-
3rd May 2013, 12:11 PM
#541
Junior Member
Veteran Hubber
Originally Posted by
masanam
திரு வினோத் அவர்களே, மக்கள் திலகத்தின் நடிப்பு குறித்து உங்களின் பதிவு ஏற்புடையது.
/இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல ./
நாமும் பதிலுக்குப் பதில் லாவணி பாடலாம்.ஆனால், அது வாழ்ந்து மறைந்து, ரசிகர்களின் மனதில் வாழும் சாதனையாளர்களை சிறுமைப் படுத்துவது போலாகும்.
/என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்
சிலவரிகளில் ......
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்
உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .
சூரியன் - சந்திரன் - எம்ஜியார் .......நிரந்தரமானது ./
தமிழ்த் திரை வரலாறு ஆகட்டும்..தமிழக அரசியல் ஆகட்டும்..உச்சம் தொட்ட மக்கள் திலகம் வரலாற்றின் பக்கங்களிலும், தமிழர் நெஞ்சங்களிலும் என்றுமே இடம் பெறுவார்.
Well said Sir.
Thank you.
-
3rd May 2013 12:11 PM
# ADS
Circuit advertisement
-
3rd May 2013, 01:05 PM
#542
Junior Member
Veteran Hubber
Originally Posted by
esvee
மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி கடந்த காலங்களில் பல்வேறு திரை விமர்சகர்கள் கட்டுரையாளர்கள் , நடு நிலையாளர்கள் , ஆதரவாளர்கள் , எதிர்ப்பாளர்கள் என்று அவரவர்களின் தரத்துக்கு ஏற்ப பதிவுகள் செய்தார்கள் .
மக்களும் எல்லாவற்றையும் கவனித்து கொண்டுதான் வந்தார்கள் .
எம்ஜியாருக்கு நடிக்க தெரியாது
எம்ஜியாருக்கு அழ தெரியாது
எம்ஜியாருக்கு சோக காட்சியில் நடிக்க தெரியாது ... என்று ஒரு பக்கம் .....
1950 முதல் 1960 வரை வந்த படங்களில்
மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மருதநாட்டு இளவரசி - என்தங்கை - பணக்காரி - மலைக்கள்ளன் -குலேபகாவலி - அலிபாபவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் - தாய்க்கு பின் தாரம் - மகாதேவி - புதுமைபித்தன் - ராஜராஜன் - சக்ரவர்த்தி திருமகள் - நாடோடிமன்னன் - மன்னாதி மன்னன் படங்களில்
எம்ஜியாரை ஒரு
சரித்திர நாயகனாக
வீரத்தின் திருமகனாக
சாகச நாயகனாக
கொள்கை வேந்தனாக
நடிக பேரசராக
கட்டழகு வேந்தனாக
மக்கள் திலகத்தை
தமிழ் சினிமாவும் - ரசிகர்களும் - பொது மக்களும் -பத்திரிகை உலகமும் ஏற்று கொண்டு அவரை
புரட்சி நடிகர்
வசூல் சக்கரவர்த்தி
பாரத் எம்ஜியார்
என்று பின்னாளில் 1961-1977 வரை அவர் உண்டாகிய
திரையுலக சாதனைகள் மூலம் உலகளவு புகழ் நடிகரானார் .
இது வரலாறு .
ஒரு நடிகரின் சாதனையோ - நடிப்பையோ ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் - பெருந்தன்மை பலரிடம் இல்லை .
மிகவும் படித்தவர்கள் - உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் - ஒரு சிலர் இன்றும் எம்ஜியாரின் வெற்றியினை ஜீரணிக்க முடியாத நிலையில் அவரை இன்னும் தரமற்ற முறையிலும் , கவிதையிலும் மறைமுகமாக தாக்கினாலும் எங்கள் எம்ஜியார் உங்களை மன்னித்து விடுவார் .
இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல .
மக்கள் திலகத்தின் மீது அன்புள்ளம் கொண்ட பல நடிகர்திலக நண்பர்கள் மிகவும் பெருந்தன்மையாக - நட்பு ரீதியாக - இங்கு பதிவிடுவது வரவேற்க தக்கது .
என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்
சிலவரிகளில் ......
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்
உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .
சூரியன் - சந்திரன் - எம்ஜியார் .......நிரந்தரமானது .
வினோத் சார்..தங்களின் கட்டுரை அருமை..
அழத்தெரியாது..சோக நடிப்பு வராது..இப்படி சொன்னவர்கள் நீங்கள் சொல்வது போல் எம்ஜிஆரின் வெற்றியை ஜீரணிக்க முடியாதவர்கள்..
1. தன்னுடைய இயற்கையான சோக நடிப்பால் எல்லோர் இதயத்தையும் கசக்கி பிழிந்து என் தங்கை படத்தை வெள்ளி விழா படமாக்கியவர் எம்ஜிஆர்..ஒரு குடும்பத்தில் நிகழும் அண்ணன் தங்கை பாசத்தை அப்படியே யதார்த்தமாக மிகையில்லா நடிப்பால் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தவர்..பின்னால் வந்த அனைத்து அண்ணன் தங்கை படங்களுக்கு அதுதான் முன்னோடி.
2. தேவருக்கு வாழ்வு தந்து வசூலில் சாதனை ஏற்படுத்திய தாய்க்குப்பின் தாரம் படத்தில் தன் தந்தை இறந்ததும் அந்த சுடுகாட்டில்..தந்தையின் சாம்பலின் மீது அவர் அழுது துடித்து நடிக்கும் நடிப்பு ஒரு உண்மையான தந்தை மகன் பாசத்தை பிரதிபலிக்குமே..அந்த நடிப்புக்கு இணை உண்டோ?
3. பாசம் படத்தில் தாயின் மீது கொண்ட பாசத்தை ஆயிரம் முக பாவங்களைக் காட்டி இயற்கை நடிப்பின் இலக்கணத்தை சொல்லிதருவாரே.. அந்த மிகையில்லா நடிப்பு யாருக்கு வரும்..
4. தாய்க்கு தலைமகன் படத்தில் தன் அண்ணன் அடித்தாலும் உதைத்தாலும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு தாய்க்காக அண்ணனை (அசோகன்) தன் வீட்டுக்கு வர சொல்லி அவர் காலை பிடித்துக்கொண்டு கதறும் காட்சியை இன்று பார்த்தாலும் நம் இதயம் புண்ணாகுமே..அந்த நடிப்பை குறை சொல்ல முடியுமா?
5. பெற்றால்தான் பிள்ளையா படத்தில் தந்தை பாசத்தை அவர் கொட்டி நடிக்கும் நடிப்பில் இமயமாய் உயர்ந்தாரே..அது யார் நடிப்பு..எம்ஜிஆர் நடிப்புதானே..அந்த படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பை பார்த்த நடிகர் திலகம் இந்த கதை என்னிடம் வராமல் எப்படி போனது என்று வியந்தாரே..
6. தாய் சொல்லை தட்டாதே படத்தில் அண்ணன் என்று தெரியாமல் அடித்துவிட்டு அதற்கு தாயிடம் மன்னிப்பு கேட்டு கதருவாறே..கண்ணாம்பாவும் தலைவரும் கதறி நடிக்கும் நடிப்பில் அனைவரும் கலங்கினரே..
7. குடும்பத்தலைவன் படத்தில் தான் காதலிக்கும் ஒருத்தியை அண்ணன் காதலிக்கிறார் என்று அறிந்தும் அவர் படும் வேதனையும் அதை அவர் வெளிப்படுத்தும் விதமும்..அப்பப்பா அசோகனும் எம்ஜிஆரும் போட்டி போட்டு நடிப்பர்களே..
8.தாயை காத்த தனயன் படத்தில் காதலியை வேண்டாம் என்று தாய் சொன்னதும் காதலியையும் விட முடியாமல் தாயின் வார்த்தையையும் காப்பாற்ற அவர் போராடி இயற்கையாய் நடிப்பாரே.
9. இது மட்டுமல்ல இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்..திருடாதே, கலங்கரை விளக்கம், எங்க வீட்டுபிள்ளை, பணக்கார குடும்பம் இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்..
இந்த படங்களை எல்லாம் பார்த்து விட்டு அவரிடம் குறை கண்டால் அவர் கண்ணிருந்தும் குருடரே..கருத்திருந்தும் மூடரே..பின்னாளில் தலைவரின் சோகங்கள் தன்னுடைய ரசிகர்களை தாக்கவேண்டாம் என்ற எண்ணத்திலும், அவர் சோகமாக இருப்பதை அவர் ரசிகர்களும் ஏற்கமாட்டார்கள் என்ற கருத்திலும்தான் அப்படிப்பட்ட காட்சிகளை தவிர்த்தார்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
-
3rd May 2013, 01:19 PM
#543
Junior Member
Veteran Hubber
Originally Posted by
ravichandrran
enga veettu pillai - coimbatore delite - second week
madurai veeran - coimbatore royal yesterday and today 2 shows (morning & matinee) total collection rs.23,000/-.
msg from mr.haridass, coimbatore.
கோவையில் எங்க வீட்டுபிள்ளை மற்றும் மதுரை வீரன் சாதனை வியக்க வைக்கிறது.. இப்படி எல்லாம் எப்படி நிகழ்கிறது என்று தெரியவில்லை..ஆம் இது தானாகவே நிகழ்கின்ற சாதனை..நிகழ்த்தப்பட்டதல்ல.நம் தெய்வத்தின் சக்தியை என்னவென்று சொல்வது..தாங்கள் சற்று முன் அனுப்பிய sms படித்தேன்..மதுரை வீரன் இரண்டு நாள் வசூல் ரூ.30,000/-..அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்..சரித்திரம் திரும்புகிறது..மதுரை வீரன் சாகசம் புரிய மீண்டும் வந்துவிட்டாரோ.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
3rd May 2013, 01:49 PM
#544
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
மக்கள் திலகத்தின் சோக காட்சியில் நடித்த படங்களின் பட்டியலும் காட்சிகளும் அருமை .
அன்பே வா - ஓட்டலில் மக்கள் திலகத்தின் நடிப்பு .
உரிமைக்குரல் - அண்ணனிடம் பேசும் காட்சி
சிரித்து வாழ வேண்டும் - விடுதியை மூடிய பின் பேசும் காட்சி
ஒளிவிளக்கு - சௌகார் ஜானகியிடம் பேசும் காட்சி
அடிமைப்பெண் - பண்டரிபாயிடம் பேசும் காட்சி
மறக்க முடியுமா?
-
3rd May 2013, 01:52 PM
#545
Junior Member
Diamond Hubber
-
3rd May 2013, 01:53 PM
#546
Junior Member
Diamond Hubber
தெய்வமே அசத்திடீங்க. பார்த்து கொண்டே இருக்கலாம்!
Last edited by saileshbasu; 3rd May 2013 at 02:00 PM.
-
3rd May 2013, 01:55 PM
#547
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்
400 பதிவுகளை கடந்த உங்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .
நட்புடன்
வினோத்
-
3rd May 2013, 01:56 PM
#548
Junior Member
Diamond Hubber
Originally Posted by
esvee
மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி கடந்த காலங்களில் பல்வேறு திரை விமர்சகர்கள் கட்டுரையாளர்கள் , நடு நிலையாளர்கள் , ஆதரவாளர்கள் , எதிர்ப்பாளர்கள் என்று அவரவர்களின் தரத்துக்கு ஏற்ப பதிவுகள் செய்தார்கள் .
மக்களும் எல்லாவற்றையும் கவனித்து கொண்டுதான் வந்தார்கள் .
எம்ஜியாருக்கு நடிக்க தெரியாது
எம்ஜியாருக்கு அழ தெரியாது
எம்ஜியாருக்கு சோக காட்சியில் நடிக்க தெரியாது ... என்று ஒரு பக்கம் .....
1950 முதல் 1960 வரை வந்த படங்களில்
மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மருதநாட்டு இளவரசி - என்தங்கை - பணக்காரி - மலைக்கள்ளன் -குலேபகாவலி - அலிபாபவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் - தாய்க்கு பின் தாரம் - மகாதேவி - புதுமைபித்தன் - ராஜராஜன் - சக்ரவர்த்தி திருமகள் - நாடோடிமன்னன் - மன்னாதி மன்னன் படங்களில்
எம்ஜியாரை ஒரு
சரித்திர நாயகனாக
வீரத்தின் திருமகனாக
சாகச நாயகனாக
கொள்கை வேந்தனாக
நடிக பேரசராக
கட்டழகு வேந்தனாக
மக்கள் திலகத்தை
தமிழ் சினிமாவும் - ரசிகர்களும் - பொது மக்களும் -பத்திரிகை உலகமும் ஏற்று கொண்டு அவரை
புரட்சி நடிகர்
வசூல் சக்கரவர்த்தி
பாரத் எம்ஜியார்
என்று பின்னாளில் 1961-1977 வரை அவர் உண்டாகிய
திரையுலக சாதனைகள் மூலம் உலகளவு புகழ் நடிகரானார் .
இது வரலாறு .
ஒரு நடிகரின் சாதனையோ - நடிப்பையோ ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் - பெருந்தன்மை பலரிடம் இல்லை .
மிகவும் படித்தவர்கள் - உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் - ஒரு சிலர் இன்றும் எம்ஜியாரின் வெற்றியினை ஜீரணிக்க முடியாத நிலையில் அவரை இன்னும் தரமற்ற முறையிலும் , கவிதையிலும் மறைமுகமாக தாக்கினாலும் எங்கள் எம்ஜியார் உங்களை மன்னித்து விடுவார் .
இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல .
மக்கள் திலகத்தின் மீது அன்புள்ளம் கொண்ட பல நடிகர்திலக நண்பர்கள் மிகவும் பெருந்தன்மையாக - நட்பு ரீதியாக - இங்கு பதிவிடுவது வரவேற்க தக்கது .
என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்
சிலவரிகளில் ......
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்
உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .
சூரியன் - சந்திரன் - எம்ஜியார் .......நிரந்தரமானது .
நெத்தி அடி. தூள்
-
3rd May 2013, 03:55 PM
#549
Junior Member
Regular Hubber
Originally Posted by
kaliaperumal vinayagam
கோவையில் எங்க வீட்டுபிள்ளை மற்றும் மதுரை வீரன் சாதனை வியக்க வைக்கிறது.. இப்படி எல்லாம் எப்படி நிகழ்கிறது என்று தெரியவில்லை..ஆம் இது தானாகவே நிகழ்கின்ற சாதனை..நிகழ்த்தப்பட்டதல்ல.நம் தெய்வத்தின் சக்தியை என்னவென்று சொல்வது..தாங்கள் சற்று முன் அனுப்பிய sms படித்தேன்..மதுரை வீரன் இரண்டு நாள் வசூல் ரூ.30,000/-..அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்..சரித்திரம் திரும்புகிறது..மதுரை வீரன் சாகசம் புரிய மீண்டும் வந்துவிட்டாரோ.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திரு கலியபெருமாள் அவர்களுக்கு,
நீங்கள் இடுகை செய்ததை படித்து உண்மையிலயே நான்தான் அதிர்ச்சி அடைந்தேன்..காரணம்...நீங்கள் எழுதிய வரிகள்...நிதானமாக படித்து பாருங்கள்..! உங்கள் தவறு என்ன என்று உங்களுக்கே புரியும்...நீங்கள் எப்படி வசூல் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறலாம்...உங்களுக்கு மதுரை வீரன் வசூலாகும் என்ற நம்பிக்கை இல்லாதது போல உள்ளது நீங்கள் எழுதியது. !
உணர்ச்சி மிகுதியில் தாங்கள் தவறாக எழுதியதை தயவு செய்து மாற்றி மீண்டும் இடுகை செய்யவும்.
சந்தேகமே வேண்டாம் மதுரை வீரன் என்றுமே வசூல் வேட்டையாடும் வீரன் தான் நண்பரே !
உண்மையை உண்மை என்று சொல்லும் துணிவு என்னக்கு நிச்சயம் உண்டு !
-
3rd May 2013, 04:09 PM
#550
Junior Member
Devoted Hubber
Originally Posted by
kaliaperumal vinayagam
கோவையில் எங்க வீட்டுபிள்ளை மற்றும் மதுரை வீரன் சாதனை வியக்க வைக்கிறது.. இப்படி எல்லாம் எப்படி நிகழ்கிறது என்று தெரியவில்லை..ஆம் இது தானாகவே நிகழ்கின்ற சாதனை..நிகழ்த்தப்பட்டதல்ல.நம் தெய்வத்தின் சக்தியை என்னவென்று சொல்வது..தாங்கள் சற்று முன் அனுப்பிய sms படித்தேன்..மதுரை வீரன் இரண்டு நாள் வசூல் ரூ.30,000/-..அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்..சரித்திரம் திரும்புகிறது..மதுரை வீரன் சாகசம் புரிய மீண்டும் வந்துவிட்டாரோ.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் மதுரை வீரன், எங்க வீட்டு பிள்ளை படங்களின் கோவை வசூல் பற்றி ரவிச்சந்திரன் அவர்கள் தந்த தகவலும், அது தொடர்பான கலியபெருமாள் விநாயகம் அவர்களின் உணர்வுப்பூர்வமான கருத்தும், மக்கள் திலகம் என்றுமே வசூல் திலகம் என்பதையே சொல்கிறது.
Bookmarks