Results 1 to 3 of 3

Thread: Zee tamil Tv

Threaded View

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    Zee tamil Tv

    துர்கா எடுக்கும் துணிச்சலான முடிவு?

    திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாமியார் தேவை தொடர், அடுத்தடுத்த திருப்புமுனைக் காட்சிகளில் வேகம் பிடிக்கிறது.

    இளம் வயதில் மனைவியை இழந்த பணக்காரர் கங்காதரனுக்கு பிரேம்குமார், வசந்தகுமார், தீபக்குமார் என 3 மகன்கள். மூவருமே திருமணம்ஆனவர்கள்.

    முதல் இரண்டு மகன்களும், மருமகள்களும் தனிக்குடித்தனம் போவ விரும்ப, மூன்றாவது மகன் தீபக்குமாரும் அவன்மனைவி மீராவும் மாமனாருடன் இருப்பதை விரும்புகின்றனர். முதல் இரு மகன்களின் முடிவால் குடும்பம் பிரிந்து விடுமோ என்று கங்காதரன் கலக்கம் கொள்ள– புத்திசாலியான இளைய மருமகள் மீரா குடும்பம் சிதறாமல் இருக்க கண்டிப்பான ஒரு மாமியார் தேவை என்ற முடிவுக்கு வருகிறாள். நேர்மையும்துடிப்பும் வேகமும் கொண்ட துர்கா என்னும் துணிச்சல் மிகுந்த பெண்ணை மாமனாருக்கு மனைவியாக– தங்களுக்கு மாமியாராக கொண்டு வருகிறாள்.

    நடுத்தர வயதில் மூன்று மருமகள்களுக்கு மாமியாராக வந்த துர்கா– ஆரம்ப நாளில் இருந்தே அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்கிறாள். ‘ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சமையல் கிடையாது. ஒரே மாதிரி உணவு இருந்தால்தான் ஒரே மாதிரி உணர்வு இருக்கும். என்று தனித்தனி சமையலுக்கு தடை போடுகிறாள். மாமியார் உத்தரவால் குடும்பம் மொத்தமும் முணுமுணுக்க ஆரம்பிக்கிறது.

    வாய்த்துடுக்கு கொண்ட இரண்டாவது மருமகள் கிரிஜா மாமியாராக வந்த துர்காவிடம் சண்டை போட்டுவிட்டு தன்தாய் வீட்டுக்குப் போகிறாள். கூடவே அவள் கணவனும் போகிறான். ‘புதிதாக வந்த துர்காவை விரட்டத் துப்பில்லாமல் என் கூடவே ஓடி வந்த நீங்க வேஸ்ட்’ என்று கணவனை வார்த்தைகளில் வறுத்தெடுக்கிறாள், கிரிஜா. இதனால் வேறு வழி இன்றி தங்கள் வீட்டுக்கே அவன் திரும்புகிறான்.

    இதற்கிடையில் தொழில் போட்டி காரணமாக கங்காதரன், முனியன் என்ற ரவுடியின் பகையை சம்பாதித்து கொள்கிறார். கங்காதரனிடம் தொடர்ந்து தோற்ற முனியன், கங்காதரன் மகன் பிரேம்குமாரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கிறான்.

    என் மனைவியை நான் பிரிந்து நிற்பதற்கும், என் அண்ணன் உயிருக்கு போராட்டமான சூழ்நிலையில் நிற்பதற்கும் புதிதாக வந்து நிற்கும் துர்காவே காரணம் என்று வசந்த் பழி சுமத்த, பயந்து போன அவன் அண்ணன் மனைவி நீலவேணி தனது மாங்கல்யம் நிலைக்க கோவிலில் தஞ்சம் புகுகிறாள்.

    இதற்குப்பிறகு தன் மேல் விழுந்த பழிச்சொல்லை மாற்ற துர்கா துணிச்சலாக சில முடிவுகளை எடுக்கிறாள். அந்த முடிவால் பிரிந்து நிற்கும் கிரிஜா திரும்பவும் கணவன் உடன் இணைந்தாளா? மரணத்தின் விளிம்பில் இருக்கும் பிரேம்குமார் மீட்கப்பட்டானா? நீலவேணியின் மாங்கல்யம் தப்பித்ததா?

    அடுத்துவரும் பரபரப்பு எபிசோடுகளில் இதற்கான விடை கிடைக்கும்.

    தொடரின் நட்சத்திரங்கள்: சுபலேகா சுதாகர், அழகன் தமிழ்மணி, யுவராணி, குமரேசன், சுக்ரன், மகாலட்சுமி, சோனியா, வந்தனா, பத்மினி, விஸ்வநாத், ரவி, அழகு, ஜி.கே., மித்ரன், கலாதர். திரைக்கதை வசனம்: பாபா கென்னடி. ஒளிப்பதிவு: ராக்கு. பாடல்: பிறைசூடன். இசை: தினா. இணை தயாரிப்பு: துர்கா அழகன், தமிழ்மணி, போரூர் கே.எம். கண்ணன். தயாரிப்பு: தனுஷ் அஜய் கிருஷ்ணா, ஐஸ்வர்யா அஜய் கிருஷ்ணா.

    இயக்கம்: சுலைமான் கே.பாபு.

    Nandri. DailyThanthi

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •