Page 144 of 185 FirstFirst ... 4494134142143144145146154 ... LastLast
Results 1,431 to 1,440 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1431
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய பறவை- 1964


    தமிழ் நாட்டின் எந்த தமிழறிந்த குடிமகனை கேட்டாலும், அவர்கள் எவர் ரசிகர்களாக இருந்தாலும் ,மறக்க முடியாத படங்களில் ஒன்றாக குறிப்பிடும் படம் புதிய பறவை.புதுமையான கதையமைப்பு, அற்புதமான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள்,கேமரா, இயக்கம்,richness ,sophistication in making & great production value கொண்ட ahead of times வகை படம்.என்னிடம் யார் கேட்டாலும் எனக்கு பிடித்ததாக நான் சொல்லும் மூவர் கோபால்,விஜய். (நான்,என் மகன் என்பது ஒரு புறம்)மற்றும் விக்ரமன்.

    அந்த படத்தை ரசித்த நிறைய பேர் கோபால் பாத்திரத்தை முழுதும் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகமே. chekhov school நடிப்பில் என்னை கவர்ந்த Anthony Hopkins(laurence olivier சிஷ்யன்) ,Jack Nicholson ,Oleg yankovskiy இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றவர் நமது நடிகர்திலகம். அவர்கள் எல்லோரையும் காலத்தாலும் முந்தியவர். கோபால் பாத்திரம் முழுக்க முழுக்க மனோதத்துவ பின்னணி கொண்ட மிக சிக்கலான பாத்திரம்.

    கோபால் ஒரு வெளிநாட்டில் வாழும், பணக்கார conservative &cozy என்ற சொல்ல படும் ஒரு அம்மா பிள்ளை. அம்மாவின் மீது obsessive fixation கொண்டவன்.அம்மாவை அகாலமாக இழந்து இலக்கின்றி அலையும் போது impulsive ஆக ஒரு தவறான பெண்ணை தன் அம்மாவின் இழப்பிற்கு ஈடு செய்வாள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து, குடும்பத்தின் அமைதியே குலையும் அளவு கொண்டு சென்று, தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தந்தையையும் இழந்தவன். ஆனாலும் ,தானாக ஓடி போகும் சீர்கெட்ட மனைவியையும் கெஞ்சி திரும்ப அழைக்கும் பூஞ்சை மனம் கொண்ட கோழை.(குடும்ப கெளரவம் என்ற பெயரில்).மனைவி தானடித்த ஓரடியில் இறந்து விட , சட்டத்தில் இருந்து தப்பிக்க rail track இல் உடலை போட்டு, தற் கொலை என்று நம்ப வைத்து, குற்ற உணர்ச்சியுடன், சிறிது விடுபட்ட உணர்வுடன் ஊர் திரும்புபவன்.

    தொடரும் தனிமை நிறைந்த boredom என்று சொல்ல படும் வாழ்க்கையில், neurotic -emotional distress என்று சொல்ல படும் வகையில்(தூக்கம் இழந்து தவிப்பவன்),tremor என்ற hysterical conversion மனநோயால் அவதியுருபவன்.இந்த வாழ்க்கையின் தவிப்பில்,லதா என்ற தேவதையால் சிறிது ஆசுவாசம் அடைந்து அவளை மணக்க இருக்கும் தருணம், பழைய மனைவி என்று சொல்லி அவள் உருவத்தில் உள்ள ஒருத்தி வாழ்க்கையில் புயலென நுழைய தொடரும் grief &misfortune அவன் அமைதியை மேலும் குலைத்து, depression நோக்கி தள்ளி விடுகிறது.ஆனாலும் வந்தவளை விரட்டி, லதாவை அடையலாம் என்ற நம்பிக்கை, அது குலையும் தருணம் ஏற்படும் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி என்று hope &despair என்று வாழ்வு மாறி மாறி ஊசலாட, spurt of violence ,hallucination தலை தூக்க, இனி தப்பிக்க வழியில்லை என்ற stalemate நிலையில், தன்னை மறந்து உண்மையை back to the wall resolution ஆக ஒப்பு கொண்டு, குற்றத்திற்காக பிடி படுகிறான்.

    எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.

    இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .

    இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.

    இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action . பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .

    மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.

    பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .

    அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.

    நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .

    தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.


    அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.

    லதாவையும், அவள் தந்தையையும் ரங்கனின் insult மீறி, வீட்டில் இருக்க வைக்க கெஞ்சி கூத்தாடும் காட்சியில், அவர்களுக்கு நம்பிக்கை விதைக்க பாடு படுகிறார் என்ற அளவில் மட்டுமே (தன் சந்தேக கணங்களை ,அவநம்பிக்கையை மறைத்து. அப்படி மறைப்பதை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் நமக்குணர்த்தி )நடிப்பார்.அவர்களை convince பண்ண தன் anxiety மறைப்பாரே தவிர, மறையவில்லை என்பதை அந்த இறைஞ்சும் பாணியே உணர்த்தி விடும்.

    விரலை சொடுக்கி யோசித்து எனக்கு தெரிஞ்சா உன்னிடம் ஏன் வருகிறேன் என்ற இயலாமை கலந்த ஆயாசம்.dining காட்சியில், சித்ரா அடிக்கும் பால் பேணி sixer இல், முதல் நம்பிக்கை தெறித்தோடும் போது , அடுத்து வேறு வழியின்றி அவர்களை பணம் கொடுத்து விரட்ட முயலும் காட்சி. எல்லா பணத்தையும் நான் எடுத்து கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்பதற்கு பிச்சை எடுப்பேண்டா ,என்று லதாவுடன் தனக்கிருக்கும் அபார காதலை வெளியிடும் முறை, யாரோட சாவு எனக்கு சந்தோசம் தருதோ அவ இருக்கான்னு சொல்லி ஏண்டா சித்ரவதை செய்யறே என்று கெஞ்சி அதற்கும் இணங்காத போது சீ,போ என்று வீ சும் வெறுப்பில் breaking பாயிண்ட் desperation தெரிய ஆரம்பிக்கும்.

    அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அப்படியே எல்லாம் மூழ்கி விட்ட விரக்தியில், எல்லா கேள்விகளுக்கும் indifference ஆக ஆமாம் என்று பதிலில் (கண்ணை அழுத்தி தடவி)என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற விரக்தி தெரிய ஆரம்பிக்கும். அவனை போக சொல்லு என்ற அருவருப்பு தெரியும் வெறுப்பின் கொதிப்பில், மனசுக்குள் துப்பாக்கி எடுக்கும் கோபம் புலப்படும்.

    அடுத்த கல்லை அவிழ்க்கும் காட்சியில் தனக்கு தெரிந்த லதாவின் காதலையே re -assure செய்து கொள்ளும் விதமாக, பொய் ஆச்சர்யம் காட்டி, தான் breakdown ஆக ஆரம்பித்து விட்டதை மறைத்து லதாவிற்கு நம்பிக்கை ஊட்ட முயலும் பொது, தானே நம்பாததை மற்றவருக்காக சொல்வதை இந்த மேதை உணர்த்தும் குறிப்பு, குரலும்,பாவங்களும், உடல் மொழியும் புரியும் ரசவாதம்.


    லதாவின் அவநம்பிக்கை நிறைந்த சோகத்தால் வெறி கொண்டு, ரங்கனையும் சித்ராவையும் சுட வரும் போது ,மற்றவர்கள் தடுத்தவுடன் விரக்தி, கோபம் கொண்டு, தன்னிச்சையாக பார்த்த ஞாபகம் இசைப்பார் பியானோவில்.இந்த காட்சியில் பாடல் முழுதும் meloncholic serenity with puzzled look உடன்,நிலைகுத்திய விழிகளுடன், முடிவில் சித்ரா அந்த பாடல் எப்படி தெரியும் என்பதற்கு பதில் கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் லதாவை பார்த்து திரும்ப violent ஆகி சித்ரா கழுத்தை பிடித்து வெறி பிடித்து கத்தி கொண்டு தோட்டத்திற்கு செல்லும் இடம்......

    அங்கு தோட்டத்தில் லதாவுடன் ,நம்பிக்கை இழந்து அவரை போக சொல்லி விட்டு, அப்படியாவது பழைய நாட்களை அசை போட்டு வாழ்ந்து விட நினைக்கும் கோபால்,பதட்டத்துடன் சிகரெட் பற்ற வைப்பதிலேயே depressed hope less state வெளிப்பட்டு விடும்.போலீஸ் நண்பன் வரும் போது detached silent agony யில் கொடுக்கும் indifferent உடல் மொழி மற்றும் கை அசைவுகள் ....(அவசியமில்லை). நண்பன் கைரேகை எடுக்க சொன்னதும் அவன் குற்றவாளிகள் தப்பி விடும் சாத்யகூற்றை சொன்னதும் போய்தான் தொலயுட்டுமே என்ற அங்கலாய்ப்பு.

    சித்ராவை வலையில் சிக்க வைக்க கடுகடுவென்ற பாவனையில் இருந்து போலீஸ் நண்பன் voice over க்கு தக்க படி gradual ஆக forced pleasantness கொண்டு வருவது. ரங்கன் வருவதை பார்த்து லதாவிடம் மனமில்லாமல் கடுமையாய் பேசி அனுப்பி விட்டு ரங்கன் ரேகை இருக்கும் பால் கிண்ணத்தை உடைத்தவுடன், அதை பார்த்து கோபம் நிறைத்த help less ness கையை கொண்டே காட்டுவார்.

    இந்த படத்தின் முக்கியமான மூன்று சிறப்புகள் - முதல் முதல் sur realistic முறையில் எடுக்க பட்ட எங்கே நிம்மதி பாடல். படம் முழுதும் voice over என்ற முறையில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு nerration உடன் perfect ஆக sink ஆகும் அவரின் நடிப்பு.ஆச்சர்ய பட வைக்கும்.கையை பயன் படுத்தி அவர் அதீத மனநிலையை வெளிபடுத்தும் இடங்கள். ஒன்றை ஏற்கெனெவே பார்த்தோம். எங்கே நிம்மதி பாட்டில் எனது கைகள் மீட்டும் போது வரிகளில் புறங் கைகளால் action காட்டி கண்களால் follow thru பண்ணும் போது கைகளே அந்நியமான உணர்வை கொடுப்பார். சித்ரா அவர் அடித்த அடியில் இறந்து விட்டதும் இந்த கைதானே அவளை அடித்தது என்று தண்டிப்பது போல் .....

    climax காட்சி இந்திய படங்களில் வந்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்று.

    stylised நடிப்பில், மனோதத்துவ முறையில் உச்சம் தொடுவார். அப்படியே ஒவ்வொரு நொடியும் மனதில் தைக்கும். பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து சொல்லும் எதுவும் காதில் ஏறாத மனநிலையில் ராஜு வந்ததை கேள்வி பட்டதும் அவர் துன்பமெல்லாம் நீங்கி விட்டதான நினைப்பில் காட்டும் அதீத stress relieved happiness ... இந்த காட்சி முழுவதும் hope -despair ஊசலாட் டமே. ராஜூவை கட்டி தேம்பி விட்டு, ஆட்டி வைக்கிராண்டா என்ற ஆத்திரத்தை கொட்டி ரங்கனை சித்ராவை பரபரப்பாய் வெற்றி களிப்பு விடுதலை உணர்வில் அழைக்கும் தோரணை ,சித்ரா வந்ததும் பேயை பார்த்த மாதிரி பின் வாங்கும் அவசரம்.ராஜு அவளை தங்கை என்றும், ரங்கனை சித்தப்பா என்றும் ஒப்பு கொண்டவுடன்,தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கெஞ்சி விட்டு, மச்சத்தையும் பார்த்தவுடன் விரக்தியில் வீழும் இடம்... நண்பன் கைரேகையுடன் வந்ததும்,ஒவ்வொருவரிடமும் களிப்புடன் ரேகை...ரேகை என்று பிரச்சினையே முடிவு பெற்றது போல் கொண்டாட்ட மனநிலை சென்று, ரேகையும் ஒரே மாதிரி என்று சொன்னதும்,நம்பலியா,நீயும் நம்பலியா என்று லதாவிடம் புலம்பி கொண்டே confess பண்ணும் காட்சி.... நான் அசைவே இல்லாமல் லயித்து ஒன்றிய அதிசயம்.

    confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
    அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)

    இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?

    Artaud acting techniques.

    Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.

    இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.

    நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.

    எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.

    பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .

    அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .
    Last edited by Gopal.s; 16th June 2014 at 08:02 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1432
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Gopal Sir. I don’t find words to express my gratitude for the neat streamlined narration of NT’s multidimensional acting prowess, incorporating from A to Z of all acting schools in a single film ‘Pudhiya Paravai’. This is the only NT movie I have seen more than a 100 times in my life for reasons that are obvious : NT’s unparalleled acting with an inimitable body language expressing his mental agony as the character is haunted by the nightmarish memoirs of his married life in the past, is the prime mover of this film. Next, the songs that are really of the kind “thaen vandhu paayudhu kaadhinile”. The orchestration for “enge nimmadhi’ and “paarththa gyapagam illaiyo”. NT’s signature pose from beginning to end of the song sequence ‘enge nimmadhi’ particularly the segement “enadhu kaigal meetumpodhu veenai azhugindrathu…” Then the bench mark scenes : his BP rising at the railway crossing, his counters with MR Radha and second Sowcar, his final revelation of truth …… No other actor in this world would have undergone the level of turmoil NT depicts scene by scene. I don’t think any other NT movie will match ‘Pudhiya Paravai’ (Deivamagan and Navarathiri are nearer) where he has shown the entire ice berg of acting while in other movies only tips of the ice berg. Of course for the current generation wedded to cell phones, the telephone scenes, trunk call booking… may seem to be strange. Hats off Sir, for making my heart filled with joy by way of your inimitable riveting style of writing.
    Last edited by sivajisenthil; 17th June 2014 at 08:36 PM.

  5. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  6. #1433
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    This movie was also a breakthrough movie for Sowkar Janaki suddenly shifting to glam from her typical weepy face roles hitherto. For Saroja Devi, unlike other NT movies where here latent talents were paraded properly this movie does not offer much scope except remaining a show piece in the other actor's movies. The Nagesh comedy is a bit overly done slapstick. In a movie 'Anbe Vaa' too the same Nagesh-Manorama jodi reprise their roles!The comedy track is a hurdle for the otherwise edgeseating pace of this movie. However, the single most 'sumai thaangi' of the movie is NT whose magnetism and charisma make us glued to the seat. I always like the blue tuxedo worn and the cigarette smoking and drinking style of NT in this movie during the song 'Paarththa Gyapagam illayo' as inspired by the introductory scene of the original James Bond 007 Sean Connery in DrNo!(courtesy Ravi Kiran Surya's recent presentaitions of the photo-gallery by Mr.Anand)
    Last edited by sivajisenthil; 18th June 2014 at 10:27 PM.

  7. #1434
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    98. Pudhiya Paravai புதிய பறவை



    தயாரிப்பு – சிவாஜி பிலிம்ஸ்

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பி.சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, சௌகார் ஜானகி, சி.கே.நாகேஷ், மனோரமா, வி.கே.ராமசாமி, ஓ.ஏ.கே.தேவர், ஏ.கருணாநிதி, எஸ்.வி.ராமதாஸ், கே.நடராஜன், எஸ்.ஏ.ஜி.சாமி, சதன்,

    பின்னணி பாடியவர்கள்
    டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, ஹென்றி டேனியல்

    நடனம் – தங்கப்பன், டெஸ்மாண்ட், ஜோசப்

    ஒப்பனை – ரங்கசாமி, ராமதாஸ், கஜபதி, ராமசாமி, பாண்டியன்

    உடையலங்காரம் – பி.ராமகிருஷ்ணன் உதவி – டி.எஸ்.நடராஜன், டி.எம்.சாமிநாதன், கே.பி.குப்புசாமி

    புரொடக்ஷன் நிர்வாகம் – கே.எஸ்.துரை
    ஆபீஸ் நிர்வாகம் – சி. மாணிக்க வாசகர், எஸ்.சம்பத்

    ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ், விளம்பரம் – எலிகண்ட்

    டிசைன்ஸ் – சீநிசோமு

    செட் சாமான்கள் – சினி கிராப்ட்ஸ்

    செட்டிங்ஸ் – ஏ.நாகரத்தினம், டி.எஸ்.வெங்கடேசன்

    பெயிண்டிங்ஸ் – எஸ்.சுப்பையா, பி.சுப்ரமணி

    எலக்ட்ரீஷியன்ஸ் – வி.எஸ்.ராதாகிருஷ்ணன், வி.சந்திரன்

    புரோகிராம்ஸ் – ஆர்.பாலு

    Printed and Processed at Gemini Studios Laboratory, Madras

    ஸ்டூடியோ – விஜயா நிர்வாகம் – வீனஸ்-பத்மினி கம்பைன்ஸ்

    அவுட்டோர் யூனிட் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

    டைட்டில் & டிசால்வ்ஸ் – வி.மதன் மோஹன் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் டிபார்ட்மெண்ட்

    உதவியாளர்கள்
    டைரக்ஷன் – டி.பி. அருணாசலம், எஸ்.எஸ். மணி, ஒளிப்பதிவு – ஆர்.ராஜன், எம்.கே.ஆர். ரவீந்திரன், வி.சூர்யகுமார், கே.ஆர். சீதாராமன்
    ஒலிப்பதிவு – ஹெச். நாகபூஷண ராவ், வி.ஜனார்த்தனன், ஆர்.எஸ் வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ்
    எடிட்டிங் – எம்.கண்ணன் கலை – பாபு புரொடக்ஷன் – குப்புசாமி, சம்பத், பாபு, எஸ்.சி.சேகர்
    மூலக்கதை – “சேஷாங்கா” [ராஜ்குமார் மித்ரா]
    வசனம் – ஆரூர்தாஸ்
    பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்
    எடிட்டிங் – என்.எம். சங்கர்
    பாடல்கள் ஒலிப்பதிவு & ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி – மெஜஸ்டிக்
    வசனம் ஒலிப்பதிவு – W. நரசிம்ம மூர்த்தி
    கலை – கங்கா
    திரைக்கதை, அசோஸியேட் டைரக்ஷன் – பி.பி.சந்திரா [நன்னு]
    ஒளிப்பதிவு டைரக்டர் – கே.எஸ். பிரசாத்
    இசையமைப்பு – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி உதவி – கோவர்த்தனம், ஹென்றி டேனியல்
    டைரக்ஷன் – தாதா மிராசி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks Russellmai, kalnayak thanked for this post
  9. #1435
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புதிய பறவை விளம்பர நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்

    காவிய விளம்பரம் : The Hindu : 14.4.1963




    'செப்டம்பர் வெளியீடு' விளம்பரம் : The Hindu : 15.8.1964




    முதல் வெளியீட்டு விளம்பரம்




    'பாரகன்' "புதிய பறவை"க்காக புதுப்பிக்கப்படும் விளம்பரம் : The Hindu : 4.9.1964
    [நடிகர் திலகமே தம் சொந்த செலவில் 'பாரகன்' திரையரங்கை புதுப்பித்துக் கொடுத்தார்]




    முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 6.9.1964





    அட்டைப்படம் : பேசும் படம் : ஜூலை 1964




    பின் அட்டை : பேசும் படம் : ஜூலை 1964



    விமர்சனம் : முத்தாரம் : 1.10.1964



    அரிய நிழற்படம் : கோபால் கெட்டப்பில் தனது மனைவியுடன்

    Last edited by RAGHAVENDRA; 25th June 2014 at 07:20 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks Russellmai, eehaiupehazij, kalnayak thanked for this post
    Likes eehaiupehazij, kalnayak liked this post
  11. #1436
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    pesum padam cover in b/w



    கல்கி 13.09.1964 தேதியிட்ட இதழில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம்



    புதிய பறவை திரைக்காவியத்தில் நடிகர் திலகம் அமர்ந்திருந்து நடிக்கும் காட்சி படமாக்கப் பட்ட போது எடுக்கப் பட்ட நிழற் படம், பேசும் படம் பத்திரிகைக்காக பிரத்யேகமாக எடுக்கப் பட்டது. நடிகர் திலகத்திற்கும் நாகேஷுக்கும் நடுவில் நின்று கொண்டிருப்பவர் இயக்குநர் மற்றும் நடிகர் தாதா மிராஸி அவர்கள்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, kalnayak liked this post
  13. #1437
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள் அணிவகுப்பு தொடர்ச்சி...

    'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன்: 12.9.1964



    'ஈஸ்ட்மென் கலர்' "ஜெமினி"யில் உருவாக்கபட்ட விளம்பரம் : சுதேசமித்ரன் : 13.9.1964




    முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.9.1964



    14வது வார விளம்பரம்




    இக்காவியம் அதிகபட்சமாக சென்னை 'பாரகன்' திரையரங்கில் 19 வாரங்கள் [132 நாட்கள்] ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது. 100வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  15. #1438
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஹிந்து நாளிதழில் புதிய பறவை திரைக்காவியத்திற்காக மெல்லிசை மன்னர்களின் இசைக்குழுவில் செல்லோ இசைக் கருவி வாசித்த கலைஞரின் புதல்வர் செல்வராஜ் அவர்கள் ஹிந்து நாளிதழில் இதைப் பற்றிக் கூறுவதைப் படியுங்கள்

    When the song ‘Yenge Nimmadhi,' for Pudhiya Paravai (1964), was being composed, the recording studio was packed with nearly 250 instrumentalists playing mammoth instruments in perfect sync. “Some of the instruments were imported just for the song. To sit at the studio and listen to the live performance was a heavenly experience,” recalls R.Selvaraj, a cello player, whose father was part of the orchestra.
    - நன்றி, ஹிந்து நாளிதழ்
    http://www.thehindu.com/features/fri...icle452338.ece
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. #1439
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    videos
    chittukkuruvi



    partha gnyabagam


    aha mella nada


    உலகத்தில் இனிமேலும் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகச் சிறந்த நடிப்பில், மிகச் சிறந்த இசையில், மிகச் சிறந்த குரலில், மிகச் சிறந்த வரிகளில், மிகச் சிறந்த பாடல்.

    சோகப் பாடலுக்கு உலகில் பெரும் வரவேற்பைப் பெரும் ஒரே நடிகர் என நடிகர் திலகத்தை ஆணித்தரமாக உறுதி செய்த பாடல்... நிச்சய தாம்பூலம் படைத்தானே பாடலுக்கு இணையாக மிகப் பெரும் வரவேற்பை என்றும் பெறும் பாடல்...

    எங்கே நிம்மதி என்று டி.எம்.எஸ். குரல் துவங்கும் போது ஏற்படும் உடல் சிலிர்ப்பினை அனுபவித்தால் தான் உணர முடியும்.

    உணர்ந்து அனுபவிப்போம்
    Enge nimmadhi



    Our Neyveli vasu’s write up for unnai ondru ketpen
    "உன்னை ஒன்று கேட்பேன். உண்மை சொல்ல வேண்டும்"..

    புதிய பறவை திரைக் காவியத்தில் இரண்டாவது முறையாக வரும் 'உன்னை ஒன்று கேட்பேன்' பாடலில் தான் எவ்வளவு மென்மை! எவ்வளவு இனிமை! என்ன ஒரு மனதை வருடும் மெல்லிசை! மிக அழகாக நகரும் உணர்வுபூர்வமான காட்சிகள். தன்னையே மறந்து, காதல்வயப்பட்ட உணர்வுகளின் சங்கமத்தால் தவிக்கும் நடிகர் திலகம்.. அதே மனநிலையில் அபிநய சரஸ்வதி. கப்பலில் பாடிய அதே பாடலை அவர் விரும்பிக் கேட்க, காதல் உணர்வுகளை அற்புதமாய் சரோஜாதேவி அவர்களும் பாடலின் மூலம் பிரதிபலிக்க ....மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் காதல் தீயை அங்கே குளிர் காய்வதற்காக எரிந்து கொண்டிருக்கும் விறகுக் கட்டைகள் சாட்சியமாய் சொல்ல, நாற்காலியில் தலை சாய்த்தபடியே பாடலின் இனிமையில் நடிகர் திலகம் உறங்கிப்போக ஒரு காதல் உருவாகி காவியமாக ஆகத் தொடங்கும் அந்த அமைதியான அழகான இரவுப் பின்னணிக் காட்சி...அற்புதத்திலும் அற்புதம்.
    முதல்பாடல் ஆர்ப்பாட்டமும்,அளப்பரையும் என்றால் பின்னது அமைதியும் மென்மையும் குடி கொண்டது.

    மெல்லிசை மன்னரின் மிக மெல்லிய மனதை வருடிக் கொடுக்கும் மெல்லிசையும், இசைக்குயிலின் இன்னிசைக் குரலும் நம்மைத் தென்றலாய்த் தாலாட்டுகின்றன.

    அந்த அற்புத பாடல் இதோ...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks Russellmai, kalnayak thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  18. #1440
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பியானோ வாசிப்பிற்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் பாடல் காட்சி...

    நடிகர் திலகமே வாசித்தாரோ என கேள்வி எழுப்பும் அளவிற்கு தத்ரூபமாக நடித்த மறக்க முடியாத காட்சி

    பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் காட்சி ...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Thanks Russellmai, eehaiupehazij, kalnayak thanked for this post
    Likes eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •