Page 1 of 46 12311 ... LastLast
Results 1 to 10 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    INTERVIEWS With TV Artists

    Post interviews with CINE actors, actress, directors or others!
    Last edited by aanaa; 30th November 2016 at 08:39 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    `சவுபர்ணிகா' சீரியல் பார்த்தவர்களை `யார் இந்தப் பொண்ணு?' என்று கேட்க வைத்தவர் புவனேஸ்வரி! முதல் சீரியலிலேயே முத்திரை பதித்தவர் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. `பட்ஜெட் பத்மநாபனில்' ஆரம்பித்து இதுவரை 12 படங்களை முடித்தவர் சீரியல்களில் அரைச் சதத்தைத் தாண்டி விட்டார். `பாசம்' சீரியலில் இருந்த இந்த `வில்லி'யுடன் `முத்து... பத்து' சந்திப்பு...

    * சீரியல், சினிமா- முதலிடம் எதற்கு?

    சீரியலுக்குத்தான்.

    * நல்ல சம்பளம் - சிறிய பாத்திரம், குறைவான சம்பளம் - கனமான பாத்திரம்- எதைத் தேர்வு செய்வீர்கள்?

    கனமான பாத்திரத்தை...

    * நிஜத்தில் நீங்கள் வில்லியாகக் கருதுவது யாரை?

    என்னுடைய கோபத்தை...இதை நினைத்துத்தான் நான் பயப்படுவேன்.

    * வில்லியாக விரும்பி நடிக்கிறீர்களா? அல்லது கிடைக்கும் வேடத்தில் நடிக்கிறீர்களா?

    நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்...!

    * நீங்கள் பொறாமைப்படும் நபர்?

    ஐஸ்வர்யாராய்...

    * மறக்க நினைக்கும் சம்பவம்?

    என் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்கள் அனைத்தையும்...

    * உங்களைப் பற்றிய தவறான கிசுகிசுவைப் படிக்கும்போது மனநிலை எப்படி இருக்கும்?

    சிரித்துக் கொள்வேன்!

    * ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசில்லாமல் தவித்ததுண்டா?

    இல்லை...அந்த நிலை இதுவரை ஏற்பட்டதில்லை.

    * நடிகையாகாமல் வேறு வேலைக்குப் போயிருக்கலாம் என்று எண்ணியதுண்டா?

    அப்படி நினைப்பு வந்ததில்லை...ஆனால் கல்யாணமாகி செட்டிலாகி இருக்கலாம் என்று எண்ணியதுண்டு!

    * உங்களின் அழகாக நீங்கள் கருதுவது?

    என்னுடைய கண்களை...

  4. #3
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    `பரபர...சுறுசுறு' என சுற்றிவரும் ஐஸ்வர்யாவின் பேச்சும் `படபட ஸ்பீடு!' ஏழு வருடத்துக்குள் 45 சீரியல், 5 சினிமா என்று முடித்த இந்த `ஐஸ்' தேவதை இப்போது ஜோடி நம்பர் ஒன் ஆட்டத்தில் படுபிஸி

    ஆட்டத்தின் இடைவெளியில் கொடுத்த பேட்டி:

    * டிவியில் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

    பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என்னோட போட்டோவை பார்த்து டிவியில் `கங்கா யமுனா சரஸ்வதி' சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. சின்ன கேரக்டர் தான் என்றாலும் நன்றாக இருந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. இந்த ஏழு வருஷத்தில் 45 சீரியல்கள், 5 படங்கள் பண்ணிட்டேன். அண்ணாமலை சீரியல்தான் எனக்கு பிரேக் கொடுத்தது. சி.ஜே.பாஸ்கர் எனக்கு நடிப்பை நன்றாக கற்றுக் கொடுத்தார். இப்போது ஆனந்தம், பந்தம், கிரிஜா, நம்ம குடும்பம் என்று நடித்து வருகிறேன். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்காக ரிகர்சல் என்று எப்பவும் ஆட்டம்... நடிப்பு என்று ஒரே கொண்டாட்டம்தான்!

    * படித்துக் கொண்டே நடிப்பதில் சிரமம் இல்லையா?

    பத்தாம் வகுப்புக்கு மேல் ஸ்கூலுக்கு போக முடியல...அதனால் பிளஸ்டூ பிரைவேட்டா எழுதி பாஸ் பண்ணினேன். அப்புறம் சென்னை பல்கலைக்கழகத்தில் கரஸ்பான்டன்ஸில் பி.பி.ஏ., முடிச்சேன்.

    * நடிப்பு தவிர வேறு என்னவெல்லாம் தெரியும்?

    டான்ஸ் ஓரளவு தெரியும். அதுவும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்காக கத்துக்கிட்டேன். மத்தபடி வேற எதுவும் தெரியாது.

    * வீட்டிலும், தோழிகளும் உங்களை எப்படி கூப்பிடுவார்கள்?

    ஐஸூ...

    * சும்மா இருந்தால் என்ன பண்ணுவீர்கள்?

    பாட்டுக் கேட்பேன். டிவியில் கிரிக்கெட், டென்னிஸ் விரும்பிப் பார்ப்பேன். தோழிகளுடன் ஜாலியா சென்னையைச் சுத்தி வருவேன்.

    * காதல்..?

    அதெல்லாம் நமக்கு ஒத்து வராது; நேரமும் கிடையாது!

    * பிடித்த விளையாட்டு?

    நான் ஸ்கூல்லேயே அதெலட்டிக் வீராங்கனை. வாலிபால், த்ரோபால் ஆகியவையும் தெரியும்.

    * நீங்க முன்னுதாரணமாகக் கருதுவது யாரை?

    எனக்கு நானே ரோல்மாடல்! மத்தவங்க போல நான் எதுக்கு வரணும்?

    * பிடித்த நடிகர், நடிகை?

    மாதவனையும், சிம்ரனையும் ரொம்பப் பிடிக்கும்.

    * சினிமா வாய்ப்பு வந்தது எப்படி?

    சீரியலில் சிநேகிதி, தங்கை கேரக்டர்களில் நடிப்பதைப் பார்த்து டும் டும் டும் படத்தில் தங்கை கேரக்டர் கொடுத்தார்கள். அப்புறம் தவசி, லவ்லி, ஏப்ரல் மாதத்தில் ஆகிய படங்களில் நடித்தேன்.

    * உங்க குடும்பத்தைப் பற்றி?

    அப்பா ராஜாமணி பிசினஸ்மேனë. அம்மா சித்ரா ஹவுஸ்வைப். ஒரு அக்கா. அவங்களுக்கு கல்யாணமாயிடுச்சு. இப்போ வீட்ல நம்ம ராஜ்யம்தான்!

    * எதிர்காலத்தில் எப்படி வரவேண்டும் என்று ஆசை?

    நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணும். நடிச்சுக்கிட்டே... இருக்கணும்!

    ரொம்ப...ரொம்பச் `சின்ன' ஆசைதான்!

  5. #4
    Senior Member Veteran Hubber bingleguy's Avatar
    Join Date
    Jan 2006
    Location
    bengaluru, India
    Posts
    4,385
    Post Thanks / Like
    TV artists oda interview excerpts podureengala ? illa neen iview eduthu adhoda responses ai share panreengala ????
    Click here to reach the Index page of http://www.mayyam.com/talk/showthrea...A-LEARNED-YES)... All Sagas could be accessed from this page...

  6. #5
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தங்களின் கற்பனைகளா??


    இந்த லொல்ளுதானே வேணாம்கிறது )))))))))

    யாரோ முணுமுணுப்பது காதில் கேட்கிறது
    "அன்பே சிவம்.

  7. #6
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    http://www.nilacharal.com/enter/interview/suji.html
    =======================================

    sudddathu
    ===============


    SUJITHA - Heroine from Kanavarukka ..and so on

    ==========================

    'Started acting when I was 40 days old' - Sujitha

    An exclusive interview with the Golden Girl of Chinnathirai , Sujitha




    Sujitha, one of the busiest artistes in the TV world today, agreed to give us an exclusive interview amongst her heavy schedule.We made it a short and sweet one.

    Nilacharal : Can we ask how old are you,Suji?
    Suji : Ofcourse.My date of birth is 12th July 1983

    Nilacharal:Tell us about your family
    Suji : I have an elder brother and an younger sister.

    Nilacharal:How would you describe yourself?
    Suji :A very sensitive gir love being with the family

    Nilacharal : Do you remember your first experience in front the camera?
    Suji :No...because I started acting even before knowing what is cinema and camera.When I appeared in first moview Abbas,I was just 40 days old.Next was in Munthabaii Muduchu when I was six months old.

    Nilacharal : How would you describe cine industry?
    Suji :Beautiful Industry decorated with Flowers and thorns

    Nilacharal :What is your favourite charecter?
    Suji : The one in Poovizhi Vaasalile

    Nilacharal : Do you fine any difference between acting in cinema and serials?
    Suji : Responsibility and Recognition is very high in cinema compared to serial.

    Nilacharal : What is your special talent?
    Suji : Professionally....my classical dance.Personally....my jovial charecter.

    Nilacharal: What is the biggest achievement so far in your life?
    Suji : My acting career which started when I was just 40 days old.

    Nilacharal : Have you acted in any other language apart from Tamil?
    Suji :Yes.I have also acted in Telugu, Kannada, Malayalam and Hindi.

    Nilacharal:What are your current projects?
    Suji :Heroine in a Kannada Movie with Mr. Siva Rajkumar and 4 serials.

    Nilacharal : What is your score of your acting career as of now?
    Suji :Around 90 films and around 20 serials.

    ========================
    Is it legal ? if not I will remove it
    "அன்பே சிவம்.

  8. #7
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சீரியல்களில் சீரியஸாக தோன்றும் காயத்ரி ப்ரியா, நேரில் நேர்மாறாய் ஜாலியாக இருக்கிறார். கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் இனிக்க... இனிக்க சிரித்துக் கொண்டே பதில் கூறுகிறார்! காம்பியரிங், சீரியல் என்று கலந்துகட்டி கலக்கும் இவருடன் ஒரு கலகல பேட்டி...

    நீங்க சென்னைவாசி தானா?

    ஆமாம்...நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு. எங்க அப்பா பெரிய பாடகர். நிறைய கச்சேரிகள் பண்ணியிருக்கார். அம்மா டீச்சர். ஒரே அண்ணன், தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். நான் எம்.காம்., படிச்சிருக்கேன்.

    டிவிக்குள் எப்போது நுழைந்தீர்கள்?

    பத்தாவது படிக்கும் போது என்னுடைய பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் பார்த்து மாடலிங் வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் காம்பியர் வாய்ப்பு...அதில் பிஸியாக இருந்தபோது `நாகபந்தம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதுவரை 50 சீரியல்கள் தாண்டி விட்டேன். இப்போ...`செல்லமடி நீ எனக்கு' சீரியலில் நடித்து வருகிறேன்.

    சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லையா?

    வந்தது...அப்போது டிவியில் பிஸியாக இருந்ததால் சினிமா மிஸ் ஆயிடுச்சு! இப்போ ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறேன். ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் ஹீரோயினா நடிச்சிருக்கேன்.

    சினிமாவில் எந்தமாதிரி கேரக்டரில் நடிக்க ஆசை?

    எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. கேரக்டர் ரோல் கிடைத்தால் நல்லது!

    டிவியில் நீங்கள் நடித்த சீரியலைப் பார்ப்பது உண்டா? அப்போது என்ன நினைப்பீர்கள்?

    நான் நடித்த சீரியல் மட்டுமல்ல, நான் பங்கு பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வீட்டில் ரெக்கார்டு செய்து வைத்திருப்பார்கள். அவற்றைப் பார்த்து எப்படி இன்னும் பெட்டராக, செய்யலாம் என்று யோசிப்பேன்.

    சீரியல் என்றாலே அழுகைதானே அடையாளம்? உங்களுக்கு அழுவது பிடிக்குமா?

    இல்லை...எனக்கு அழுவது பிடிக்காது. இப்போதெல்லாம் டிவியில் அனைத்து உணர்வுகளும் காட்சிகளாக வருகின்றன. அழுது புலம்பும் சீன்கள் குறைந்து விட்டன.

    தோழிகளும், வீட்டிலும் உங்களை எப்படி கூப்பிடுவார்கள்?

    வீட்டில் காயத்ரி...இல்லாவிட்டால் ப்ரியா என்று கூப்பிடுவார்கள். தோழிகளுக்கு நான் `ஜி.பி'!

    காம்பியரிங், சீரியல் நடிப்பு இதில் உங்களுக்கு பிடித்தது எது?

    இரண்டுமே பிடிக்கும் என்றாலும் காம்பியரிங் செய்வது கொஞ்சம் த்ரில்லானது!


    நீங்கள் நடித்த சீரியல்களில் உங்களுக்குப் பிடித்தமான சீரியல் எது? பிடித்த கேரக்டர்?

    நான் நடித்ததில் பிடித்த சீரியல் `ஆடுகிறான் கண்ணன்'. இதில் வரும் `ருக்கு' கேரக்டர் ரொம்பப் பிடிக்கும்.

    நீங்கள் காம்பியரிங், சீரியல் பண்ணுவதை பார்த்துவிட்டு, கல்லூரி மற்றும் வீட்டில் என்ன விமர்சனம் செய்வார்கள்?

    கல்லூரியில் எல்லாருமே நல்லா என் கரேஜ் செய்வார்கள். வீட்டில் அண்ணன் மட்டும் ஏதாவது கிண்டலடிப்பார். மற்றபடி பெற்றோர் எப்பவுமே நம்ம பக்கம்தான்!

    உங்களுடைய பொழுதுபோக்கு?

    தோழிகளுடன் நல்லா ஊர் சுத்துவேன்...பர்ச்சேஸ் பண்ணுவேன். எப்பவும் செல்போனில் பேசிக்கிட்டே... இருப்பேன்.

    என்ன மாதிரியான கேரக்டர்கள் செய்ய விருப்பம்?

    டபுள் ஆக்ஷன் கேரக்டர் செய்ய விருப்பம். அதாவது ஒன்று அப்பாவி...மற்றொன்று ஆக்ஷன்னு கலக்கணும்!

    காயத்ரி ப்ரியா வீட்டில் எப்படி?

    இதோ...பார்க்கிறீர்களே...! இப்படித்தான் எப்போதும் வீட்டில் ஜாலியாக இருப்பேன்! சீரியல்களில் மட்டுமே சீரியஸ் நடிப்பு!

    எதிர்கால ஆசை?

    சினிமாவோ...சீரியலோ எதில் நடித்தாலும் நல்ல நடிகை என்று பெயர் வாங்கவேண்டும். அதைவிட முக்கியம் எல்லாரிடமும் நல்ல பொண்ணுன்னு பெயர் எடுக்கணும் இதுதான் என்னோட கனவு..ஆசை...லட்சியம் எல்லாம்!

  9. #8
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சில வருடங்களுக்கு முன் சிரிப்புப் புயலாக தமிழகத்தைத் தாக்கியவர் திண்டுக்கல் ஐ. லியோனி. பட்டிமன்றத்தைப் பாட்டு மன்றமாக, சிரிப்பு மன்றமாக மாற்றியவர் இவர். `கங்கா- கௌரி' என்ற படத்திலும் முத்திரை பதித்த லியோனியின் `முத்து... பத்து' குத்து...

    `லியோனி' என்றால் என்ன அர்த்தம்?

    இத்தாலி மொழியில் சிங்கம் என்று அர்த்தம்! இதை நான் வச்சுக்கலை... பெற்றோர் வைத்த பெயர்தான்!

    பட்டிமன்றங்கள் வெறும் சிரிப்பு மன்றங்கள்தானே?

    ஒரு காலத்தில் சீரியசாக இருந்தன. இந்த அவசர யுகத்தில் நாங்களும் சுருக்கமா... நகைச்சுவையா... பேசி சொல்ல வந்த கருத்தைப் பதியவைத்தோம். காலத்தின் தேவையாகத்தான் பட்டிமன்றம் சிரிப்பு மன்றமாக மாறிவிட்டது.

    நகைச்சுவையாகப் பேசியதால் விளைந்த சங்கடம்?

    இதுவரை அப்படி ஏதும் நடக்கவில்லை! நான் நகைச்சுவையாகப் பேசினால் சிரிப்பாங்களே தவிர யாரும் சங்கடப்பட்டதும் இல்லை... என்னை சங்கடப்படுத்தியதும் இல்லை!

    சினிமாவை கிண்டலாக விமர்சித்த நீங்களே சினிமாவில் நடித்தது எப்படி?

    சினிமாவை மட்டுமல்ல... எல்லா துறைகளைப் பற்றியும் கிண்டலடிப்போம். அதுக்காக அந்த துறையில் நுழையக்கூடாது என்று

    சட்டமில்லையே!ஆசிரியரான உங்களுக்கு பள்ளி மாணவர்கள் வைத்த பட்டப்பெயர்?

    `யுரேகா' என்று கூவிய கிரேக்க அறிஞரான ஆர்க்கிமிடிஸ் பெயரை எனக்கு பட்டப்பெயராக வைத்திருப்பதாகச் செய்தி!

    உங்களை அசத்திய ரசிகர்? அதிர்ச்சி அடைய வைத்த ரசிகர்?

    பிரான்சில் ஒரு நிகழ்ச்சி... பேசியவுடன் ஒரு பிரான்ஸ்காரர் ஓடிவந்து என்னை கட்டிப்பிடிச்சு இரண்டரைபவுன் மோதிரத்தை எனது விரலில் மாட்டினார்- இது அசத்தல்.

    மலேசியாவில் ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் போதே... ஒரு பெண் திடீரென்று ஓடி வந்து `கிஸ்' பண்ணிடுச்சு- இது அதிர்ச்சி.

    கோபமாக இருக்கும் மனைவியை நகைச்சுவையாகப் பேசி திசை திருப்பியதுண்டா?

    அதுதானே நமக்கு பெரிய ஆயுதம்! ஒருதடவை சனி, ஞாயிறு நாட்களில் வீட்டில்தான் இருக்கணும்னு மனைவி ஆர்டர் போட்டுட்டாங்க! அப்போ நமது முதல்வர் நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டார்கள். எனது மனைவியிடம் ``என்ன, இதையும் வேண்டாம்னு சொல்லிடவா?'' என்று கிண்டலாக கேட்டேன். உடனே அவுங்க ஆர்டரை கேன்சல் பண்ணிட்டாங்க!

    உங்களின் நிறம் குறித்து தாழ்வு மனப்பான்மை உண்டா?

    நான் கறுப்பாவா...இருக்கேன்! மாநிறமாத்தானே இருக்கேன்! சிகப்பா இருக்கிறவங்களைப் பார்த்து நான் இரக்கப்படுவேன்!

    அதிகம் அறிமுகமில்லாதவர் திடீரெனக் கடன் கேட்டால்...?

    ரொம்ப யோசிப்பேன். ஏன்னா... நிறைய தடவை கொடுத்து ஏமாந்துட்டேன்!

    அன்றாட வாழ்வில் பேச்சுத்திறமை கை கொடுக்கிறதா?

    கண்டிப்பா... `வாயுள்ள பிள்ளை பிழைக்கும்'னு கிராமத்தில் சொல்வார்கள். நான் போகும் நிகழ்ச்சிகளில் கோபமாக அல்லது `தண்ணி'யைப் போட்டுட்டு பிரச்சினை பண்ணும் சிலரை நானும் தண்ணியைப் போட்ட மாதிரி பேசி வழிக்குக் கொண்டு வந்துடுவேன்.

  10. #9
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    19/08/07
    01. "யோசிச்சு நடந்துக்கிட்டா பிரச்னையிலிருந்து தப்பிச்சிக்கிடலாம்!' பளிச்சென்று சொல்கிறார் ப்ரீத்தி சீனிவாசன்

    விஜய் "டிவி'க்காக "ஜோடி நம்பர் ஒன்'னுக்காக நடிகர் டிங்குவுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ப்ரீத்தியை "பேட்டி'க்காக ஓரங்கட்டினோம். அவரின் பேட்டி:

    * நடிகைகள் போடும் உடைகளுக்கு இளம்பெண்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறதே?

    டிவி, சினிமா இரண்டும் மக்களிடம் நெருக்கமானதாகிவிட்டது. அதனால அதில வர்றவங்க போடுகிற டிரஸ் மாதிரி நாமும் போட்டுக்கிடணும்ன்னு யூத் கேர்ள்ஸ் நினைக்கிறதில தப்பில்லே. அதே நேரம் பப்ளிக்கில அதே மாதிரி டிரஸ் போட்டுட்டு போனா மக்கள் என்ன நினைப்பாங்க. பிரச்னை ஏதும் வருமான்னு கொஞ்சம் யோசிக்கணும். மத்தவங்க நம்மை பார்க்கணும்ங்கிறதுக்காக அரைகுறையா டிரஸ் போடுவதை கேர்ள்ஸ் தவிர்க்கணும்.

    * கல்லுõரி மாணவிகளுக்கு உடை கட்டுப்பாடு போட்டிருப்பது பற்றி?

    வரவேற்க வேண்டிய விஷயம். படிக்கிற இடத்தில வீண் பிரச்னை வந்துடக்கூடாதுன்னு நினைச்சுதான் இப்படி கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கணும். மாடர்ன் கலாசாரம்ங்கிற பெயர்ல டிரஸ்சால படிக்கிற இடத்தில பிரச்னை ஏதும் வந்திடக்கூடாதுன்னு நினைக்கிறது நல்லதுதானே.

    * எங்க போனாலும் அப்பாவை துணைக்கு அழைத்துக் கொண்டு போவது முன்னெச்சரிக்கையாகவா?

    சீரியல் ஷூட்டிங் போகும் போது நான் மட்டும்தான் போவேன். விழாக்களுக்கு போகும்போது மட்டும் அப்பாவை அழைச்சிட்டு போவேன். அப்பா, அம்மா கூட இருந்தால் நல்லதுதானே.

    * இந்த வாரம் நடிகை பிரச்னை வாரம் என்று சொல்லும் அளவிற்கு நடிகைகள் வாரா வாரம் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனரே?

    ஆண்களுக்கு இணையாக எல்லா துறையிலும் பெண்கள் ஒர்க் பண்ணிட்டிருக்காங்க. அவுங்களிடையே எவ்வளவு பிரச்னையிருந்தாலும் அவ்வளவாக வெளியே தெரியாது. சினிமா, "டிவி'யில ஒர்க் பண்றவங்கன்னா சின்ன பிரச்னைகூட பரபரப்பாக வெளியே தெரிஞ்சுடுது. சினிமா, "டிவி'யில ஒர்க் பண்றவங்களுக்கு மக்களிடம் நல்ல அறிமுகம் இருப்பதாலதான் சின்னப் பிரச்னையில் சிக்கிகிட்டாலும் பரபரப்பாயிடுது. எல்லா விஷயத்திலும் அடுத்து என்னவாகும்ன்னு கொஞ்சம் யோசிச்சு நடந்துக்கிட்டா பிரச்னையிலிருந்து தப்பிச்சிக்கிடலாம்.

    * சீரியல்களில் சீனியர், ஜூனியர் நடிகைகள் இடையே பூசல் ஏதும்?

    பிரச்னை ஏதுமில்லை"டிவி'யில் நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய நிறுவனங்கள் சீரியல் தயாரிப்பில் இறங்கியிருக்கின்றன. முன்னணி சீனியர் நடிகைகள் பலர் "டிவி'யில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்கள் ஜூனியர்கள் நடிகைகளிடம் மோதிக் கொள்வதில்லை. நல்ல ப்ரண்ட்ஸாத்தான் பழகுறாங்க.

    இவ்வாறு ப்ரீத்தி சீனிவாசன் தெரிவித்தார்.




  11. #10
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    12/08/07

    01. காமெடியில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லை வருத்தப்படுகிறார் டி.வி. நடிகை சோபனா

    என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ. மதுரம், தங்கவேலு சரோஜா, நாகேஷ் மனோரமா, கவுண்டமணி, செந்தில் கோவை சரளா ஜோடி போட்டு நடிக்கும்போது காமெடியில் லேடி கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து டயலாக் இருந்தது. இப்ப லேடி கேரக்டருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    நடிகர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து காமெடி சீன்கள் எழுதறாங்க! "டிவி'யிலும், சினிமாவிலும் காமெடி நடிப்பில் ஆர்வம் காட்டும் "டிவி' நடிகை சோபனாதான் இப்படி வருத்தப்படுகிறார். "ஆறு மனமே ஆறு' தொடர் ஷூட்டிங் கில் நடித்துக்கொண்டிருந்த அவரை "பேட்டி'க்காக சந்தித்த போது உடனே "யெஸ்' என்று சொல்லி அமர்ந்துவிட்டார். ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடிதான். சோபனாவின் பேட்டி:

    * காமெடி கேரக்டரில் நடிக்க நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக சொன்னார்களே?

    காமெடி கேரக்டரில் நடிப்பது அவ்வளவு ஈசியில்லை. மீண்டும் மீண்டும் சிரிப்பு சீரியலில் நடிக்க அழைச்சாங்க. வெண்ணிறாடைமூர்த்தி சீன்ல அடிக்கிற லுõட்டியை பார்த்ததும் நாமும் டயலாக் பேசி கலக்கிடனும்ணு நம்பிக்கை வச்சு நடிச்சேன். கிளிக் ஆயிடுச்சு. எப்படி நடிச்சா, பேசினா ரசிகர்களை சிரிக்க வைக்க முடியும்ன்னு பல்ஸ் பார்ப்பதில் மூர்த்தி சார் கெட்டிக்காரர். எதார்த்தமாகவே அவரது ஒவ்வொரு செயலிலும் காமெடி கலந்திருக்கும். நாமும் சிரித்து மற்றவங்களையும் சிரிக்க வைப்பதுங்கிறது பெரிய விஷயம். அதனால தான் காமெடி சீன்ல நடிக்க ஆசைபடுகிறேன்.

    * காமெடி சீனில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று நீங்கள் வருத்தப்பட்டதாக சொன்னார்களே?

    முன்பெல்லாம் காமெடியில் லேடி கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து டயலாக் இருந்தது. இப்ப லேடி கேரக்டருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நடிகர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து காமெடி சீன்கள் எழுதறாங்க. பெயருக்கு டயலாக் போர்ஷன் வைப்பதால திறமை இருந்தாலும் நடிப்பில் சோபிக்க முடியாமல் போய்விடுகிறது.

    * காமெடி நடிகை என்று முத்திரை குத்திவிடுவார்களோ, மற்ற சீரியல்களில் வாய்ப்பு கிடைக்காதோ என்று பயந்ததுண்டா?

    காமெடி சீன்ல நடிக்க நடிகர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஆனா லேடின்னு பார்க்கப்போன விரல் விட்டு எண்ணிடலாம். மனோரமா ஆச்சி, கோவை சரளாவுக்கு பிறகு அடுத்து எந்த நடிகை ஜொலிப்பவங்க யார்ன்னு தெரியலை. காமெடி சீன்ல கலக்கணும்ன்னு ஆசையிருக்கு. அதற்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கணும்ல ஜில்லுனு ஒரு காதல், கோவை பிரதர்ஸ், எம்மகன், பிறப்பு படங்களில் நடிச்சேன். இப்ப தீக்குச்சி'ங்கிற படத்தில நடிச்சிட்டிருக்கேன் "ஆறு மனமே ஆறு' சீரியலிலும் எனக்கு நல்ல ரோல் கிடைச்சிருக்கு. வித்தியாசமான ஸ்டோரி

    காமெடி சீரியல்களில் நடிகைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சினிமாவில் இல்லையே?

    * காமெடி சீன்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்காததற்கு காமெடி நடிகர்கள்<தான் காரணம் என்று நினைக்கிறீர்களா?

    ""படத்தில் காமெடி சீன் எவ்வளவு தேவை, அதை எப்படி வைக்கலாம் என்று முடிவு செய்றது டைரக்டர்கள்தான். அப்படியிருக்க நடிகர்களை எப்படி குறை சொல்ல முடியும். நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாதுன்னு காமெடி நடிகர்கள் நினைப்பதில்லை. சின்ன சீனாக இருந்தாலும் எல்லோர் நடிப்பிலும் அந்த சீன் நல்லா வரணும்ன்னுதான் அவுங்க நினைப்பாங்க. வடிவேல், வெண்ணிறாடை மூர்த்தி, மனோரமா ஸ்ரீப்ரியா ஆகியோர் சீன் நல்ல வரணும்ன்னு துடிப்பாக இருப்பாங்க. சீன்ல இருக்கிற சக நடிகர்களையும் நல்லா நடிக்க வைக்க திடீர் திடீர்ன்னு நல்ல, நல்ல ஐடியாக்களை அள்ளிவிடுவாங்க. நினைச்சமாதிரி சீன்ல இருப்பவங்க நடிக்காட்டி எத்தனை "டேக்' ஆனாலும் வடிவேலுவும், வெண்ணிறாடை மூர்த்தியும் விடமாட்டாங்க. திருப்தி வரும் வரை சீன் எடுப்பாங்க. கூட நடிப்பவர்களை நல்லா நடிக்கணும்ன்னு நினைப்பாங்க. ஸ்ரீப்ரியா ஷூட்டிங் ஸ்பாட்ல காமெடியை சரமாரியா அள்ளவிடுவார்,'' என்றவரை டைரக்டர் அடுத்த சீன் ஷூட்டிங்கிற்கு அழைக்க பறந்தார்.


Page 1 of 46 12311 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •