-
2nd February 2013, 08:01 PM
#161
Junior Member
Regular Hubber
http://en.wikipedia.org/wiki/Tamizhariyum_Perumal
-
2nd February 2013 08:01 PM
# ADS
Circuit advertisement
-
2nd February 2013, 08:05 PM
#162
Junior Member
Regular Hubber
Thamizh Ariyum Perumal 1942
Song-Inbam Tharuvadhu Nee Unnarvaayi
-
2nd February 2013, 09:31 PM
#163
Junior Member
Diamond Hubber
-
2nd February 2013, 09:50 PM
#164
Junior Member
Veteran Hubber
Image of Tamil Ariyum Perumal movie.
-
2nd February 2013, 09:55 PM
#165
Junior Member
Veteran Hubber
MGR role is Rajakumaran and previous birth character. I have not seen any image of MGR in this movie. Anyone having it please upload.
-
3rd February 2013, 09:11 AM
#166
Junior Member
Platinum Hubber
தமிழறியும் பெருமாள் படத்தின் கதை சுருக்கம்
படத்தின் பாடல்கள் தொகுப்பு - அருமை
இந்த படத்தினை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை .
நன்றி செல்வகுமார் சார்
-
3rd February 2013, 04:45 PM
#167
Junior Member
Seasoned Hubber
ரூப் சார்,
தமிழறியும் பெருமாள் படம் தொடர்பாக எனக்குக் கிடைத்த ஒரே புகைப்படம் இது தான். இதனை ஏற்கனவே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் வெளியிட்டுள்ளேன். தங்களுக்காக மீண்டும் ஒரு முறை.
அபூர்வமான தகவல்களைத் தந்து வரும் செல்வகுமார் சார் அவர்களுக்கு நன்றிகள்.
-
4th February 2013, 08:54 AM
#168
Junior Member
Veteran Hubber
Originally Posted by
jaisankar68
ரூப் சார்,
தமிழறியும் பெருமாள் படம் தொடர்பாக எனக்குக் கிடைத்த ஒரே புகைப்படம் இது தான். இதனை ஏற்கனவே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் வெளியிட்டுள்ளேன். தங்களுக்காக மீண்டும் ஒரு முறை.
அபூர்வமான தகவல்களைத் தந்து வரும் செல்வகுமார் சார் அவர்களுக்கு நன்றிகள்.
Thank you Jaishankar for uploading this image.
-
4th February 2013, 06:19 PM
#169
Junior Member
Veteran Hubber
பொன்மனச்செம்மலின் 10வது திரைப்படமாகிய "தாசி பெண்" (அல்லது) "ஜோதி மலர்" பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
1. படம் வெளியான தேதி : 03-03-1943
2. படத்தில் மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : பரம சிவன்
3. படத் தயாரிப்பு நிறுவனம் : புவனேஸ்வரி பிக்சர்ஸ்
4. படத்தினை இயக்கியவர்கள் : எல்லிஸ். ஆர் டங்கன் மற்றும் ஆர். எஸ் மணி
5. ஸங்கீதம் : லலிதா வெங்கடராமன் & ராஜேஸ்வர ராவ்
6. இதர நடிக நடிகையர் : டி. ஆர். மகாலிங்கம், பால சரஸ்வதி, எம். ஆர். சந்தானலக்ஷ்மி
7. நகைச்சுவை ஜோடி : வழக்கம் போல் என். எஸ். கிருஷ்ணன் & டி.ஏ. மதுரம்
100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
-
4th February 2013, 06:20 PM
#170
Junior Member
Veteran Hubber
பொன்மனச்செம்மலின் 10வது திரைப்படமாகிய "தாசி பெண்" (அல்லது) "ஜோதி மலர்" கதைச்சுருக்கம் :
அருணோதய காலம். வேதங்களால் பூஜிக்கப்பட்ட சிவாலயம். பிராமணர்கள் பூஜை செய்யும் மணி சப்தம் முழங்க தாசி தும்பையின் இன்னிசைக் கீதமும், நர்த்தனமும் நடக்கிறது. திரண்ட ஜனக் கூட்டம்; அக்கூட்டத்தில் அவ்வூர் ஜமீன்தாரும் ஒருவர். தாசியின் நடனத்தைக்கண்டு அவர் அவள் மீது மையங் கொள்ளுகிறார். உடனே அவளை அடையவும் எத்தளிக்கிறார்.
தும்பையோ ஜாதியில் தாசி குலத்தில் பிறந்தவளாயினும், தன் குலத்தொழிலை வெறுத்து சர்வ ஜீவாஷகரான அந்த பரமேஸ்வரனே கதி என்று சதாகாலமும் பூஜித்து வருகிறான். தும்பையின் பரிசுத்தமான பக்திக்கு தடையில்லா மலில்லை, தும்பை சிறு வயதிலேயே தாய் தந்தை அற்றவன். தமக்கை மல்லிகையாலும், முத்து மாமாவாலும் காப்பற்றப்பட்டு வருகிறாள்.
மல்லிகைக்கோ வயதாகி விட்டது. குலத் தொழிலில் சம்பாதிக்கும் வயது கடந்து விட்டது. ஜீவனம் நடப்பதே பரம கஷ்டமாகி
விட்டது. ஆகவே, மல்லிகையும், முத்து மாமாவும் சேர்ந்து தும்பையின் மானத்தை விற்று, ஜீவனம் நடத்த எத்தனிக்கிறார்கள். தும்பை மறுக்க அவளை இம்சிக்கவும் செய்கிறார்கள். இடையில் ஜமீந்தார் தும்பையின் மீது காதல் கொண்டுள்ளதை அறிந்த மல்லிகையும், முத்து மாமாவும் அவரிடம் பொருள் வாங்கி கொண்டு, தும்பையை அவருக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறார்கள். பரம தயா நிதியான ஈஸ்வரனிடத்தில் காதல் கொண்ட தும்பையை தீய வழியீல் திருப்ப, என்ன செய்தும் பயனில்லை
மாமாவின் பல எத்தனங்களினாலும் தன் எண்ணம் கை கூடாததால் ஜமீந்தார் கோபங் கொண்டு தும்பையை துராக்ரதமாக அடைய எத்தனிக்கிறார். பரமேஸ்வரி - ஈஸ்வரானுக்கிரகத்தால் ஒவ்வொரு சமயமும் தும்பை காப்பற்றபடுகிறாள். முடிவில் தான் உறுதியாய் பக்தி செய்து வந்த அழியாக் காதலரை தும்பை அடைவது ஆச்சர்யம்.
தும்பைக்கு மற்றொரு சகோதரி உண்டு பெயர் துளசி. சேலை வியாபாரி பெருமாள் செட்டியாரை காதலித்து எப்போதும் தெய்வ வழிபாடு செய்து வரும் தன் கணவனை பழிக்கிறாள். தெய்வத்தால் தண்டிக்கப் படுகிறாள். தெய்வம் உண்டு என்பதையும் உணருகிறாள். இது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
மற்றவை திரையில் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
================================================== ================================================== =============
Bookmarks