Page 147 of 185 FirstFirst ... 4797137145146147148149157 ... LastLast
Results 1,461 to 1,470 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1461
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மக்கள ராஜ்ய சிறப்பு செய்திகள்

    மக்கள ராஜ்ய திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரதான பாத்திரத்தில் அறிமுகமாகி கன்னடத் திரையுலகில் தனக்கெனத் தனி இடத்தைத் தன் நகைச்சுவை நடிப்பின் மூலம் பிடித்து சிறந்த குணசித்திர நடிகராகவும் விளங்கிய

    உமேஷ்



    விண்வெளியில் விஞ்ஞானி விண்ணுக்கு அனுப்பும் சிறுவனாக நடித்தவர் உமேஷ். முதல் படத்திலேயே நடிகர் திலகத்துடன் நடித்து மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

    பாடல்களுக்கான இணைப்பு

    மக்கள ராஜ்ய திரைப்படத்தின் பாடல்கள் சரிகம நிறுவனத்தால் யூட்யூப் இணைய தளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளன. இதில் குறிப்பிடத் தக்கது, கன்னடப் படமான மக்கள ராஜ்ய பாடல்களுக்கு நடிகர் திலகத்தின் நிழற்படத்தை சரிகம நிறுவனம் இணைத்திருப்பதேயாகும்.

    இனி பாடல்களைப் பாருங்கள் அ கேளுங்கள்

    மளையே சுரிது பா



    ஜெய ஜெய கோகுல பாலா



    ஆடுவெ ஆசையா



    நகலு பாரதோ



    இந்த நகலு பாரதோ பாடலின் மெட்டு மர்ம வீரன் திரைப்படத்தில் ஜிக்கி பாடிய ஒரு பாடலை நினைவூட்டும்
    Last edited by RAGHAVENDRA; 8th July 2014 at 07:15 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1462
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜிகணேசன் நடித்த 'எதிரொலி' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.

    இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

    'சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.

    நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.

    சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.

    'நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க' என்றார், சிவாஜி.

    இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.

    கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளிïருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.

    அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.

    சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். 'சாப்பிட்டீங்களா?' என்று கேட்பார்.

    நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.

    சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.

    அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. 'கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்' என்று சொல்லிவிட்டார்.

    ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.

    இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த 'எதிரொலி' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை -கால் நடுங்கின. 'பராசக்தி', 'மனோகரா' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.

    அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.

    நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.

    'நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்' என்று சிவாஜியிடம் சொன்னேன்.

    அவர் உடனே, 'அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.

    நான் படித்துக்காட்டினேன். 'நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!' என்றார், சிவாஜி.

    'என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!' என்றேன்.

    'இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.

    இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.

    இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.

    தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-

    'ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?'

    - இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.

    நான் திடுக்கிட்டேன். 'என்ன சார்... என்ன சொல்றீங்க?' என்று கேட்டேன்.

    'இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே' என்று மíண்டும் சொன்னார்.

    எனக்குப் பெரும் அதிர்ச்சி. 'அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?' என்று நான் கேட்க, 'இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?' என்று சிவாஜி கேட்டார்.

    'இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே' என்று நான் சொல்ல, 'அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.

    அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.'

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

  4. Likes RAGHAVENDRA liked this post
  5. #1463
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜிகணேசன் நடித்த 'எதிரொலி' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.

    இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

    'சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.

    நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.

    சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.

    'நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க' என்றார், சிவாஜி.

    இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.

    கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளிïருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.

    அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.

    சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். 'சாப்பிட்டீங்களா?' என்று கேட்பார்.

    நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.

    சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.

    அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. 'கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்' என்று சொல்லிவிட்டார்.

    ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.

    இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த 'எதிரொலி' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை -கால் நடுங்கின. 'பராசக்தி', 'மனோகரா' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.

    அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.

    நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.

    'நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்' என்று சிவாஜியிடம் சொன்னேன்.

    அவர் உடனே, 'அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.

    நான் படித்துக்காட்டினேன். 'நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!' என்றார், சிவாஜி.

    'என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!' என்றேன்.

    'இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.

    இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.

    இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.

    தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-

    'ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?'

    - இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.

    நான் திடுக்கிட்டேன். 'என்ன சார்... என்ன சொல்றீங்க?' என்று கேட்டேன்.

    'இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே' என்று மíண்டும் சொன்னார்.

    எனக்குப் பெரும் அதிர்ச்சி. 'அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?' என்று நான் கேட்க, 'இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?' என்று சிவாஜி கேட்டார்.

    'இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே' என்று நான் சொல்ல, 'அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.

    அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.'

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

  6. Thanks kalnayak thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  7. #1464
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    திரு. யுகேஷ்பாபு, உங்கள் பதிவுகள் அருமை. இவைகளை நடிகர்திலகத்தின் பொது திரி-14ல் பதியலாமே. என்ன தயக்கம்?

  8. #1465
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Source - Internet


    The release of "Parasakti" in 1952 saw the birth of a star - Sivaji Ganesan - in Indian cinema.

    His perfect delivery of dialogue and identification with every role he played, established him as an actor par excellence. K. HARIHARAN, film maker and scholar, writes on the thespian's successes and failures.

    WITHIN the post-independent history of Indian Cinema the role of Tamil cinema has always been seen as a dysfunctional variant. For the powers to be and the Indian elite, Tamil Nadu and Tamil cinema were synonymous symbols of "kitsch" Madrasi culture. "Andu gundu nariyal paani" was how, even I was referred to in Mumbai where I grew up! And that's all my friends knew about Tamil Nadu. The only thing noteworthy for them about this southern State was its "classical" Mylapore culture - the world of Bharatanatyam and Carnatic classical music.

    So to which culture did Sivaji Ganesan belong? The answer is obvious. The world of "kitsch!" And why did this happen? I would like to briefly elaborate here with the words of Edward Said, the renowned critic of post-colonial culture and politics. "In the first place culture is used to designate not merely something to which one belongs but something that one possesses. In the second place there is a more interesting dimension to this idea of culture as possessing possession. And that is the power of culture by virtue of its elevated or superior position to authorise, to dominate, to legitimate, demote, interdict and validate."

    So it was imperative that after 1947, counter-culture in Tamil Nadu had to have a two-pronged attack for the people who actually "belonged" to this "andu gundu" culture. They had to fight the Delhi culture and the superiority complex of a local elite power, which decided what would constitute "Indian culture". The local Tamilian elite had to play mirror-reflection of "proper Indianness" and decide what to authorise and legitimise as good Tamil culture too. So in 1952 when "Parasakti" was released it must have been obvious to every "belonging" resident Tamilian that a great star had arrived. It was an overwhelming success. Sivaji Ganesan captured the spirit of the typical post- independence protest and disillusionment resting in every Tamil youth. The film also dovetailed with the resurgence of a strong pro-Tamil Dravidian movement and radical social reform processes and in the process stigmatised the Tamil elite as corrupt aliens.

    There were many other stars in this game too. From MGR, SSR to Karunanidhi and Kannadasan, the list was really long. But thanks to his immense capacity to understand the melodramatic capacities of cinema, Sivaji Ganesan could easily translate any potential story into a series of powerful gestures. But the elite within and without, however dismissed his performance as pure "hamming" or stereotypical "overacting"! It was considered and it is still considered an embarrassment to even talk about his films. High- class newspapers would have pages on film festivals at Cannes and discuss films, which would never see the screen. Yet, of the 300 films that Sivaji Ganesan acted in, none of them were found deserving to win even one national award for him as "best actor". But so were stars like Raj Kapoor or Dev Anand, never considered worthy of any award. Fortunately they had to counter just a single establishment. But together they were all seen as "anti- social elements" fanning the taste for vulgarity, encouraging disobedience and promoting indiscipline.

    Why is there an antipathy by the elite and their media towards anything which is genuinely "popular" by its own strength? Why do serious discussions on cinema never ever figure Sivaji Ganesan as an important element?

    The problem is cultural. To accept Sivaji Ganesan is to befriend a whole grammar of protest, profanity and reform. When I said that he had the immense talent to convert any potential story into a series of powerful gestures it is precisely in this area that he demonstrates his versatility. Let's take the classic example of "Thillana Mohanambal". (I am sure if I had called this film a classic two weeks ago, several readers would have laughed but today they might accept it out of hypocritical reverence to a dead soul. What a way to achieve "classic" status!)

    In this film, Sivaji had to combine in himself the traits of a "classical musician" falling in love with a "classical" dancer but, in an atmosphere of "low-brow" culture. Meaning, people who wear red blouses and blue saris, "zamindars" who live in multi- colored houses, and people who frequent cheap folk dancers. It is into this ambience that Sivaji brings in his precise yet different strokes. In an intuitive way he has observed the nuances and behavioural styles of musicians. He brings in his enormous talent of perfect dialogue intonations, flawless synchronisation of the musical instruments, and a good timing for action/ reaction. And still he had to rise above the character and display the sensuality of a Sivaji Ganesan. At this level Sivaji is at his melodramatic best. He knows exactly when to face the camera frontally, when to raise his voice and when to quiver his lips. Only he knew well how to add the right amount of profanity to an already complex script of love and sacrifice.

    Several films breezed by in his repertoire. From comedies like "Bale Pandya" to mythologicals like "Thiruvilaiyadal", from historicals like "Veerapandiya Kattabomman" to family dramas like "Paava Mannipu", from rural subjects like "Pazhni" to urban gangster dramas like "Thanga Padhakam". But if I were to select his most comfortable position as an actor, it was when he played the insider, the typical family man caught in the crossfire of modernity and tradition. He was his best playing the vulnerable hero who had to take decisions in Catch-22 situations. "Motor Sundaram Pillai", "Padithal Mattum Podhuma", and "Aalaya Mani" are all films about a man torn between two loyalties. Any one way was bound to hurt and only providence could reconcile the differences. Besides being the perfect content for a man with such enormous histrionic talent, I somehow feel that this must have been close to his personal character too. The saga of the poor little lad who came from humble belongings to live in a big mansion on Boag road in T.Nagar. Seeing the house from outside, I have always imagined Sivaji as the simple man who always humbly depended on others to make all his decisions, a man who would religiously relish every morsel of "home-cooked" food (veetu saapaadu)!

    I am told that he never saw himself as different from his brothers, his wife or his son. I have always been told that he was the most obedient actor on the set and a perfect co-actor to all the other characters in the film. Recordists in all dubbing theatres will always talk fondly about his speed and precision in voice dubbing.

    No wonder he could never play a do-good "outsider" like his colleague MGR. The "insider" in Sivaji was just too strong to see others as schemers and capable of stabbing in the back. I am sure that it was the brief foray into politics that would have brought all those sycophants, who are the bane of true artists, inside his house. People who would call him the second best actor in the world and never ever tell who was actually the best! People who would put giant rose garlands on him and praise every small gesture that he made. Such people have the ability to put a brake on anybody's creative urge and catapult them into isolation and a false sense of megalomania.

    In the summer of 1972, Sivaji Ganesan donning the robes of an emperor witnessed the biggest assembly of extras dressed up as soldiers. It was the shooting of the greatest magnum opus in Tamil cinema called "Raja Raja Chozhan". He had to accommodate all kinds of fancy demands by distributors who insisted that he had to dance, fight and romance around despite his bulk, his age and his brief foray into politics. With his death slowly, for all practical purposes, the Tamil cinema industry would be writing off this thespian as a non-viable entity. Writing about Sivaji Ganesan just a day after his death, I too would be joining the long list of ministers, bureaucrats, fellow film colleagues in singing praises of glory like an obligatory ritual. Imagine reading laudatory statements made by "important" people who would not have even seen a single film of his all their life. Having neglected him completely during his lonely days, may be lonely years, I certainly feel it is the greatest act of hypocrisy to mouth long passages of praise when someone is no more.

    It is indeed my deep regret that I learnt to truly appreciate the great performative capabilities of a giant like Sivaji Ganesan only in the last decade. Like most members of the elite, I was acculturated into believing that acting could be worth considering only if it bordered on a kind of naturalism, which in fact has never been part of the so-called "Indian culture." Then whose culture is it? The elite and even premier film institutions like the Film and Television Institute of India (FTII) at Pune and the Satyajit Ray Film and Television Institute (SRFTI) at Kolkata will never question such positions, which are prescribed by European critical standards. May be the Directorate of Film Festivals and the National Film Development Corporation (NFDC) will now hold retrospectives of his films at some international venues while several non-popular film-makers will continue to have their films toured all over the world, endlessly. Is this the burden of being popular?

    The writer is an alumni of FTII, Pune and has made "Thangaraj Enge" the first children's film in Tamil. His "Ezhavathu Manithan" won an international award, for the best Tamil film (at Moscow). He has also set up the first and only Indian Film Studies Department abroad (University of Pennsylvania).
    Last edited by RavikiranSurya; 11th July 2014 at 12:26 PM.

  9. #1466
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    karmavirar kamarajar birthday special release

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி வெளியிட்டவர் இயக்குநர் பாலகிருஷ்ணன். அப்போது அந்தப் படம் சரியாக போகாத நிலையில் அதில் மீண்டும் சில காட்சிகளைச் சேர்த்து புதிதாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பாலகிருஷ்ணன். இந்நிலையில் அவரைச் சந்தித்தோம்.

    ‘காமராஜ்’ படத்தை மீண்டும் வெளியிடுவதற்கு என்ன காரணம்?

    கடந்த முறை இந்தப் படத்தை வெளியிட்டபோது அது சரியான வகையில் மக்களைச் சென்று அடையவில்லை. பத்திரிகையாளர்கள் பாராட்டினாலும் படம் சரியாக போகவில்லை. படத்தை எடுத்து முடித்ததோடு எங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து நாங்களும் சும்மா இருந்துவிட்டோம்.

    ‘காமராஜ்’ படம் அப்போது மக்களைச் சென்று அடையாததற்கு அதுவும் ஒரு காரணம். அந்தப் படம் மக்களைச் சென்று அடையவேண்டும் என்பதற்காக இப்போது மீண்டும் அதை மெருகேற்றி வெளியிடுகிறோம்.

    இந்த முறை எந்தெந்த காட்சிகளைப் புதிதாக சேர்த்திருக்கிறீர்கள்?

    கடந்த முறை படம் வெளிவந்ததும் நிறைய கருத்துக்கள் வந்தன. படத்தில் டெல்லி அரசியலை காட்டவில்லை என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது. அதேபோல் கடந்தமுறை படத்தை வெளியிட்டபோது அதைப் பார்த்த ஒருவர் எனக்கு போன் செய்தார். “இந்தப் படத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் விட்டு விட்டீர்கள். காமராஜர் இறந்ததும் அவரது வீட்டை சோதனை செய்யும் அதிகாரியாக நான்தான் சென்றேன்.

    அவருக்கென்று எந்த சொத்தும் கிடையாது. அவரது கார் டி.வி.எஸ் கொடுத்தது, வீடு - நடராஜன் கொடுத்தது(வாடகை வீடு), அவருக்கு சொந்தமாக 110 ரூபாய் மட்டுமே இருந்தது. இதைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டீர்களே” என்றார்.

    அவற்றையெல்லாம் இந்த முறை ‘காமராஜ்’ படத்தில் பதிவு செய்துள்ளோம். அந்த அதிகாரியாகத் தான் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். 15 நிமிடங்களுக்கு மேல் இவருடைய காட்சிகள் இருக்கும். அது போக 15 நிமிடங்கள் வேறு சில காட்சிகள் இருக்கும். மொத்தம் 30 நிமிட காட்சிகளை புதிதாக சேர்த்திருக்கிறோம்.

    முதல் முறை வெளியான ‘காமராஜ்’ படத்தில் காமராஜராக நடித்த ரிச்சர்ட் மதுரம் இறந்துவிட்டார். அதனால் அவருடைய மகன் பிரதீப் மதுரம் இந்த படத்தில் காமராஜராக நடித்திருக்கிறார்.

    இப்போதுள்ள அரசியல் தலைவர்களோடு ஒப்பீடுகையில் காமராஜர் எப்படிப்பட்ட தலைவர்?

    இப்போதுள்ள அரசியல் தலைவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் காமராஜர். அரசியல்வாதி என்றால் மக்களுக்கு சேவை செய்பவர் என்பதுதான் அவரது கருத்தாக இருந்தது. ஒரு பத்திரிக்கையாளர் காமராஜரிடம், “நீங்க முதல்வரா இருக்கீங்களே. உங்களுக்கு அந்தப் பதவி பிடித்திருக்கிறதா” என்று கேட்டுள்ளார். அதற்கு காமராஜர், “யாருக்குப்பா வேணும் அந்த பதவி? தொரட்டி பிடிச்ச வேலை அது. எவன் பார்ப்பான் அதை. ஒரே தொந்தரவு. என்ன, இல்லாதவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுது. அதனால் மட்டுமே அந்த வேலையில் இருக்கேன்” என்று கூறியுள்ளார்.

    காமராஜர் என்றைக்குமே பதவியைத் தேடிப் போனதில்லை. அவர் ஒரு கட்சியின் அடையாளம் அல்ல. தூய்மையின் அடையாளம். அவரிடம் காங்கிரஸ்காரர், தமிழன் இப்படி எந்த அடையாளத்தை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

    தூய்மையான அரசியலின் வடிவம்தான் காமராஜர். இனி வரும் அரசியல்வாதிகளும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் பணிக்காக உருவாக்கப்பட்டதுதான் முதல்வர் பதவி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    ‘காமராஜ்’ படம் முதல் முறை சரியாக போகவில்லை என்கிறீர்கள். இரண்டாவது முறை எந்த நம்பிக்கையில் வெளியிடுகிறீர்கள்?

    இந்த படம் முதலில் பண்ணும் போது பட்ட கடனையே இன்னும் அடைக்க வில்லை. 80 லட்ச ரூபாயில் செய்த படம் 30 லட்ச ரூபாய்தான் வசூல் செய்தது. அதனால் 50 லட்ச ரூபாய் கடனாகி விட்டது. திருமணமாகாதவன் என்பதால் என்னால் அதைச் சமாளிக்க முடிந்தது. பணத்தை விட காமராஜரைப் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

    காமராஜரைப் பற்றிய புது விஷயங்களைச் சேர்த்து, இம்முறை நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையோடு இந்தப் படத்தை வெளியிடுகிறோம். என் பணியை நான் சரியாக செய்திருக்கிறேன். ஒடவில்லை என்றால், சிறிது காலம் கழித்து இன்னொரு முறை முயற்சி செய்வேன்.

    அடுத்ததாக என்ன படம் செய்யப் போகிறீர்கள்?

    ‘காமராஜ்’ படத்திற்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவைப் பற்றி ஒரு படம் இயக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சகோதரர்களாக இருக்கவேண்டிய இரு நாட்டு மக்களிடையே ஏன் இடைவெளி கூடிக்கொண்டே போகிறது என்பதைச் சொல்லும் படமாக இது இருக்கும்.

    courtesy the hindu tamil

  10. #1467
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    யுகேஷ் பாபு சார்,

    இந்த திரியில் சம்பத்த பட்ட படங்கள்,அது சார்ந்த விவரங்களை மட்டுமே குறிக்கிறோம்.ஏற்கெனெவே ராகவேந்தர் இது சார்ந்து ஒரு வேண்டுதல் விடுத்திருந்தார்.

    நடிகர்திலகத்தின் பால் பற்று கொண்டவர் நீங்கள் என்பது தெரிந்த விஷயம் ஆகையால்,பொது திரியிலேயே எங்களுடன் பகிரலாமே?பதியலாமே. என்ன தயக்கம்?
    Last edited by Gopal.s; 12th July 2014 at 09:13 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #1468
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    101. Pazhani பழநி




    தணிக்கை 31.12.1964
    வெளியீடு 14.01.1965

    தயாரிப்பு – பாரத மாதா பிக்சர்ஸ்
    ஆர் சி ஏ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது

    மூலக்கதை – ஜீ.வி.அய்யர்

    வசனம் எம்.எஸ்.சோலைமலை

    பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், உதவி – பஞ்சு அருணாச்சலம்
    கதாகாலட்சேபம் பாடல்கள் – கொத்தமங்கலம் சுப்பு
    பின்னணி நாகேஷ் அண்ட் பார்ட்டி

    பின்னணி பாடியவர்கள் – டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எல்.ராகவன், எஸ்.சி.கிருஷ்ணன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, கே.ஆர்.எஸ்.சாமி

    ஒலிப்பதிவு –
    பாடல்கள் அண்ட் ரீரிக்கார்டிங் –
    டி.எஸ்.ரங்கசாமி – சாரதா ஸ்டூடியோஸ் – உதவி – ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ.அலோஷியஸ்
    ஜே.ஜே. மாணிக்கம் – ஏவி.எம். உதவி – கே.சம்பத், ஜி.வி.ராம்மூர்த்தி

    ஒலிப்பதிவு வசனம் – எம்.லோகநாதன், உதவி – சி.ஜே.வி. பதி, பி.எஸ்.சௌந்தர்ராஜன், பி.வி.பாலன்

    நடன அமைப்பு – சின்னி-சம்பத்

    கலை – ஹெச். சாந்தாராம், உதவி – டி.வி. அண்ணாமலை

    செட்டிங்ஸ் – கே.பாலசுந்தரம்
    பெயிண்டிங்ஸ் – ஏ.மாணிக்கம்
    ஃப்ளோர்-இன்-சார்ஜ் – எஸ்.ஆறுமுகம், எஸ்.ராஜகோபால்
    சீஃப் எலக்ட்ரீஷியன்ஸ் – எஸ்.மீனாட்சிசுந்தரம், டி.பி.குப்புசாமி

    மேக்கப் – ஏ.வி.ராமச்சந்திரன், ஆர்.ரங்கசாமி, எம்.கஜபதி, சுந்தரம், பெரியசாமி, ராமசாமி, மாணிக்கம், கிருஷ்ணராஜ். உதவி – சி.டி.கண்ணன், டி.ஆர்.வெங்கடேசன்

    உடைகள் – பி.ராமகிருஷ்ணன், ஏ.ராமசாமி

    ஸ்டில்ஸ் – சி.பத்மநாபன்
    விளம்பர நிர்வாகம் – ஏ.ராமநாதன்
    விளம்பரம் – எலிகண்ட்
    விளம்பர டிசைன்ஸ் – பக்தா

    ப்ராஸஸிங் – சர்தூல்சிங் சேத்தி, அஸோஸியேட் – டி.ராமசாமி உதவி – பி.சோமு, ஆர்.பரமேஸ்வரன் – ஏவி.எம்.ஸ்டூடியோஸ் லேபரட்டரி

    எடிட்டிங் மேற்பார்வை – ஏ.பீம்சிங், எடிட்டிங் – ஏ.பால் துரைசிங்கம், ஆர்.திருமலை உதவி – பி.எஸ்.பிரகாஷ், பி.ஸ்டான்லி

    புரொடக்ஷன் நிர்வாகம் – டி.எஸ். ஆதிநாராயணன், உதவி – டி.ராமானுஜம், சி.ரங்கையா, ஜி.எஸ்.வீரப்பன்

    ஸ்டூடியோ – ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன் லெஸ்ஸீஸ் ஆஃப் நியூடோன் ஸ்டூயோஸ் பி.லிட். சென்னை 10

    ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்

    உதவி டைரக்ஷன் – ஆர்.திருமலை, ஜி.எஸ்.மகாலிங்கம், என்.துரைசாமி, எஸ்.எஸ்.தேவதாஸ், எஸ்.சீனிவாசன், ஆர்.நாச்சிமுத்து

    இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராம்மூர்த்தி , உதவி – ஆர்.கோவர்த்தனம், ஹென்றி டேனியல்

    திரைக்கதை டைரக்ஷன் – ஏ.பீம்சிங்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks Russellmai thanked for this post
  13. #1469
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    பழநி - திரைப்படத்தின் பாடல்களின் பட்டியல்

    1. ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்

    2. அண்ணாச்சி வேட்டி கட்டும்

    3. வட்ட வட்டப் பாறையிலே

    4. உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது

    5. இதயம் இருக்கின்றதே

    6. அண்ணன் என்னடா தம்பி என்னடா




    காணொளிகள்

    ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்



    அண்ணன் என்னடா



    இதயம் இருக்கின்றதே




    உள்ளத்துக்குள்ளே




    வட்ட வட்டப் பாறையிலே



    அண்ணாச்சி வேட்டி கட்டும்


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks Russellmai thanked for this post
  15. #1470
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பழநி...

    என்றென்றைக்கும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த திரைக்காவியம்..

    ஜோடி இல்லாமல் நடிகர் திலகம் நடித்த பல படங்களில் ஒன்று...

    தன்னைப் பற்றி பெண்கள் மட்டும் கனவு காணும் ஹீரோயிஸம் இல்லை...

    ஒருவரே பத்து ஆட்களை அடித்து விரட்டும் ஓவர் ஆக்டிங் இல்லை Graphics இல்லை...

    ஏழையாக இருந்தாலும் விதவிதமாக நவநாகரீகமாக உடை அணியும் விந்தைகள் இல்லை..

    எளிய கிராமத்தான்... யதார்த்தமான கிராமத்தான்...

    இயல்பான நடிப்பு.. இயற்கையான கதாபாத்திர அமைப்பு..

    எளிதில் மனதில் புகுந்து விடும் உன்னத நடிப்பு..

    50 ஆண்டுகளானாலும் பழநி மக்கள் மனதில் நிலைத்து நிற்பதற்கான பல காரணங்களில் இவையும் அடக்கம்..
    Last edited by RAGHAVENDRA; 27th July 2014 at 08:58 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •