Page 1 of 14 12311 ... LastLast
Results 1 to 10 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

  1. #1
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    Sivaji Ganesan School of Acting

    SIVAJI GANESAN SCHOOL OF ACTING

    Sivaji Ganesan - the name itself vibrates your soul.



    Sivaji Ganesan was born at a remote village in Tamil Nadu, India. He now has the credit of owning a Separate Method of Acting. We the fans of Sivaji Ganesan, want to exhibit his different styles of acting to the next generation film buff and more particularly to the students and scholars of cinema and acting.

    Cinema has already various schools in the names of Constantin Stanislovsky, Mikhail Chekhov, Oscar Wilde, besides Shakespearean School, to name a few.

    Sivaji Ganesan does not fit into any of these schools but you can find glimpses of them here and there. But what is important is, he has established a firm methodology for acting, which would apply to all kinds of acting, all schools and apply universally.

    We are not going to prescribe any grammar here, but bring out the methodologies in his acting which form as a School in themselves.

    OUR DEAR FRIEND GOPAL, who is a well versed scholar in International Cinema, has already initiated this analysis under the title “இந்தியாவின் எட்டாவது உலக அதிசயம்” and has contributed a series of around 30+ articles. The links for them are given below:

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.

    Part 1 - 20

    பாகம் – 1
    பாகம் – 2
    பாகம் – 3
    பாகம் – 4
    பாகம் – 5
    பாகம் – 6
    பாகம் – 7
    பாகம் – 8
    பாகம் – 9
    பாகம் – 10
    பாகம் – 11
    பாகம் – 12
    பாகம் – 13
    பாகம் – 14
    பாகம் – 15
    பாகம் – 16
    பாகம் – 17
    பாகம் – 18
    பாகம் – 19
    பாகம் - 20

    This series will be supported by the annexure of examples, video clippings, images, documents as and when necessary.

    AND in the coming days, the justification for this thread will be strongly emphasized and established.

    THIS THREAD IS DEDICATED TO THE ANALYSES AND RESEARCH ON ACTING OF SIVAJI GANESAN AND IS LIKELY TO SERVE AS A REFERENCE MATERIAL. VIEWS/ COMMENTS PERTAINING ONLY TO THE TOPIC ARE ALLOWED . NO DEVIATIONS PLEASE.

    Dear Gopal Sir
    Please continue your article in this thread without any distortion or deviation. Hope our hubbers co-operate.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்தியாவின் எட்டாவது உலக அதிசயம் – பாகம் 21-31க்கான இணைப்புகள்

    பாகம் - 21

    பாகம் – 22

    பாகம் – 23

    பாகம் – 24

    பாகம் – 25

    பாகம் – 26

    பாகம் – 27

    பாகம் – 28

    பாகம் – 29

    பாகம் - 30

    பாகம் - 31
    Last edited by RAGHAVENDRA; 23rd May 2013 at 01:30 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    For the purpose of ready reference, the parts 1 to 30 are quoted here. Courtesy: Gopal Sir.

    Part 1

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-1

    நடிகர்திலகம் Stanislavski ,Straberg ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objectiveபடி,கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த ்தி,காத்து,அழித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner பாணியில் instinctive improvisations செய்து,
    Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,
    Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,
    Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,
    Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,
    Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில்,
    உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.இதனாலேயே உலகத்தில் ,எந்த நல்ல நடிகன், எந்த ஸ்கூல் படி நடித்தாலும் ,எல்லாமே அவருடைய நடிப்பின் ஒரு அங்கமாகவே நம் புலனுக்கு தெரிந்தார்கள்.(அத்தனை school யும் integrate செய்த சுயம்பு நடிகன் அந்த பிறவி மேதை).அதனாலேயே,அனைத்து இயக்குனர்களின் கனவு நாயகனாகி,நல்ல படம் தர விரும்பும் அனைவருக்கும் ஒரே நம்பிக்கை ஒளியாகி,அந்த படங்களை வேறு தளத்திற்கே உயர்த்தினார்.

    இந்த அளவு எனக்கு விரிவான பார்வை வர உதவிய அஜீத் ஹரி இதை கேட்டதும் துள்ளி குதித்து குழந்தை போல் குதூகலித்தது,எனக்கு முதல் inspiration .அடுத்து, இந்த குறிப்பை முன்னெடுத்து செல்ல பணித்த தகப்பன் சாமி பிரபு ராம்.என்னை தொடர்ந்து தூண்டி கொண்டிருக்கும் முன்னாள் நண்பர் ganpat .

    marlon brando (அண்ணா இவருடன் ஒப்பிட்டு நடிகர்திலகத்தை புகழ்ந்தார்)- அவர் என்னை போல் நடிப்பார் ,நான் அவரை போல் நடிக்க முடியாது என்று சொன்னதின் உள்ளர்த்தம் தேடி பயணித்ததன் விளைவே இந்த தொடர்.(நம்மை போல உபசாரத்திற்கு ஒருவரை புகழும் மரபு Hollywood இல் கிடையாது.

    உலக பட பரிச்சயம் உள்ள சுஜாதா (எழுத்தாளர்) NT ஐ Marlon Brando ,Rex Harrison ,Alpacino ,Robert De Niro ,Paul Neuman வரிசையிலும் ,முதல்வர் ஜெயலலிதா இவரை Marlon Brando ,Richard Burton ,Laurence Olivier வரிசையிலும், உலக பட ரசிகரான சோ அவர்கள் சமீபத்திய பதிவு ஒன்றில், Laurence Olivier ,Charles Laughton ,Gilgit ,David Niven ,Danny Kaye ,Clark Gable ,Humphrey Bogart ,Norman Wisdom ,Charles Heston ஆகியோருடனும்,Randor Guy இவரை paul Muni ,Spencer Tracy போன்றோருடனும் ஒப்பிட்டு பேசியுள்ளனர் எனக்கும், Kurosawa நடிகரான takashi Shimura , Nesferatu பட நடிகர் Klauskinski, Lincoln பட oscar நாயகன் Daniel Day Louis போன்றவர்களின் நடிப்பிலும் அவர் பிம்பமே தெரிகிறது.

    அவரின் ரசிகர்களின் பட்டியலில் சத்யஜித் ரே,பிரிதிவி ராஜ் கபூர்,ராஜ் கபூர்,திலிப் குமார்,தேவ் ஆனந்த்,சஞ்சீவ் குமார்,அமிதாப் பச்சன்,லதா மங்கேஷ்கர்,ராஜ்குமார்,விஷ்ணுவர்தன் A .N R ,NTR ,கமல்,ரஜினி,பாரதி ராஜா,மகேந்திரன்,ஷங்கர்,பாலு மகேந்திரா ,மது,சத்யன்,பிரேம் நசிர்,மமூட்டி,மோகன் லால்,கோபி,திலகன், இன்னும் எண்ணிலங்கா இந்த பட்டியல் ரசிகர்கள் மட்டுமல்ல. பலர் அவரை role model ஆக,குருவாக பாவிப்பவர்கள்.

    இத்தனை பேரின் மதிப்பை யும் சுமந்து artists ' artist ஆக அமரத்துவம் பெற்ற அந்த நடிப்பு கடவுளை விஞ்ஞான தொழுகை நடத்தும் சிறு முயற்சியே இது.

    ---To be continued.
    Part 2

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-2

    பொருளாதாரம் படித்தவர்களுக்கு புரியும். ஒரு உண்மையை நிரூபிக்க அனைத்து புற காரணிகளையும் constant என்ற நிலையில் வைத்து, அவற்றை பொருட்படுத்தாது, நாம் எடுத்து கொண்ட பொருளை மட்டும் ஆராயும் variable என்ற உயிர் பொருளாக்க வேண்டும்.

    நான் உதாசீனம் செய்யும் புற காரணிகள்- star என்பவன் இந்தியாவில்(cine field) நிலைக்க செய்ய வேண்டிய நீர்மைகள்(Dilution )&compromises, நமது அழகுணர்ச்சி(அதுவும் தமிழக மக்களின் விபரீத அழகுணர்ச்சி),கூத்து மரபாகவே தொடர்ந்த நமது திரைப்பட கலையாக்கம்(பாடல்களுடன்), நமது talkie என்ற காரண பெயர் கொண்ட படங்கள், அவியல் ஆன அவற்றின் ஆக்க முறைகள்,உலகபார்வையில் tribalised ஆக தெரியும் நமது விரிந்த கலாச்சாரங்கள்,நமது மொழியின் seperation &peculiar nuiances (தமிழ் மொழியின் வினோதமான பேச்சு வழக்கு/எழுது முறை வேறுபாடுகள்மற்றும் அதன் நூற்று கணக்கான வட்டார வழக்கு,தூய தமிழ் பேச்சு ETC ), நமது பிரத்யேக வியாபார நிர்பந்தங்கள்(இதிலும் தமிழ் வினோதம்), ஒரே நேரத்தில் பல தர பட்ட படங்களில் shift முறையில் ஓயாது உழைத்த நடிகர்திலத்தின் பிரத்யேக சிரமங்கள் ,Focus இல்லாத நமது படங்களின் செக்கு மாட்டு கதை-காட்சியமைப்புகள், இவற்றை பற்றிய ,இவை சார்ந்தவற்றை முற்றாக ஒதுக்கி, நடிகர் திலகம் என்ற மேதை தான் அறியாமலேயே எப்படி அத்தனை பொருட்படுத்த தக்க உலக நடிப்பு பள்ளிகளின் அனைத்து பாணியையும் , தன்னிடையே கொண்டு விளங்கி தனக்கு பிறகு ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும் படி செய்த விந்தையை எனக்கு தெரிந்த வரையில் சுலபமாக ,அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்க முயல்கிறேன்.

    முதலில், ஏன் உலக பள்ளிகளோடு ஒப்பீடு என்ற கேள்விக்கு பதில் திரை படம் என்பதே மேல் நாட்டார் நமக்கு அறிமுக படுத்தி,அவர்களாலேயே வளர்த்தெடுக்க பட்ட கலை. இன்றும் கூட தர நிர்ணயம்,பரிசுகள் எல்லாமே அவர்கள் போட்ட பாதையில்தான் பயணிக்கின்றன(விமரிசனங்கள் உட்பட). முதலில் அவர்களின் முக்கிய நடிப்பு பள்ளிகள்(Different schools of Acting) என்ன, அதன் சாரங்கள் என்ன, அதில் பயின்ற முக்கியமானவர்கள் யார் யார் என்று சுருக்கமாக பார்த்து விட்டு தொடருவோம் .மேலை நாடுகளில் நடிப்பு துறைக்கு வர விரும்பும் அனைத்து நடிகர்களுமே, ஏதோ ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் படித்து தேர்ந்து, ஒரு school of acting இல் முறையாக சிறப்பு பயிற்சி பெறுவது நடைமுறை. அதனால் சில வெளிநாட்டு நடிகர்களை அந்தந்த பள்ளிகளில் உதாரணம் காட்டி உள்ளேன்.

    இதில் நான் இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்ல விழைகிறேன். நான் தேர்ந்தெடுத்த படங்களில் பிரதானமான நடிப்பு முறையை பிரித்தெடுத்தாலும்,அந்த மேதையை கூண்டுக்குள் அடைப்பது சிரமம் என்பதால்,பிற பள்ளிகளின் தாக்கமும் சிறிதளவு இருக்கும்.

    அதே போல ஒரே படத்திலேயே மூன்று விதமான நடிப்பு பள்ளிகளின் கூறுகள் உண்டு. தெய்வ மகன் அப்பா (method Acting ),கண்ணன் (Chechov பாணி),விஜய்(Oscar Wilde பாணி).நான் தவற வாய்ப்புள்ளதால் அங்கங்கே திருத்துமாறு வேண்டுகிறேன்.

    சக்கரத்தை திரும்ப திரும்ப கண்டு பிடித்தல் என்ற சொற்றொடர் (reinventing the wheel ) ஆங்கிலத்தில் உண்டு. NT இடம் நமக்கு மிக பரிச்சயமான, முயற்சி,பயிற்சி,கடின உழைப்பு,கூரிய பார்வையுடன் கவனிப்பு திறன்,உடல்-மனம் சார்ந்த ஆளுமை,அங்க ஒத்திசைவு,கற்பனை திறன், கிரகிப்பு,ஒருங்கிணைப்புடன் கூடிய சிந்தனை திறன், concentration,aptitude,improvisation இவை எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும், அவருக்கு பிறவியிலேயே கை வந்த விஷயங்கள். இதற்குள்ளும், மிக நுழையாமல், ஒவ்வொரு பள்ளிகளின் கோட்பாடு, வித்யாசங்கள்,நிறை-குறைகள், சில படங்கள் (NT ) உதாரணங்கள், அவற்றில் நடிகர்த்திலத்தின் நிறை பங்குகள். இவ்வளவுதான் ஆய்வின் scope .

    இந்த தொடர் முடிந்ததும்,நமது இலக்கியங்களில்(சிலப்பதிகாரம் போன்ற) நடிப்பு பற்றிய பார்வை,கோட்பாடு போன்றவற்றுடன் நடிகர் திலகத்தை முன் வைத்து இன்னொரு தொடர் வரையும் எண்ணமும் உள்ளது. பார்ப்போம்.

    -----to be continued .
    Part 3

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-3

    Stanilavski//Strasberg school.

    முக்கியமாக எல்லோராலும் பேச படும் "Method Acting" என்ற புகழ் பெற்ற நடிப்பு பள்ளியாகும்.சுருங்க சொன்னால் "உன் பாத்திரமே நீயானால் எப்படி உணர்வாய் " என்ற முறையில் நடிப்பை செங்கல் செங்கலாய் வீடு கட்டுவது போல் அணுக வேண்டும்.ஆனால் அத்தைனையும் உன் சொந்த செங்கலாக இருக்க வேண்டும்.இரவல் கூடவே கூடாது.

    ஒரு கதை கருவின் இயங்கு சக்தி என்னவென்று கண்டு அதனை "super Objective" என்று கொண்டு பிறகு அதனை உதிரி உதிரி ஆக Script வடிவத்தில் பிரித்து,அந்த பாத்திரத்தின் முக்கிய நோக்கமென்ன,அது எதனை நோக்கி பயணிக்கிறது அதற்கு தடைகளென்ன , உதவிகள் என்ன, அதை அணுக வேண்டிய முறையென்ன, அது செய்ய வேண்டிய காரியங்கள் என்ன, அதன் பின்னணி என்ன, நடப்பு நிலை என்ன, எதிர் காலம் என்ன, என்று கண்டு அதனை "Super Objective" உடன் வரி வரியாக இணைவு செய்து ஒருங்கிணைக்க வேண்டும்.பிறகு, "Sense Memory" என்ற தங்கள் சொந்த நினைவு சார் உணர்வுகளின் மூலம் அந்த பாத்திரத்தின் தன்மைகள்,உணர்ச்சி வெளிப்பாட்டை super -impose செய்ய வேண்டும். இதில் "Realistic Approach" என்பது இன்றியமையாதது.உணர்வுகளை போலி செய்தல்(Faking of Emotion) அறவே தவிர்க்க பட வேண்டும்.பிறகு அந்த கதாபாத்திரம் எப்படியெல்லாம் நடக்க,பேச,நினைக்க,பாவிக்க,என்று முன்முடிவு செய்து,அதனை அவற்றின் mannerism சார்ந்த விஷயங்களை நிர்ணயித்து, கொண்டு வெளியிட பழக வேண்டும்.இவையெல்லாம்,"Sub Objective" and "Super Objective"மற்றும் சக பாத்திரங்களுடன் ஒருங்கிணைக்க பட வேண்டும்.இதன் மூலம் அந்த பாத்திரம் வாழ வேண்டிய முறை முன்-நிர்ணயம் செய்ய பட்டு விடும்.

    இந்த முறை நடிகர்களில் குறிப்பிட வேண்டிய முக்கியமான பிரபலங்கள்-Marlon Brando,Gregory Peck.

    நிறைகள்-இந்த முறையில் ஒரு வலுவான சமகால கதையை ,உண்மைக்கு அருகில் வரும் வலுவான கதாபாத்திர வார்ப்புகளால் மெருகேற்றலாம். Oscar விருது வென்ற நிறைய நடிகர்கள் இந்த வகை பள்ளியை பின் பற்றயவர்களே.ஒரு சிறந்த இயக்கனரின் வலுவான படைப்பு இவர்களின் பங்களிப்பில் மெருகேறும்.(உறுத்தல் இன்றி துருத்தி தெரியாமல்)
    முக்கியமாக Limited period ,biographical ,contemporary commoner பாத்திரங்களுக்கு ,இதை விட சிறந்த முறை கிடையாது.

    குறைகள்- முன் முடிவு செய்ய பட்டு நடிப்பு execute செய்ய படும் இந்த வகை நடிப்பில் ,சோர்வும்,staleness உம் தெரிய வாய்ப்புள்ளது.Energy level குறைவாக தேவை படும்,evenly paced (poised ?) பாத்திரங்களுக்கே இவ்வகை நடிப்பு உதவும்.இந்த வகை நடிப்பில் நடிகர் கூடு விட்டு கூடு மாறும் அதிசயம் நிகழ வாய்ப்பே இல்லை.பல பாத்திரங்கள் ஏற்று நடித்தாலும், நடிகரின் உண்மையான உள்ளணர்வு,தேக்க உணர்ச்சிகள் சார்ந்தே இயங்குவதால், எந்த மாதிரி வித விதமான subject கொண்ட படங்களில் நடித்தாலும் ,அந்த பாத்திரங்களுக்கு அவரவர்கள் இயல்பு கொண்டே பொருத்தி கொள்ள முடியும்."Sense Memory"அடிப்படையில் பாத்திரத்தை அணுகும் போது வெவ் வேறு காலகட்டங்களுக்கு (ஆதி காலம்,இடைக்காலம்,வேறு பட்ட கலாசார சூழ்நிலைகள் )அந்த பாத்திரங்களின் period related behaviour &mind -set ஆகியவற்றில் ஒரு contemporary தன்மை வருவது தவிர்க்க முடியாதது. இவர்கள் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில் வண்டி போன்றவர்களே.

    நடிகர்திலகம் நடித்த இந்த வகை நடிப்பு மிகும் படங்கள்-அந்த நாள்,மக்களை பெற்ற மகராசி,தெய்வ பிறவி,பாக பிரிவினை,இரும்பு திரை,பாலும் பழமும்,கப்பலோட்டிய தமிழன்,பார்த்தால் பசி தீரும்,இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,ராஜபார்ட் ரங்கதுரை ,தீபம் ,துணை,முதல் மரியாதை,தேவர் மகன் போன்ற படங்களாகும்.

    -----to be continued .
    Part 4

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-4

    Meisner School.


    இந்த முறைக்கு முன்னோடியானவர் Stanislavski ஆகவே இருந்தாலும்,இந்த முறையில் முன் தீர்மானத்துடன் "Sense Memory"அடிப்படையில் நடிப்பது தவிர்க்க பட்டது.அந்த பாத்திரங்கள் பகல் கனவு காணும் உணர்வுடன்,அந்த கண நேர உணர்வுகளின் துடிப்புடன் ,நடிப்பை வெளிபடுத்த வேண்டும்.வசனங்களை கூட எந்த ஒரு modulation இன்றி flat ஆகவே மனபாடம் செய்ய இந்த வகை பள்ளியை சேர்ந்த நடிகர்கள் பணிக்க படுவார்கள். அந்தந்த கண நேர சாத்தியங்களுடன்,சக பாத்திரங்களுடன் உணர்ச்சி மிகு வெளியீட்டில் உள்ள energy level,power , "method acting" முறையை விட சிறந்ததாக கருத படுகிறது.

    இந்த வகை நடிப்பில் பயின்றவர்கள்-Dustin Hoffman,Steve Mcqueen,Alpacino,Tom Cruise,Diana Keaton,Sandra bullock போன்றவர்களாகும்.

    நிறைகள்- Surprise yourself to surprise the audience என்ற வகையில் spontaneity கிடைக்கும். சில வலுவான தனி காட்சியமைப்புகள் இந்த வகை நடிப்பின் மூலம் ,நல்ல நடிகர்களால் ,மேலும் வலுப்படும் சாத்தியங்கள் அதிகம்.இந்த வகை நடிப்பில் சோர்வகன்ற புத்துணர்ச்சியுடன் energy level high ஆக இருக்கும்.

