மிகக் குறுகிய காலத்தில், 17.10.1952 முதல் 15.08.1958 - ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் 50 படங்களில் நாயகனாக நடித்து சாதனை புரிந்தவர் நடிகர் திலகம். ஆண்டுக்கு கிட்டத் தட்ட 8 படங்கள் என்ற கணக்கில் தந்திருக்கிறார். வசூலாகாமலா தயாரிப்பாளர்கள் இத்தனை படங்களை அவரை வைத்து தயாரித்திருப்பார்கள். இந்த அடிப்படை லாஜிக்கை வைத்தே நடிகர் திலகத்தின் சாதனையைப் புரிந்து கொள்ளலாம். அவருக்கு இருந்த DEMANDஐயும் தெரிந்து கொள்ளலாம்.
தணிக்கை 24.07.1958
சான்றிதழ் எண் 22632
வெளியீடு – 15.08.1958
நீளம் – 13820 அடி
தயாரிப்பு – மினர்வா பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பானுமதி, ராஜசுலோச்சனா, எஸ்.வி.ரங்கா ராவ், எம்.என். நம்பியார், முத்துகிருஷ்ணன், ஏ.கருணாநிதி, சாயிராம், பா.சாந்தகுமாரி, முத்துலக்ஷ்மி, மோகனா, சந்திரா,
திரைக்கதை வசனம் – எஸ்.டி.சுந்தரம், உதவி டி.என்.கே.பெருமாள்
பாடல்கள் – அ. மருதகாசி
இசையமைப்பு – ஜி.ராமனாதன்
பின்னணி – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், ராஜகோபால், ஜிக்கி, பி.சுசீலா, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி
பின்னணி வாத்ய கோஷ்டி – ஜி.ராமனாதன் பார்ட்டி
நடனம் – ஸ்ரீமதி கமலா லக்ஷ்மணன், குமாரி ஈ.வி.சரோஜா
நடன அமைப்பு – தண்டாயுதபாணி பிள்ளை, மாதவன்
கலை அமைப்பு – எஸ்.வி.எஸ்.ராமா ராவ், வி.எம்.வத்ருகர்
அரங்க நிர்மாணம் – நீலகண்டன்
ஒளிப்பதிவு – என்.சி.பாலகிருஷ்ணன்
ஒலிப்பதிவு – பாடல்கள் பின்னணி இசை – ஆர்.கண்ணன் ரேவதி ஸ்டூடியோ
ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ், ஆர்எம். மீனாக்ஷி சுந்தரம்
உடைகள் – .பி.ராமகிருஷ்ணன், எம்.பி.மாதவன், ஜி.ஈஸ்வர் ராவ்
எடிட்டிங் – வி.எஸ்.ராஜன்
ப்ராஸஸிங் வி.டி.எஸ்.சுந்தரம், விஜயா லேபரட்டரி
புரொடக்ஷன் நிர்வாகம் – பி.எஸ்.ராமலிங்கம், என்.சிதம்பரம்
செட் அலங்கார சாமான் – பி.நாதமுனி அண் சன்ஸ்
ஸ்டூடியோஸ் – ரேவதி, வாஹினி
விளம்பரங்கள் – எலிகண்ட் ப்ப்ளிஸிட்டீஸ், சென்னை 2
டைரக்ஷன் – வி.எஸ்.ராகவன்
கீழ்க்காணும் நிழற்படம் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 15.8.1958
Last edited by RAGHAVENDRA; 26th May 2013 at 03:04 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
1. நடிகர் திலகத்தின் 50வது படம்
2. சென்னை நகரில் கெயிட்டி, பிரபாத், சரஸ்வதி திரையரங்குகளில், 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி வெளியானது. மற்ற ஊர்களில் 15.08.1958 அன்று வெளியானது.
3. ஜி.ராமனாதன் அவர்களின் இசை இப்படத்திற்கு மிகப் பெரிய சிறப்பு. குறிப்பாக வசந்த முல்லை, கண்களால் காதல் காவியம், மேகத்திரை பிளந்து, அற்புதக் காட்சி ஒன்று பாடல்கள் அந்தக் காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
• வாழ்க நமது நாடு – சீர்காழி கோவிந்த ராஜன்
• அற்புதக் காட்சி ஒன்று கண்டேன் – பி. பானுமதி
• வசந்த முல்லை போலே வந்து – டி.எம்.சௌந்தர்ராஜன்
• கண்ணால் நல்லா பாரு – பி.பானுமதி, ஏ.பி.கோமளா, கே.ராணி
• மேகத் திரை பிளந்து – டி.எம்…சௌந்தர்ராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், டி.வி.ராஜகோபால்
• ஏதுக்கித்தனை மோடி தான் – ராதா ஜெயலக்ஷ்மி
• கண்களால் காதல் காவியம் – டி.எம்.சௌந்தர்ராஜன், ஜிக்கி
• என்ன வேண்டும் இன்னும் – டி.எம்.சௌந்தர்ராஜன்
• பெரிய இடத்து விஷயம் – எஸ்.சி.கிருஷ்ணன், ஏ.ஜி.ரத்னமாலா
• எட்டி எட்டி பார்க்குதடி – ஏ.ஜி.ரத்னமாலா, கே.ராணி
• தன்னை மறநத்தும் என் மனம் – பி.சுசீலா
• மதியில்லா மூர்க்கருக்கு – சீர்காழி கோவிந்தராஜன்
• வந்திடுவார் அவர் – பி.பானுமதி
பாடல் காட்சிகள்
வசந்த முல்லை போலே
வந்திடுவார்
கண்களால் காதல் காவியம்
எட்டி எட்டிப் பாக்குதடி
அற்புதக் காட்சி ஒன்று கண்டேன்
மேகத்திரை பிளந்து
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
இதுவரை இப்படத்தைப் பார்க்காதவர்களின் தகவலுக்காக நெடுந்தகட்டின் முகப்பு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
ராகவேந்திரா சார்!!! நடிகர் திலகத்தின் 50 திரைப்படங்களை நிறைவு செய்ததற்க்கு வாழ்த்துகள்!!!
சாரங்கதாரா - அரச வேடம் தரித்து கம்பீரமாய் நடிகர் திலகம் நிற்பதென்ன!!! 'மேகத்திரை பிளந்து' மற்றும் எப்பொழுதும் மக்கள் மனதில் நிலைத்து நின்றிருக்கும் 'வசந்த முல்லை' பாடலும் (கம்பீரமாய் அமரர் பாடகர் திலகத்தின் பெயர் சொல்கின்றன) நடிகர் திலகத்தின் 50-வது படம் என்பதற்கு பெருமை சேர்க்கின்றன. அப்போதெல்லாம் இந்த எண்களுக்கு (25, 50, 75, 100, ...) திரையுலகத்தினர் இப்போது உள்ளது போல் மரியாதை கொடுக்கவில்லையா என்ன? நடிகர் திலகம் என்ற பெயர் இடப்படா விட்டாலும், "சிவாஜி கணேசனின் 50-வது படம்' என்றாவது விளம்பரங்களில் கொடுத்திருக்கலாமே? இவருக்கு முன் எவரேனும் 50 திரைப்படங்களில் கதா நாயகனாக நடித்திருக்கிறார்களா என்ன - யாரும் இல்லாதது இப்படி 50-வது படத்திற்கு முக்கியத்துவம் தராததற்க்கு காரணமா?
தங்கள் சீரிய முயற்சியில் உருவான இந்தத் திரி பல மாய மேகத்திரைகளைக் கிழித்து நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் புறாவாக வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடிகர் திலகம் திரிகளில் உழைப்பை செலுத்தி வரும் தங்களுக்கு என் உளமார்ந்த மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
Last edited by vasudevan31355; 27th May 2013 at 07:46 AM.
Bookmarks