Page 2 of 14 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்தியாவின் எட்டாவது உலக அதிசயம் - என்று கோபால் சார் தன்னுடைய ஆய்வின் தலைப்பை குறிப்பிட்டிருப்பதோடு நில்லாமல் அதனை நிலைநாட்டும் படியான கருத்துக்களையும் பதித்து வருகிறார். இன்னும் வர உள்ள கட்டுரைகள் நம்முடைய ஆவலைத் தூண்டும் வகையில் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளன என்பதும் திண்ணம். அது வரையில்...

    நம் நடிகர் திலகம் சாதனை பற்றிய மற்றோர் திரியில் அடியேனால் துவக்கப் பட்ட நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும் தொடரின் மீள்பதிவு

    நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடும்



    His system of actinghas developed an international reach.
    அவருடைய நடிப்பு முறை உலக அளவிலான வீச்சை ஏற்படுத்தி வளர்த்தது.

    He treated theatre-making as a serious endeavour, requiring dedication, discipline and integrity.
    அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஒருங்கிணைப்பு ஆகியவை உண்மையாக தேவைப்பட்ட நாடக உருவாக்கத்தை அவர் ஒரு தவமாக்க் கருதி மேற்கொண்டார்.

    Throughout his life, he subjected his own acting to a process of rigorous artistic self-analysis and reflection.
    தன்னுடைய நடிப்பினை கலைத்தன்மைக்குட்பட்ட தீவிர சுயபரிசோதனைக்கும் அதன் வெளிப்பாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுமையாக உட்படுத்திக் கொண்டார்..

    His development of a theorized praxis – in which practice is used as a mode of inquiry and theory as a catalyst for creative development – identifies him as the first great theatre practitioner.
    ழக்கம் என்பதை கேள்வி வடிவமாகவும் கோட்பாடு என்பது ஆக்கபூர்வமான உருவாக்கத்திற்கான விளக்கமாகவும் அடிப்படையாக்க் கொண்டு அவர் உருவாக்கிய கோட்பாடு செயலாக்கம் – அவரை முதன்மையான சிறந்த நாடக தொழிலராக அறிய வைக்கிறது.

    மேற்கண்ட வாசகங்கள் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவர்களைப் பற்றி விக்கிபீடியா இணைய தளத்தில் அறிமுகமாக உள்ளவை. ஒவ்வொரு வார்த்தையும் நடிகர் திலகத்திற்கு எந்த அளவிற்குப் பொருந்துகிறது.

    இது நம்முடைய அலசலின் துவக்கம் தான். இனி வரும் காலங்களில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்புக் கோட்பாடு பற்றியும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய நடிப்பிற்கும் உள்ள ஒற்றுமை அல்லது வேற்றுமை அல்லது இரண்டும் ... என்பதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

    அன்புடன்
    மேற்காணும் பதிவுக்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthrea...l=1#post927638

    இது துவக்கப் பதிவு மட்டுமே. இனி வரும் காலங்களில் முன்னர் உரைத்த முகவுரை மற்றும் கோபால் சாரின் ஆய்வுரை இவற்றையொட்டி பதிவுகள் இடம் பெறும்.
    Last edited by RAGHAVENDRA; 23rd May 2013 at 06:49 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    நடிகர் திலகத்தின் நடிப்புப் பள்ளி பற்றி தனித்திரி தாங்கள் தொடங்கியிருப்பது சாலப் பொருத்தம். கோபால் சாரும் எந்த disturb ம் இல்லாமல் அட்டகாசமாய் எழுத முடியும். நாமும் இந்த சுப்ஜெக்ட்டை வேண்டிய அளவிற்கு அலசலாம். விவாதிக்கலாம். கோபாலுடைய ஆய்வுகளை ஒன்று சேர்த்து ஒழுங்குபடுத்தி இங்கு பதிவிட தங்களுக்கு குறைந்தது மூன்ற அல்லது நான்குமணி நேரம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவு சிரமங்களை மேற்கொண்டு தாங்கள் இந்தத் தொடர் அனைவரையும் சென்றடையவேண்டும் என்று பாடுபட்டிருப்பது புரிகிறது. இந்த அசுர உழைப்பிற்காக என் நன்றிகள்.

    கோபால் சார்,

    இனி நீங்கள் சிரமமின்றித் தொடரலாம். ஆரம்பித்த ஒரு சில தினங்களுக்குள் மிகப் பெரிய ஹிட் கிடைத்துள்ளது. 5 ஸ்டார்களும் கிடைத்துள்ளன. இது தங்கள் எழுத்திற்கும், ராகவேந்திரன் சார் உழைப்பிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி! வாழ்த்துக்கள்!
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #13
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    Sivaji Ganesan School of Acting - அட்டகாசம், மிகவும் பொருத்தம்.. அடிக்கடி இல்லாமல் அவ்வப்போது திரிக்கு வருகைதரும் என்னைப் போன்றவர்கள் (திரு.கோபால் சாருடைய, தஙளுடைய மற்றும் நண்பர்களுடைய) இதுமாதிரியான ஆய்வுக் கட்டுரைகளை பொறுமையாகப் படித்து மகிழ உதவிகரமாக இருக்கும். நன்றி, நன்றி, நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. #14
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-32

    நடிகர்திலகத்தின் சரித்திர ,புராண படங்கள் மற்றும் ஓரங்க நாடகங்கள் அனைத்தும் Shakespere பள்ளி ,Oscar Wilde மற்றும் Stella Adler வகை பட்டதாகும். இதில் shakespere பள்ளி பற்றி பார்த்து விட்டு, அவருடைய larger than life பாத்திரம் ஒன்றினுள் நுழைவோம்.

    நியூயார்க் , ஹார்வேர்ட் ,பர்மிங்காம் ,முதலிய இடங்களில் முக்கியமாய் பேச பட்டு பயிற்று விக்க படும் இந்த வகை பள்ளிகளில் முக்கியமான நமக்கு பரிச்சயம் ஆனவர்கள்,Patrick Steward ,Ian Mckellen ,Ben kingsley ,Richard Barbadge ,John Hemings ,Thomas Pope ,George Bryan ,John Rice ஆகியோர் ஆவர்.Alexander Technique for Actors மற்றும் Elizebethan Theatre என்பது மிகவும் புகழ் பெற்றது. முக்கியமாய் அவர்கள் போதிப்பது மற்றும் எதிர் பார்ப்பது, மேற்குறிப்பிட்ட நடிகர்களின் பாணி கீழ்கண்டவாறு விரியும்.

    monologue எனப்படும், ஒரு பாத்திரம் எதிர் பாத்திரங்களின்றி தன்னுடனே உரையாடி உணர்ச்சியை வசனங்களுடன் ,மிகை பாவனைகள், உடல் மொழி, வலுவான கை கால் அசைவுகளுடன் வெளிபடுத்தும் முறை.

    Redirects Energy and cultivate Balance ,Poise ,Increased Physical ,Vocal and emotional freedom ..

    ஒவ்வொரு மிக நீண்ட வசனங்களை சொல்லி முடித்த பின் தேவை படும் சுவாச கட்டுப்பாடு.(End of the line breath support )

    பிறகு மூல கதை பிரதியை ஆராய்ந்து,பாத்திரத்தை கட்டமைத்து,மனகண்ணில் உணர்ந்து,பாத்திரங்களுக்குள் தொடர்பு மற்றும் உறவுநிலையை அறுதியிட்டு ,கதை சொல்லும் முறையை நிர்ணயித்தல்.

    Agecraft skills மற்றும் stamina .

    பாத்திரங்களை பார்ப்போர் மத்தியில் நிலை நிறுத்த ,வசனங்களை மனப்பாடம் செய்து, மிகை தோற்றம்,வலுவான சிறிதே மிகை படுத்த பட்ட கால்,கை,உடல் அசைவுகளுடன் மிகையான வெளியீட்டு முறையை பயன் படுத்தல்.

    பல பாத்திரங்களில் மிக குறுகிய காலங்களில் நடிக்க Cue Scripting மற்றும் Cue Acting முறையில் சொல்ல சொல்ல உள்வாங்கி உடனே நடிக்கும் முறையும் பயிற்றுவிக்க படும்.

    மிக பிரம்மாண்டமான கற்பனைகள் கொண்ட வலுவான உணர்ச்சி குவியல் நிறைந்த இந்த வகை பாத்திரம் மற்றும் கரு பொருளில் நடிக்கும் போது வெளியீட்டு முறைகளும் வலுவாக, மிகை நடிப்பு கொண்டு பார்ப்போரை ஆளுமை செய்து வசிய படுத்த வேண்டும்.

    என்னடா நடிகர்திலகத்தை ,அவர் பெற்ற நாடக கம்பெனி பயிற்சிகளை சொல்லி , என்னென்னவோ வெளிநாட்டு பெயர்களுடன் சம்பத்த படுத்தி நம்மை எல்லாம் குழப்புகிறானே என்று உங்களுக்கு தோன்றினால் இது வரை சொன்ன எனக்கு பாதி வெற்றி கிடைத்தாயிற்று என்று அர்த்தம்.

    -----To be continued .

  6. #15
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-33

    என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.

    Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.

    உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது

    ----To be Continued.
    Last edited by Gopal.s; 26th May 2013 at 01:26 PM.

  7. #16
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது

    ----To be Continued.
    Have completely got convinced with your content sir.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #17
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்
    Perfect analysis of the presentation of larger than life characters. சரித்திர, புராண புருஷர்களைப் பற்றி நாம் படித்துள்ள இலக்கியங்களாகட்டும், அவற்றிற்கென சித்தரிக்கப்பட்ட ஓவியங்களாகட்டும், அந்த கதா பாத்திரங்களை பிரம்மாண்டமாகத் தான் காட்டியுள்ளன. அது மட்டுமின்றி அந்தக் கால கட்டத்தில் இப்படித் தான் உரையாடல்கள் இருந்திருக்கக் கூடும் என்கிற அனுமானத்தில் தான் அந்த உரை நடையும் இருந்தது. Therefore the larger than life concept has been arrived at through various literary sources. அது மட்டுமின்றி தாங்கள் கூறியிருப்பது போல் அந்த பாத்திரங்களின் தன்மையும் கூட அந்த கால கட்டங்களை சித்தரிப்பதாகத் தான் உருவாக்கப் பட்டிருந்தன.

    என்றாலும் கூட இவற்றை நடமாடும் ஓவியங்களாக ... அதாவது செல்லுலாய்டில் பாத்திரங்களாக ... சித்தரிக்க வேண்டுமென்றால் அதற்கு சராசரிக்கு மீறிய திறமை கொண்டவர்களால் மட்டுமே சாத்தியம். அப்படி முனைந்த பல கலைஞர்களுக்கு முன்னோடி நடிகர் திலகம். ஆனால் அவருக்கு யார் முன்னோடி ... சுயம்புவாக அந்த பாத்திரங்களுக்கு இறைவன் தனக்களித்த திறமையினாலும் அபூர்வ சிந்தனா சக்தியாலும் ஜீவனூட்டியவர் நடிகர் திலகம்.

    இப்படிப் பட்ட பாத்திரங்களுக்கு முன்னுதாரணம் கட்டபொம்மன், என்றால் அதற்கு சற்றும் குறைவில்லாமல், அதே போல் மேலும் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார் நடிகர் திலகம்.

    தொடருங்கள் .... ஆவலைக் கூட்டுகிறது தங்கள் கட்டுரை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #18
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இடைவெளிக்கு மன்னிக்கவும். திரும்பவும் இன்று முதல் தொடர்வேன்.

  10. #19
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-34

    கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.

    கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.

    கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.

    இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?

    ----To be Continued .
    Last edited by Gopal.s; 3rd June 2013 at 05:21 AM.

  11. #20
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஒவ்வொரு தமிழனுமே அதிர்ஷ்டம் செய்தவன் தங்கள் உலக அதிசயத்தைப் படித்து மகிழ்வதற்கு.
    நடிகர் திலகமே தெய்வம்

Page 2 of 14 FirstFirst 123412 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •