Page 1 of 3 123 LastLast
Results 1 to 10 of 27

Thread: தல புராணம்

  1. #1
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like

    தல புராணம்

    இந்தக் கவிதையை இதற்கு முன்பே ஒருமுறை இங்கே இட்டிருக்கிறேன். எங்கே எனத் தெரியக் கிடைக்கவில்லை..எனவே...


    தல புராணம்
    =============

    சாக்கடையோர மூத்திரச் சுவரில்
    'கர்ப்பக்கிரகம்' அமைந்த பிள்ளையார்
    மூக்கு நீளம் முழுதும் நாற்றமேறி...
    அவஸ்தையாய் 'நெளிந்தருளி'க் கொண்டிருக்கிறார்

    மேலே கூரையில்லா விநாயகருக்கு
    தினசரி பால்பழ தேனாபிஷேகம்
    இல்லாவிட்டாலும்...
    காக்கை எச்சம் கட்டாயம் உண்டு

    'மெயின் ரோட்டோரக்' கணேசருக்கு
    கம்பிக் கதவில்லை உண்டியலுக்குப் பூட்டுண்டு
    பிள்ளையார் ஆண்டியாய்
    உண்டியார் பத்திரமாய்

    அர்த்தராத்திரியில் 'மன்மத' தேவர்களோடு
    காட்சி அரங்கேற்றும் 'பத்து ரூபாய்' இரவுராணிகளின்
    இலவச தரிசனம் கண்டுகளிக்கும்
    அரசமரத்தடி 'பிரும்மச்சாரி'ப் பிள்ளையார்

    கொழுக்கட்டையே பார்த்திராத
    'பீ சந்து' முனைப் பிள்ளையாருக்கு
    தினசரி இரவில் 'சாராய சதுர்த்தி'
    கொண்டாடும் குடிமக்கள்

    பரீட்சை மார்க்குகளின் விகிதாசாரப்படி
    வேண்டுதலில் கூட்டியோ குறைத்தோ
    தேங்காய் உடைக்கப்படும்
    பள்ளி(க்கூட)வாசல் பிள்ளையார்

    விடலைக்குமரிகள் குளிப்பதை
    பார்க்க முடியாதபடி ஆலமர விழுதுகள்
    மறைத்திருக்கும்... குளக்கரைக் கணபதி...
    உடைமாற்றும்போது சாட்சியாக

    கரையுடைத்து வெள்ளம்பெருகி
    'அவல் பொரி எலி' யோடு
    அடித்துச் செல்லப்பட்ட
    ஆற்றங்கரை ஓரப் பிள்ளையார்

    தொலைபேசி இணைப்புக்காக வெட்டப்பட்ட
    'தூங்கு மூஞ்சி' மரக்கிளை விழுந்து
    மூக்குடைந்து போன விநாயகர்
    'வலம்புரியா?'...'இடம்புரியா?'

    'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'
    களவாடப்பட்டு...
    காட்சி தரும் - பிளாட்பாரக்
    'கோவண' கணேசர்

    அழுகல் தேங்காயும் கூழான பழமும்
    வாடிப்போன சாமந்தியுமே
    விதிக்கப்பட்ட...
    'சேரி'ப் பிள்ளையார்

    புதுவருஷ உற்சவத் திருவிழாவின்
    'வரவு செலவு' கணக்குக்கான அடிதடியில்
    இழுத்துப் பூட்டப்பட்டு..
    கோயிலில் சிறையிருக்கும்
    'காலனி'ப் பிள்ளையார்

    பக்தகோடிகளால் கட்டியிழுத்துவரப்பட்டு
    பூரண அலங்காரத்தோடும் ஆத்திக கோஷங்களோடும்
    'அடி உதை மிதி குத்து வெட்டு' பெற்று
    'ஜல சமாதி' - செய்யப்படும்
    கடற்கரை விநாயகர்

    இப்படியாகத்தானே பல புண்ணியத் தலங்களில்
    எழுந்து அருளியிருந்தாலும்...
    அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
    யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
    எனக்குப் பிடித்தது.
    Last edited by geno; 6th February 2013 at 04:56 PM.
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Nice one.
    புதுக்கவிதைக்கும் எனக்கும் சொல்ப தூரம். சிலபல single quoteடோட significance பிடிபடலை.
    பழைய பதிவுகள்ல கவிதைகள் நிறைய உண்டோ?

    ஆதிக்க கோஷம் - என்றும் பாடம்.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  4. #3
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    ஆத்திக கோஷம் = ஆதிக்க கோஷம் ??
    Sach is Life..

  5. #4
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    "அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
    யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
    எனக்குப் பிடித்தது. "

    Nostalgia. I am missing that for many years. By the way, was this penned by Geno? Very good!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #5
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    ellOrukkum nanRi - will reply to all again later!
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  7. #6
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    Nice one.
    புதுக்கவிதைக்கும் எனக்கும் சொல்ப தூரம். சிலபல single quoteடோட significance பிடிபடலை.
    பழைய பதிவுகள்ல கவிதைகள் நிறைய உண்டோ?

    ஆதிக்க கோஷம் - என்றும் பாடம்.
    None of the single quotes "refer" to any other poetry or a particular/specific issue, so that it can made to sound ironic! except the obvious ones like :

    'வலம்புரியா?'...'இடம்புரியா?' and 'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'.

    பழைய பதிவுகளில் அவ்வளவா கவிதைகள் இல்லை; ஆனால் சில கவிதை "முயற்சிகள்" உண்டு!

    வைரமுத்துவால் கவரப்பட்ட ஒரு தலைமுறையில் பிறந்த ஜந்துக்கள் - எப்படியாவது கவி எழுதுவது/முயற்சி செய்வது என்பது ஒரு கடமை மாதிரி முன்பு இருந்தது! சுஜாதா 1991-1994 இடைப்பட்ட காலத்தில் குமுதம் இதழ் ஆசிரியராக இருந்த போது புதிய விசைக் கவிதைகள் நிறைய அறிமுகம் செய்தார் (குமுதம் ஸ்பெஷல்-இல் நடுப்பக்க தாராள அழகிகளையும் அறிமுகம் செய்து மகிழ வைத்தார்!)....
    .......அம்மாதிரி கவிதைகளில் - ந.மகுடேசுவரன், பசுவய்யா, தருமு சிவராமு, ப்ரமிள், கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் - என்று நிறைய படிக்கக் கிடைத்தது..இன்னும் அதில் சிலதை - பக்கங்கள் கிழித்து சேகரித்து என் வீட்டு மொட்டை மாடி பரணில் வைத்திருக்கிறேன் (ஆனால் தேடினால் அப்பம் நான் வாங்கியிருந்த ஒரு மேட்டர் புக்குதான் கெடைச்சது!)......

    இதேபோல, கமல் பேட்டிகளை வெட்டி ஸ்டேப்ளர் போட்டு வைத்திருக்கிறேன்..அவருடைய "தேடித் தீர்ப்போம் வா" புத்தகம் கூட இருக்குது..ஒருமுறை அதை ஜோவுக்காக எடுத்து ஸ்கேன் பண்ணலாம்னு தேடினேன் - அது கெடைக்கலை! பழைய காதலி அனுப்பியிருந்த ஒரு க்ரீட்டிங் கார்டு! நேரில் கிடைக்காதது அதில் "ஒற்றி"...

    கவிதை எழுதுவது, படிப்பது எல்லாம்போய் - முன்னாடி படிச்சதை நினைப்பதே ஒரு சுகானுபவமாகி விட்டது; "மேசை நடராசர்" என் நினைவில் இருந்து தேடி எடுத்ததுதான்! கூகுளாண்டவர் முழு கவிதையையும் கொடுத்து விட்டார்!

    எப்போதாவது எனக்கு மீண்டும் கிடைக்கப் போகும் கவிதைகளை சேகரித்து வைத்திருக்கும் என் மொட்டை மாடிப் பரணுக்கு நன்றி..எப்போது கிடைத்தாலும் அந்த செல்லரித்த தாள்களில் என் பால்ய கால சந்தோஷமும் இருக்கப் போகிறது.
    Last edited by geno; 8th February 2013 at 12:09 AM.
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  8. #7
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    "அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
    யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
    எனக்குப் பிடித்தது. "

    Nostalgia. I am missing that for many years. By the way, was this penned by Geno? Very good!
    நன்றி! சுஜாதா மேற்கோள் காட்டியது போல 'எல்லாரிடமும் ஒரு நல்ல கதை/கவி/படைப்பு இருக்கும்' - எனக்கு இது ஒன்றுதான் உருப்படியாகத் தேறும் போல!
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  9. #8
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by SoftSword View Post
    ஆத்திக கோஷம் = ஆதிக்க கோஷம் ??
    P_R means the Morbid mobocracy of the Vinayaga chathurthi celebrations on the Beach, to be the bugle of the Hegemonists rather than the soothing Flute of the Spiritualists
    (if i understood the context in which P_R makes it correctly)
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  10. #9
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by geno View Post
    None of the single quotes "refer" to any other poetry or a particular/specific issue, so that it can made to sound ironic! except the obvious ones like :

    'வலம்புரியா?'...'இடம்புரியா?' and 'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'.
    அதுனால தான் கேட்டேன். சிலபல இடங்கள்ல ஐரனி தெரிஞ்சுது.

