Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 19 of 19

Thread: என் கிராமம் எனது மண்

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராமஜெயம் சார்
    தங்களது சொந்த ஊரான திருவாரூர் பற்றிய நினைவுகள் ஸ்வாரஸ்யமாயுள்ளன. தொடர்ந்து நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

    நாங்கள் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். நகர வாசி என்றாலும் உறவினர்கள் மூலமாக பல்வேறு சிற்றூர்களில் அவ்வப்போது சென்று வந்த அனுபவங்கள் உள்ளன. வரும் நாட்களில் அவற்றைப் பற்றி எழுத முயற்சிக்கிறேன்.

    பலருடைய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள இத்திரி ஒரு சிறந்த மய்யமாக அமையும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராமஜெயம் சார்,

    தங்களின் திருவாரூர் ஞாபகங்கள் தங்களின் மகிழ்ச்சியைக் காட்டுகின்றன. திருவாரூர் தங்கராசு, திருவாரூர் எம்.எஸ்.தாஸ் போன்ற தலைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. தற்சமயம் கூட தஞ்சை சென்று வரும் போது திருவாரூர் வழியாகத்தான் வந்தேன். கோயில்களை நிறைய பார்த்தேன். சாலைகளும் நன்றாக இருந்தன. தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கமலாலயம் டேங்க்கை காண ஆவல் மீறிடுகிறது. தாங்கள் நடிகர் திலகம், எம்ஜியார் அவர்களின் படங்களை பாரத்தை நினைவு கூர்ந்தது இனிமை.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #13
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    தங்களுடைய உறுதுணைக்கு என் மனமார்ந்த நன்றி.
    Last edited by vasudevan31355; 2nd September 2013 at 10:16 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #14
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Nice writeup Mr Vasudevan Sir.

  6. #15
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Kamalalayam Temple Tank, Tiruvaur (google search result)

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #16
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    In childhood days I went to Nedumaram the native place of my mother which is
    near Kottaiyur. But I could not recollect any experience of that visit.

  8. #17
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'குளுகுளு' குற்றால அனுபவம்.

    சமீபத்தில் நண்பர்களுடன் குற்றாலம் உல்லாசப் பயணமாக சென்று வந்தேன். நான் இதுவரை குற்றாலம் பார்த்ததில்லை. என் கட்டாயத்தின் பேரில் நண்பர்கள் குற்றாலம் செல்லச் சம்மதித்தனர்.

    நெய்வேலியிலிருந்து mahindra quanto வேனில் ஐந்து பேர் கிளம்பினோம். மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு ஒன்றரை மணிக்கு தென்காசி சென்றோம். தென் காசியில் ரூம் புக் செய்யலாம் என்றால் வாடகை ஒருநாளைக்கு ஐந்து பேருக்கு ரூபாய் இரண்டாயிரம் கேட்டார்கள். மேலும் "குற்றாலத்தில் ரூம் எடுத்தால் வாடகை கம்மி... நீங்கள் அங்கேயே ரூம் எடுங்கள்", என்று ஒருவர் வழி சொன்னார். பின் குற்றாலம் சென்று அலைந்து ஒரு ரூமைப் பிடித்தோம். வாடகை ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று பேரம் பேசி ரூம் எடுத்தோம். ரூம் நன்றாகவே இருந்தது. சிலுசிலுவென்ற குற்றாலச் சாரலை முதன் முதலாக ஆனந்தமாக அனுபவித்தேன். நண்பர்கள் குற்றாலத் தண்ணீரில் குளிப்பதற்கு முன் வேறு தண்ணீரில் மூழ்க நான் பயணக் களைப்பில் அசந்து தூங்கி விட்டேன். (நான் நல்ல பிள்ளையாக்கும்)



    பின் காலை ஏழு மணிக்கு எழுந்து ஒரு டீயைக் குடித்து விட்டு மெயின் அருவிக்கு நடை கட்டினோம். மெயின் அருவியில் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. அப்படியும் கூட்டமென்றால் அப்படி ஒரு கூட்டம். தலையைக் கூட நனைக்க முடியவில்லை. எனக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இருந்தாலும் குற்றாலம் பார்த்து விட்டோம் என்ற சிறு திருப்தி.

    பின் அங்கேயே ஒரு சிறு டிபன் கடையில் சூடாக ஆளுக்கு ஐந்து இட்லியை சுவைத்து விட்டு சிற்றருவி வந்தோம். மலையில் இருந்து ஒரு சிறு அருவியாகக் கொட்டுகிறது. ஒரு நபருக்கு குளிக்க ரூபாய் ஐந்து கட்டணம் வசூலிக்கிறார்கள். அருவியில் தண்ணீர் நிறையவே கொட்டியது. கட்டணக் குளியல் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனந்தமாகக் குளித்தோம்.

    குற்றாலத்தில் ஆண்கள் துண்டு அல்லது பர்முடாஸ் அணிந்து குளிக்கலாம். பெண்கள் சேலை அல்லது சுடிதாருடன் குளிக்கலாம். இருபாலாரும் உள்ளாடைகள் மட்டும் அணிந்து குளிக்கத் தடை. பெண்களுக்கென்று தனியாக குளிக்க இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

    குற்றாலத்தின் அழகிய தோற்றம்.



    செண்பக அருவியில் குளிக்கத் தடை செய்திருக்கிறார்கள். அப்படியே குற்றாலத்தை ஒரு வலம் வந்தோம். எங்கும் மக்கள் ஆனந்தமாக உடல் ஈரத்துடன் தலையை துவட்டிக் கொண்டு சர்வ சாதாரணமாக துண்டைக் கட்டிக் கொண்டு சாலைகளில் உலவுவதைக் காண முடிந்தது. ஒவ்வொருவர் முகத்திலும் குற்றாலக் குதூகலம்தான். நடிகர் திலகம் 'பாவை விளக்கு' படத்தில் குற்றால அழகை பருகியபடி பாடி வருவாரே...("ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே") அந்தப் பாடலை என்னையுமறியாமல் என் வாய் முணுமுணுத்தது. அதையும் மீறி நடிகர் திலகத்தின் அந்த எழில்முகம் நினைவிலேயே நின்று வந்தது. (ம்..ம்... நீங்கள் அனைவரும் என்ன நினைக்கிறீர்கள் என்று புரிகிறது... அவர் நினைவில் வராத இடம் என்று ஒன்று உண்டா? அனைத்திலும் ஆக்கிரமிப்பு செய்பவராயிற்றே அவர்!)

    ஐந்தருவி அட்டகாசம்



    இன்னொரு முக்கியமான விஷயம். குற்றாலத்தை மிக தூய்மையாக வைத்திருக்கிறார்கள் என்பதே அது. நிஜமாகவே ஆச்சரியப்பட்டேன். மிகப் பெருமையாகவும் இருந்தது. எங்கும் அவ்வளவாகக் குப்பைகளையோ கழிவுகளையோ காண முடியவில்லை. குளிக்கும் அருவிகளை அழகாகப் பராமரிக்கிறார்கள். அடிக்கடி இடங்களை கழுவி கிளீன் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    காரையாறு டேம்



    பின் காலை பத்து மணிக்கு அங்கிருந்து பாபநாசம் புறப்பட்டோம். கிட்டத்தட்ட நாற்பது கிலோமீட்டர்கள். பாபநாசம் சென்று அங்கிருந்து மலைப் பாதையின் வழியே பாண தீர்த்தம் நீர்வீழ்ச்சியைக் காணப் புறப்பட்டோம். ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். அங்கிருந்து காலாற நடந்தோம். தாமிரபரணி ஆறு ஆர்ப்பாட்டமாக எங்களை வரவேற்றது. பிரம்மாணடமான காரையாறு டேம். அணை முழுதும் தண்ணீர் வெள்ளம். எங்கும் தண்ணீர். பார்க்கவே மலைப்பாகவும், பிரம்மிப்பாகவும் இருந்தது. சிலுசிலுவென்ற காற்றும், இயற்கை சூழல்களும் ரம்மியம். அங்கிருந்து பாணதீர்த்தம் அருவிக்கு போட்டிங் போகலாம். எங்கள் போதாத காலம் அந்த அருவியிலும் குளிக்கத் தடை. நிறைய உயிர் இழப்புக்கள் ஏற்படுவதால் 144. 'குளிக்கத் தடை' என்ற அறிவிப்புப் பலகையை பார்த்ததும் கடுப்பாகி விட்டது. இருந்தாலும் எங்கள் ஏமாற்றத்தை பெருமளவில் தீர்த்து விட்டது இனிமையான படகு சவாரி.

    பாணதீர்த்தம் அருவிக்கு சென்று வர ஒரு ஆளுக்கு முப்பது ரூபாய்தான் படகு சவாரிக்குக் கட்டணம். ஒரு படகில் பத்துப் பேர் செல்லலாம். டிக்கெட் எடுத்துக் கொண்டு படகில் ஏறினோம். ஏறும் போது படகு ஒரே தள்ளாட்டம். நண்பர்களும் ஒரே தள்ளாட்டம். படகு அப்படியும் இப்படியும் ஆட ஒருவழியாக சமாளித்து படகில் அமர்ந்தோம். படகு செல்ல ஆரம்பித்ததும் எங்கள் உயிர் எங்கள் கையில் இல்லை. (தண்ணீரின் ஆழம் 150 அடியாம்... அடேயப்பா! குலை நடுக்கம் ஏற்படாமல் என்ன செய்யும்?) படகு தண்ணீரில் கவிழ்ந்து விடுவது போல மிகவும் சாய்ந்து அப்படியும் இப்படியுமாக ஆட படகில் அமர்ந்தவர்கள் பயத்தில் வீறிட்டு அலற படகோட்டி கலகலவென சிரித்தார். "ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும்... பயப்படாதீர்கள்" என்று எங்களுக்கு தைரியம் சொல்லி எங்கள் அனைவரையும் பேலேன்ஸாக அமரவைத்தார். சில வினாடிகளில் படகு சகஜ நிலையில் செல்ல ஆரம்பித்தது. "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டோம். இப்போது நன்றாக என்ஜாய் செய்ய ஆரம்பித்தோம். படகுகளில் பாதுகாப்பு கவச உடை மறக்காமல் தந்து அணிவிக்கச் சொல்லுகிறார்கள். படகு செல்லும் போது ஆனந்தமோ ஆனந்தம். சுற்றிலும் நீர்ப்பரப்பு. தெள்ளத் தெளிவான தாமிரபரணி நீர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் நெடிதுயர்ந்த விண் தொடும் மலைகள். மலைகளில் முகடுகளில் தெரியும் எழிலார்ந்த மரங்கள். குளுகுளு காற்று. லேசான மழைச்சாரல். நண்பர்களின் நக்கல் நையாண்டி அரட்டைகள். படகு நீரைக் கிழித்துக் கொண்டு போகும் போது கிடைக்கும் சுகானுபவம். சந்தோஷம் களை கட்டும் முகங்கள். தண்ணீரில் கைவிட்டு ஒருவர் மேல் ஒருவர் பெரியவர் சிறியவர் பேதம் பாராமல் அள்ளித் தெளிக்கும் ஆனந்தம். நிஜமாகவே அற்புத அனுபவம்.


    பொறுத்திருங்கள்.
    Last edited by vasudevan31355; 2nd September 2013 at 12:05 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes sss, aanaa liked this post
  10. #18
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மனக் காரை ரிவர்ஸ் கியரெடுத்து சில பல வருட்ங்கள் பின்னோக்கிச் சென்றால்.. கல்லூரிப்பருவமதில் குற்றாலம் மதுரையிலிருந்து சென்று வந்தது நினைவுக்கு வருகிறது.. அதி காலை நாலு மணி பஸ்..பின் குற்றால்ம் ஏழோ எட்டோ மணி நினைவில்லை..பின் எல்லா அருவிகளிலும் டபக் டபக் என க் குளித்து ( நான் ப்ளஸ் நால்வர்) முடித்து..வருகையில் சிலுசிலுவென சாரல்..அப்புறம் சுடச்சுட சாப்பாடு சாப்பிட்டு பஸ் ஏறி மாலை மங்கும் நேரம் மதுரை வந்தாச்சு..அப்புறம் தங்கும்படியெல்லாம் போனதில்லை;;

    நல்ல பதிவு தொடருங்கள்..

  11. #19
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராமஜெயம் சார்,

    தங்களின் திருவாரூர் ஞாபகங்கள் தங்களின் மகிழ்ச்சியைக் காட்டுகின்றன. திருவாரூர் தங்கராசு, திருவாரூர் எம்.எஸ்.தாஸ் போன்ற தலைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. தற்சமயம் கூட தஞ்சை சென்று வரும் போது திருவாரூர் வழியாகத்தான் வந்தேன். கோயில்களை நிறைய பார்த்தேன். சாலைகளும் நன்றாக இருந்தன. தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கமலாலயம் டேங்க்கை காண ஆவல் மீறிடுகிறது. தாங்கள் நடிகர் திலகம், எம்ஜியார் அவர்களின் படங்களை பாரத்தை நினைவு கூர்ந்தது இனிமை.
    Thank you vasu sir. one more important point about tiruvarur,
    tiruvaruril piranthal mukthi, tiruvannamalaiyai ninaithale mukthi and kasiyil iiranthal mukthi. NEEDLESS TO SAY I BELONG FIRST CATHEGERY,
    ihave had a very strange anubhavam with cuddalore which i will defitely share later. upcourse i have not visited neyveli.

Page 2 of 2 FirstFirst 12

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •