-
5th September 2013, 01:41 AM
#601
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்களை அற்புதமான முறையில் காலவரிசைப்படி பதிவேற்றும் மகத்தான தொடர்ந்து புரிந்துவரும் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இது உங்களால் தான் முடியும். தொடரட்டும் தங்களது பெரும்பணி.
-
5th September 2013 01:41 AM
# ADS
Circuit advertisement
-
6th September 2013, 10:24 AM
#602
Junior Member
Veteran Hubber
பொன்மனசெம்மலின் 32வது திரைப்படமாகிய "மலைக்கள்ளன்" படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள் :
1. தனித்த குரலில் ஆண் பாடல் : தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு
2. தனித்த குரலில் பெண் பாடல் : உன்னை அழைத்தது யாரோ .... அவர் ஊரெதுவோ பேரெதுவோ (பல்லவி)
சின்ன வயதினிலே .... நான் எண்ணிய எண்ணங்களே ! (அனுபல்லவி)
வட்ட வடிவ நிலாவிலே .... ஒளி வந்து உலகினில் பாயுதே (சரணம்)
3. தனித்த குரலில் பெண் பாடல் : நாளை வதுவை மணமென்று நாளிட்டு பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ் (விருத்தம்)
நீலி மகன் நீ அல்லவோ (பல்லவி)
மாலி உந்தன் மாமன் மாடோட்டும் ஜாதி .... வனமாலி (அனு பல்லவி)
4. தனித்த குரலில் பெண் பாடல் : பெண்களாலே உலகிலே பெருமை காணும் இன்பம் தோணும் (பல்லவி)
கல்லா மூடர் கணவனும் ஆனால் .... வாழ்விலே வார்த்தைகள் பேசி ஆனந்தம் (அனு பல்லவி)
குடித்தனம் காத்திட உதவுவான் .... என்றும் குலமது ஓங்கிட வழி தேடுவாள் (சரணம்)
5. தனித்த குரலில் ஆண் பாடல் : எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே ..... நம் நாட்டிலே
6. குறவன் - குறத்தி பாடல் : ஓ ..... ஓ ... அம்மே ...... ஓ ..... ஓ ... அய்யா ...... ஓ ஸாமி
மசியா வேலைக்கெல்லாம் மருந்திருக்குது பாருங்க
7. தனித்த குரலில் பெண் பாடல் : நல்ல சகுனம் நோக்கி செல்லடி ..... சென்று நான் படும் பாடு அவர்க்குச் சொல்லடி (பல்லவி)
அல்லகற்றி அன்பர்க்கானந்தம் தரும் நேசர் (அனு பல்லவி)
வண்ண மலர்கள் ஏதும் வாசம் தருவதில்லை (சரணம்)
8. தனித்த குரலில் பெண் பாடல் : வாராய் இன்பம் தாராய் (விருத்தம்)
நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ரோஜா (பல்லவி)
அறிவு வானிலே அழகுடன் மேவும் நிலவென இன்றே (அனு பல்லவி)
மாதரின் பெருமை விளங்க நானே (சரணம்)
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
7th September 2013, 04:37 PM
#603
Junior Member
Veteran Hubber
"மலைக்கள்ளன்" படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் :
படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கான பல்லவியை எழுதும்போது கவிஞர் ஒருவருக்கும், படத் தயாரிப்பாளர் பக்ஷிராஜா எஸ். எம். ஸ்ரீராமுலு வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது.
"இனிமேல் உங்கள் படத்துக்கு பாட்டெழுத மாட்டேன் என்று பக்ஷிராஜா எஸ். எம். ஸ்ரீராமுலுவிடம் கூறி விட்டு கோபமாக சென்று விட்டார் அந்த கவிஞர். அப்போது உடனிருந்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அந்தக் கவிஞர் கேட்க வில்லை.
இந்த நிலையில் அந்த கவிஞர் எழுதிய ஒரு பல்லவி மட்டும் நமது மக்கள் திலகத்துக்கு மிகவும் பிடித்து போனது. எப்படியாவது, அந்தக் கவிஞரை திரும்பவும் அழைத்து வந்து அந்தப் பாடலை எழுதச் சொல்லலாம் என்றும், அப்பாடலை "மலைக்கள்ளன்" படத்தில் சேர்த்து விடலாம் என்று மக்கள் திலகம் கருதினார். அந்தக் கவிஞரை அழைத்து விஷயத்தை சொன்ன போது, அந்தக் கவிஞரோ, ஸ்ரீராமுலுவின் படம், அததற்கு தான் நான் பாட்டெழுத முடியாது எனவும், தன்னை மன்னிக்க வேண்டும், என்று கூறி விட்டு போய் விட்டார். நமது பொன்மனசெம்மலுக்கு என்ன செய்வதென்று புரிய வில்லை. அருகில் இருந்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு, "அய்யாமுத்து" என்பவர் கோவையில் இருக்கிறார் எனவும், அவரை அழைத்து அந்த பல்லவிக்கு ஏற்ப ஒரு பாடலை எழுதி வாங்கி விடலாம் என்று யோசனை கூறினார். நமது கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார். உடனே, கோவை அய்யாமுத்துவைத் தேடி அலைந்தார்கள். வயலிலே, உழுது கொண்டிருப்பதாக கூறி அதே கோலத்தோடு அவரை அழைத்தும் வந்தார்கள். அவரும், அந்தப் பாட்டை முடித்துக் கொடுத்தார். பாட்டும், ஒரே நாளில் பிரபலம் ஆயிற்று. அப்படி, பிரபலம் ஆன அந்தப் பாடலில் பல்லவி எது தெரியுமா ? "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?" பல்லவி தான் அது ! இந்த சிறப்பு மிக்க பல்லவியை எழுதிய அந்தக் கவிஞர் தான் தஞ்சை இராமையாதாஸ்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
7th September 2013, 09:59 PM
#604
Junior Member
Diamond Hubber
பேராசிரியர் செல்வகுமார் அவர்களின் மலைக்கள்ளன் வரலாறு படைத்த திரைபடத்தை பற்றி அரிய பெரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்போது இனிய உவகை ஏற்படுகிறது...மக்கள்திலகதிற்கு என்ன ஒரு தீர்க்க தரிசனம் இருந்தால் வேண்டிய பாடலை தேர்வு செய்யும் மனோதிடத்தை பெற்றிருப்பார் ? அவ்வாறே தேர்வு செய்ய பட்ட பாடலும் எக்காலதிர்க்கும் பொருத்தமான ஒன்ற திகழுகிறது என்பது உள்ளகை நெல்லிக்கனி என்றே கருதலாம்...
-
7th September 2013, 11:01 PM
#605
Junior Member
Veteran Hubber
Originally Posted by
makkal thilagam mgr
"மலைக்கள்ளன்" படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் :
படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கான பல்லவியை எழுதும்போது கவிஞர் ஒருவருக்கும், படத் தயாரிப்பாளர் பக்ஷிராஜா எஸ். எம். ஸ்ரீராமுலு வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது.
"இனிமேல் உங்கள் படத்துக்கு பாட்டெழுத மாட்டேன் என்று பக்ஷிராஜா எஸ். எம். ஸ்ரீராமுலுவிடம் கூறி விட்டு கோபமாக சென்று விட்டார் அந்த கவிஞர். அப்போது உடனிருந்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அந்தக் கவிஞர் கேட்க வில்லை.
இந்த நிலையில் அந்த கவிஞர் எழுதிய ஒரு பல்லவி மட்டும் நமது மக்கள் திலகத்துக்கு மிகவும் பிடித்து போனது. எப்படியாவது, அந்தக் கவிஞரை திரும்பவும் அழைத்து வந்து அந்தப் பாடலை எழுதச் சொல்லலாம் என்றும், அப்பாடலை "மலைக்கள்ளன்" படத்தில் சேர்த்து விடலாம் என்று மக்கள் திலகம் கருதினார். அந்தக் கவிஞரை அழைத்து விஷயத்தை சொன்ன போது, அந்தக் கவிஞரோ, ஸ்ரீராமுலுவின் படம், அததற்கு தான் நான் பாட்டெழுத முடியாது எனவும், தன்னை மன்னிக்க வேண்டும், என்று கூறி விட்டு போய் விட்டார். நமது பொன்மனசெம்மலுக்கு என்ன செய்வதென்று புரிய வில்லை. அருகில் இருந்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு, "அய்யாமுத்து" என்பவர் கோவையில் இருக்கிறார் எனவும், அவரை அழைத்து அந்த பல்லவிக்கு ஏற்ப ஒரு பாடலை எழுதி வாங்கி விடலாம் என்று யோசனை கூறினார். நமது கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார். உடனே, கோவை அய்யாமுத்துவைத் தேடி அலைந்தார்கள். வயலிலே, உழுது கொண்டிருப்பதாக கூறி அதே கோலத்தோடு அவரை அழைத்தும் வந்தார்கள். அவரும், அந்தப் பாட்டை முடித்துக் கொடுத்தார். பாட்டும், ஒரே நாளில் பிரபலம் ஆயிற்று. அப்படி, பிரபலம் ஆன அந்தப் பாடலில் பல்லவி எது தெரியுமா ? "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?" பல்லவி தான் அது ! இந்த சிறப்பு மிக்க பல்லவியை எழுதிய அந்தக் கவிஞர் தான் தஞ்சை இராமையாதாஸ்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Thanks for sharing this information sir. This is the first time I came to know about this incident.
-
14th September 2013, 10:18 PM
#606
Junior Member
Diamond Hubber
so many thanks to proffessor mr.selvakumar sir, for your kind loyally contribution to this ponmana chemmal thread...your sharing information is useful to the new visitors & other hubbers... where this song books of ancient films by thiru mgr, so rare collections, then you have mighty magnet power and blessings of sri mgr...
-
26th September 2013, 03:11 PM
#607
Junior Member
Veteran Hubber
பொன்மனச்செம்மல் நடித்த 33வது திரைப்படமாகிய "கூண்டுக்கிளி" படத்தினைப் பற்றிய தகவல் :
1. படம் வெளியான தேதி : 26-08-1954
2. படத்தை தயாரித்த நிறுவனம் : ஆர். ஆர். பிக்சர்ஸ்
3. கதாநாயகன் : மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : தங்கராஜ்
5. கதாநாயகி :
6. பாடல்கள் : தஞ்சை ராமையாதாஸ், .கவி. கா.மு. ஷெரிப், மருதகாசி மற்றும் விந்தன்
7. இசை அமைப்பு : கே. வி. மகாதேவன்
8. திரைக்கதை, வசனம் : விந்தன்
9. இயக்குனர் : டி.ஆர். ராமண்ணா
10. படத்தில் பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : கே. சாரங்கபாணி, பிரண்ட் ராமசாமி, இ. ஆர். சகாதேவன், டி. கே. ராமராஜன், கொட்டாப்புளி ஜெயராமன், எதார்த்தம் பொன்னுசாமி, குசலகுமாரி , ஜி. சகுந்தலா, டி.பி. முத்துலட்சுமி,கே.எஸ்.அங்கமுத்து, ராகினி (நடனம்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++
படத்தின் சிறப்பம்சம் :
1. ஆர். ஆர். பிக்ஸர்ஸ் .சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் மக்கள் திலகத்தின் படமிது.
2. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த ஒரே படம்.
3. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வில்லனாக நடித்திருப்பார்.
4. இப்படத்திற்கு பின்னணி பாடிய கலைஞர்கள் : (டி..எம். எஸ். தவிர) : இசைக்குயில் பி. ஏ. பெரியநாயகி, குமாரி ரத்னம், ராதா ஜெயலட்சுமி, ராணி, வி. என். சுந்தரம் ஆகியோர்.
இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
26th September 2013, 11:01 PM
#608
Junior Member
Diamond Hubber
தமிழ் திரைபட உலகின் ஒரு லேண்ட்மார்க் என கூறப்படும் படம்தான் கூண்டுக்கிளி- இதில் இரு திலகங்களும் சேர்ந்து நடித்த போதும் படத்தின் திரைகதை & இயக்கம் போதுமான அளவில் ருசிகரமாக படைக்க பட வில்லை என்பது படத்தின் எதிர்பார்த்த வெற்றியை அது அடையவில்லை என்பதே ஒரு காரணமாகும்...மக்கள்திலகம் மற்றும் நடிகர்திலகம் இருவரும் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் எனவும் தீர்மானித்தது இந்த திரைப்படம் வெளிவந்த பொழுதுதான் என கூறப்பட்டதை கேட்டுருக்கிறேன்...
-
27th September 2013, 11:06 AM
#609
Junior Member
Veteran Hubber
பொன்மனச்செம்மல் நடித்த 33வது திரைப்படமாகிய "கூண்டுக்கிளி" படத்தின் கதை சுருக்கம் :
================================================== =============
ஜீவா !
இவனைப் போன்ற ஒரு வேடிக்கை மனிதனை நீங்கள் இதுவரை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்க மாட்டீர்கள். அவன் ஒரு தனிப் பிரகிருதி : பச்சையாக சொல்லப் போனால் பைத்தியம்.
எத்தனைப் பெண்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் ? அந்தப் பெண்களுக்கு நடுவே எத்தனை ஆண்கள் "கோபியர் கொஞ்சும் ரமண" னாக, சாட்சாத் சியாமள வர்ணனாக எடுத்து திரிகிறார்கள் ? அதையெல்லாம் விட்டுவிட்டு, மங்களா தான் வாழ்க்கையின் ஜீவனாக வேண்டுமாம், இந்த ஜீவாவுக்கு !
ஆனால், அவளோ, தங்கராஜின் வாழ்க்கை ஜீவனாக ஆகிவிட்டாள் ......
இது முதல் சிக்கல்.
அந்த தங்கராஜோ ஜீவாவின் ஆருயிர் நண்பனாக இருந்து விட்டான் ......
இது இரண்டாவது சிக்கல்.
அவனை (தங்கராஜூவை) கைப்பிடித்த மங்களாவுக்கோ, முதல் கடவுள் கற்பு, இரண்டாவது கடவுள்தான் அவளைப் படைத்தவன். .....
இது மூன்றாவது சிக்கல்
இந்த சிக்கல்களுக்கிடையே அவள் தங்கராஜின் "கூண்டுக்கிளியாககவா இருந்தாளா ? அதுவும் இல்லை; கொஞ்சும் கிளியாக வேறு இருந்து விட்டாள்.......
இது நான்காவது சிக்கல்.
எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு சிக்கல் இருந்தது ! அதுதான் மங்களாவையும், குழந்தை கண்ணனையும் நண்பன் ஜீவாவிடம் ஒப்படைத்து விட்டு தங்கராஜ் அவனுக்காக ஆறு மாதங்கள் சிறைக்குக்ப் போன சிக்கல். ........
இது ஐந்தாவது சிக்கல்.
இப்படி எத்தனை சிக்கல்கள் அவன் கதையில் ? .......
இவை எல்லாவற்றுக்கும் விடை காண வேண்டுமானால் சொக்கியை சந்தியுங்கள் திரையில் : அவள் சொல்வாள் உங்களுக்கு பதில்..
குறிப்பு : ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில், நமது மக்கள் திலகத்தின் பெயர் முதலில் இடது புறத்தில் இடம் பெற்றுள்ளது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
27th September 2013, 11:11 AM
#610
Junior Member
Veteran Hubber
"கூண்டுக்கிளி" படத்தில் நம் மக்கள் திலகம் மற்றும் பி.எஸ். சரோஜா தோன்றும் ஒரு காட்சி
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 27th September 2013 at 12:14 PM.
Bookmarks