    Quote Originally Posted by geno View Post
    பழைய பதிவுகளில் அவ்வளவா கவிதைகள் இல்லை; ஆனால் சில கவிதை "முயற்சிகள்" உண்டு!
    வலையெனும் பெருங்கடலில் தேடி Elizabeth Barret Browning translation படிச்சிக்கிட்டு இருக்கேன் வரிசையா வரேன்.

    Quote Originally Posted by geno View Post
    - ந.மகுடேசுவரன், பசுவய்யா, தருமு சிவராமு, ப்ரமிள், கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் - என்று நிறைய படிக்கக் கிடைத்தது..இன்னும் அதில் சிலதை - பக்கங்கள் கிழித்து சேகரித்து என் வீட்டு மொட்டை மாடி பரணில் வைத்திருக்கிறேன்
    தருமு சிவராமு, ப்ரமிள் ஒரே ஆள் தானே? ஒரு வேளை அந்த இரண்டு பெயர்கள்ல வந்த கவிதை style வெவ்வேற மாதிரியா?

    Quote Originally Posted by geno View Post
    (ஆனால் தேடினால் அப்பம் நான் வாங்கியிருந்த ஒரு மேட்டர் புக்குதான் கெடைச்சது!)......
    Haha. மகுடேஸ்வரனோட 'சிற்றின்பம்' ன்ற கவிதை ஞாபகத்துக்கு வருது. சரியா வரிகள் ஞாபகம் இல்லை. தேடிக் கிடைச்சதும் சுட்டி தரேன்.

    Quote Originally Posted by geno View Post
    இதேபோல, கமல் பேட்டிகளை வெட்டி ஸ்டேப்ளர் போட்டு வைத்திருக்கிறேன்..அவருடைய "தேடித் தீர்ப்போம் வா" புத்தகம் கூட இருக்குது..ஒருமுறை அதை ஜோவுக்காக எடுத்து ஸ்கேன் பண்ணலாம்னு தேடினேன் - அது கெடைக்கலை!
    I think maiam guys would be pretty interested if you do manage to find them.

    Quote Originally Posted by geno View Post
    "மேசை நடராசர்" என் நினைவில் இருந்து தேடி எடுத்ததுதான்! கூகுளாண்டவர் முழு கவிதையையும் கொடுத்து விட்டார்!
    ஞானக்கூத்தன் - ஓரளவுக்கு கல்யாண்ஜி - தவிர ரொம்ப பிடிச்சவங்கன்னு யாரையும் சொல்ல முடியாது.
    ஞானக்கூத்தனுக்கு ஒரு திரி ஆரம்பிச்சு நகரவே இல்லை : http://www.mayyam.com/talk/showthrea...3-GnAnakoothan

    அவர் கவிதைகளைப் பத்தி நீட்டி முழக்கி எழுதணும்னு - பரிமேலழகனும்னு - நினைப்பேன். கவிதையைப் பத்தி எழுதி ரொம்ப தட்டையாக்கிடுவோம்னு ஒரு தயக்கம். புறநானூறு பத்தி ஒரு podcast பண்ணி ரொம்ப flat ஆயிடுச்சு. அதுனால ஞானக்கூத்தன் பிழைச்சிக்கிட்டே வரார். ஒருநாள் சிக்க வச்சிருவேன்.

    Quote Originally Posted by geno View Post
    பழைய காதலி அனுப்பியிருந்த ஒரு க்ரீட்டிங் கார்டு! நேரில் கிடைக்காதது அதில் "ஒற்றி"...
    எப்போது கிடைத்தாலும் அந்த செல்லரித்த தாள்களில் என் பால்ய கால சந்தோஷமும் இருக்கப் போகிறது.
    Paruthiveeran sidekick kid: நீ இந்த மாதிரி பேசி நான் பார்த்ததேயில்லப்பா!
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  11. #10
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by geno View Post
    P_R means the Morbid mobocracy of the Vinayaga chathurthi celebrations on the Beach, to be the bugle of the Hegemonists rather than the soothing Flute of the Spiritualists
    (if i understood the context in which P_R makes it correctly)
    Haha not exactly.
    I was making a comment on how your (and Periyar's) grouse against ஆத்திகம் is because of ஆதிக்க forces. 'இதை வைத்து பலன் அனுபவிப்பவன்..' is what motivates the famous three lines that preceed it. Which is why the 'purely logical philosophical' counterarguments - quoting long atheistic traditions (Nagarjunaலேர்ந்து பொதுவா ஆரம்பிப்பாங்க) misses the point.

    அதச் சொன்னேன்.

    மத்தபடி ஆத்திக-ஆதிக்க was just silly wordplay by me a la சமவெளி-சமதர்மம்.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Page 1 of 3 123 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •