
Junior Member
Diamond Hubber
கணவன் - அடக்குமுறை மனைவியை திருத்திய படம் .
-
1st March 2014, 09:15 PM
#109
Junior Member
Diamond Hubber
புதிய பூமி - அன்பு வழியில் கொள்ளையர்களை திருத்திய படம் .
-
1st March 2014, 09:17 PM
#110
Junior Member
Diamond Hubber
Originally Posted by
Yukesh Babu
தேர்தல் காரணமாக எம்ஜியார் சமாதி முகப்பில் உள்ள இரட்டை இலை சின்னத்தை மறைக்க வேண்டும்: திமுக நீதிமன்றத்தில் புகார்
---------------------------------------------------------------------------------
தேர்தல் காலத்தில் மரங்களில் இலைகள் இருந்தால் அது இரட்டை இலையை குறிக்கும் , அதனால் மரங்களை எல்லாம் மறைக்க வேண்டும் ....
தேர்தல் காலத்தில் யாரும் வாழை இலையில் சாப்பாடு பரிமாறக் கூடாது எல்லோரும் மண் சோறு சாப்பிடுவதைப் போல தரையில் போட்டுத் தான் சாப்பிட வேண்டும் , வாழை இலை இரட்டை இலையை குறிக்கும்
தேர்தல் காலத்தில் யார் வீட்டு விசேஷங்களுக்கும் வீட்டு வாசலில் மாவிலை தொங்க விடக் கூடாது , மாவிலை இரட்டை இலையை குறிக்கும் ....
இபப்டியே சொல்லிட்டு திரிய வேண்டியது தான் .... ஆனால் மக்கள் திலகம் என்கிற மாபெரும் மனிதர் இன்றைக்கும் உங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் பாருங்கள் ... அது தான் அந்த மாமனிதரின் சாதனை
AIADMK should file a case to close the SUN during Elections!
Last edited by saileshbasu; 1st March 2014 at 10:12 PM.
Bookmarks