Page 53 of 401 FirstFirst ... 343515253545563103153 ... LastLast
Results 521 to 530 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #521
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    வெங்கிராம்,
    ரொம்ப நல்லா சொன்னீங்க தம்பி .ஆனா தமிழக அரசும் தாயுள்ளம் கொண்ட முதல்வரும் இது போல மக்கள் நலன் கருதியே இதை அகற்றப் பணித்துள்ளார்கள் என நம்பும் உங்கள் வெள்ளை உள்ளத்தை பாராட்டி சரோஜா தேவி சோப்பு டப்பா ஒன்றை பரிசாக அளிக்கிறோம்.
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #522
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    அதனால் சிவாஜி ரசிகர்கள் அமைப்பு இதைக் கருத்தில் கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட என் வேண்டுகோள்.
    அட என்னங்க நீங்க...

    எல்லாத்துக்கும் சிவாஜி ரசிகர்கள் அமைப்பு முன்மாதிரி...முன்மாதிரின்னு சொல்றீங்க...தமிழ்நாட்ட ஆண்ட முதல்வருங்க சிலைய மொதல்ல நடுரோட்லேர்ந்து தூக்கி அந்த ஆட்சியாளர்கள் முன்மாதிரியா திகழ ஒரு புத்தி சொல்லுங்க தலீவா !

    அண்ணாதுரை சிலைக்கு ஒரு ஞாயம் ....தேவர் சிலைக்கு ஒரு ஞ்யாயம் ..

    சிவாஜி மட்டும் எப்பவும் போல...இளிச்ச .........அவங்க ரசிகர்களும் அவர்போல இளிச்ச...அப்புடிதானே.....!

    போங்க பாஸ்...போங்க...! அறிவுரைய அது இல்லாதவங்களுக்கு சொல்லுங்க !

  4. #523
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    வெங்கிராம்,
    ரொம்ப நல்லா சொன்னீங்க தம்பி .ஆனா தமிழக அரசும் தாயுள்ளம் கொண்ட முதல்வரும் இது போல மக்கள் நலன் கருதியே இதை அகற்றப் பணித்துள்ளார்கள் என நம்பும் உங்கள் வெள்ளை உள்ளத்தை பாராட்டி சரோஜா தேவி சோப்பு டப்பா ஒன்றை பரிசாக அளிக்கிறோம்.
    உள்நோக்கம் என்னவென்று எனக்கு மெய்யாலுமே தெரியாது அண்ணா! அதற்கான யூகங்களையும் நீங்கள் பகிரலாம். எனது சிலைகள் பற்றிய கண்ணோட்டம் சிவாஜி சிலைக்கு மட்டுமே அல்ல. சாலைக்கு நடுவே, அருகே வீற்றிருக்கும் எல்லா சிலைகளுக்குமெ! சாலை அகலப் படுத்துதல், சீரமைப்பு என்ற பெயரில் நிறைய சிலைகள் இதுவரை அகற்றப் பட்டிருக்கின்றன.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #524
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    வெங்கிராம்,
    வேணாம் .அழுதுடுவேன் !!!!

  6. #525
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1) 2500 megawatt மின்சாரம் பற்றாக்குறை
    2) கட்டுகடங்கா காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருள் விலை வாசி ஏற்றம் தினமும்.
    3) கொலை, கொள்ளை, வழிப்பறி இப்படி நாளும் பெருகும் CRIME

    இப்படி டெய்லி நடக்கற சமாசாரம் எதையும் உடனடியா முடிக்காம.மக்களுக்கு நல்லது செய்யாம ..அது அந்த கட்சி ஆட்சி பண்ணபோது இருந்துச்சு...நாங்க பொறுப்பு கடயாது..

    திமுக ஆட்சில ஒரு நாளிக்கு 19.5 கொலைங்க 12.3 கொள்ளைங்க 13.78 வழிப்பறி நடந்திச்சு. ஆனா எங்க ஆதிமுக ஆட்சில ஒரு நாளிக்கு 19.10 கொலைங்க 11.80 கொள்ளைங்க 13.25 வழிப்பறி நடக்குது..அதனால அவங்க ஆட்சிய விட எங்க ஆட்சி சிறப்பான சாதனை செஞ்சுது அப்புடீன்னு வெளக்கம் குடுக்கறோம் பேர்வழின்னு சொல்ற, நழுவுற கேவலமான அரசு இப்போ இருக்கற அரசு. உடனயே மந்திரிங்க பாதி தூக்கத்துல டம..டம...டம..டம நு டேபிள் தட்டி ஆரவாரத்த வெளிபடுத்துவாங்க...! நாம தான் இந்த கேவலத்த TV ல பாகறோமே.

    பல ஆயிரம் கோடி துட்டு போட்டு கூடங்குளம் கொண்டுவந்த... அது CONGRESS கொண்டுவந்தது..அதுல நட்டு சரியில்ல போல்ட்டு சரியில்ல...அதுல ஆபத்து இருக்கு...ஈபத்து இருக்குன்னு புரளி கிளபரவங்கள நாலு சாத்து சாத்தி முழு வீச்சுல உற்பத்தி பண்ண துப்பு இல்ல....!

    ஆனா சிவாஜி சில வண்டியோற்றவங்கள மறைக்குதுன்னு அதாதூகரதுக்கு உடன எல்லாம் செய்றாங்க...!

    எது முக்கியம்?

    சிலையா இல்ல இப்போ மக்களுக்கு இருக்கற விலைவாசி மற்றும் இதர பிரச்சனையா ?

    சில எங்க வெக்கனும்னு புத்தி சொல்ற அறிவாளிங்க ..இதுக்கு பதில் சொல்லுங்கப்பா !
    Last edited by Ravi Chandrasekar; 27th November 2013 at 09:25 PM.

  7. #526
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த நாசமாபோன நடிகர் சங்கம் தமிழ் வாழ பிற்ந்த தமிழ் நாட்டை உலக அரங்கில் உயர்த்திக்காட்டிய நடிப்பு தெய்வத்திற்கு மணி மணடபம் கட்ட முயற்ச்சி செய்யவில்லை. இப்போது சிலை பிரச்சினைக்கும் குரல் கொடுக்கவில்லை.

    தமிழன் விஜய் நடித்த தலைவா படத்தை காரணமே இல்லாமல் தடை செய்யப்பட்ட போதும் ஒரு ஆக்ஷ்ணும் இல்லை.

    தமிழன் கமல் நடித்த விஸ்வருபம் படத்தை தடை செய்யப்பட்ட போதும் ஒரு முயற்சியும் இல்லை

    இப்படி நடிகர்களுக்கு பயன் படாத இந்த பாழா போன நடிகர் சங்கம் எதுக்கு.

    சினிமாவை வாழவைத்த சிவாஜிக்கு இந்த நிலையா - ரத்தம் கொதிக்கிறது - எங்கள் பாவம் சும்மா விடாது.

    தமிழ் மொழி காத்த தங்க தலைவன் தமிழ் சமுதாயத்தின் அடயாளச்சின்னம் சிவாஜி சிலையை பாது காக்க குரல் கொடுத்த டாக்டர் கலைஞ்ர், புரட்ச்த்தமிழன் வைக்கோ,புரட்ச்சிக் க்லைஞ்ர் விஜயகந்த், மறத்தமிழன் சீமான், மருத்துவர் ராமதாஸ் அனைவருக்கும் வேதனையில் இருக்கும் சிவாஜி பக்தர்களின் கோடாணு கோடி நன்றிகள்

    எத்தனை சக்திகள் வந்தாலும் சிவாஜி புகழை எவராலும் அழிக்கமுடியாது.
    Last edited by SPCHOWTHRYRAM; 27th November 2013 at 10:35 PM.

  8. #527
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    PUTHIYA THALAIMURAI DEBATES ! - They asked one good question finally - If a public case was put to lift all the TASMAC SHOPS WILL THEY DO ?

    GOOD QUESTION !!



    Part - 2



    Part - 3



    Part - 4


  9. #528
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    வருகின்ற டிசம்பர் 3 ம் தேதி அன்று திருச்சி மாவட்ட சிவாஜி சமுக நலப்பேரவை சார்பாக சிவாஜி சிலை அகற்றும் நிலை குறித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவாஜி ரசிகர்களும், அனைத்துக் கட்சியை சார்ந்தவர்களும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

  10. #529
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கலைத்தாயின் தலை மகனுக்கு, தமிழக குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு உறுப்பினரை போல் இன்றும் அனைவரது உள்ளங்களிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலையுலக சக்ரவர்த்திக்கு தமிழகத்திலே இன்றைய தினம் செய்யப்பட்டிருக்கும் அவமரியாதை சகிக்க முடியாத கொடுஞ்செயல் என்றே சொல்ல வேண்டும். இதை செய்வதற்கு எப்படித்தான் மனம் வருகிறதோ?

    7 வருட இடைவெளிக்கு பின் அக்டோபர் 23 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அன்றைய தினம் அரசின் சார்பில் ஆஜராகிய advocate general நீதிமன்றத்தில் இந்த சிலையால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை என்ற வாதத்தை முன்வைத்தார்.

    ஒரே மாத இடைவெளியில் நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மயிலை காவல்துறை போக்குவரத்து ஆணையர் இந்த சிலையால் போக்குவரத்துக்கு இடையூறு என்று சொல்லி இத்தனை விபத்துக்கள் நடந்திருக்கின்றன என்றும் சொல்லியிருக்கிறார். முதலில் சொன்னதற்கும் ஒரு மாதத்திற்கு பின் சொன்னதற்கும் எவ்வளவு வித்தியாசம்?

    நல்ல வேளையாக முதல் முறை வழக்கு விசாரணைக்கு வந்து மறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டபோதே சமூகநல பேரவையின் சார்பில் வழக்கறிஞர் பிரபாகர் ஆஜரானார். அதுவும் தவிர நேற்று நடந்த வாதம் கேட்கும் நிகழ்வின் போது அவர் இதற்கு எதிராக வாதிட்டதோடு அல்லாமல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு நீதிபதி வழக்கை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கும்படியான உத்தரவு பிறப்பிக்கும் சூழலை ஏற்படுத்தினார். ஒருவேளை பேரவையும் தங்களை இணைத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் நடிகர் திலகத்திற்காக வாதிடுவதற்கு அங்கே ஆளே இல்லாமல் போயிருக்கும். அப்படி நேர்ந்திருந்தால் இன்றைக்கு கிடைத்திருக்கும் கால அவகாசம் கூட கிடைக்காமல் போயிருக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்காகவே பிரபாகர் அவர்களுக்கும் சந்திரசேகர் அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுளோம்.

    இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால் அதாவது வாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள் என்று பார்த்தோமென்றால் விபத்துக்கள் நடந்ததாக சொல்லப்படுவது எங்கே நடந்தது? சிலையின் அருகாமையிலா அல்லது அந்த சாலையில் வேறு எங்காவதா? அந்த சாலை ராணி மேரி கல்லூரியில் ஆரம்பித்து போர் நினைவு சின்னம் வரை நீண்ட சாலை. காவல்துறை சொல்வது போல் சிலை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் விபத்துக்கள் ஏற்பட்டன என்றால் காமராஜர் சாலையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு வலது புறமாக திரும்பும் இடத்தில்தான் அதாவது சிலையின் பின்புறம் உள்ள சாலை பகுதியில்தான் நடந்திருக்க வேண்டும். அப்படி நடந்திருக்கிறதா? அங்கே இல்லாமல் விவேகானந்தர் இல்லத்திற்கு அருகிலோ, மாநில கல்லூரி அருகிலோ திருவல்லிக்கேணி பாரதி சாலைக்கு திரும்பும் இடத்திலோ அல்லது சென்னை பலகலைகழக வளாகத்திற்கு அருகிலோ நடந்த விபத்துக்களுக்கு சிலை எப்படி பொறுப்பாக முடியும்?

    விபத்துக்கள் நடந்த தேதிகள், நாட்கள், நேரங்கள் ஆகியவை இங்கே முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விபத்துக்களைப் பற்றிய மேலதிக தகவல்கள், அதாவது முதல் தகவல் அறிக்கை, விபத்து நடந்த இடத்தில வழக்கு விசாரணைக்காக காவல்துறையால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவையும் முக்கிய ஆவணங்களாகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு என்றால் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரைதான் கணக்கு. நடுராத்திரியிலும் அகால நேரங்களிலும் நிதானத்தில் இல்லாத மனிதர்கள் அதிக வேகத்தில் வாகனங்களை ஒட்டி வந்து விபத்துக்களை ஏற்படுத்துவது இதில் சேர்த்தி ஆகாது. அப்படி நடந்த நிகழ்வுகளை காரணம் காட்டி சிலையை அகற்ற முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    காவல்துறை தாக்கல் செய்திருக்கும் மனுவிலேயே எதை அடிப்படை வாதமாக சொல்கிறார்களோ அதுவேதான் அவர்கள் செய்திருக்கிற பெரிய blunder. எப்படி என்றால் ஒரு நெடுஞ்சாலையில் நடுவே ஒரு சிலை அமைக்கபப்ட்டிருக்கிறது. சிலை இருக்கும் இடத்தில பக்கவாட்டில் சாலைகள் அமைந்திருக்கின்றன என்று வைத்துக் கொள்ளவோம். அந்த சிலைக்கு முன்புறமும் பின்புறமும் வரும் வாகனங்கள் சிலையை சுற்றிக் கொண்டு பக்கவாட்டு சாலைகளுக்கு செல்ல முயலும் பட்சத்தில்தான் காவல்துறை சொல்லும் இந்த பிரச்னை வரும். காரணம் அங்கே போக்குவரத்து சிக்னல் இல்லை. நமது சிலையை எடுத்துக் கொள்வோம்.

    நமது சிலைக்கு பின்புறத்திலேயே போக்குவரத்து சிக்னல் அமைந்திருக்கிறது. காமராஜர் சாலையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு எந்த வாகனமும் சட்டென்று திரும்பி விட முடியாது. இன்னமும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அங்கே மூன்று சாலைகள் சந்திக்கின்றன. காமராஜர் சாலையிலிருந்து வருபவர்கள் சிலையை கடந்து கலங்கரை விளக்கம் வழியாக சாந்தோம் நெடுஞ்சாலைக்கு செல்லலாம் அல்லது சிலையை தாண்டி வலது புறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலைக்கு செல்லலாம். அதே போன்று சாந்தோம் நெடுஞ்சாலையிலிருந்து வருபவர்கள் சிலையை கடந்து காமராஜர் சாலையில் செல்லலாம். அலல்து சிலை இருக்கும் இடத்திற்கு வரும் முன்பே இடது புறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலைக்கு செல்லலாம். அது Free Left. மூன்றாவதாக ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை junction-ல் இடது புறம் திரும்பி செல்லலாம். அதுவும் Free Left. இல்லை வலது புறம் திரும்பி கடற்கரைக்கோ அலல்து சாந்தோம் நெடுஞ்சாலைக்கோ பயணப்படலாம்.

    காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் சிலையை தாண்டி வலது புறம் திரும்பும்போது சாந்தோம் சாலையிலிருந்து வரும் வாகனங்களோ அல்லது ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து வலது புறம் திரும்பி சாந்தோம் சாலைக்கு செல்லும் வாகனங்களோ சிக்னலில் காத்து நிற்க வேண்டும். காரணம் அவர்களுக்கு அந்த நேரம் சிவப்பு விளக்கு எரிந்துக் கொண்டிருக்கும். அதே போன்றே சாந்தோம் சாலையிலிருந்து நேராக செல்லும் வாகனங்கள் சிலையை கடக்கும் போதும் ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து வாகனங்கள் வலது புறம் திரும்பும் போதும் மற்ற இரண்டு சாலையில் வரும் வாகனங்கள் குறுக்கிடவே முடியாது. இப்படி ஒரு சிக்னல் காவல்துறையால் அமைக்கப்பட்டிருக்கும் போது அதையும் மீறி அங்கே விபத்துகள் நடந்தன என்று சொன்னால் அது சிக்னல் jumbing என்ற போக்குவரத்து விதியை மீறிய குற்றமாகும். அதற்கு காரணம் வாகன ஓட்டிகளே தவிர சிலை அல்ல.

    எதார்த்த நிலைமை இப்படி இருக்க அதை மறைத்து வேறு ஒன்றை சொல்லுவதால் இவர்கள் அடையப்போகும் லாபம் என்ன?

    நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் ஒரு தனிப்பட்ட மனிதனோ அல்லது ஒரு அமைப்போ தங்களையும் ஒரு கட்சியாக இணைத்துக் கொள்ள மனு செய்துக் கொள்ளலாம். இதற்கு சட்டத்தில் வழி இருக்கிறது. அதை ஆங்கிலத்தில் to implead oneself என்று சொல்வார்கள். மனு செய்பவர்கள் தாங்கள் aggrieved party அதாவது பாதிக்கப்பட்ட நபர் என்று நீதிமன்றதில் வாதாடி அது நீதிமன்றத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டால் இணைந்து கொண்டு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம். அப்படிபட்ட ஒரு சில சட்டபூர்வ நடவடிக்கைகள் ஒரு சில அமைப்புகளால் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்று தெரிய வந்திருக்கிறது.

    அப்படி நடந்து அதன் மூலம் நீதி கிடைக்குமானால் மகிழ்ச்சியே. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்!

    அன்புடன்

  11. #530
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    murali sir very well written facts and more anlytically and logically explained facts. hope the court will give favorable decision in our favour
    sathyame jayathe,
    TRUTH WILL ALWAYS WIN FINALLY. WE HOPE.
    Last edited by Subramaniam Ramajayam; 28th November 2013 at 04:52 AM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •