I used to buy all the MGR magazines regularly/monthly since time immemorial. I stopped buying just recently as the stories and photos are often re-cycled and less pertinent facts like the number of re-run MGR films, the theatres, collections etc are printed. The local leading Tamil magazines distributor (Kuala Lumpur, Malaysia) told me once that the owner of onef the three MGR monthlies is an ardent MGR fan. He prints this magazine and delivers all by himself on a bicycle. That was enough to pity him hence I use to buy it just to support this guy. But after seeing the stories and images in the current issues as reproduced here in this forum I have decided to buy them again after a short spell of discontinuity. Thanks for uploading and the lively discussions. I will try to give my input from time to time. In fact, I too am visiting this forum after a long break.
OUR HEARTY WELCOME TO SHRI. MAHENDRA RAJ..We hope that one more fan has come to enlighten the fame of our beloved leader
மக்கள் திலகம் அவர்களின் ''நினைத்ததை முடிப்பவன் '' திரைப்படம் இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .
1971ல் படம் துவங்கி அதே வருடம் காஷ்மீரில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு பின்னர் சற்று இடைவெளிக்குப்பின் 1974ல் முழு மூச்சில் படமாக்கப்பட்டு 9.5.1975 அன்று வெளிவந்தது .
மக்கள் திலகத்தின் சிறப்பான மாறுபட்ட இரண்டு வேடங்களில் பிரமாதமாக நடித்து, ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .
இனிய பாடல்கள்
புதுமையான சண்டைக்காட்சிகள்
மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம்
வித்தியாசமான நடிப்பு
கண்ணை நம்பாதே ... பாடல் எல்லோருக்கும் எப்போதும் வாழ்க்கையில் பொருந்தும் எச்சரிக்கை பாடல் .
பூ மழை தூவி - அண்ணன் - தங்கை பாசம் குறித்த மக்கள் திலகத்தின் பாசமிகு பாடல் .
மக்கள் திலகம் - புரட்சி நடிகர் மோதும் சண்டைகாட்சி சூப்பர் .
மெல்லிசை மன்னரின் அருமையான இன்னிசை
மிக சிறந்த பொழுதுபோக்கு படம் என்று எல்லோரும் பாராட்டிய படம் .
மக்கள் திலகத்தின் படங்களுக்கு என்றென்றுமே ஆதரவு கரம் நீட்டும் மதுரை மாநகரம் - மீனாக்ஷி அரங்கில் நூறு காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து நூறு நாட்கள் மேல் ஓடி பெருமை சேர்த்த படம் .
1975ல் வந்த மக்கள் திலகத்தின் வெற்றி பட வரிசையில்
1. இதயக்கனி
2. பல்லாண்டு வாழ்க
3. நினைத்ததை முடிப்பவன்
4. நாளைநமதே .
ரசிகர்களுக்கும்- மன நிறைவும் அரங்கு உரிமையாளர்களுக்கும் , விநியோகஸ்தர்களுக்கும் ,அரசாங்கத்துக்கும்- வருமானத்தை வாரிவாரி குவித்த படங்கள் என்றால் அது நம் மன்னவரின் 1975வெளியான நான்கு படங்களும் அன்றோ ?
நாளை நமதே, பல்லாண்டு வாழ்க, நினைத்ததை முடிப்பவன் மற்றும் இதயக்கனி நான்குமே மக்கள் திலகத்தின் முத்தான படங்கள்.
விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள்.
இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?
வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.
லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.
பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!
நிறைவான பொழுதுபோக்கு.
Bookmarks