-
4th September 2013, 05:52 PM
#1
Junior Member
Veteran Hubber
Makkal Thilagam M.G.R. - Part 6
தரணிபுகழ் ராமனுக்கு அணில் போல
பரணிபாட வந்தேன் என் தலைவனுக்கு!
மக்கள் திலகத்தின் நல்லாசியோடு, அவர் பெயரால் அமைந்த இந்த மக்கள் திலகம் எம்ஜியார் -பாகம்-6 என்ற திரியை எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் ஆதரவோடு துவக்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உண்மை, உழைப்பு, உயர்வு என்னும் தாரக மந்திரத்தை உள்ளடக்கி இந்த உலகத்தார் வியக்க, திரையுலகையும், தமிழுலகையும் ஆட்சி செய்த புரட்சித்தலைவர் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாக இத்திரியை எடுத்துசெல்வேன் என உறுதி கூறுகிறேன்
மக்கள் திலகத்தின் பல அரிய ஆவணங்கள், அபூர்வ புகைப்படங்கள் மற்றும் அவரின் பெருமைகளை இந்த திரியில் பதிவிடவிருக்கும் திரு. வினோத் சார், பேராசிரியர் செல்வகுமார், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன், திரு. எம்.ஜி.சி. பிரதீப், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. ஜெய்ஷங்கர், திரு. ரூப், திரு. சைலேஷ் பாசு, திரு. மகேந்திர ராஜ், திரு. சுகராம் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு இந்த வாய்ப்பு நல்கிய மையம் திரியின் நிறுவனர்களுக்கும் , மக்கள் திலகம் திரியின் பாகம்-3, பாகம் -4 துவக்கிய திரு வினோத் சார் , திருப்பூர் ரவிச்சந்திரன் சார் மற்றும் பாகம்-5 திரியை சிறப்புடன் எடுத்து சென்ற திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கும், வேலூர் திரு. ராமமூர்த்தி ஆகியோருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை மக்கள் திலகம் திரியின் அனைத்து பாகங்களிலும் பங்கு பெற்ற எல்லா நண்பர்களும் தொடர்ந்து இந்த திரியிலும் பங்கு பெற்று 'தலைவன் புகழ் பாடுவது ஒன்றே நோக்கம்' என தங்களின் மேலான பதிவினைத் தந்து சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
என்றும் எம்ஜிஆர் பக்தன்
வி. கலியபெருமாள்
Last edited by kaliaperumal vinayagam; 5th September 2013 at 07:03 PM.
-
4th September 2013 05:52 PM
# ADS
Circuit advertisement
Bookmarks