-
10th June 2013, 07:09 AM
#51
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Gopal,S.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-38
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
There is no question or requirement of complexity in character as far as வீரபாண்டிய கட்டபொம்மன் is concerned. கதைக்குழுவினர் மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர். திரைக்கதை உருவாக்கத்தின் காரணம் இதை எப்படி சொல்வது என்பதற்காக மட்டுமே. மற்றபடி அந்த வரலாற்று நாயகன் சந்தித்த சம்பவங்களை மாற்ற முடியாதல்லவா. கதையிலோ அல்லது திரைக்கதையிலோ வேண்டுமானால் டாப் 10ல் வராமல் போகலாம். ஆனால் 100க்கு 99பேர் வீரபாண்டிய கட்டபொம்மனை டாப் 10ல் நிச்சயம் தேர்வு செய்வார்கள். There may not be any flaws in characterisation. அப்படி இருந்திருந்தால் அது நிச்சயம் பளிச்செனத் தெரிந்திருக்கும்.
நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.
Perfect analysis. Without any efforts for changing his body structure and undermining or creating any necessity for it, Nadigar Thilagam elevated the height of the character = both in physique as well as presentation - by his performance. This is possible only to the gifted ... viz. Sivaji Ganesan.
3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
ஒரு சிகரத்திலிருந்து மற்றொரு சிகரத்திற்கு அப்படியே செல்லும் திறமை இவருக்கு மட்டுமே உண்டு. சிகரத்தில் ஏறி விட்டால் அங்கிருந்து மற்ற சிகரத்திற்கு அப்படியே செல்லும் வழி உண்டா என ஆராய்ந்து ... தேவைப்பட்டால் பறந்தும் .... அதனை செயல் படுத்தக் கூடிய வல்லமை நடிகர் திலகத்திற்கு மட்டுமே உண்டு. மேலே ஏறி விட்டால் பார்வை அங்கேயே சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டே இருக்கும்.
4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)
இது ஒரு முறையல்ல பல முறை நடைபெற்றுள்ளது. கட்டபொம்மன் திரைப்படத்திற்கு ஓரிரு முறை நடைபெற்றிருக்கலாம். ஆனால் நாடகம் நடத்திக் கொண்டிருந்து போது அநேகமாக ஒவ்வொரு முறையும்.
5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.
ஆனால் அவை அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை, குணநலன்களை சற்றும் பாதிக்காது என்பது தான் சிறப்பு.
6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .
சரி என்று தெரிந்தால் மட்டுமே செய்வார். எனவே பார்ப்பவர்களுக்கு அது சரி என்ற உணர்வு தானாகவே ஏற்பட்டு விடும்.
7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.
அதனை வெளிக் கொண்டு வந்தது அற்புதமான ஒலியமைப்பும் அல்லவா...
8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.
அது தான் அவருடைய வெற்றி. இதனால் தான் ஆசிய ஆப்பிரிக்க விருது ஜூரிகள் உணர்ந்திருப்பார்கள்.
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
Cent per cent true.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th June 2013 07:09 AM
# ADS
Circuit advertisement
-
10th June 2013, 07:11 AM
#52
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
vasudevan31355
உளவுபூர்மாக, உணர்வு பூர்வமாக ஒவ்வொருவர் நெஞ்சிலும் சிம்மாசனமிட்டு நடிகர் திலகமாய் அமர்ந்து விட்டான் கட்ட பொம்மன். கட்ட பொம்மன் வேறு சிவாஜி I mean நடிகர் திலகம் வேறு என்ற பேச்சுக்கே இடமில்லை. தாங்கள் குறிப்பிட்டது போல மெஸ்மரிஸ நிகழ்வு. கட்டபொம்மனின் பேச்சு , செயல், நடை, உடை, பாவனை, வீரம், விவேகம், அறிவு, ஆத்திரம், ரௌத்திரம் என்ற பலவகைப்பட்ட உணர்வுகளுக்கு ஒவ்வொருவனும் நிரந்தர அடிமையாகிப் போனான். பாட நூல்களில் சப்ஜெக்ட் வந்தால் கட்டபொம்மனை பிள்ளைகளுக்குக் காட்ட படம் வரைந்தவன் யாரை மனதில் வைத்து வரைந்திருப்பான்? அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு அது. சமீபத்தில் ராஜராஜ சோழனின் சிலையொன்றை வெகு நாட்களுக்குப் பின் தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒரு பூட்டியிருந்த அறையிலிருந்து எடுக்க நேர்ந்ததாம். பார்த்தால் அப்படியே அச்சு அசலாக உலகத்திலேயே யாருமே மிஞ்ச முடியாத ஒரு தமிழ் நடிகரின் உருவத்தை அப்படியே ஒத்திருந்ததாம். ஏன் இப்படிப்பட்ட வரலாற்று நாயகர்கள் அந்த நடிகனுள் புகுந்து தன்னை பிரம்மாண்டமாக வெளிப்படுத்தி பின் வெளியேறியிருக்கக் கூடாது?
தாங்கள் கூற்று ... குரிப்பாக கடைசி வாக்கியம் ... பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டியது வாசு சார். வீரபாண்டிய கட்டபொம்மனைத் தொடர்ந்து எண்ணற்ற வரலாற்று நாயகர்கள் நடிகர் திலகம் தான் தங்களைப் பற்றி சொல்ல வேண்டும் என அவரிடம் வேண்டுகோள் விடுப்பதற்காக நிச்சயம் க்யூவில் நின்றிருப்பார்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th June 2013, 07:15 AM
#53
Senior Member
Diamond Hubber
கோ,
எவ்வளவு homework பண்ணுவது? school இல் கூட இவ்வளவு பண்ணதில்லை. ஆனால் சுகமான homework. நீ பத்து வரிகளில் ரத்தினச் சுருக்கமாய் முடித்து விட்டு நைஸாக எங்களை ஆழம் பார்க்கிறாய். உன் நரித்தனம் தெரிகிறது.
மாதவா! என்னமோ போடா....
Last edited by vasudevan31355; 10th June 2013 at 08:35 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th June 2013, 09:00 AM
#54
Senior Member
Diamond Hubber
stress உணர்வுகளில் மூழ்கிப் போனதாலேயே சந்தோஷமாய் இருக்கும் காட்சிகளில் கூட சோகம் இழையோடிக் கொண்டிருப்பதை உணரலாம். பேபி காஞ்சனா ஒரு ஆறுதல். அவள் நாட்டியத்தில் ரிலாக்ஸுக்காக அவர் மனம் லயித்ததோ இல்லையோ... நம் மனம் அவ்வளவு லயிக்காது. அடுத்து பொம்மனின் நிலை, கதி என்ன... என்ன முடிவெடுக்கப் போகிறான், என்ன செய்யப் போகிறான், அவ்வளவு பெரிய எதிர்முகாமை இவன் சமாளிக்க வேண்டுமே என்ற சிந்தனயோட்டமே நம்மில் ஓடிக்கொண்டிருக்கும். கதை தெரிந்திருந்தும் கூட பார்ப்பவர் மனம் பதைபதைப்பு அடைவதை மறுக்க முடியுமா? பொம்மன் சிறு சிறு சந்தோஷ விஷயங்களில் கவனத்தை திருப்ப முயற்சிக்கும் போதும் கூட அவனையும் மீறி அவன் சிந்தனை, அவன் மனம் எதிர்கால போராட்டங்களை அசை போட்டபடியே இருக்கும் என்பது புரிந்தவர்களுக்கு புரியும் அல்லவா! பார்க்கும் பார்வையாளனுக்கே பதைபதைப்பு, நீங்கள் சொன்ன stress உண்டாகும் போது பாதிக்கப்பட்டவனின் மன அழுத்தம் எப்படி இருக்கும்? அதை விடுங்கள். பாதிக்கப்பட்டவனின் மன அழுத்தத்தை நமக்காக வடித்துக் காட்டுபவரின் மன அழுத்தம் அதைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது என்பதுதான் எல்லாவற்றையும்விட ஹைலைட். உதாரணம் ரத்த வாந்திகள்.
அதைத்தான் சொல்கிறேன்.
மெய்யான வீரனின் மன அழுத்தத்தை பொ(மெ)ய்யாக வடித்து, அதில் மெய்யான வெற்றி கண்ட நடிக வேந்தனல்லவோ நம் நடிகர் திலகம்.
Last edited by vasudevan31355; 10th June 2013 at 12:19 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th June 2013, 02:09 PM
#55
Junior Member
Newbie Hubber
வாசு சார்,
அணு அணுவாக ஒவ்வொன்றையும் விரித்து என் உழைப்பை கௌரவ படுத்தியுள்ளீர்கள்.இரவு நேர பணியின் இடையில் நீங்கள் இதை செய்தது Hats Off .
ராகவேந்தர் சார்,
நீங்கள் ஆரம்பம் முதலே பத்தி பத்தியாக ஆராய்வது அனைவரையும் திரும்பவும் கவனத்தோடு படிக்க தூண்டும்.நன்றி.
-
11th June 2013, 03:45 PM
#56
Junior Member
Newbie Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-39
வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.
மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .
ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.
என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.
தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.
கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.
இனி வரும் பாகத்தில் அவருடைய பலதரப்பட்ட larger than life பாத்திரங்களை கோடி காட்டி செல்வோம்.
----To be continued.
Last edited by Gopal.s; 11th June 2013 at 07:50 PM.
-
11th June 2013, 09:20 PM
#57
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Gopal,S.
தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,
அரசாணை பிறப்பித்துதான் தானாதிபதிப் பிள்ளை அப்படி செய்திருப்பார் என்ற நம்பிக்கை பொய்த்து விட்ட அதே வேளையில் தன்னிச்சையாக மந்திரி தானே குண்டர்களுடன் நெல் கிடங்கை கொள்ளையடிக்கச் சென்றதாக தன்னிடமே சொன்னவுடன் நான் ஒரு அரசன் இங்கிருக்கிறேன்.... நீ உன் இஷ்டத்திற்கு ஆட்டம் போட்டிருக்கிறாய்...... பாருய்யா... என்ற அர்த்தபுஷ்டியுடன் மந்திரியைப் பார்க்காமல் அல்லது பார்க்கப் பிடிக்காமல் பக்கத்தில் நிற்கும் ஜெமினியையும், பின்னால் நிற்கும் கருணாநிதியையும் ஒரு வினாடி நேர பார்வை பார்ப்பார் பாருங்கள்! எங்கேதான் கற்றாரோ இவ்வளவு வித்தைகளையும்.
-
12th June 2013, 08:17 PM
#58
Junior Member
Devoted Hubber
Originally Posted by
Gopal,S.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-39
----To be continued.
ஏதேது!!
VPKB top 10 இல் வராது என்று சொன்னவருக்கே அதன் பெருமையை விளக்க பத்து பாகங்கள் தேவைபடுகின்றனவே!!
ஸ்ரீராமனின் அழகை கம்பர் வருணிக்கும் கம்ப இராமாயண பாடலான,
தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான்
உருவுகண் டாரை ஒத்தார்.
ஞாபகத்திற்கு வருகிறது..இவர்களை வர்ணிக்க ஆரம்பித்தால் முடிவேது!
Gopal ji YOU ROCK!!
-
12th June 2013, 11:11 PM
#59
Senior Member
Seasoned Hubber
“OUR AIM IS TO CREATE THE LIFE OF A HUMAN SPIRIT AND THEN TO EXPRESS IT IN A BEAUTIFUL ARTISTIC FORM”
– Stanislavski
reproduced from: http://spiritualpsychologyofacting.com/?page_id=2
"நமது குறிக்கோள் மனித உணர்வுகளுக்கும் மன ஓட்டத்திற்கும் உயிரூட்டுவதும், அதனை அழகான கலை நயத்தோடு வெளிப்படுத்துவதும்..-ஸ்தானிஸ்லாவ்ஸ்கி " -
இதனை Spiritual Psychology of Acting எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த உணர்வு ரீதியான உளவியலின் அடிப்படையில் ஒரு நடிகன் வெளிப்படுத்தும் காட்சிக்கு மிகச் சரியான உதாரணம் ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் இடம் பெற்ற மன உளைச்சல் காட்சி. இதில் சாதாரணமாக நடிகர்கள் இலக்கணப் படி நடித்தார்களென்றால், அதில் Spiritual Psychology of Acting மட்டுமே வெளிப்படும்.
உலகத்தின் ஒப்புயர்வற்ற நடிகர் திலகம், இந்த Spiritual Psychology of Acting பற்றி எங்கு படித்திருப்பார். ஆனால் அவர் இதனை எவ்வாறு கையாண்டிருக்கிறார். இந்தக் காட்சியில் அவருடைய focus ... mental turmoil and dilemma between spirituality and worldly life. எனவே இந்தக் காட்சியில் அவர் இந்த Spiritual Psychology of Acting முறையை பயன் படுத்தி, Spiritual Psychology by Acting என்ற நிலையில் வெளிப் படுத்தி நம்மை அந்த மன உளைச்சலில் involve ஆக்குகிறார். இதன் விளைவாக நாமும் அவர் இந்த நிலையை எடுக்க மாட்டாரா, அந்த நிலையை எடுக்க மாட்டாரா என ஆவலுடன் காத்திருப்போம். இந்தக் காட்சியைப் பற்றி இன்னும் ஆழமாக விவரிக்க வேண்டும். எந்த அளவிற்கு இதனைப் பற்றி என்னால் எடுத்துச் சொல்ல முடியும் எனத் தெரியவில்லை. முடிந்த வரை முயன்றிருக்கிறேன். கோபால் சார் தம்முடைய கருத்தைப் பதியும் போது இக்காட்சியின் வேறு பரிணாமங்கள் நமக்கு தெரிய வரும். அதன் பின்னர் மீண்டும் இக்காட்சியைப் பற்றித் தொடரலாம் என உள்ளேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th June 2013, 06:38 AM
#60
Junior Member
Newbie Hubber
ராகவேந்திரா சார்,
மனப்போராட்ட காட்சிகளில் வசனமில்லாத ஆண்டவன் கட்டளை, வசனத்தோடு சாந்தி இரண்டும் விரித்து வரைய எனக்கும் ஆசை. நீங்கள் எடுத்து செய்தால் இன்னும் ரசிப்பேன்
Bookmarks