-
30th January 2014, 10:09 PM
#1031
Junior Member
Senior Hubber
[QUOTE=RavikiranSurya;1110303]தத்துவ பாடல்கள் ...கயவர்களை சாடும் பாடல்கள் ....உதாரணம் இந்த ஒன்று...
கொள்ளை அடிப்போன் வள்ளலை போலே ...
கோவிலை இடிபோன் சாமியை போலே வாழ்கின்றான்..
ஊழல் செய்பவன் யோகியன் போலே...
ஊரை ஏய்ப்பவன் உத்தமர் போலே காண்கின்றான்..
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தான சொல்லுங்கள் ....
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்...
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்...
பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே நமது தலைவர் பாடலால் நடித்து காட்டியது இந்த உலகம் உணரும்.
thanks for situation song Mr.Ravikiran Surya
-
30th January 2014 10:09 PM
# ADS
Circuit advertisement
-
30th January 2014, 10:18 PM
#1032
Junior Member
Senior Hubber
கடந்த ஜனவரி 9 அன்று பிறந்த நாள் கண்ட நகைச்சுவை சக்ரவர்த்தி சிவாஜி படையின் போர்வாள் அடங்காத் தமிழன் திரு. ஒய்.ஜி. மகேந்திரா அவர்கள் எல்லா வளமும் பெற்று உலகத்தமிழர்களின் மற்றும் உலக சிவாஜி பக்தர்களின் வாழ்த்துக்களோடு நீடுழி வாழ்க என வாழ்த்துகிறோம்
-
30th January 2014, 10:22 PM
#1033
Junior Member
Senior Hubber
டியர் goldstar SATHISH sir
தலைவரின் ஆனந்தக்கண்ணீர் மற்றும் வீர பாண்டிய கட்டபொம்மன் பதிவுகள் மிக அருமை
-
30th January 2014, 11:32 PM
#1034
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st January 2014, 12:51 AM
#1035
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது -7
இந்த பதிவில் இது வரை அலச படாத படமான 1973 ல் வந்த தாய் படத்தை பற்றி தான் எழுதி உள்ளேன் , நடிகர் திலகத்தின் படங்களின் வரிசையை பார்க்கும் பொது , அதை பார்த்து கடைகளில் dvd தேடும் பொது காண கிடைக்காத படங்களில் இதுவும் ஒன்று , அப்படி தேடி தேடி அலைந்து கிடைத்த படம் தான் இந்த படம்
இது வரை அலச படாத படம் என்பதாலும் மற்றும் என்னைப்போல் இருக்கும் ரசிகர்களுக்கு அந்த படத்தை பார்த்த அனுபவம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தின் கதையை சற்று விலாவரியாக எழுதி உள்ளேன்
-
31st January 2014, 12:51 AM
#1036
Junior Member
Seasoned Hubber
கதை :
படத்தின் ஆரம்பத்தில் கற்பகம் (வரலக்ஷ்மி ) அவர் கணவனின் வரவுக்கு காத்து கிடக்கிறார் , அவர் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாத நபராக இருக்கிறார் , தன் மனைவி கர்பமாக இருப்பதாய் கூட எண்ணாமல் குடித்து விட்டு சீட்டு ஆடுகிறார் , இதில் பொய் சத்தியம் வேறு செய்து விடுகிறார் சாமிதுரை ( சுந்தர் ராஜன் )
சீட்டு ஆட்டத்தில் கைகலப்பு வந்து , அங்கே இருந்து வீடு வந்து சேருகிறார் , தன் மனைவி அவருடன் வாக்குவாதத்தில் இடுபடுகிறார் , வாக்குவாதம் முற்றி கற்பகத்தை தள்ளி விடுகிறார் சாமிதுரை. கற்பகம் இறந்து விடுகிறார் , தன் தவறை உணர்த்து குற்ற உணர்ச்சியில் , அதே சமயம் இங்கே இருந்தால் போலீஸ் பிடித்துவிடும் என்ற எண்ணத்தில் , சிங்கபூர் சென்று விடுகிறார் , அங்கே அவர் தங்கை (சுகுமாரி ) அவர் பெயரை துரைசாமி என்று மாற்றி இங்கிலீஷ் துரையிடம் வேலைக்கு அனுப்புகிறார்
போலீஸ் வந்து கற்பகம் மயங்கி இருப்பதை பார்த்து அவரை காபத்தி விடுகிறார்கள்
கற்பகம் VKRயின் உதவியால் வாழ்கையை நடத்துகிறார்
வருடங்கள் உருண்டு ஓடி விடுகிறது
துரைசாமி தன் தவறை எண்ணி தவிக்கிறார் , இப்பொது அவர் கொடை வள்ளல் , தன் மனைவியின் பெயரில் ஆஸ்பத்திரி கட்ட எண்ணுகிறார் ,அவர் தன் தங்கை , மற்றும் தங்கை மகன் குமார் (M N Nambiyar ) உடன் சென்னையில் வசிக்கிறார் , குமார் ஒரு ஊதாரி , spoiled brat
இங்கே கிராமத்தில் கற்பகத்தின் தன் மகன் அனந்தன் (நம்ம சிவாஜி சார் ) மற்றும் மகள் காவேரி (குமரி பத்மினி ) உடன் வசிக்கிறார்
அனந்தன் சதா அடி தடியில் இடுபடுகிறார் , தன் நண்பர் மிராசு
(MRR வாசு ) உடன் பொழுதை கழிக்கிறார்
இந்த மிராசு சரியான 420, இவர் VKRயின் மருமகன் , அனந்தன் , மிராசு இருவரின் சந்திப்பு ஹப் பாலக்காடு பாப்பம்மாவின் டி கடை
இந்த மிராசு தன் முறை பெண் சிவகாமிடம் வம்பு செய்து நன்றாக வாங்கி கட்டி கொளுகிறார்
ஊருக்கு போவதாக சொல்லி விட்டு அந்த மிரஸின் பிறந்தநாள் ல் குடித்து விட்டு இருக்கும் பொது , தன் தங்கையிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார் , ஆனந்தன் அதை தடுத்து மிரஸின் கையை ஒடித்து விடுகிறார்
தன் மகனின் எதிர்காலம் வீனா போக கூடாது என்ற எண்ணத்தில் தான் சேமித்து வைத்த 10000 ருபாய் பணத்தில் ஒரு பூமி வாங்கி கொடுக்கிறார் கற்பகம் , அதை எந்த கஷ்டம் வந்தாலும் விற்க கூடாது என்று அறிவுர்திகிறார், அவர் வாங்குன பூமியை ஒற்றி இருக்கும் இன்னும் கொஞ்சம் பூமியையும் கவனிக்கும் பொறுப்பு அனந்தனுக்கு வருகிறது ,துரைசாமி 100 ஏகர் வாங்கி அதை நிர்வகிக்கும் பொறுப்பை VKR வசம் ஒப்படைக்கிறார் , அவர் கொஞ்சம் நிலத்தை ஆனந்தனின் கட்டுபாட்டில் விடுகிறார்
-
31st January 2014, 12:52 AM
#1037
Junior Member
Seasoned Hubber
துரைசாமி சென்னையில் இருப்பதை அறிந்து அவரை பார்க்க ஆனந்தனுடன் VKR செல்லுகிறார்
துரைசாமியின் வீட்டில் குமார் உடன் சண்டை போடுகிறார் அனந்தன் , ஆனால் ஆனந்தனை பார்த்த உடன் பிடித்து விடுகிறது துரைசாமிக்கு
ஆனந்தனை ஊரை சுற்றி பார்க்க குமார் உடன் அனுப்புகிறார் துரைசாமி
குமார் நைட் கிளப்க்கு ஆனந்தனை அழைத்து செல்லுகிறார் , அங்கே குமாரை தாக்க வரும் நபர்களிடம் இருந்து அவரை காபாதுகிறார் ஆனந்தன் , அதனால் துரைசாமி மனதில் நல்ல இடத்தை பிடிக்கிறார்
அதே இரவில் குமார் பணத்தை திருட முயற்சிக்கும் பொது அதை தடுத்து நிறுத்துகிறார் ஆனந்தன் , அனைவரும் ஆனந்தன் தான் திருடன் என்று சொல்லும் பொது துரைசாமி ஆனந்தனின் கண்ணை பார்த்தே அவர் நிரபராதி என்று கண்டுபிடித்து விடுகிறார்
இந்த சம்பவம் இருவரின் மனதிலும் ஒரு மாரா பற்றை உருவாகிறது ,
ஊருக்கு திரும்பும் அனந்தன் தன் தங்கை விரும்பும் பையன் உடன் தன் தங்கையை சேர்த்து வைக்க எண்ணுகிறார்
குமார் தன் மாமா ஊருக்கு வருவதற்கு முன்பாக ஊருக்கு வந்து சேருகிறார் , வந்த இடத்தில அவருடன் கூடு சேருகிறார் மிராசு , இருவரும் செருந்து சிவகாமி , காவேரி உடன் வம்பு செய்கிறார்கள் , அதை ஆனந்தன் தட்டி கேட்கிறார் , இது பஞ்சய்து வரை செல்லுகிறது , ஆனால் அங்கே ஒன்றும் நடக்காததால் , இருவரும் ஆனந்தனை pazhi வாங்க எண்ணுகிறார்கள்
இந்த சமயத்தில் துரைசாமி அந்த கிராமத்துக்கு வருகிறார் , துரைசாமியின் உயிரை காப்பாத்துகிறார் ஆனந்தன். ஆனந்தனின் நிலத்தில் ஆஸ்பத்திரி கட்ட துரைசாமி கேட்க , ஆனந்தன் தன் இயலாமையை சொல்லிவிடுகிறார் , இது புரியாமல் கற்பகம் தன் மகன் உடன் வாக்குவாதம் செய்கிறார்.
காவிரியின் கல்யாணத்தில் கலவரம் செய்து நிறுத்தி விடுகிறார்கள் , இதனால் ஆனந்தன் நியாயம் கேட்க போகும் பொது குமார் ஆனந்தனை தாக்கி விடுகிறார் , துரைசாமி ஆனந்தனை அவர் வீட்டில் கொண்டு போய் விடுகிறார் , அங்கே காவேரியை சந்திக்கிறார்
ஆனந்தனின் அம்மாவை சந்தித்து மனிப்பு கேட்க எண்ணுகிறார் , ஆனால் கற்பகம் வீட்டில் இல்லாததால் , பணம் கொடுத்து விட்டு வருகிறார்
ஊரில் இருந்து வரும் கற்பகம் இந்த பணத்தை கொடுத்து துரைசாமி நிலத்தை அபகரித்து கொள்ளுவர் என்று நினைத்து பணத்தை திரும்பி கொடுத்து வர சொல்லுகிறார்
-
31st January 2014, 12:53 AM
#1038
Junior Member
Seasoned Hubber
குமாரை கண்டிக்கிறார் துரைசாமி , தன் மகனிடம் துரைசாமி கொலை செய்ததை சொல்லி விடுகிறார் , அதை வைத்து தன் இஷ்டப்படி துரைசாமி யை ஆட்டிவைகிறார் . ஆனந்தன் பணத்தை திரும்பி
கொடுக்க வரும் பொது குமாரின் எண்ணம் படி துரைசாமி நடந்து கொளுகிறார்.
குமார் சிவகாமியை பெண் கேட்கிறார் , அதை தடுத்து சிவகாமி தன் புதி சாதுர்யத்தினால் தடுத்து விடுகிறார் , அதை துரைசாமியின்
மனம் கோணாமல் தன் வாதத்தை எடுத்து வைக்கிறார் .
சிவகாமி & vkr இருவரும் ஆனந்தனிடம் துரைசாமியை குமார் எதோ ஒரு விஷியத்தை வைத்து ப்ளக் மெயில் செய்வதாக சொல்லி விட ,
ஆனந்தன் துரைசாமி யின் வீட்டுக்கு சென்று ,அவர் அறையில் உண்மையை அறிய என்னும் பொது அங்கே இருக்கும் தன் தாயின் படத்தை பார்த்து , , இது தன் தாய் என்றும் சொல்லி விட , அங்கே நடப்பது ஒரு பாச சந்திப்பு
துரைசாமி தான் வீட்டை விட்டு செல்லும் பொது கற்பகம் வயற்றில் இருந்தது தான்(ஆனந்தன் ) என்றும் அப்படி இருக்கும் பொது எப்படி உனக்கு ஒரு தங்கை என்று கற்பகத்தின் நடத்தையை சந்தேகிறார்
கற்பகம் இதை அறிந்து ஆனந்தனிடம் கற்பகம் தன் தோழியின் மகள் என்றும் , தொழி அகால மரணம் அடைந்ததால் , தான் காவேரியை மகளாக வளர்த்து வருவதாக கூறுவதை கேட்டு துரைசாமி நெகிழ்ந்து போய் நிக்கிறார்
பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறது
தன் மனைவியின் பெயரில் ஆஸ்பத்திரி கட்ட முயற்சி எடுக்கிறார் ,
காவிரிக்கும் , ஆனந்தன்க்கும் அவர்கள் விரும்பும் வாழ்கை அமைகிறது
சுபம்
-
31st January 2014, 12:53 AM
#1039
Junior Member
Seasoned Hubber
படத்தை பற்றி
இந்த படத்தில் வழக்கமாக கிராமத்தில் வரும் cliches திமிர் பிடித்த பண்ணையார் , அவரை அடக்கும் கதாநாயகன் , இருவருக்கும் நாடாகும் மோதல் போன்ற விஷியங்கள் இல்லை . நடிகர் திலகத்தின் கிராமிய படங்கள் என்று சொன்ன உடன் நினைவுக்கு வரும் சவாலே
சமாளி , பட்டிகாட்ட பட்டணமா படத்தில் கூட கொஞ்சம் commercial elements , மசாலா அதிகம் (with due respects to both classics Not mentioned with an intention to defame them )
இந்த படத்தை ஒரு தெளிந்த நீர் ஓடை போல , முழு நெல குடும்ப சித்திரமாக கொடுத்து இருப்பார் இயக்குனர் திரு யோகானந்த்
அதற்க்கு காரணம் திரு சோலைமலை அவர்களின் கதை மற்றும் வசனம்
மற்றும் MSV யின் இசை
பாடல்கள் க்கு 60 % என்றால் RR க்கு 100 %. ஒரு ஆர்பாட்டம் இல்லாத கதை , அதுவும் ஒரு மெல்லிய கிராமிய குடும்ப கதை , அதை கெடுக்காத வண்ணம் இருபது அவர் இசை மற்றும் RR , அதுவும் தந்தையும் மகனும் உண்மை அறிந்து சந்திக்கும் காட்சியில் ஒரு நிமிடம் மௌனம் அதில் MSV நடத்தி இருபது ஒரு ராஜாங்கம்
படத்தில் மொத்தம் 4 பாடல்கள் தான்
அதில்
1. நான் பார்த்தாலும் என்ற பாடல் சிவாஜி பட்டணத்தை பற்றி பாடி இருப்பார் பாருங்கள் அதில் நடிகர் திலகத்தின் நடிப்பும் ,
கண்ணதாசன் வரிகளும் , டாப்
2. நாடு ஆல வந்தாரு பாடல் - செம அரசியல்
3. கிளப் ல் வரும் BGM தூள்
படத்தில் அரசியல் வசனத்துக்கு பஞ்சம் இல்லை
உதரணத்துக்கு :
VKR : அவரு 100 acres வாங்கி இருக்காரு
சிவாஜி : எப்படி அவர் பரம்பர பணக்காரனா இல்லை இப்போ 5 வருஷத்துல வந்தவரா. இப்போ நிறைய நபர் அபப்டி தான்
MRR வாசு பிறந்த நாள் கொண்டதுவது அதில் தண்ணி பார்ட்டி வைத்து , பேசுவது
பஞ்சயத்து தலைவரின் தகுதி என்று MRR வாசு சாராயம் வியாபாரம் செய்வதை குறிபிடுவது , பணக்காரன் தான் தலைவர் என்று சொல்லுவது
சிவாஜி செந்தாமரையின் நடத்தையை வெளி படுத்துவது
நாடால வந்தாரு என்ற பாடல் , MRR தனக்கு தானே பிறந்தநாள் கொண்டாட போஸ்டர் அடிக்க அலைவது என்று ஏக பட்ட அரசியல் அதிரடி
-
31st January 2014, 12:54 AM
#1040
Junior Member
Seasoned Hubber
நடிகர்களின் பங்களிப்பு :
மிக மிக சுமாரான கதையை கொடுத்தாலே நம்மவர் பிச்சு உதறி விடுவார், நல்ல கதையை கொடுத்தால் ?
நடிகர் திலகம் ஒரு நடிப்பு சூப்பர் மார்க்கெட் , அவரிடம் எல்லாம் கிடைக்கும் , இந்த அற்புத நடிகரை சரியாக handle செய்தால் , கிடைக்கும் ரிசல்ட் 100 %
அந்த விஷியத்தில் யோகானந்த் சரியாக வேலை வாங்கி இருக்கார் என்று சொல்ல வேண்டும்
முதலில் மிராசு உடன் திரிவது , சண்டை போடுவது என்று செல்லும் அவர் கேரக்டர் அவர் சென்னை சென்ற உடன் , அதுவும் மேஜர் யை சந்தித்த உடன் அடியோட மாறுகிறது
அந்த கிளப் ல் கவர்ச்சி நடனம் பார்க்கும் பொது அசல் கிராமத்தான் தான் , அதுவும் கழுத்தை ஆட்டுவார் பாருங்கள், மற்றும் தான் திருடன் என்று அனைவரும் சொல்லும் பொது அவர் திகைத்து போய் நிற்பதும் , மேஜர் தான் திருடன் இல்லை என்று சொன்ன உடன் அவர் முக பாவத்தை காண கண் கோடி வேண்டும்.
ஒரு கிராமத்தான் சென்னையை பற்றி என்ன நினைப்பான் , எப்படி விவரிப்பன் தெரிந்து கொள்ள வேண்டுமா நான் பார்த்தாலும் பாடல் தான் அதற்கு சாட்சி
அதே சிவாஜி தன் தங்கையை கற்பழிக்க முயற்சிக்கும் MRR வாசுவை தாக்கும் பொது , ஒரு மனிதர் முதல் முறையாக குடிக்கும் பொது , எப்படி நடப்பான் ,அதே ஆள் தெளிந்த உடன் balance இல்லாமல் அடிப்பார் , அதை அப்படியே பிரதிபலித்து இருப்பார் , அதனால் தான் இவர் நடிகர் திலகம்
நாடு ஆல வந்தாரு பாடலில் சும்மா மான் குட்டி போல் துள்ளி ஆடி இருப்பார் , icing of the cake அவர் முக பாவனைகள் .
பஞ்சயத்து காட்சில் அவர் பேசும் வசனம் அனல் .
தான் மிகவும் மதிக்கும் நபர் தான் தன் தந்தை என்பதை அறிந்து கொள்ளும் பொது , வசனம் இல்லை , ஆர்பாட்டம் இல்லை , வெறும் கண்ணே 100 வார்த்தை பேசி விடுகிறது
அவர் உடை முழு கை சட்டையை மடித்து விட்டு இருக்கும் பாங்கு , குண்டாக இல்லாமல் , ஒல்லியாகவும் இல்லாமல் அவர் வேஷ்டி சட்டையில், pant shirt இரண்டிலும் கலக்கி இருக்கார்
Bookmarks