    குறைகள்-பாத்திர வார்ப்பில் மிகை உணர்ச்சியால்,inconsistency வர வாய்ப்புண்டு.நிறைய re-takes தேவை படலாம்.நடிப்பவர்கள் அன்றைய மனநிலை காட்சிகளில் பிரதிபலித்து காட்சியின் tone கெடும் வாய்ப்பு அதிகம்.(when you cant get call sheet again from the actor/actors in indian situation )

    நடிகர்திலகத்தின் இந்த வகை படங்கள்-முதல் தேதி,ரங்கோன் ராதா,அன்னையின் ஆணை,படிக்காத மேதை,பாவ மனிப்பு,பாச மலர்,படித்தால் மட்டும் போதுமா,பார் மகளே பார்,திருவருட்செல்வர்(அப்பர்),வியட்நாம் வீடு,கெளரவம்(ரஜினி காந்த்).

    -----to be continued .
    Part 5

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-5

    Stella Adler School

    இந்த பள்ளி எல்லாவற்றிலும் largeness வேண்டியது.உடல் மொழியில், உடலில்,குரலில், பாணியில் எல்லாவற்றிலுமே.மிகையான energy level கொண்டு ,larger than life (சராசரி வாழ்வினும் மிக மேம்பட்ட அல்லது அந்நிய பட்ட)பாத்திரங்களில்,மிகை உணர்வுகள்,தோரணைகள்,பாவங்கள்,உடல் மொழி கொண்டு,போலி செய்த புலன் சார்ந்த உணர்வுகளையும் கலந்து(faking the emotion ),மேடைக்கு மட்டுமே உண்மையாகவும்,அந்த சூழ்நிலை புரிந்து,அபரிமித கற்பனை அடிப்படையில் நடிப்பதே இந்த பள்ளியாகும்.

    Acting is doing -You have to be larger in all aspect -Strong body ,voice கொண்டு,actors should never feel small ,they should give bigger meaning to the text with sense of epic என்று போதிக்கும் பள்ளியாகும்.

    இவர் stanislavski யின் சிஷ்யராக இருந்தும் ,நேர் எதிர் நிலைப்பாடு கொண்ட நடிப்பு கலையை பயிற்றுவித்தார்.

    இந்த முறை நடிப்பு பள்ளி பிரபல மாணவர்கள் -Robert De Niro ,Antonio Banderas ,Warren Beaty முதலியோர்.

    நிறைகள்- சரித்திர,புராண, அமானுஷ்ய,மாயா-ஜால,futuristic ,Science fiction போன்ற larger than life பாத்திரங்களுக்கும்,shakespere ,கம்பன் போன்ற காவிய பாத்திரங்களுக்கும் ,பொதுவாக நம்மிடையே மிக வேறு பட்ட கதா பாத்திரங்களுக்கும் இதை விட சிறப்பான பயிற்சி முறை கிடையாது.

    குறைகள்-இந்த வகை நடிப்பு சம கால நடப்பு பாத்திரங்களுக்கு பொருந்தாது.realism சார்ந்த படங்களுக்கு அறவே பொருந்தாது.இந்த வகை நடிப்பில் பார்வையாளர்கள் அந்நிய படும் சாத்திய கூறுகள் அதிகம்.பார்வையாளனுக்கும், காவியங்களில்,கவிதைகளில் பயிற்சி இருந்தால்தான் சுவைக்க முடியும்.

    நடிகர்திலகத்தின் படங்கள்-
    மனோகரா,வீர பாண்டிய கட்டபொம்மன்,கர்ணன்,திருவிளையாடல்,சரஸ்வதி சபதம்.

    ---to be continued.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #4
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Part 6

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-6

    Oscar Wilde School

    An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .

    ஒரு நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

    இந்த பள்ளியை சார்ந்த நடிகர்கள்-Laurence Olivier ,Spencer Tracy ,David garrick ,Richard Burbage ,Edmund Kean ,Olivier Martinez ஆகியோர்.

    நிறைகள்-பலதர பட்ட கற்பனை மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக இந்த பள்ளி கை கொடுக்கும்.ஒரு நடிகனின் கற்பனையை பிரதானமாக முன்னிறுத்தி,பல வேறு பட்ட மாறு பட்ட சராசரி வாழ்க்கையில் சந்திக்கவே இயலாத மனிதர்களை தன கற்பனையால் நடிகன் முன்னிறுத்த இந்த பள்ளி ஊக்குவிக்கிறது.

    குறைகள்-சமூகத்தை கீழ்நிலை படுத்தி,கலையை மேல் நிறுவுவதன் மூலம்,கலைக்கு ஒரு அந்நிய தன்மை அளிக்க இந்த பள்ளி வாய்ப்பளிக்கிறது.realism புறம் தள்ள படுவதால் சமகாலத்தில் ஒட்ட இயலாது.

    நடிகர்திலகத்தின் படங்கள்- பலே பாண்டியா,ஆண்டவன் கட்டளை,நவராத்திரி,எங்க ஊர் ராஜா,காவல் தெய்வம்,தெய்வ மகன்(விஜய்),ராமன் எத்தனை ராமனடி,பாபு.

    ----To be continued.
    Part 7

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-7

    Michael Chekhov School.


    இந்த வகையான நடிப்பு பள்ளியில் கற்பனை கலந்து,உளவியல் பார்வை கொண்ட அணுகுமுறையுடன் நடிக்க வேண்டும்.இந்த வகை நடிப்பில், imitate செய்யாமல் interpret செய்து நடிக்க வேண்டும்.அந்த பாத்திரத்துக்குள்ளும்,கதை கருக்குள்ளும்,ஒளிந்துள்ள மறை பொருளும் (Hidden meanings )பார்வையாளர்களுக்கு ஒரு வடிவமாக்கி ,அழகு நேர்த்தியுடனும், creativity யுடனும் கொடுக்க பட வேண்டும்.கதா பாத்திரங்களின் உண்மை நிலையறிந்து,அதன் தேவைகளையும்,விருப்பங்களையும் சரியான உடல் மொழி கொண்ட gesture மூலம்,கை-கால்கள் மூலமும் வெளிபடுத்த பட வேண்டும்.இந்த வகை நடிப்பில் முக்கியமானது subtle /sudden changes in tempo ,body position மற்றும் சூழ்நிலை சார்ந்த உணர்வு நிலையில் சந்தோஷம்,துக்கம்,அமைதி,பரபரப்பு,பயம்,anxiety ,புதிர் நிலை,எதிர் நிலை,தீர்மானமற்ற நிலை,சூன்ய நிலை எல்லாவற்றையும் கலப்பு வெளியீடாக,monotony தவிர்த்த permutation combination கொண்டு உளவியல் பார்வையில் வெளியிட வேண்டும்.

    இந்த வகை நடிப்பு பள்ளியில் பயின்ற பிரபலங்கள்-Anthony Quinn ,Anthony Hopkins ,Johnny depp ,Jack Nicholson போன்ற பலர்.

    நிறைகள்-மிக complicate ஆன உளவியல் பார்வை கொண்ட படங்கள்,psychologically disturbed பாத்திரங்கள்,குழப்பமான மன நிலை கொண்ட பாத்திரங்கள் ஆகியவற்றுக்கு மிக பொருந்தும் பாணி. மிக புத்திசாலியான நடிகர்களின் நடிப்புக்கு ஒரு gloss &Depth கொடுத்து அவர்களை வேறு தளத்திற்கே உயர்த்தும் வலிமை கொண்ட பள்ளி.

    குறைகள்-Hang -over அதிக நாட்கள் நீடித்து, நடிகர்களின் மனநிலையை சீர்குலைக்கும் சாத்தியகூறுகள் கொண்டது. சராசரி வேடங்களில் இந்த சாயல் வந்தால் சிறிது மிகை கலந்து அன்னியமாக (Out of Context )தோன்றும்.

    நடிகர்திலகத்தின் இந்த பள்ளியை ஒத்த நடிப்பு கொண்ட படங்கள்-உத்தம புத்திரன்(விக்ரமன்),ஆலய மணி,புதிய பறவை,தெய்வ மகன்(கண்ணன்),எங்கிருந்தோ வந்தாள்,ஞான ஒளி ,ரோஜாவின் ராஜா.

    ---To be Continued.
    Part 8

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-8

    Spolin ,Suzuki ,Anne Bogart method

    இப்போது மீதம் இருக்கும் ஒரே பள்ளி(மூன்று பள்ளிகள் இணைந்த ஒரே பள்ளி)

    இதில் spolin பள்ளி என்பது improvisation technique கற்று கொடுக்கும் முறை.

    Suzuki என்பது உடலை முக்கியமாக கீழுடலை நன்கு பயன்படுத்த உடற்பயிற்சி,
    மனபயிற்சி,ஒத்திசைவு என்று சொல்லப்படும் பயிற்சி முறைகள் நிறைந்தது.

    Anne Bogart view point method என்பது கட்டமைப்பு, வெளி, வடிவம்,ஒத்திசைவு(choreography ),
    அசைவுகள்(gesture )கால அளவு(duration &timing ),Tempo என்ற வேக அளவு இவை சார்ந்த பயிற்சி முறைகள்.

    இவற்றை பற்றி பேசவே தேவையில்லை. நமது பாய்ஸ் கம்பெனி முதல் கூத்து பட்டறை வரை இந்த முறை பயிற்சிகள்தான் மேற்கொள்ள படுகின்றன.ஒன்பது வயதிலேயே பாய்ஸ் கம்பெனி நடிகராகி, பலருடன் முறையாக பயின்று பலதர பட்ட பாத்திரங்களில் சிறு வயதிலேயே நடித்து கரை கண்டு முதல் படத்திலேயே நூறாவது படத்தின் புலமையை காட்டியவருக்கு, நாம் இந்த வகை பள்ளியை பற்றி மேலும் பேசாமலிருப்பதே அவருக்கு காட்டும் மரியாதையாதலால்,இந்த இந்த வகை பற்றி இனிமேல் எந்த பேச்சும் எழாது.

    முற்குறிப்பிட்ட Stanislavski ,Meisner ,Chekhov ,Stella Adler ,Oscar wild பள்ளிகளில் அவரது திறமை பற்றி ,அடுத்தடுத்த பதிவுகளில், நான் குறிப்பிட்ட படங்களில் இருந்து ஒரு சில காட்சிகளை எடுத்து அவர் அந்த பாத்திரத்தில் இந்த பள்ளிகளில் குறிப்பிட்டது போல் இயல்பான அவரது முறையிலேயே ஊதி தள்ளி விட்டதை விஸ்தாரமாக எழுத போகிறேன்.அது கொஞ்ச நாள்(மாதம்)தொடருமாதலால் முடியும் வரை காத்திராமல், ஆரோக்யமான விவாதங்களை முன்னிறுத்தி தொடரலாமே.

    ---To be continued.
    Part 9

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-9

    எழுதுபவன் நானாக இருப்பதால், சிறிதே என் கருத்துக்களை வலுவாக re -instate பண்ணி விட்டு ,பள்ளிகளை சார்ந்த அவரது நடிப்பின் சிறப்பை பிறகு தொடருவேன். இந்த அதிக பிரசங்கி தனத்தை புலவர்கள் தற்குறிப்பேற்றணி என்று வசதியாக இலக்கணம் பாடி வைத்து விட்டு போயுள்ளனர். நண்பர்கள் வேறு எனக்கு வசதியாக வீட்டையே காலிசெய்து விட்டனர்.
    நான் சினிமாவையும் ,இலக்கியத்தையும் சுவாசமாக கொண்டு வாழ்வதால்,பொதுவாக எந்த எழுத்தாளர்களையோ,நடிகர்களையோ,இயக்குனர்களையோ முழுவதும் நம்பாதவன். ஒருவர் தவறி இடரும் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் பசித்த புலி.அதுவும் என் demi -gods இடறி விழும் சந்தர்ப்பங்களுக்காக மிக ஆவலாய் காத்திருப்பேன்.

    கீழ்கண்ட கேள்விகளுக்கு தேர்ந்த நடிகர்களுக்கே பதில் தெரியாது.

    1)உனக்கு உன் வாழ்க்கை எதிர்காலம் தெரியாததால் உலக மேடையில் இயல்பாக நடிக்கிறாய்.(கம்பெனி மீட்டிங் தவிர நீ பேசபோகும் அடுத்த வரியும் உனக்கு தெரியாது.)ஆனால் உன்னை பிரதி செய்து நடிக்க வேண்டிய நடிகனுக்கோ, கடந்த காலம் ,நிகழ் காலம்,எதிர் காலம் முற்றும் சுவடி(script ) ரூபத்தில் கிடைக்க பெற்றவன்.சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளை. பேசிய வரிகளை விட பேச வேண்டிய வரிகளை நினைப்பவன்.
    அதனால், பார்வையாளர்களை ஏமாற்றுவதை விட்டு விட்டு, தன்னை தானே ஏமாற்றி கொள்ள முயலும் இடங்கள் உண்டு.(self -deception )அந்த மேதை Stanilavski அதனால்தான் எதிர்காலத்தை நினைக்க விடாமல் கடந்த கால sense -memory இல் நடிகர்களை சிறைப்படுத்தி இருந்தானோ?

    2)அடுத்த பிரச்சினை compression mode முறையில் வாழ்க்கை விவரிக்க படும் போது,ரசிகர்களுக்கு impact ஏற்படுத்த வேண்டும். ஆனால் அந்த இயல்பு வாழ்க்கைக்குரிய முக்கியத்துவமே அளிக்க பட வேண்டும்.

    3)அடுத்த பிரச்சினை நடை,உடை,பாவனை ஓகே.பிரத்யேக குண இயல்புகள்,குண திரிபுகள் ஓகே. mannerisms ஓகே. Action -reaction ஓகே. ஆனால் பிரத்யேக eccentricities ,idiosyncrasies ,கட்டுபடுத்தவே முடியாத illogical odd behaviours ?consistency in inconsistencies ?

    ரொம்ப போகவில்லை.

    இப்போது முதல் பிரச்சினை. மனைவி மக்களுக்கு தெரியாமல், இன்னொரு வீடு set -up செய்து,வாழ்ந்து வருபவன்.ஆனால் ஒரு இக்கட்டான சமயம், இன்னொரு வீட்டின் பையன் வந்து விடுகிறான். அப்பா என்றும் சொல்கிறான்.(வர போகும் இரண்டு சம்பந்திகள் கூடியுள்ள சபை).இப்போதுதான் ,method acting படி அந்த படத்தில் நடிக்கும் மேதை நடிகனுக்கு, மூன்று சந்தர்ப்பங்கள்.அதிர்ச்சியை சில நொடிகள் காட்டி ,அந்த பையனிடம் போவது(அ ) அந்த பையனை தனியே அமைதியாக கூட்டி சென்று ,ரசிகர்களுக்கு மட்டும் அதிர்ச்சி முகத்தை காட்டுவது(அ )குழப்ப அதிர்ச்சியுடனே முழு காட்சியிலும் தோன்றுவது.

    முதல் option சராசரி நடிகன் செய்ய வேண்டிய கடமை.இரண்டாவது option திலிப் குமார் போன்றவர்களுக்கு.மூன்றாவது option இந்திய பட மரபு.

    ஆனால் NT தேர்ந்தெடுத்தது, நாலாவது option . முழு காட்சியுமே, ஒன்றுமே நடக்கவில்லையே என்ற ஒரு தேர்வு.படம்-மோட்டார் சுந்தரம் பிள்ளை. அந்த method நடிப்பில் அவர் தேர்வுக்கு காரணங்கள்- அந்த பையனுக்கு அந்நிய தன்மையோ குற்ற உணர்வோ,அதிர்ச்சியோ வர கூடாது. இருபது வருடங்களாக நடத்தி வரும் வாழ்கையாதலால்,என்றோ எதிர் பார்த்தது இன்று நடக்கிறது என்ற ஒரு எதிர்பார்த்த உணர்வு.(இதே புதிதாக set -up செய்தவன் என்றால் மாறியிருக்கும்)ஆனால் பையனை அனுப்பிய பிறகு இந்த நேரத்திலா என்ற அலுப்பு கலந்த ஆயாசம் காட்டுவார்.

    method actor தன்னையோ, ரசிகர்களையோ ஏமாற்ற கூடாது என்ற முதல் விதி .

    அடுத்த idiosyncrasy சம்பந்த பட்டது. மனோதத்துவம் சம்பத்த பட்டது. cancer வியாதி வந்து,அவதியுறுபவன்,சின்ன சிரங்கு ஆறி விட்ட சந்தோஷத்தில் மிதப்பது போன்றது.

    என்னுடைய விற்பனை அதிகாரி, தன வரம்பிற்குட்பட்ட ஒரு வியாபாரத்தை ,சரியாக verify பண்ணாமல் ,ஒரு டுபாக்கூர் கம்பெனிக்கு விற்க, அந்த கம்பெனி திவால் ஆகி கொண்டிருந்தது. 50 லட்சம் மீட்க பட முடியாது. அதிகாரிக்கு wrong side of 40s . வேலை போய் விடும்.பொறுப்புக்கள் நிறைய. எல்லா கடன் காரர்களும் வண்டி எடுத்து கொண்டு போய் ,கிடைத்ததை சுருட்டி கொண்டிருந்தனர் என்னுடைய அதிகாரியும் போய் ஒரு 50000 பெறுமான பொருளை எடுத்து வந்து பெருமிதத்தோடு சொன்னது, அதில் பாதி மற்றவரின் பொருட்கள். எனக்கு,சிரிப்பதா,அழுவதா என்றே புரியவில்லை.

    ஒரு கோபத்தில் தன்னை மறக்கும், simpleton என்று சொல்லத்தக்கவன், மகளை அனாதையாக விட்டு கொலைக்காக சிறை சென்று, பரோலில் தன்னை வளர்த்த பாதிரியார் சாவுக்கு வந்துள்ளவன். தன்னை அழைத்து வந்த போலீஸ் நண்பனுடன் நேசம் பாராட்டும் நண்பன். சோகம் துக்கம்,ஏமாற்றம் சுமப்பவன்.தப்பி ஓட முயலும், tense ஆன கட்டம்.துப்பாக்கி காட்டி மிரட்ட முயலும் நண்பனுடன், சூழலை மறந்து ஒரு சிறு பிள்ளையின் குதூகலத்துடன் சொல்வது-நான்தான் குண்டை எடுத்தூட்டேனே?(ஆடிக்கொண்டே)ஞான ஒளி

    chekhov இருந்தால் புளகாங்கிதம் அடைந்திருப்பான்.

    ----to be continued .
    Part 10

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-10

    கலைகள் அதன் அழகுணர்ச்சி ,காவியசுவை,பூடகம் எல்லாம் இழந்து ,பக்கத்து வீட்டு காரனை பற்றி அவன் மொழியிலேயே நேரடியாக பேசு .பார்க்கிறோம் ,ரசிக்கிறோம்.(ஆனால் நிஜ வாழ்க்கையில் தங்கள் கூண்டுகளில் வாழ்ந்து கொண்டு பக்கத்து வீட்டு காரனை பார்த்திருக்கவே மாட்டார்கள்.) அல்லது வன்முறையை மிகை படுத்தி ப்ரம்மாண்டமாக்கு, வந்து சுவைக்கிறோம் (நிஜ வாழ்க்கையில் கரப்பான் பூச்சியை அடிக்கவும் நடுங்குவார்கள்.) என்று இரண்டே இரண்டாக சுருங்கி விட்ட சோக நிகழ் காலம். நடை முறை விஞ்ஞான கல்வியை மட்டும் இயந்திரமாய் போதிக்க பட்டு, கவி மனம் இழந்து, மொழியும் இழந்து சக்கைகளாய் வரும் பணம் காய்ச்சி வறட்டு மனங்களாய் நடை முறை இளைஞர் கூட்டம். தனக்கு தெரியாதது ,இல்லாதது என்று கொண்டு எதை பற்றி வேண்டுமானால் பேசும் அகந்தை மட்டுமே மிஞ்சிய கூட்டம்.

    எல்லாவற்றையும் ரசிக்க எல்லோராலும் இயலாது.ஆனால் உன்னதம் என்று சொல்ல படும் உயரிய விஷயங்களை ரசிக்க, வாசகருக்கோ,பார்வையாளருக்கோ,ஒரு தயாரிப்பு தேவை படுகிறது. ஒரு மன பயிற்சி,மெனகேடல்,regression எனப்படும் மனதடையகற்றல்,unlearning எனப்படும் cleansing,acquired taste என சொல்ல படும் சுழல் முயல்வு இவை முதல் படி. இதற்கு கூட நாம் போதிப்பதில்லை. கம்பன்,மொசார்ட்,பிக்காசோ,சிவாஜி,மௌனி போன்ற உச்ச பட்ச கலை உன்னதங்களுக்கு செல்ல அதற்குரிய தயாரிப்பு படு அவசியம்.

    இந்த காரணங்களினாலேயே non -acting ,mechanical repetition ,homogenisation என்று நடிப்பு சுருங்கி விட்டதால், நமக்கு method acting தவிர வேறு எந்த பள்ளி சார்ந்த உயர்வகை நடிப்பு கலைகளில் பரிச்சயம் இழந்து வருகிறோம்.நமக்கு broadway (U .S .A )மாதிரியோ, opera house மாதிரியோ வேறு வகை வெளியீட்டு முறைகளும் இல்லை. எத்தனை கலை வறுமை!!

    நமது அரைகுறை விமர்சகர்களோ, ஒரு மண்ணும் அறியாமல் வாயால் மலம் கழிப்பது போல்,நமது பாமர ரசிகர்களுடன் சேர்ந்து, over acting போன்ற பதங்களை முட்டாள் தனமாய் பிரயோகம் செய்கின்றனர்.

    1) நகரத்திலிருந்து குக்கிராமம் செல்லும் ஒருவன் ,அங்கு யாரோ செத்ததற்கு அடித்து கொண்டு அழும் ஒருவனை பார்த்தால் என்ன தோன்றும்? ஒரு வேறு கலாசாரம் கொண்ட ஒருவன் ,நமது தமிழ் நாட்டின் பேசும் முறை ,உடல் மொழி பார்த்தல் என்ன தோன்றும்?நமது அமைதியான நண்பன் ,ஏதோ ஒரு சந்தர்பத்தில் பொறுமையிழந்து தன்னை மறக்கும் போது நமது எண்ணங்கள் என்ன?எப்போதும் வள வள party ஒரு நாள் பொறுமையாய் ஒன்றும் பேசாமலிருக்கும் போது ... பொதுமை, consistency ,homogenious expressions வாழ்க்கையிலேயே இல்லாத போது ,கலையில் கற்பனை இல்லாத அமைதி வெளியீடே ஒப்பு கொள்ள படும் என்பது பேத்தலான வழுவல் இல்லையா? மதுமதி என்ற படத்தில் பேய் இருப்பதாக சொல்ல படும் மாளிகைக்குள் செல்லும் திலிப் குமார், திடீர் சப்தம் கேட்டு, வில்லன் பட போலீஸ் போல் டக்குனு திரும்புவது(படு மெதுவாக) ,என்ன வித அபத்தம்? இதற்கு பெயர் அமைதியான under -play நடிப்பா? இதை விட ஏமாற்று வேலை உண்டா?

    2)whatever I dont know doesnt exist என்றெண் ணும் அகந்தை பிடித்த வறட்டு மனங்கள் ,வேறு வித கலை வடிவங்களில் பரிச்சயம் கொள்ளாமல் பழிப்பது, நமது பெரியோர்களிடன் இருந்து இளைஞர்களை தொற்றியிருக்கும் பெரு நோய். இது தமிழ் நாட்டில் அதிகம். நம் சரித்திர புருஷர்களை(சிவாஜி,பாரதி,புதுமை பித்தன்) நாம் ஒரு பெங்காலி போல் (தாகூர் ,சத்யஜித் ரே) நிறுவன படுத்தி கொண்டாட தவறி விட்டோம்.

    3)நமது அப்பாக்களிடம், தாத்தாக்களிடமே நம்முடைய சாயல்களை காண முடியாத போது ,இருபது,முப்பது ,ஐநூறு தலைமுறைக்கு முந்திய மனிதர்களை ,அரசர்களை பற்றிய படங்களில் கூட contemporary சாயல்களில் துளி கூட கற்பனை வளமின்றி method acting என்ற போர்வையில் ,பக்கத்து வீட்டு சதாசிவம் போலவே நடை,தோரணை,பேச்சில், அரச உடையில் மட்டுமே நடித்த திலிப் குமாரை (mugal -e -azam ) புகழும் பிரகஸ்பதிகளை கொண்ட pseudo -intellectual கூட்டம் கொண்ட இந்த அற்ப மனிதர்களுடன் என்ன சொல்ல?

    இந்த தொடரை நான் ஆரம்பித்ததே , பொத்தாம் பொதுவாக விமரிசப்பவனின் வாய்களுக்கு அரக்கு சீல் வைக்கத்தான்.

    ---To be continued.
    Last edited by RAGHAVENDRA; 22nd May 2013 at 01:01 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #5
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Part 11

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-11

    இந்தியாவிலேயே, எல்லோராலும் கொண்டாட படும் நடிகர்திலகத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர் திலிப் குமார். method acting என்ற பெயரில் என்ன ரோல் கொடுத்தாலும் ஒரே மாதிரி நடித்தாலும், பிமல் ராய் போன்ற புத்திசாலி இயக்குனர்களின் தயவாலும், ஹிந்தி படங்களுக்கே உள்ள sophistication நிறைந்த அணுகுமுறை ,ஆரோக்யமான போட்டி முறை,அரசியல் கலக்காத சூழ்நிலை இவற்றால் பயனடைந்த சராசரி நல்ல நடிகர்.இவரை உதாரணமாய் எடுப்பது நடிகர்திலகத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் contemporary என்பதாலும், Film Fare award வாங்குவதில் guinness சாதனைக்கு சொந்தகாரர் என்பதால்தான்.. calibre என்பதை வைத்து பார்த்தால் , இவர் பெயரை எழுதுவதே நம் திரிக்கு இழிவாகும்.

    மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் இவர் நம் நம் நடிகர்திலகம் நடித்த படங்களை, ஹிந்தியில் remake செய்த போது நடித்துள்ளார்.

    1959-1960 களில் paigham என்று ஹிந்தியிலும்,இரும்புத்திரை என்று தமிழிலும் ஒரே சமயத்தில் உருவாக்க பட்ட படம். இரு மொழிகளிலும் வெற்றியடைந்த படம். சிவாஜியின் நடிப்பை தொட முடியாவிட்டாலும் ,சமகால சராசரி மனிதனை பிரதிபலித்த method acting முறையில் நடிக்க கூடிய சுலபமான பாத்திரம் என்பதால் திலிப் சமாளித்திருப்பார்.

    அடுத்ததாக, 1963 இல் ஆலயமணி ,1968 இல் ஆத்மி என்ற பெயரில் பீம்சிங் என்ற நல்ல இயக்குனரின் பணியில் ஹிந்தியில் தயாரிக்க பட்டது.இந்த பாத்திரம் சற்றே கடினமானது.chekhov பள்ளி பாணியில் அணுக வேண்டிய உளவியல் பூர்வமானது. சிவாஜி ஏற்கெனெவே செய்து முன்மாதிரி காட்டி விட்டாலும்,method acting என்று ஜல்லியடித்த திலீபினால், கிட்டவே நெருங்க முடியவில்லை. தமிழில் NT மிக அருமையாக இடைவேளை வரை மிருக குணத்தை அடக்கி நல்லவனாக வாழும் விழைவை, தனக்கு தானே நிரூபித்து கொள்ள முயலும் ஒருவனின் முயற்சியை explicit demonstration பாணியில் கொடுத்திருப்பார்.(அதாவது நல்லவனாக நடிக்க விழையும் ஒருவன் முயற்சி-இயல்புக்கு மாறாய் இருக்கும் ஒருவனின் தொடர்ந்த போராட்டம்) . திலிப்போ ,தன் வழக்கமான பாணியில் நல்லவனாகவே subtility என்ற போர்வையில் ஆழமே இல்லாமல், பாத்திரத்திற்கு இயல்பாக இருக்க வேண்டிய பெரிய மனித தனம் இல்லாமல் சராசரியாக கையாண்டிருப்பார். இடை வேளைக்கு பிறகோ கேட்கவே வேண்டாம். மனோதத்துவ Chekhov முறையில் உடல் மொழி, change in body position /tempo என்றெல்லாம் கவலை படாமல், தன் வழக்கமான method acting பாணியில் ஆழமோ அழுத்தமோ, hidden meanings என்பதை convey பண்ணாமல் திலிப் சொதப்பி இருப்பார். ஒரு உதாரணம்,தன் இயலாமை ,மிருக குணத்தை மேலும் உசுப்பி விடுவதை கால்களை கையால் அழுத்தி தேய்த்து மாய்ந்து போவார் சிவாஜி. அதை திலிப் தொடவே இல்லை. நடிப்பில் ஆழம் pathetically missing for dilip . ஆத்மி ,நல்ல வித்யாசமான கதையமைப்பால் சுமார் வெற்றியை ஹிந்தியில் அடைந்தாலும், நடிப்பில் உச்சம் தொட்ட ஆலய மணியின் பிரம்மாண்ட வெற்றியை தொடவே முடியவில்லை.

    அடுத்ததாக, நடிகர்திலகம் உச்ச பட்ச நடிப்பு என எல்லோராலும் கொண்டாட படும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க பட்ட, 1969 இல் வெளியான தெய்வ மகன். தந்தை பாத்திரத்தை method acting பாணியிலும்,மூத்த மகன் பாத்திரத்தை Chekhov மனோதத்துவ பாணியிலும்,இளைய மகன் பாத்திரத்தை முழுக்க தன் கற்பனையால் மெருகேற்றி oscar wilde விவரித்த கலைஞனின் சுதந்திர அழகுணர்ச்சி பாணியிலும்,பண்ணி சாதனை புரிந்திருப்பார். படம் மிக பெரும் வெற்றி பெற்றதுடன் இன்று வரையில் பேச படுகிறது. இதை பார்த்த திலிப் ,ஹிந்தியில் எடுக்கும் போது ,இதை நடிக்க நம்மால் முடியாது என்று (அவரே கன்னட நடிகர் விஷ்ணுவர்தனுடன் விமான பயணத்தில் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலம்) மூன்று பாத்திரங்களையும் சராசரி ,ஆழமில்லாத method acting பாணி கொண்டதாக அதே கதையமைப்பில்,Bairaag என்ற பெயரில் 1976 இல் குட்டிச்சுவராக்கி (முடவனுக்கு ஏன் கொம்புத்தேன் ஆசை?) தோல்வி அடைந்து,திரையுலகை விட்டே ஆறு வருடம் ஓடி விட்டார்.

    இப்போது புரிந்ததா,அவருடைய அடுத்த இடத்தில் இருந்த இந்திய நடிகனின் லட்சணம்?

    ---TO be Continued .
    Part 12

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-12

    மத்திய அரசு தனது தென்னிந்திய படங்களை பற்றிய மாற்றாந்தாய் பார்வையை மாற்றி கொண்டு, அன்றைய பாராமுக மாநில அரசையும் மீறி, உலக பட தர கோட்பாடுகளை தளர்த்தி,அத்தனை அறிவுஜீவிகளையும் நடிப்பு என்ற ஒரே அம்சத்தால் மட்டுமே அசர வைத்து, oscar போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்ட முதல் தென்னிந்திய திரை படம் தெய்வ மகன்.(1969).

    பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.

    நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.

    இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?

    எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும்,
    Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.

    ----To be Continued.
    Part 13

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-13

    எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.

    தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நு ட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.

    சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.

    ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.

    அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.

    விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....

    ----To be continued.
    Part 14

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-14

    இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
    "He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."

    நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று.
    இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )

    டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.

    கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?

    ----To be continued.
    Part 15

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-15

    சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )

    முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.

    விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.

    டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .

    கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.

    காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.

    ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?

    ---To be continued .
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #6
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    When NT started his film career only his stage experience was with him and technically no facilities for him to see and admire foreign actors at that time. He was a suyambulingam of acting. When cultures differ the environment of our livelihood too differs with differing emotions or interactions. The way we show and share human relations and passions are radically different from those of the foreign countries. Since his thunderous entry into Tamil filmdom, he had totally changed the acting environment in such a way that he was always taken as the bench mark for comparison as "nee enna periya sivajiya!" For the present day actors he remains the beacon light. No actors of this century can escape from his acting shades and he is an original school of acting

  8. #7
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Part 16

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-16


    விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.

    விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.

    கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ள vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.

    நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).

    தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
    கண்ணனாவது?

    தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).

    அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)

    கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.

    எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.

    ----To be continued .
    Part 17

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-17


    1) What is the Chekhov Technique?

    For Chekhov, actors are not here to imitate life but to interpret it, to bring out its hidden meaning to the audience. For this, they must be able to act with ease, bring form and beauty to their creative expressions, and see the big picture so they can convey it in their performance.

    Sensitivity of the Body

    The actor's body must be trained to be receptive so it can convey creative impulses to the audiences. Through psychological exercises, the actor's body can be developed from the inside. The actor must learn to radiate the inner life of its characters and to create an imaginary center within his body that will allow him to connect to the various energies of many different characters.

    Rich Psychology

    The actor must penetrate the psychology of its characters. He can train by observing others and figuring out why they act or feel a certain way. Unlike method actors, Michael Chekhov firmly believed that drawing from real feelings from one's life kills inspiration and should be avoided. Creative feelings on the stage come from the actor's ability for compassion.

    Creative Imagination

    Our creative imagination constantly draws pictures in our mind. We can learn to collaborate with these images by asking questions from them and sometimes ordering them to show us what we are looking for. For example, you can ask your character, "show me how you would approach this part of the scene" and keep asking questions until the answer you get stirs you up emotionally and helps you start to enter the inner life of the character. Once you have a very clear inner vision, you can start incorporating it by copying one aspect of your vision at a time.

    Similarly, the actor can use his imagination to create an imaginary body for his character. This allows the actor to really feel like another person and to start exploring his character's reality, movement and speech from the inside.

    Atmosphere, quality and sensations

    The atmosphere - whether it is happy, sad, calm, hectic, nervous, etc. - has a tremendous impact on the way we act. An actor can create an atmosphere, imagine it "in the air" and submit to it. He can imagine at outer atmosphere for a scene and an inner atmosphere for his character, contrasting them. These atmospheres will permeate his body and psychology when he acts.

    Similarly, he can choose to give a quality to his movements. For example, if he chooses to move calmly, the physical sensation that results from his movements will attract similar emotions without any effort at all. This could be called working "from the outside in", except in this acting technique, the actor doesn't fake anything, he just lets atmospheres and sensations inspire his performance.

    The Psychological Gesture

    Just like we can access our emotions through atmospheres and sensations, we can access the will to pursue objectives through a gesture that encompasses all the needs and wants of the character. The actors starts with his first guess of what the character's main desire may be and from there, develops a gesture with his hand and arm that encompasses this desire. He gradually expands this gesture to the entire body, changing it until he feels satisfied as an artist. The psychological gesture should be strong but not tense, simple but definite, and archetypal in nature.

    நான் எந்த பள்ளியை தொட்டாலும், நடிகர் திலகத்துக்குதான் எவ்வளவு பொருந்துகிறது? எந்த படத்தை தொட்டாலும், எல்லா பள்ளிகளிலும் உள்ள salient features என்பது அவரறியாமல் அவர் ரத்தத்திலேயே ஊறிய திறன், எல்லா பாத்திரங்களிலும் அவர் மிக மிக நுண்மையான உளவியல் விஷயங்களை புகுத்தி ,அந்த பாத்திரத்தின், mood ,tone ,body language ,hand -eye coordination , subtle changes in tempo and body position என்று தன் உள் வாங்கிய கதாபாத்திரத்தின் தன்மையை , பார்வையாளர்களுக்கு உணர்வு பூர்வமாக மட்டுமின்றி, அறிவு பூர்வமாகவும் பதிய வைத்தார்.

    அவர் உளவியல் பாணியில் அமைந்த உத்தம புத்திரன், புதிய பறவை போன்ற படங்களை விரிவாக அலசுவோம். தயவு செய்து நடிகர்திலகத்துக்காக ஒரு முறை மேற்கண்ட ஆங்கில original chekhov விளக்கங்களை படித்து விட்டு என்னை தொடர்ந்தால் ,உங்களுக்கும் எனக்கும் வேலை சுலபம்.

    ----To be continued .
    Part 18

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-18

    எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)

    முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான்
    ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .

    இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.

    முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.

    ------to be continued .
    Part 19

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-19

    இனி இந்த பாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை நடிகர்திலகம் தேர்ந்தெடுத்திருக்கும் அதிசயத்தை பார்ப்போம். அதிக மனோதத்துவ கவனிப்பு,அவதானம் கொண்ட,கற்பனை வளம் மிகுந்த , அந்த பாத்திரத்தின் தேவை என்ன,ஆசை என்ன, முதல் நோக்கம் என்ன,அதற்கு தேவையான sensitivity ,atmosphere ,quality ,sensation எல்லாம் கொண்டு,strong but not tense , hand and arm movement radiated into the entire body movement with definite &Archetypal என்னும் அம்சங்களை விவரிக்க போகிறேன்.

    நடை- விக்ரமன் ஒரு வளர்ச்சி பெற்ற அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை(impulsive ).இன்றே,இப்போவே ரகம். அந்த நடையில் ஒரு ராஜாவின் திமிர் மட்டுமல்ல, உதைத்து உதைத்து நடப்பதில், ஒரு அடம்,எதிரில் வருவதை உதைத்து தள்ளும் பிடிவாதம்,நடையில் ஒரு definite அழுத்தம் வேறு கொடுப்பார்.மிக மிக வேகமான ஒரு குழந்தையின் energy level கொடுப்பார்.

    கை அசைவுகள்- மிக மிக restless ஆன ஒரு jerky வேகம். நடையோடு ஒத்திசைவு கொண்டு தன் நோக்கம்,ஆசை இவைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கும்.ஆசை ,காமம் இவற்றில் அடைய வேண்டியவற்றில் ஒரு பரபரப்பு, இரையை அடையும் ஒரு புலியின் பசி கொண்ட ஒரு வேகம், தனக்கு பிடிக்காதவற்றை உடனே நிறுத்த விரும்பும் braking sudden stop movement , கால்கள் மிதிக்க கைகள் முன்னுக்கு சுழன்று வரும் ஒரு impulsive அவசரம், எதுவுமே பொருட்டில்லை விடு என்ற விரல்களின் அலட்சிய உதாசீனம்,டென்ஷன் மிகுந்த தருணங்களில் இலக்கில்லாமல் சுழலும் வேகம் ,முடிவெடுக்க முடியாத போது தவிக்கும் உதவி தேடும் விழைவு என்று கை அசைவுகளில் இந்த பாத்திரத்திற்கே ஒரு புது பரிமாணம் கிடைக்க செய்வார்.

    கண்கள்- விக்ரமனின் இலக்கில்லாமல் அலை பாயும் கண்கள், காம வேட்கை,அகந்தை, அலட்சியம்,யாருக்காவது கெடுதல் நினைக்கும் போது ஒரு sadism நிறைந்த spark ,ஆபத்து வரும் போது நிலையாத தவிப்பு, முடிவெடுக்க நேரும் தருணங்களில் ஒரு குழப்பம் ,கிடைத்தது நிறைவேறும் போது ஒரு குழந்தைத்தனமான சந்தோஷ மின்னல், கிடைக்காத போது temper tantrum பாய்ச்சும் கண்கள்.

    உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.

    குரல்- நடிகர்திலகத்தின் குரல் வளம், அது புரியும் மாயம் ,tonal difference , modulation ஊரறிந்த உலகறிந்த ஒன்று. ஆனால் இந்த படத்தில், ஸ்ரீதரின் மிக குறைந்த sharp வசனங்களை அவர் கையாண்டது ,அதற்கு பிறகு அவரே செய்யாதது. ஒரு mid -pitch tonal modulation கொண்டு, எள்ளல், அகந்தை, குழப்பம்,impulsive braking conclusion ,ஒரு குழந்தை தனமான குதூகலம்,energy என்று உடல் மொழியுடன் இணைந்த அற்புதமான ரசவாதம்.

    இதை வைத்து, அவர் அந்த கதாபாத்திரத்தை வார்த்த அழகு ..........

    ---To be continued .
    Part 20

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-20


    விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

    அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

    தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

    தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.
    ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

    ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

    மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

    இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

    ----To be continued .
    Last edited by RAGHAVENDRA; 22nd May 2013 at 01:48 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #8
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Part 21

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-21


    விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.

    விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.

    இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.

    கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.

    இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).

    குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.

    அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.

    ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...

    ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...

    பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..

    சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....

    இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?

    ------To be continued .(தற்போதைய உத்தம புத்திரன் பதிவுகள் 318-3175, 321-3204, 326- 3251, 326-3259)
    Part 22

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-22


    தமிழ் நாட்டின் எந்த தமிழறிந்த குடிமகனை கேட்டாலும், அவர்கள் எவர் ரசிகர்களாக இருந்தாலும் ,மறக்க முடியாத படங்களில் ஒன்றாக குறிப்பிடும் படம் புதிய பறவை.புதுமையான கதையமைப்பு, அற்புதமான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள்,கேமரா, இயக்கம்,richness ,sophistication in making & great production value கொண்ட ahead of times வகை படம்.என்னிடம் யார் கேட்டாலும் எனக்கு பிடித்ததாக நான் சொல்லும் மூவர் கோபால்,விஜய். (நான்,என் மகன் என்பது ஒரு புறம்)மற்றும் விக்ரமன்.

    அந்த படத்தை ரசித்த நிறைய பேர் கோபால் பாத்திரத்தை முழுதும் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகமே. chekhov school நடிப்பில் என்னை கவர்ந்த Anthony Hopkins(laurence olivier சிஷ்யன்) ,Jack Nicholson ,Oleg yankovskiy இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றவர் நமது நடிகர்திலகம். அவர்கள் எல்லோரையும் காலத்தாலும் முந்தியவர். கோபால் பாத்திரம் முழுக்க முழுக்க மனோதத்துவ பின்னணி கொண்ட மிக சிக்கலான பாத்திரம்.

    கோபால் ஒரு வெளிநாட்டில் வாழும், பணக்கார conservative &cozy என்ற சொல்ல படும் ஒரு அம்மா பிள்ளை. அம்மாவின் மீது obsessive fixation கொண்டவன்.அம்மாவை அகாலமாக இழந்து இலக்கின்றி அலையும் போது impulsive ஆக ஒரு தவறான பெண்ணை தன் அம்மாவின் இழப்பிற்கு ஈடு செய்வாள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து, குடும்பத்தின் அமைதியே குலையும் அளவு கொண்டு சென்று, தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தந்தையையும் இழந்தவன். ஆனாலும் ,தானாக ஓடி போகும் சீர்கெட்ட மனைவியையும் கெஞ்சி திரும்ப அழைக்கும் பூஞ்சை மனம் கொண்ட கோழை.(குடும்ப கெளரவம் என்ற பெயரில்).மனைவி தானடித்த ஓரடியில் இறந்து விட , சட்டத்தில் இருந்து தப்பிக்க rail track இல் உடலை போட்டு, தற் கொலை என்று நம்ப வைத்து, குற்ற உணர்ச்சியுடன், சிறிது விடுபட்ட உணர்வுடன் ஊர் திரும்புபவன்.

    தொடரும் தனிமை நிறைந்த boredom என்று சொல்ல படும் வாழ்க்கையில், neurotic -emotional distress என்று சொல்ல படும் வகையில்(தூக்கம் இழந்து தவிப்பவன்),tremor என்ற hysterical conversion மனநோயால் அவதியுருபவன்.இந்த வாழ்க்கையின் தவிப்பில்,லதா என்ற தேவதையால் சிறிது ஆசுவாசம் அடைந்து அவளை மணக்க இருக்கும் தருணம், பழைய மனைவி என்று சொல்லி அவள் உருவத்தில் உள்ள ஒருத்தி வாழ்க்கையில் புயலென நுழைய தொடரும் grief &misfortune அவன் அமைதியை மேலும் குலைத்து, depression நோக்கி தள்ளி விடுகிறது.ஆனாலும் வந்தவளை விரட்டி, லதாவை அடையலாம் என்ற நம்பிக்கை, அது குலையும் தருணம் ஏற்படும் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி என்று hope &despair என்று வாழ்வு மாறி மாறி ஊசலாட, spurt of violence ,hallucination தலை தூக்க, இனி தப்பிக்க வழியில்லை என்ற stalemate நிலையில், தன்னை மறந்து உண்மையை back to the wall resolution ஆக ஒப்பு கொண்டு, குற்றத்திற்காக பிடி படுகிறான்.

    கொஞ்சம் மனோதத்துவ அடிப்படை கொண்ட பாத்திரமாதலால் medical jargon உபயோகிப்பதை தவிர வேறு வழியில்லை எனக்கு. இதை தயவு செய்து பரிச்சித்து கொண்டு என்னை(இரு கோபாலையும்)தொடர வேண்டுகிறேன்.

    -----To be continued .
    Part 23

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-23

    எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.

    இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .

    இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.

    இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action . பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .

    இனி அந்த பாத்திரத்துக்குள் ஆழமாக நுழைவோம். ஆனால் நான் கூறியவற்றை தயவு செய்து இன்னொரு முறை படித்து தெளிவு செய்து கொள்ளவும். நாம் பேச போவது சராசரி விஷயம் அல்ல.இந்த தயாரிப்பு நமக்கு அவசியம்.

    -----To be continued .
    Part 24

    ந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-24


    மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.

    பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .

    அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.

    நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .

    தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.

    -----To be continued .
    Part 25

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-25

    அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.

    லதாவையும், அவள் தந்தையையும் ரங்கனின் insult மீறி, வீட்டில் இருக்க வைக்க கெஞ்சி கூத்தாடும் காட்சியில், அவர்களுக்கு நம்பிக்கை விதைக்க பாடு படுகிறார் என்ற அளவில் மட்டுமே (தன் சந்தேக கணங்களை ,அவநம்பிக்கையை மறைத்து. அப்படி மறைப்பதை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் நமக்குணர்த்தி )நடிப்பார்.அவர்களை convince பண்ண தன் anxiety மறைப்பாரே தவிர, மறையவில்லை என்பதை அந்த இறைஞ்சும் பாணியே உணர்த்தி விடும்.

    விரலை சொடுக்கி யோசித்து எனக்கு தெரிஞ்சா உன்னிடம் ஏன் வருகிறேன் என்ற இயலாமை கலந்த ஆயாசம்.dining காட்சியில், சித்ரா அடிக்கும் பால் பேணி sixer இல், முதல் நம்பிக்கை தெறித்தோடும் போது , அடுத்து வேறு வழியின்றி அவர்களை பணம் கொடுத்து விரட்ட முயலும் காட்சி. எல்லா பணத்தையும் நான் எடுத்து கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்பதற்கு பிச்சை எடுப்பேண்டா ,என்று லதாவுடன் தனக்கிருக்கும் அபார காதலை வெளியிடும் முறை, யாரோட சாவு எனக்கு சந்தோசம் தருதோ அவ இருக்கான்னு சொல்லி ஏண்டா சித்ரவதை செய்யறே என்று கெஞ்சி அதற்கும் இணங்காத போது சீ,போ என்று வீ சும் வெறுப்பில் breaking பாயிண்ட் desperation தெரிய ஆரம்பிக்கும்.

    அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அப்படியே எல்லாம் மூழ்கி விட்ட விரக்தியில், எல்லா கேள்விகளுக்கும் indifference ஆக ஆமாம் என்று பதிலில் (கண்ணை அழுத்தி தடவி)என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற விரக்தி தெரிய ஆரம்பிக்கும். அவனை போக சொல்லு என்ற அருவருப்பு தெரியும் வெறுப்பின் கொதிப்பில், மனசுக்குள் துப்பாக்கி எடுக்கும் கோபம் புலப்படும்.

    அடுத்த கல்லை அவிழ்க்கும் காட்சியில் தனக்கு தெரிந்த லதாவின் காதலையே re -assure செய்து கொள்ளும் விதமாக, பொய் ஆச்சர்யம் காட்டி, தான் breakdown ஆக ஆரம்பித்து விட்டதை மறைத்து லதாவிற்கு நம்பிக்கை ஊட்ட முயலும் பொது, தானே நம்பாததை மற்றவருக்காக சொல்வதை இந்த மேதை உணர்த்தும் குறிப்பு, குரலும்,பாவங்களும், உடல் மொழியும் புரியும் ரசவாதம்.

    -----To be continued .
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #9
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Part 26

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-26


    லதாவின் அவநம்பிக்கை நிறைந்த சோகத்தால் வெறி கொண்டு, ரங்கனையும் சித்ராவையும் சுட வரும் போது ,மற்றவர்கள் தடுத்தவுடன் விரக்தி, கோபம் கொண்டு, தன்னிச்சையாக பார்த்த ஞாபகம் இசைப்பார் பியானோவில்.இந்த காட்சியில் பாடல் முழுதும் meloncholic serenity with puzzled look உடன்,நிலைகுத்திய விழிகளுடன், முடிவில் சித்ரா அந்த பாடல் எப்படி தெரியும் என்பதற்கு பதில் கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் லதாவை பார்த்து திரும்ப violent ஆகி சித்ரா கழுத்தை பிடித்து வெறி பிடித்து கத்தி கொண்டு தோட்டத்திற்கு செல்லும் இடம்......

    அங்கு தோட்டத்தில் லதாவுடன் ,நம்பிக்கை இழந்து அவரை போக சொல்லி விட்டு, அப்படியாவது பழைய நாட்களை அசை போட்டு வாழ்ந்து விட நினைக்கும் கோபால்,பதட்டத்துடன் சிகரெட் பற்ற வைப்பதிலேயே depressed hope less state வெளிப்பட்டு விடும்.போலீஸ் நண்பன் வரும் போது detached silent agony யில் கொடுக்கும் indifferent உடல் மொழி மற்றும் கை அசைவுகள் ....(அவசியமில்லை). நண்பன் கைரேகை எடுக்க சொன்னதும் அவன் குற்றவாளிகள் தப்பி விடும் சாத்யகூற்றை சொன்னதும் போய்தான் தொலயுட்டுமே என்ற அங்கலாய்ப்பு.

    சித்ராவை வலையில் சிக்க வைக்க கடுகடுவென்ற பாவனையில் இருந்து போலீஸ் நண்பன் voice over க்கு தக்க படி gradual ஆக forced pleasantness கொண்டு வருவது. ரங்கன் வருவதை பார்த்து லதாவிடம் மனமில்லாமல் கடுமையாய் பேசி அனுப்பி விட்டு ரங்கன் ரேகை இருக்கும் பால் கிண்ணத்தை உடைத்தவுடன், அதை பார்த்து கோபம் நிறைத்த help less ness கையை கொண்டே காட்டுவார்.

    இந்த படத்தின் முக்கியமான மூன்று சிறப்புகள் - முதல் முதல் sur realistic முறையில் எடுக்க பட்ட எங்கே நிம்மதி பாடல். படம் முழுதும் voice over என்ற முறையில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு nerration உடன் perfect ஆக sink ஆகும் அவரின் நடிப்பு.ஆச்சர்ய பட வைக்கும்.கையை பயன் படுத்தி அவர் அதீத மனநிலையை வெளிபடுத்தும் இடங்கள். ஒன்றை ஏற்கெனெவே பார்த்தோம். எங்கே நிம்மதி பாட்டில் எனது கைகள் மீட்டும் போது வரிகளில் புறங் கைகளால் action காட்டி கண்களால் follow thru பண்ணும் போது கைகளே அந்நியமான உணர்வை கொடுப்பார். சித்ரா அவர் அடித்த அடியில் இறந்து விட்டதும் இந்த கைதானே அவளை அடித்தது என்று தண்டிப்பது போல் .....

    climax காட்சி இந்திய படங்களில் வந்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்று.

    stylised நடிப்பில், மனோதத்துவ முறையில் உச்சம் தொடுவார். அப்படியே ஒவ்வொரு நொடியும் மனதில் தைக்கும். பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து சொல்லும் எதுவும் காதில் ஏறாத மனநிலையில் ராஜு வந்ததை கேள்வி பட்டதும் அவர் துன்பமெல்லாம் நீங்கி விட்டதான நினைப்பில் காட்டும் அதீத stress relieved happiness ... இந்த காட்சி முழுவதும் hope -despair ஊசலாட் டமே. ராஜூவை கட்டி தேம்பி விட்டு, ஆட்டி வைக்கிராண்டா என்ற ஆத்திரத்தை கொட்டி ரங்கனை சித்ராவை பரபரப்பாய் வெற்றி களிப்பு விடுதலை உணர்வில் அழைக்கும் தோரணை ,சித்ரா வந்ததும் பேயை பார்த்த மாதிரி பின் வாங்கும் அவசரம்.ராஜு அவளை தங்கை என்றும், ரங்கனை சித்தப்பா என்றும் ஒப்பு கொண்டவுடன்,தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கெஞ்சி விட்டு, மச்சத்தையும் பார்த்தவுடன் விரக்தியில் வீழும் இடம்... நண்பன் கைரேகையுடன் வந்ததும்,ஒவ்வொருவரிடமும் களிப்புடன் ரேகை...ரேகை என்று பிரச்சினையே முடிவு பெற்றது போல் கொண்டாட்ட மனநிலை சென்று, ரேகையும் ஒரே மாதிரி என்று சொன்னதும்,நம்பலியா,நீயும் நம்பலியா என்று லதாவிடம் புலம்பி கொண்டே confess பண்ணும் காட்சி.... நான் அசைவே இல்லாமல் லயித்து ஒன்றிய அதிசயம்.

    confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
    அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)

    இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?

    ----To be continued
    Part 27

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-27

    இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.

    இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.

    இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.

    நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.

    இவ்வளவு அற்புதமான advantage இருக்கும் போது ,உண்மைக்கு மிக மிக அருகில் வந்த அற்புதமான திரைக்கதையும் தயாரான போது ,ஒரு கலைஞனின் அறிவும்,மனமும் ,உணர்வும் அதில் தோயும் பொது ,அதில் தோய்பவன் உலகத்திலேயே மிக சிறந்த நடிகனாக இருக்கும் போது, அந்த magic நிகழத் தானே வேண்டும்?

    நிகழ்ந்ததா?

    வரும் பாகங்களில் அலசுவோம்.

    ----To be continued .
    Part 28

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-28

    கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .

    இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.

    இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).

    அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
    exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.

    இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.

    மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase

    -----To be continued ..
    Part 29

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-29

    படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.

    ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

    சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.

    ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .

    முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.

    இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?

    -----To be continued .
    Part 30

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-30

    ஸ்டெல்லா ஆட்லர் , stanilavsky மற்றும் ஸ்ட்ராஸ்பெர்க் என்ற தன் ஆசிரியர்களோடு கருத்து முரண் பட்டு வெளியேறும் போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். 1927 இல் தமிழகத்தில் ஒரு உலக நடிப்பு மேதை பிறந்து தனக்கும் சிஷ்யனாக இருந்து, தன் குருக்களுக்கும் சிஷ்யனாக அபார திறமையால் இணைப்பு பாலம் போட போகிறார் என்று.

    ஸ்டெல்லா வெளியேறும் போது , ஒரு நடிகனின் நினைவுகளில் இருந்துதான் (sense memory)உணர்ச்சியை காட்ட வேண்டுமென்றால் அந்த மாதிரி நடிப்பே தனக்கு வேண்டாம் என்று declare செய்தார். வேறு வேறு கலாசாரம், வேறு வேறு மதிப்பீடுகள்(values ),வேறு வேறு காலநிலைகள், கொண்ட பாத்திரங்களில் நடிக்கும் போது ஒரு நடிகரின் தனிப்பட்ட பிரத்யேக பண்பாடு ,அனுபவித்த உணர்வு நிலைகள்,அனுபவங்கள் என்பவற்றை கொண்டு மட்டும் மேடையேறுவது, அந்த நடிகரை மேடையிலேயே நிர்வாணமாக்கி விடுவது போன்றது என்றும் ஸ்டெல்லா கருதினார்.அதனால் ஆய்வு செய்து வேறு வேறு நிலைகளினாலான நடிப்புக்கு faking the emotions (போலி செய்த உணர்வுகள்) என்பது அவசியமானால் செய்யத்தான் வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டார்.

    உடற்பயிற்சி, குரல் பயிற்சி இவற்றுக்கு முக்கியத்துவம் தந்ததுடன்,ஒரு நடிகன் மேடையை ஆக்ரமிக்க வேண்டும் என்றும்,உடல் மொழியில் பண்பட்டு, குரலால் தெளிவாகவும்,பாவத்துடனும் ,தன்னை மீறிய ஆகிருதியுடன் (Size )மேடையை கௌரவிக்கும் வகையில் (Stage Presence ) இருக்க வேண்டும் என்றும் larger than life presentation அவசியம் என்றும் கருதினார்.

    போரடிக்காமல்,ஒரு நடிகன் தன் திறமையால் தன் நடிப்பின் அத்தனை அம்சங்களையும்,விருப்பங்களையும் நிறைவேற்றி கொண்டு ஒரு காட்சிக்கு வேண்டிய அபார character interpretation /manupulation செய்து அந்த காட்சியையே ஆக்ரமிக்க வலியுறுத்தினார்.

    அவரின் சில Quotes உங்கள் பார்வைக்கு ஆங்கிலத்திலேயே......

    In your choices lies your talents.

    Dont use your conscious past.Use your creative imagination to creat a past that belongs to your character.
    I dont want you to be stuck with your life.Its too little.

    You cant be boring.life is boring.weather is boring.Actors must not be boring.

    Life beats down and crushes the soul and art reminds you that you have one.

    -----To be Continued.
    Part 31

    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-31


    Artaud acting techniques.

    Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.

    இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.

    நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.

    எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.

    பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .

    அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .

    ராகவேந்தர் சார்,வாசு சார் காட்சியை தரவேற்றுங்கள். இதை என் எழுத்தால் வடிப்பது இயலாது.

    ------To be Continued .
    Last edited by RAGHAVENDRA; 23rd May 2013 at 01:32 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #10
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Method Acting - முன்பே வரையறுக்கப் பட்ட ஒரு வழிமுறையை எடுத்துக் கொண்டு அதனைப் பின்பற்றி தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதே பெரும்பாலும் இந்த Method Acting எனப் படும் வழிமுறை நடிப்பாகும். சினிமா கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பிருந்த நாடகக் கலையின் அடிப்படையில் ருஷ்ய கலை வல்லுநர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி அவர்கள் நடிப்பிற்கென்று ஒரு இலக்கணத்தை உருவாக்கினார். அதற்குப் பின் வந்த நடிப்புக் கலை பெரும்பாலும் அவருடைய வழிமுறையைப் பின்பற்ற, அதனால் உருவானது ஸ்தானிஸ்லாவ்ஸ்கி வழிமுறை. அவருக்குப் பிறகு, சினிமா கண்டு பிடிக்கப் பட்டு அதற்கேற்றவாறு நடிப்புத் தன்மை இருக்க வேண்டும் என்று கருதிய சில அறிஞர்களால் வெவ்வேறு வகையான வழிமுறைகள் நடிப்புக் கலைக்கென உருவாக்கப் பட்டன. அல்லது அதனைப் பின்பற்றுவோரால் அவை வழிமுறைகளாக பாவிக்கப் பட்டன. அவற்றில் சில, மிக்காயில் செக்கோவ், ஆஸ்கர் ஒயில்டு போன்றவர்களின் வழிமுறைகள். இந்த வழிமுறைகள் அவரவர் பாணிக்கேற்றவாறு ஆங்கிலத்தில் ஸ்கூல் என்ற வகையில் சேர்க்கப் பட்டு இவையெல்லாம் பலவிதமான நடிப்புப் பள்ளிகள் என்கிற பிரிவில் அடையாளம் காணப் பட்டன.

    இவையன்றி, பிரிட்டனின் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கென்று தனி நடிப்பிலக்கணம் உள்ளது. அது பெரும்பாலும் இலக்கியத்தை சார்ந்திருக்கும், அந்த கதாபாத்திரங்களுக்கென்று உருவாக்கப் பட்ட பாணியிலேயே அ்வை அமைந்திருக்கும். இவற்றை ஷேக்ஸ்பியர் வழிமுறை என நாம் கருதலாம்.

    இந்தப் பள்ளிகள் அல்லது இந்த வழிமுறைகள், அவை தோற்றுவிக்கப் பட்ட நாடு, இனம், மொழி, கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையிலோ அல்லது அவற்றின் தாக்கத்துடனோ அமைந்திருக்க வாய்ப்புள்ளது. இவை பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சார அடிப்படையில் அமைந்திருக்கும். கீழ், மற்றும் தெற்காசிய நாடுகளின் நடிப்பிற்கு இவை ஒத்துப் போவது அபூர்வம். இந்திய, ஜப்பானிய கொரிய, சிங்கள, மற்றும் இதர தெற்காசிய மொழி, இன, கலாச்சார அடிப்படையிலான திரைப்படங்கள் இவற்றிலிருந்து விலகி இருக்கும்.

    நடிப்பிற்கென்று பொதுவான இலக்கணம் என்பது வரையறுக்க முடியாது. நாடகத்திற்கென ஒரு வழிமுறை, திரைப்படங்களுக்கென்று ஒரு வழிமுறை என மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது போக, மற்ற பற்பல அம்சங்கள் - மேலே கூறியவை உள்பட- நடிப்பின் வகையினை வரையறுக்கும்.

    இந்த அடிப்படையில் தான் நாம் நடிகர் திலகத்தின் நடிப்பை பார்க்க வேண்டும். இனி வரும் பதிவுகளில் இது விரிவாக இடம் பெறும்.
    Last edited by RAGHAVENDRA; 22nd May 2013 at 05:21 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 1 of 14 12311 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •