-
16th March 2013, 11:49 PM
#1
Junior Member
Newbie Hubber
சாயம் போன காதல்
அன்று..
ஆற்றங் கரை ஆல விழுதிலே..
ஊஞ்சல் கட்டி உன்னை நான்
பின் நின்று ஆட்டும் போது
எத்தனை தூரம் சென்ற போதும்
என்னிடந் தான் வருவா யென்று
தெரிந்ததினால் நின்றிருந்தேன்
அமைதியாய் உன் பின்னலை ரசித்தபடி..
இன்றோ..
காலத்தின் விழுதுகளில் ஏனோ
வெவ்வேறு திசைகளில் பயணம்..
நெருங்க முடியாத தொலைவு..
சாயம் போன சத்தியங்கள்..
மதி கசியும் ஒளியிலே..
ஒன்றாகப் பறந்து போகும்
ஜோடிப் பறவைகளை
என் விழிகள் காண நேரின்
இன்னும் என் மனத்தில்
எங்கோ வலிக்கின்றது..
அமைதியாய் விழிநீர் வழிந்தோடியபடி..
-
16th March 2013 11:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks