Page 10 of 14 FirstFirst ... 89101112 ... LastLast
Results 91 to 100 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

  1. #91
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-47

    திருவருட்செல்வர் அப்பர் பாத்திரம் ,அவர் முன்னரே ஆறு மனமே ஆறு என்று ஆண்டவன் கட்டளையில் ஒத்திகை பார்த்து விட்டு கடலையும் சாப்பிட்டு விட்ட ஒன்று. துறவமைதி கலந்த ஒடுக்கமும் ,செயல்பாடு நிறைந்த பழுத்த முதுமையும் ,அவர் தான் நேரில் கண்டு,பதிய வைத்த சந்திரசேகர சாமிகளை (காஞ்சி பெரியவர்)role model (முன்மாதிரி பிரதி)ஆக வைத்து நடித்த விதம்,நடிகர்திலகத்தின் நடிப்பின் வீச்சு,broad Spectrum ,இரு வேறு பட்ட துருவ நிலைகளை துரித தயாரிப்பில் அடையும் மேதைமை,அவரால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று உலகத்துக்கு ஓங்கி சொன்னது.இந்த பாத்திரம் ஒரு குறிஞ்சி மலர்.(பூக்கவே முடியாத ஒரு முறை மட்டுமே பூப்பது எதுவாவது இருந்தால் அதை பிரதியிட்டு கொள்ளுங்கள்)

    அந்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவரின் ஒப்பனைக்கு அன்றைய கால கட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாத அளவு சித்திரவதையை ஒத்த கஷ்டம்.அந்த நடை ,அவர் எல்லோருக்கும் கற்று கொடுத்த அதிசய பாடம்.ஒரு கூன் வந்த ,புத்துயிர்ப்போடு இயங்கும் முதியவரின் balance தடுமாறும் துரித நடை,V வடிவில் பாதத்தையும்,U வடிவில் முட்டியையும் வைத்து அவர் நடக்கும் விதமே அந்த பாத்திரத்தின் பாதி வேலையை செய்து விடும்.(இதே படத்தில் மன்னனின் சிருங்காரம் கலந்த கம்பீர நடையழகும்,சுந்தரரின் சிறிதே பெண்மை கலந்த சுந்தர நடையழகும் கண்டு ரசிக்க, வேறுபாட்டை உணர ஒரு reference point )அதே போல கூன் உடம்பு காரன் தன்னை நிமிர்த்த எத்தனித்து செய்ய வேண்டிய சிரமமான முயற்சியை ,அந்த பாத்திரம் நிமிரும் தருணங்களில் நடிப்பால் உணர்த்தும் விந்தை.

    பேச்சில் ஒரு பற்றற்ற அமைதி கலந்த உறுதி இருந்தாலும் ,வயதுக்கேற்ற ஒலி சிதறலும் கொண்டிருக்கும்.அப்பூதி அடிகளின் இல்லத்தில் ,அவர் ஒரு முட்டியை உயர்த்தி,கைகளை அதில் அமர்த்தி ,முகத்தை நம்மை நோக்கி குவிந்து விரியும் கைகளில் சார்த்தி அமைதி ,சாந்தம்,தவம் கலந்த ஒரு மோகன அரை சிரிப்புடன் காட்டும் gesture ,காஞ்சி பெரியவர் சந்திப்பில் நமக்கு கிடைத்த வரம்.நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன் என்ற எண்ணிக்கை ,நானே அறியா புதிர். இது larger than life பாத்திரத்தை Meisner பள்ளியில் பாற்பட்ட பூரணத்துவம் கொண்ட நடிப்பின் சாதனையாகும்.

    கடைசி காட்சியில் உடலை இழுத்து அவர் அனைத்து புலன்களும் மங்கி தளர்வு பெற்ற நிலையிலும் ,காளத்தி செல்ல எத்தனிக்கும் காட்சி நம்மை வேறு லகுக்கே கூட்டி சென்று தன்னிலை மறக்க செய்யும்.

    இத்துடன் larger than life பாத்திரங்கள் நிறைவு பெற்று meisner பள்ளி பாணியில் அவர் நடித்த stylised பாத்திரம் ஒன்றை அக்கு வேறாக அலசி இந்த ஆய்வு தொகுப்பின் முதல் பகுதியை நிறைவு செய்ய போகிறேன்.

    ---To be Continued.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #92
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Mesiner Technique of Acting ... quoted from wikipedia

    The Meisner technique is an acting technique developed by the American theatre practitioner Sanford Meisner.[1]
    Meisner developed this technique after working with Lee Strasberg and Stella Adler at the Group Theatre and as head of the acting program at New York City's Neighborhood Playhouse and continued its refinement for fifty years.

    Components

    Meisner Training is an inter-dependent series of training exercises that build on one another. The more complex work supports a command of dramatic text. Students work on a series of progressively complex exercises to develop an ability to improvise, to access an emotional life, and finally to bring the spontaneity of improvisation and the richness of personal response to textual work. The technique develops the behavioral strand of Stanislavski's 'system' (specifically developing his concepts of communication and adaptation). The technique emphasizes "moment-to-moment" spontaneity through communication with other actors in order to generate behavior that is truthful within imagined, fictional circumstances.
    Early training is heavily based on actions, in line with Meisner's emphasis on "doing." The questions "what are you playing?" and "what are you doing?" are asked frequently, in order to remind actors to commit themselves to playing what Stanislavski called a "task" or "objective," rather than focusing on the words of a play's dialogue. Silence, dialogue, and activity all require the actor to find a purpose for performing the action involved. By combining the two main tasks of focusing attention on a partner and committing to an action, the technique aims to force an actor into "the moment" (a common Meisner phrase), while simultaneously propelling the actor forward with concentrated purpose. The more an actor can take in about the partner and the surroundings while performing in character, the more Meisner believed they can "leave themselves alone" and "live truthfully." One of Meisner's famous quotations that illustrates the emphasis on "doing" was "An ounce of behavior is worth a pound of words."
    The most fundamental exercise in Meisner training is the Repetition exercise.[2] Two actors face each other and repeat their observations about one another, back and forth. An example of such an exchange might be: "You're smiling." "I'm smiling." "You're smiling!" "Yes, I'm smiling." Actors observe and respond to the other's behavior and the subtext therein. If they can "pick up the impulse"—or work spontaneously from how their partner's behavior affects them—their own behavior will arise directly from the stimulus of the other.
    Later, as the exercise evolves in complexity to include "given circumstances," "relationships," actions and obstacles, this skill remains critical. From start to finish—from repetition to rehearsing a lead role—the principles of "listen and respond" and "stay in the moment" are fundamental to the work.
    As in all Stanislavskian-derived approaches, for a Meisner actor traditional line-memorization methods that include vocal inflections or gestures are avoided. These traditional approaches merely increase the chance the actor will miss a "real moment" in service of a rehearsed habit or line reading, the technique assumes. Meisner actors learn lines dry, "by rote," without inflection, so as not to memorize a line-reading. When the line is finally to be delivered, its quality and inflection is derived from the moment of articulation.
    The improvisatory thrust of the technique does not give permission to an actor "to wing it" or to fail to prepare. Meisner training includes extensive work on crafting or preparing a role. As students mature in the work, they get to know themselves and can make use of this self-knowledge by choosing actions that are compelling to their particular "instrument." They "come to life" through informed, provocative choices. Actors prepare emotional responses by "personalizing" and "paraphrasing" material and by using their imagination and "daydreaming" around a play's events in highly specific ways that they've learnt are particularly evocative for them personally. Solid preparation supports the spontaneity, in line with Martha Graham's observation that "I work eight hours a day, every day, so that in the evenings I can improvise."
    Despite some misconceptions, Meisner work also addresses characterization, though in an indirect way. Characteristics, such as "mousy," "vindictive," or "noble," result from actors' choices about what they do. Rather than attempting to play "mousy," a Meisner actor might seek to appease another character, in order to manifest the characteristic.
    The above quoted text reproduced from wikipedia website: http://en.wikipedia.org/wiki/Meisner_technique
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #93
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாத்திரத்தின் தன்மையறிந்து, அதற்குப் பொருந்தும் வகையில் தனி பாணியினையும் உருவாக்கி, அதனுள் புகுந்து அதே சமயம் அதனை கட்டுக்குள் வைத்து வெளியிலிருந்து இயக்கும் தன்மையை பல படங்களில் நடிகர் திலகம் பயன் படுத்தியிருக்கிறார். அதாவது பாத்திரத்தினுள்ளும் இருப்பார் வெளியேயும் இருப்பார் ... like sailing in two boats simultaneously ... இது அவருக்கு மட்டுமே சாத்தியம். பாத்திரத்தை இயக்கும் போது உள்ளேயும் அதன் அளவுகோல் நிர்ணயம் செய்யும் போது வெளியேயும் இருந்து முழுமைப் படுத்தும் திறமை அவருக்கு இருந்தது. ஒரு பாத்திரத்தில் தளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அதனுள் கூடு விட்டு கூடு பாய்வது போல் உள்ளே புகுந்தாலும் வெளியே அதனுடைய பாதிப்பு எப்படி இருக்கும், எத்தகைய வரவேற்பைப் பெரும் என்பதையும் நடிக்கும் போதே அளவெடுக்கும் தன்மை, தன்னைச் சுற்றிப் பணியாற்றுபவர்களுக்கு தன் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது போன்ற தொழில் நுட்பங்களையும் கவனித்துக் கொண்டே பணியாற்றும் சிறந்த ஆற்றல் அவருக்கு இருந்தது.

    இதையெல்லாம் சொல்லக் காரணம் அடுத்து கோபால் சாரின் ஆய்வுரையில் இடம் பெறக் கூடும் எந்தப் பாத்திரமானாலும் அதற்கு இது பொருந்தும் என்பதே யாகும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #94
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Đ*ĐľŃŃия
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-46

    குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும்.

    இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.

    ---To be Continued.
    என்ன சொல்வது கோபால்!!..
    படிக்க முடியாமல் கண்ணீர் கண்களை திரையிடும் போது!!
    "I am very proud of you my friend"
    ஒரு அற்புத கலைஞனுக்கு இப்படி ஒரு அருமையான அஞ்சலி செலுத்தியதிற்கு.
    விமரிசனங்களுக்கு உங்கள் நாற்பத்தாறு பாகங்களும் பாடங்கள்..மைல்கற்கள்.
    தொடருங்கள்.

  6. #95
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-46

    குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.

    ---To be Continued.
    கர்ணன் - அற்புத நிமிடங்கள்

    அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

    ஏகப்பட்ட அலுவல்களுக்கிடையே, தினமும் ஒரு முறையாவது நடிகர் திலகத்தின் திரியைப் படிக்காமல் இருப்பதில்லை. பதிவுகளைத் தான் முன்போல் இட முடிவதில்லை.

    தங்களின் நடிகர் திலகம் ஓர் உலக அதிசயம் ஆய்வுக்கட்டுரையின் பாகங்கள் 45 மற்றும் 46 அதியற்புதம் என்று சொன்னால் குறைவு என்று தான் அர்த்தம். அதிலும் குறிப்பாக 46.

    கர்ணனில் பல மயிர் கூச்செறியும் காட்சிகள் உண்டு என்றாலும் குறிப்பாக நீங்கள் எழுதிய அந்த மூன்று காட்சிகள் தான் சிகரம்.

    இந்திரனோடு பேசுவதில் அவர் காட்டும் நையாண்டி கலந்த நடிப்பு (இருப்பினும், வயோதிகர் வேடம் மறைந்து எதிரில் நிஜ இந்திரன் தோன்றிய மறு கணம், பணிவுக்கு மாறும் அவரது உடல் மொழி உலக நடிகர்களுக்கு ஒரு பாடம்!

    கண்ணன் சபைக்கு வந்து நடக்கும் வாதம். கர்ணனுக்குத் தெரியும் அங்கு நடப்பவை எல்லாம் அநியாயம் - இருப்பினும், செஞ்சோற்றுக்கடனுக்காக, அநியாயத்துக்கு துணை போவார். அதற்கு அவர் காட்டும் ரௌத்திரம் செயற்கையாக இருக்கும் - அதாவது அவர் மனசாட்சிக்கு விரோதமாக அதை செய்கிறார் என்பதை - அந்த செயற்கைத்தனத்தை தத்ரூபமாகக் காட்டியிருப்பார்! செயற்கைத் தனத்தையும் இயற்கையாகக் காட்டிய உலக நடிகன் (இதை இன்னோர் முறை "ராஜா" கடைசிக் காட்சியில் - அம்மா பண்டரிபாயை மனோகர் சவுக்கால் அடிக்கும் காட்சியில் "செயற்கையாக" சிரித்துக் காட்டினார்!!)

    இப்போது - அந்த அற்புத இருபது நிமிடங்கள் (கிட்டத்தட்ட):-

    இந்தத் திரிக்குள் நுழைந்ததிலிருந்தே (கடந்த மூன்று வருடங்கள்) இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து அவ்வப்போது சிறிது சிறிதாக எழுதி சேர்த்துக் கொண்டு வருகிறேன் - இன்னும் முடிந்த பாடில்லை.

    நீங்கள் வடித்துக் காட்டிய விதம் - அந்தக் காட்சியை - அதில் நடிகர் திலகம் மற்றும் எம்.வி.ராஜம்மா நடிப்பைப் பார்த்தால் ஏற்படும் - பரவசமா, ஆச்சரியமா, அழுகையா - என்ன வென்று சொல்வது அத்தனை உணர்வுகளும் - உங்களது கட்டுரையைப் படித்த போதும் ஏற்பட்டது. மயிர் கூச்செரிந்து, விழிகள் நீர்த்திரையிட்டு மேல் படிக்க முடியாது போனது.

    நானும், கூடிய விரைவில், அந்தக் காட்சியை என் பார்வையிலிருந்து - தங்கள் அளவுக்கு முடியா விட்டாலும் - எழுத முயற்சி செய்கிறேன்.

    இந்தக் காட்சியில், நடிகர் திலகத்தின் தாய்த் தமிழ் உச்சரிப்புக்காகவே, ஒவ்வொரு தமிழனும் மறு பிறப்பென்று ஒன்று இருந்தால் தமிழனாக மீண்டும் பிறக்க வேண்டும். இந்தக் காட்சியில் அவர் பேசும் தமிழைப் பார்த்து கேட்டுக் கேட்டு இன்புற வேண்டும்.

    Hats off to you Sir for a great analysis!

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  7. #96
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    உங்களிடம் சொல்லியிருகின்றேனா எனபது நினைவில்லை. ஆனால் நமது திரியில் ஒரு சில தடவை குறிப்பிட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு கர்ணன் திரையரங்குகளில் வெற்றி உலா வந்த போது பொது மக்களால பெரிதும் விரும்பப்பட்ட காட்சி குந்தி தேவி மகனிடம் தன்னை யார் என்பதை வெளிப்படுத்தி இரண்டு வரங்கள் வாங்கி கொண்டு போகும் காட்சிதான். பொது மக்கள் மட்டுமல்ல ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த காட்சி இதுதான். Repeat audience பலரும் இந்த காட்சி முடிந்தவுடன் கிளம்பி விடுவார்கள்.

    அந்த பொது மக்களானாலும் சரி நமது ரசிகர்களானாலும் சரி, அவர்கள் அந்த காட்சியை இப்படி வித விதமாக பிரித்து பார்த்தார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்படி அனைவரையும் கவர்ந்த காட்சியை compartmentalise செய்து அக்கு வேறு ஆணி வேறாக் அலசி காட்டியதில் நீங்கள் எங்கோ போய் விட்டீர்கள். காட்சியின் துவக்கத்தில் கர்ணனின் மன நிலை, காட்சி முடியும் போது அவனின் மன நிலை என்ற இரண்டு extremeகளையும் நீங்கள் அனைவருக்கும் புரியும் விதம் எழுதிய விதம், you deserve a special praise.

    கணேஷ் சார் சொன்னது போல் நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனுக்கு நீங்கள் செலுத்திய ஒப்பற்ற அஞ்சலி.

    உளமார்ந்த நன்றி!

    அன்புடன்

  8. #97
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    கோபால்,
    அப்படி அனைவரையும் கவர்ந்த காட்சியை compartmentalise செய்து அக்கு வேறு ஆணி வேறாக் அலசி காட்டியதில் நீங்கள் எங்கோ போய் விட்டீர்கள். காட்சியின் துவக்கத்தில் கர்ணனின் மன நிலை, காட்சி முடியும் போது அவனின் மன நிலை என்ற இரண்டு extremeகளையும் நீங்கள் அனைவருக்கும் புரியும் விதம் எழுதிய விதம், you deserve a special praise.
    நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனுக்கு நீங்கள் செலுத்திய ஒப்பற்ற அஞ்சலி.

    உளமார்ந்த நன்றி!

    அன்புடன்
    டியர் கோபால் சார்,

    தங்களுடைய கர்ணன் பதிவு குறித்து திரு.முரளி சார் குறிப்பிட்டது மற்றும்

    தாங்கள் குறிப்பிட்டிருக்கும்

    //இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.//
    வார்த்தைகள் சத்தியமான உண்மை.

    திருவருட்செல்வரில் நாதர்முடி மேலிருக்கும் நல்லப்பாம்பே பாடல் காட்சியில் நல்லபாம்பின் அருகே கையைக் கொண்டு சென்று பாட, பாம்பு மிரண்டு பின் நோக்கிச் செல்லும். ஆனால் நம் அப்பர் முகத்திலோ கோபம் கலந்த வார்த்தைகளாக வந்து விழும்.

    What a performance?
    Last edited by KCSHEKAR; 11th July 2013 at 11:18 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #98
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் பயணப் பட உள்ளதால் , இந்த தொடரின் இறுதி மூன்று அத்தியாயங்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் எழுத படும். அந்த அத்தியாயங்களுக்கு ஆகஸ்ட் மாதத்துடன் தொடர்பு இருக்கும்.
    இந்த தொடருக்கு தொடர்ந்த ஊக்கம் தந்த p_r ,வெங்கி ராம் ,கண்பட்,சந்திரசேகர்,முரளி, சிவாஜி செந்தில், ராமஜயம் ,
    akhilabi ,பம்மலார்,கல்நாயக்,சுப்பு,கார்த்திக்,சாரதி,வித்யாச ாகரன்,ரமேஷ் ஆகியோருக்கு நன்றிகள்.
    தொடர்ந்து வந்த துணை பதிவுகளுக்கு ராகவேந்தர் சாருக்கு ,வாசுவிற்கு நன்றி.
    மற்றும் பதிவுகள் போடாமலே தொடர்ந்த அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக..
    Last edited by Gopal.s; 12th July 2013 at 06:22 AM.

  10. #99
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    பாத்திரத்தின் தன்மையறிந்து, அதற்குப் பொருந்தும் வகையில் தனி பாணியினையும் உருவாக்கி, அதனுள் புகுந்து அதே சமயம் அதனை கட்டுக்குள் வைத்து வெளியிலிருந்து இயக்கும் தன்மையை பல படங்களில் நடிகர் திலகம் பயன் படுத்தியிருக்கிறார். அதாவது பாத்திரத்தினுள்ளும் இருப்பார் வெளியேயும் இருப்பார் ... like sailing in two boats simultaneously ... இது அவருக்கு மட்டுமே சாத்தியம். பாத்திரத்தை இயக்கும் போது உள்ளேயும் அதன் அளவுகோல் நிர்ணயம் செய்யும் போது வெளியேயும் இருந்து முழுமைப் படுத்தும் திறமை அவருக்கு இருந்தது. ஒரு பாத்திரத்தில் தளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அதனுள் கூடு விட்டு கூடு பாய்வது போல் உள்ளே புகுந்தாலும் வெளியே அதனுடைய பாதிப்பு எப்படி இருக்கும், எத்தகைய வரவேற்பைப் பெரும் என்பதையும் நடிக்கும் போதே அளவெடுக்கும் தன்மை, தன்னைச் சுற்றிப் பணியாற்றுபவர்களுக்கு தன் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது போன்ற தொழில் நுட்பங்களையும் கவனித்துக் கொண்டே பணியாற்றும் சிறந்த ஆற்றல் அவருக்கு இருந்தது.

    இதையெல்லாம் சொல்லக் காரணம் அடுத்து கோபால் சாரின் ஆய்வுரையில் இடம் பெறக் கூடும் எந்தப் பாத்திரமானாலும் அதற்கு இது பொருந்தும் என்பதே யாகும்.
    Raghavendra sir, after reading your post, the best example that immediately comes to my mind is none other than our Barrister !!! Oru soru padham !!
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  11. #100
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Pl.Continue the discussions on the previous 47 Chapters. Voice your opinions,feedback and highlight your experience on his Acting.

Page 10 of 14 FirstFirst ... 89101112 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •