-
16th May 2014, 09:11 PM
#1361
Junior Member
Senior Hubber
Originally Posted by
raghavendra
அடுத்து
மய்யம் தளத்தில் நடிகர் திலகம் திரியிலேயே முத்தாய்ப்பான பதிவாக மிகவும் விரிவான அளவில் ஆய்வு செய்யப் பட்ட படம்.... அதுவும் ஒரு நண்பரே இவ்வளவு விரிவாக அலசியது என்றால் அது இது தான். மற்றவை இதற்குப் பின்னால் எனவும் சொல்லலாம்... கிட்டத் தட்ட 7 பாகங்களாக நமது ஹப்பர் ஒருவர் அலசிய திரைப்படம்..
ஜமீன்தார் சிவலிங்கம் எந்த அளவிற்கு அந்த ரசிகரை ஆக்கிரமித்திருக்கிறார் என்பதைப் படிக்க..
பொறுத்துப் பாருங்களேன்...
paar magale paar a class movie o all times.
-
16th May 2014 09:11 PM
# ADS
Circuit advertisement
-
17th May 2014, 09:05 AM
#1362
Junior Member
Newbie Hubber
நடிகர் திலகத்தின் "பார் மகளே பார்" சாதனைத் துளிகள் :
பார் மகளே பார், நடிகர் திலகத்தின் 89வது திரைக்காவியம் (87வது கருப்பு - வெள்ளைக் காவியம்)
நடிகர் திலகத்தை பீம்சிங் இயக்கிய 13வது படம்; சிவாஜி - பீம்சிங் கூட்டணியின், "ப" வரிசைப் படங்களில், 10வது படம்.
வெளியான தேதி : 12.7.1963 (வெள்ளிக்கிழமை)
சென்னையில் சாந்தி, பிரபாத், சரஸ்வதி ஆகிய 3 அரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.
சென்னையில் சாந்தி திரையரங்கில் 64 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. சாந்தியில் 12.7.1963 அன்று வெளியாகி 13.9.1963 வரை ஓடியது. 14.9.1963 அன்று சாந்தியில் தேசிய திலகத்தின் இரத்தத்திலகம் வெளியானது. (சாந்தி 1214 இருக்கைகள்)
பார் மகளே பார் சாந்தியில் 64 நாட்கள் ஓடி முடிய பெற்ற மொத்த வசூல் ரு. 1,24,466 /-.
பிரபாத்தில் 12.7.1963 லிருந்து 5.9.1963 வரை, 56 நாட்கள் நல்ல வரவேற்புடன் ஓடியது. 6.9.1963 முதல் 13.9.1963 வரை 8 நாட்கள் பிரபாத்தில் மாயா மச்சீந்திரா என்ற திரைப்படம் நடைபெற்றது. மாயா மச்சீந்திரா முதன்முதலில் 22.4.1939 அன்று வெளியான படம். இதில் திரு. எம்.ஜி.ஆர். , எம்.ஜி. ராம்சந்தர் என்ற பெயரில் சிறிய வேடத்தில் தோன்றியிருப்பார்.14.9.1963 அன்று பிரபாத்தில், பாரத ஜோதியின் இரத்தத்திலகம் வெளியானது. (பிரபாத் 1277 இருக்கைகள்)
சரஸ்வதியில் 56 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது. அதாவது, 12.7.1963 லிருந்து 5.9.1963 வரை ஓடியது. 6.9.1963 அன்று சரஸ்வதியில் நடிகர் திலகத்தின் பாலும் பழமும் மறு வெளியீடாக வெளியானது. (சரஸ்வதி 974 இருக்கைகள்)
மேலும், பார் மகளே பார், மதுரையில் 1662 இருக்கைகள் கொண்ட சென்ட்ரல் சினிமா திரையரங்கில் 12.7.1963 லிருந்து 13.9.1963 வரை 64 நாட்கள் ஓடி சிறந்ததொரு வெற்றியைப் பெற்றது. (64 நாள் மொத்த வசூல் ரு. 1,06,402 /-). 14.9.1963 அன்று சென்ட்ரல் சினிமாவில் தியாகத்திலகத்தின் இரத்தத்திலகம் வெளியானது.
திருநெல்வேலியில், பார் மகளே பார், 1352 இருக்கைகள் கொண்ட லட்சுமி திரையரங்கில், 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
நாகர்கோவிலில், 1088 இருக்கைகள் கொண்ட பயனீர் பிக்சர்பேலஸ் அரங்கில் 50 நாட்கள் ஓடி நல்லதொரு வெற்றியைப் பெற்றது.
மொத்தத்தில், 'ஏ' சென்டர்களில் 50 நாட்கள் முதல் 9 வாரங்களும், 'பி' சென்டர்களில் 5 வாரங்கள் முதல் 8 வாரங்களும், 'சி' சென்டர்களில் 4 வாரங்கள் முதல் 5 வாரங்களும் வெற்றிகரமாக ஓடி, சிவாஜி-பீம்சிங் கூட்டணிக்கு சிறந்ததொரு வெற்றியைத் தேடித் தந்த படம் 'பார் மகளே பார்'.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
அன்புடன்,
பம்மலார்.
-
17th May 2014, 09:09 AM
#1363
Junior Member
Newbie Hubber
As mentioned by Raghavendhar,Excellent write up by our fellow hubber Irene Hastings. Great work buddy.(Trend-setting)
Par magale par - Story - part 1
பார் மகளே பார் -கதை பகுதி - 1
http://i949.photobucket.com/albums/a...ofImage027.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image028.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image029.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image030.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image032.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image033.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage036.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage037.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage034.jpg
மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் நடிகர் திலகக்தின் மனைவி சவ்கார் ஜானகி ப்ரசவ வலி எடுத்து ஒரு மருத்துவமனையில் அவரின் பால்ய நண்பரும் தொழிலதிபருமான வி.கே.ஆர்.ரின் உதவியால் சேர்க்கப்படுகிறார். அச்சமயம் தொழில் காரணமாக சிவாஜி சென்னையில் முகாமிட்டிருக்க அவருக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உடனே விரைகிறார் மதுரைக்கு.
ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார் ஜானகி. அடுத்த அறையில் சுலோசனா என பெயருடன் ஒரு நடனமாடும் பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்க, பணிப்பெண்கள் இரு குழந்தைகளையும் நீராட்டுவதற்காக இன்னொரு அறைக்குச்செல்ல , அங்கு துரதிர்ஷடவசமாக மின்சாரம் தாக்கி இருவரும் இறக்க, ஒன்றோடு ஒன்றாக இரு குழந்தைகளும் இருக்க தலைமை மருத்துவரும் வேறு வழி தெரியாமல் ( சுலோசனா , திடீரென்று காணாமல் போக குழப்பம் மிகுதியாகிறது ) ஜானகியை வேண்ட அவரும் வழி தெரியாமல் தவிக்க, மருத்தவரின் யோசனைப்படி இருவரும் ஜானகிக்கே பிறந்தவை என ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். வி.கே.ஆர்.ரும் இதை ஆமோதித்து இந்த உண்மையை எந்த காலத்திலும், எந்த சந்தர்பத்திலும் யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுக்க, அப்போது அதற்கு ஜானகி பதில் சொல்லும்முன், சிவாஜி அமர்களமாக வந்து தன் அன்பு மனைவியை முதலில் விசாரித்து விட்டு, அருகில் இருக்கும் குழந்தைகளை கண்டு...ஓ ....இரட்டை குழந்தைகளா !!! என்று வியந்து மிகவும் உற்சாகத்தில் மிதக்க அத்தருணத்தில் ஒன்றும் பேச இயலாமல் ஜானகியும் அதை ஏற்றுக்கொள்ள, குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா இனிதே நடைபெற்று முறையே சந்த்ரா ( விஜயகுமாரி ) காந்தா ( புஷபலதா ) என பெயர்பெறுகின்றனர். சில நாட்களூக்குப்பின் சுலொசனாவின் சகோதரரான எம்.ஆர்.ராதா , மருதுவமனைமூலம் உண்மை தெரிந்து சிவாஜியின் விட்டிற்கு வர அப்போது ஜானகி மட்டும் தனியாக இருக்க , தன் சகோதரியின் குழந்தையை கேட்க, ஜானகி இரு குழந்தைகளையும் தன் உயிராக கருதுவதால் தானே வளர்ப்பேன் என மன்றாட இளகிய மனம் கொண்ட ராதாவும் அதற்கு சம்மதிக்க, அவருக்கு அவ்வீட்டிலேயே குழந்தைகளுக்கு நடனம் பயிற்றுவிக்கும் ஆசானாகவும் ஒரு வேலை கொடுக்கப்படுகிறது. குழந்தைகளும் நல்ல பண்புடனும் தாய் தந்தையின் அரவணைப்புடன் வளர்கின்றன.
Last edited by Gopal.s; 17th May 2014 at 09:18 AM.
-
17th May 2014, 09:14 AM
#1364
Junior Member
Newbie Hubber
Par magale par - the story - part 2
பார் மகளே பார் - கதை பகுதி - 2
நெருங்கிய நண்பர்களான சிவாஜி-வி.கே.ஆர். தங்கள் வர்தகத்தினை நடத்தும் முறை மாறுபட்டது. சிவாஜி சில கோட்பாடுகளுடன் முடிவுகளை எடுப்பார். ஆனால் வி.கே.ஆர்.ரோ அதிரடி முடிவுகளை எடுப்பவர். இந்த போக்கை சிவாஜி பலமுறை கண்டித்தாலும் அதற்கு வி.கே.ஆர். தன்னுடைய விளக்கங்களை கொடுப்பார்.
ஒரு நாள், வி.கே.ஆர். தன்னுடைய தொழிலில் லாபம் கிடைக்கவில்லை. தான் வேரொரு ஊருக்கு சென்று அங்கு புதிய தொழில் செய்யப்போவதாக சொல்வார். சிவாஜிக்கு அது பிடிக்காது. வாதம் செய்வார். முடிவில், " என்னால் முடிந்த்தை ஒரு நல்ல நண்பன் என்ற முறையில் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் வரும் விளைவுகளுக்கு நீ பின்னர் வருந்துவாய் என்று விடை பெறுவார்.வி.கே.ஆர். கேட்கும் உத்திரவாத தாளினையும் கொடுக்க மறுத்துவிடுவார். " உனக்கு பண உதவி வேண்டுமா ? நான் செய்வேன். மற்றபடி காரன்டி பத்திரம் எல்லாம் தர இயலாது என்று கண்டிப்பாகவும் சொல்வார். ஆப்த நண்பர்கள் ஒருவித வருத்ததுடன் விடை பெறுவர்.
வி.கே.ஆர்.ரின் மனைவிக்கும் ஜானகிக்கும் நெருங்கிய நட்பு பல வருடங்களாக. அவர் விடை பெறுவதை பார்த்து ஜானகி கண்ணீர் சிந்த அவரும் " என்றைக்கானாலும், எந்த சூழ்நிலையிலும் உன் பெண் தான் என்னுடைய மருமகள். இந்த வாக்குறுதியினை என்றும் மறக்காதே என்பார். ஜானகியும் பதிலுக்கு, " இது நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்கு. அன்பினால் ஏற்ப்பட்டது நம் நட்பு. எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுகொடுக்க மாட்டேன் " என்று பிரியாவிடை பெறுவர் இருவரும்.
பார் மகளே பார் - கதை பகுதி - 3
HTML Code:
HTML Code:
HTML Code:
HTML Code:
HTML Code:
HTML Code:
HTML Code:
ஜமீந்தார் சிவலிங்கம் ( சிவாஜி ) ஒரு கறார் மனிதர் > தொழிலை பொறுத்தவரை... ஆனால் வீட்டிலோ 2 குழந்தைகளுக்கு உயிரான தகப்பன். மழலையிலிருந்தே அவர்களின் மீது ஒரு பாசம்.கண்ணும் கருத்துமாக வளர்ப்பார். சந்திரா மென்மையான குணமும் , காந்தா சற்று தைரியமான குணமும் கொண்டவர்கள். இதையும் சிவாஜி ரசிப்பார். " பாரேன். சந்திரா உன்னைபோன்றவள்... காந்த்தா என்னை போன்ற சுபாவம் கொண்டவள் " என்று ஜானகியிடம் சொல்லி மகிழ்வார் ! குழந்தைகளும் பெற்றோரிடம் மிகுந்த பாசத்துடன் பழகுவர். குழந்தைகளும் வளர்ந்து பெரியவராகின்றனர்.
விஜயகுமாரியும் முத்துராமனும் காதலர்கள். ஓரு நாள் முத்துவை தந்தையிடம் அறிமுகம் செய்ய முத்துராமனின் மறைந்த தந்தை தனக்கு மிகவும் தெரிந்தவர் என்றும் நல்ல அந்தஸ்து உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் உணர்கிறார். உடனே அவரை பிடித்து போகிறது. சிறிது நாட்களுக்குப்பின் ஏ.வி.எம்.ராஜன் ( வி.கே.ஆர்.ரின் பிள்ளை ) , சிவாஜியை சந்தித்து தன் தந்தை இப்பொழுது செல்வம் அனைத்தையும் இழந்து ( தவறான வழிகளினால் ) இன்சால்வன்ஸி கொடுக்கும் நிலையில் இருப்பதாக சொல்ல சிவாஜி வருத்தப்படுகிறார். " உங்கள் நிருவனத்தில் எனக்கு ஒரு வேலை கொடுங்கள் " என் ராஜன் வேண்ட அதற்கு சம்மதிக்கும் சிவாஜி, எக்காரணஙகளுக்கும் தன்னுடைய நண்பனின் பிள்ளை என்று யாரிடமும் சொல்லவோ, அல்லது அதிகாரமோ செய்யக்கூடாது என்று கடுமையாகச்சொல்லி அவருக்கு ஒரு வேலையும் கொடுக்கிறார்.
சிவாஜி ஜானகியிடம் விஜயகுமாரியை முத்துராமனுக்கு மணம் முடிக்கும் ஒரு ஆசையை வெளியிட , அதற்கு ஜானகி சிறு வயதில் வி.கே.ஆர்.ருக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்த அதற்கு சம்மதிக்காத சிவாஜி, தன் நண்பன் இப்பொழ்து செல்வம் அனைத்தையும் இழந்ததை சொல்லி, தன்னுடைய மறுப்பை வெளியிடுகிறார். ஜானகி , இரு பெண்களுக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடக்கவேண்டும் என்று கோரிக்க அதற்கும் சிவாஜி மறுக்கிறார். ஜானகி வி.கே.ஆர். குடும்பத்திற்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு மிகவும் வருந்துகிறார் செய்வதறியாமல்.
சிவாஜி முத்துராமனின் தாயை சந்தித்து அவரின் ஒப்புதலும் பெற்று நிச்சயதார்த்தத்துக்கு நாளும் குறிக்க, ஜானகியோ " நீங்கள் உங்கள் நண்பருக்கு அவசியம் தெரிவிக்கவேண்டும்" என்று சொல்ல , அதற்கும் மறுத்த சிவாஜி, " அவன் இன்று மிகவும் நொடிந்த நிலையில் இருக்கிறான். இதை சொன்னால் அவன் இந்த நல்ல செய்திக்காக நிறைய செலவு செய்யத்துடிப்பான். பொருளாதாரரீதியாக அவனை நாம் எந்த விதத்திலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்ககூடாது.
நாம் எனவே சொல்லக்கூடாது " என்று கண்டிப்பாக சொல்ல , ஜானகிக்கு ஒரே தவிப்பு.சிவாஜி, தன் பணியாளின் மூலம் உதவி பணம் கொடுத்தனுப்ப அந்த மனிதர் மூலம் வி.கே.ஆர்.ருக்கு நடைபெறவிருக்கும் நிச்சயதார்த்த செய்தி தெரியவருகிறது.
தொடரும்.
Dear Friends,
Even while covering the story part, I am extremely tempted to shower praise on Nadigar thilagam’s body language. See this episode is a classic example of what acting is all about :
1. Muthuraman gets introduced to Sivaji. See, he just gives a casual handshake. And also look at the hand position >>> Dominating, his hand is on top of Muthu’s, indicating that he is the supremo and the Boss.
2. Sivaji now enquires about his background and his father. He also introduces M.R.Radha, out of courtesy.
3. Now he gets into more detailing on Muthuraman. The left hand on the packet indicates , he is more inquisitive now. He is still having some doubts about Muthu. R.
4. Now he is thoroughly convinced that Muthuraman is from a respectable family and rich guy
5. Now, he expresses his intentions to wife
6. Back home, in seated posture, a serious discussion is about to begin. With his wife, he initiates the wedding proposal
7. Now, janaki is worried that the promise given to VKR will be broken. He is slanted on the pillar, trying to explain the issues of VKR and trying to convince that it is not on
8. Even while Janaki pleads, he emphatically puts an end to any scope of VKR proposal
To me, this is a perfect lesson to aspiring actors. See how terrific his body language is and how swiftly changes his handshakes in a deft manner and above all, the posture of cigarette while conversing with Muthuraman. Also, the left hand going inside pocket and finally a very happy and warm handshake to finish his conversation !
That posture of standing erect with shoulders held flat is a clear indicator of his background as a rich business man being introduced for a casual conversation to a common man. The body language will change if he meets another guy who is superior to him !
Now, onto dialogue with Sowcar Janaki ! Again, the positioning of cigarette and the seriousness on the face to express his frank opinion on a major decision to be taken as a Father .It all starts with a casual walk along with wife and slowly and gradually develops into a serious discussion !
Kudos to the entire team to bring the best out of Nadigar thilagam. Long live, Nadigar thilagam’s fame.
Par magale par - Story - part 4
பார் மகளே பார் - கதை பகுதி - 4
http://i949.photobucket.com/albums/a...s/Image008.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image009.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image014.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image016.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage057.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage058.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage059.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage060.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage061.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage063.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage064.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image010.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image021.jpg
நிச்சயதார்தம் தடபுடலாக ஆரம்பிக்க ஊர் பெரிய மனிதர்களின் இடையே ஜமீந்தார் சிவலிங்கம் மிக உற்சாகமாக. அப்பொழுது வி.கே.ஆர். தன் மனைவியோடு வர சிவாஜிக்கு அதிர்ச்சி. முகம் கொடுத்துகூட பேசுவதில்லை. அவரை விட்டு விட்டு மற்ற விருந்தினர்களை சிவாஜி இன்முகத்துடன் உபசரிக்க, வி.கே.ஆர்.ருக்கு அவமான உணர்ச்சி ஏற்பட, அவர் சிவாஜியை தனியாக அழைத்து, " சிவா, உனக்கு பிடிக்காவிட்டால் நான் சென்றுவிடுகிறேன்" என்று சொல்ல, அதற்கு சிவாஜி " ஏண்டா, இப்படி எல்லாம் பேசுகிறாய் "
வி.கே.ஆர் >> நான் இங்கு இருப்பது உன் கவுரவத்திற்க்கு குறைவாக இருந்தால், நாங்கள் உடனே போய் விடுகிறோம்.
சிவாஜ் : ஏன்டா இப்படி எல்லாம் உளருகிறாய் ?
வி : ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏரும். வண்டீயும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.
சி : தயவு செய்து என் மானத்தை வாங்காதே
இப்படியாக இருவருக்கும் வாக்கு முற்ற , வி.கே.ஆர். கோபத்தின் உச்சியில் சந்திரகாந்தாவின் பிறப்பின் ரகசியத்தை எல்லார் முன்னிலையிலும் உடைக்க, அங்கு ரணகளமாகிறது. வி.கே.ஆர். சிவாஜியை ஒரு நன்றி கெட்டவன் என்று பழித்து.. " உன் குடும்பத்தின் மேன்மைகாக நான் எக்தனையோ உதவிகளை செய்துள்ளேன். ஆனால் நீயோ, ஒரு நன்றி கெட்டவன்.. உன் குழந்தைகளின் பிறப்பு சார்ந்த ரகசியத்தினை என் மனைவிக்குகூட இன்றுவரை நான் சொல்லவில்லை. அது உன் குல கவுரவதிர்காக. ஆனால் , நீயோ, என்னை மதிக்கவில்லை. உன் பணக்கார திமிர் , ஆணவத்தினால் நம் பழைய ச்னேகிதத்தை மறந்துவிட்டாய்.
வி.கே.ஆர். ஜானகியிடம் மன்னிப்பு கேட்கும் தருவாயில் " நான் இந்த உண்மையை ஏன் சொன்னேன் ? என் மகனுக்கு உன் பெண்ணை கொடுக்கவில்லை என்பதற்காக அல்ல. உன் கணவனை பிடித்து ஆட்டுகிறதே அந்த அந்தஸ்து எஙிற பேய் , அது ஒழிய வேன்டும். அதற்காக தான் " என்று சொல்லி அஙிருந்து சென்றுவிடுகிறார். நிச்சயதார்ததிற்காக வந்த அனைவரும் கலைந்து செல்ல, அதிற்ச்சி / கோபத்தின் உச்சியில் சிவாஜி.
தொடரும்..
-
17th May 2014, 09:18 AM
#1365
Junior Member
Newbie Hubber
பார் மகளே பார் - கதை பகுதி - 5
http://i949.photobucket.com/albums/a...s/Image022.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage066.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image025.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image024.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage067.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage068.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage070.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image023.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image026.jpg
நிச்சயதார்தம் நடைபெறாமல் போக அவமானம். 18 வருடமாக தன் அருமை மனைவி ஒரு மாபெரும் ரகசியத்தை மறைத்துவிட்டாளே . இத்தனை காலமும் தன் மாளிகையில் இருந்து குழந்தைகளுக்கு பணி புரிந்த எம்.ஆர்.ராதா ஒரு பெண்ணின் மாமா. தன் பால்ய நண்பன் அனைவரின் முன்னிலையிலும் தன்னை கேவலப்படுத்திவிட்டான். சமூகத்தில் தனக்கு என்று ஒரு தனி அந்தஸ்து உண்டு. தன் பெண்களில் ஒருத்தி தன்னுடையவள் இல்லை. சக தொழிலபதிகர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்று அவமான உண்ர்ச்சி >>> இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஜமீந்தார் சிவலிங்கம் வீட்டில் நிம்மதியில்லாமல் தவிக்கிறார்.
ஜானகி எவ்வளவோ மன்றாடியும் சிவாஜியின் கோபம் முற்றிலுமாக அவர் பக்கம் சாய்கிறது.. " என் நண்பனுக்கு தெரிந்த ஒரு பெரிய ரகசியம் ஏன் எனக்கு தெரிவிக்கப்படவில்லை ? இனி நீ எனக்கு மனைவியில்லை. பெயரளவிற்கு தான் நம் உறவு "இரண்டு பெண்களும் மன்றாடியும் சிவாஜிக்கு கோபம், குழப்பம் தீரவில்லை. ஆத்திரத்தின் உச்சியில் அவர் எம்.ஆர்.ராதா.வை வீட்டை விட்டு விரட்ட, ராதா நடுதெருவில்.வீடே களையிழந்து கிடக்க, அருமை சகோதரிகள் இருவரும் தாம் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவரி விட்டுக்கொடுப்பதில்லை என்று தீர்மானமாக இருக்கின்றனர்.
தன்னுடைய உண்மையான குழந்தை யார் என்று தெரியும்வரை சிவாஜி ஓயமாட்டார். இந்த ப்ரச்னை தீரும்வரை வீட்டில் பழைய பொலிவும், உற்சாகமும் வராது என்று விஜயகுமாரி எண்ணி, தானே வீட்டை விட்டு ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறார்.
சில நாட்களுக்குப்பின் ஒரு வயதான பெண்மணி, சிவாஜியின் முன் வந்து " நான் தான் அந்த சுலோசனா. என் பெண் இங்கு தான் வளர்வதாக கேள்விப்பட்டேன். தயவுசெய்து அவளை எனக்கே கொடுத்துவிடுங்கள். அவளுக்கு கழுத்தில் ஒரு மச்சம் இருக்கும். இது தான் அவளின் அடையாளம் " என்று சொல்ல சிவாஜி துள்ளிக்குதித்து , " அந்த பெண் எங்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் எங்களிடம் சொல்லாமலே. இனிமேல் அவளுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது " என்று ஆத்திரமாக சொல்லி அந்த வயதான பெண்ணை அனுப்பிவிடுகிறார். இது தான் உண்மை என்று நம்பி, சிவாஜியோ மிகுந்த உற்சாகத்தில் மிதக்கிறார். " குணாதியசங்களை கொண்டே சொல்லிவிடலாம். என்னுடைய குணாதிசயங்கள் அனைத்தும் கொண்டவள் காந்தா. அவள் தான் என்னுடைய மகள்." என்று நிம்மதியடைய ஜானகியோ கண்ணீருடன். தன் சகோதரி எங்கே போனாள் என்று காந்தாவுக்கு கவலை.
சில நாட்களுக்குப்பின், போலிஸ் சிவாஜியை கண்டு ஒரு பெண்ணின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடைத்தது தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் அனைத்து உடைகள், அடையாளங்கள் சந்திராவை ஒத்தவை என்று ஒரு குண்டை தூக்கிபோட , சிவாஜி இந்த அனைத்து ப்ரச்சனை ஒரு முடிவிற்கு வந்ததுபோல உணர்கிறார். வீடோ துக்கம் அனுஷ்டிக்கிறது. மீளாத துயரத்தில் ஜானகியும், புஷ்பலதாவும். " நாம் வளர்த்த பாசத்திற்காக சந்திராவுக்கு எல்லா காரியங்களும் செய்யவேண்டும் " என்று ஜானகி கெஞ்ஜ , சிவாஜி அனுமதி அளிக்கிறார். எல்லா அனுஷ்டானங்களும் முடிந்தபின், சிவாஜி, புஷ்பலதா / ஜானகியிடம் , " இனிமேல் இவ்வீட்டில் சந்திராவை பற்றி யாரும் பேசக்கூடாது . அவள் கொண்ட எல்லா தொடர்பும் முடிந்தது " என்று கடுமையாக சொல்லி வீட்டில் உள்ள சந்திராவின் படத்தையும் எறியச்சொல்கிறார். மீளாத துக்கத்தில் ஜானகி படுத்த படுக்கையாகிறார்.
தொடரும்..
Par magale par - Story - Part - 6
பார் மகளே பார் - கதை பகுதி - 6
http://i949.photobucket.com/albums/a...Image071-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image072-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image073-1.jpg
உண்மையில் சந்திரா இறக்கவில்லை. அவர் ஒரு தொண்டு நிருவனத்தில் அடைக்கலம் புகுந்து அமைதி தேடுகிறார். அதை நடத்தும் மாதுவிடம் தன்னைப்பற்றி சொல்லி யாரிடமும் உண்மையை சொல்ல வேண்டாம் என்று வேண்ட, அம்மாதுவும் மனமிரங்கி அவருக்கு ஒரு ஆசிரியர் வேலை கொடுக்குறார்.
முத்துராமனுக்கு, தன் நிச்சயதார்த்தம் நின்று போனதில் வருத்தம் . ஆனால் அவர் சந்திராவை விரும்பியது அவர் ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. நல்ல குணங்களும் பண்பும் அவரை கவர்ந்த காரணத்தாலே அவரை மணக்க விரும்பினார். இதை தன் தாயிடமும் சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.
இதற்கிடையே காந்தாவிற்கு தன் தந்தையின் போக்கு பிடிக்காமல் அவர் மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டு, அவர் ஒரு தீர்கமான முடிவுக்கு வருகிறார். அதாவது , எந்த உயிர் நண்பரான வி.கே.ஆர்.ரை அவர் ஏழையாகிவிட்டார் என்ற காரணத்திற்காக அந்தஸ்து, கவுரவம் பார்க்கும் தன் தந்தையை பழி வாங்குவதற்காக , அவர், வி.கெ.ஆர்.ரின் மகனான ஏ.வி.எம்.ராஜனை மணக்கப்போகிறேன் என்று அவரையும் அழைத்து வந்து சபதமிடுகிறார். இந்த போக்கு ஜானகிக்கு துளி கூட பிடிக்கவில்லை. தந்தையின் மனம் நோகும்படி எதையும் செய்யாதே என்று அடிக்கிறார்.
ஒரு நாள், எம்.ஆர்.ராதாவும், கருணாநிதியும் , அந்த போலி சுலோசனாவை இழுத்து வந்து சிவாஜியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லவைக்கிறார். அதாவது, தன்னுடைய அங்க அடையாளங்களை ஒரு சாட்சியாக வைத்து, தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தினையும், கவுரவத்தை நிலைநாட்டவும் காரணமாக்கொண்டு விஜயகுமாரியே ஒரு பொய் சொல்லச்சொல்லி வற்புறுத்தியதால் தான் , குடும்ப நன்மைக்காக இதை செய்யச்சொன்னார் என்று அந்த போலி சுலொசனா அனைதையும் சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.
இதை கேட்டவுடன் சிவலிஙகத்திற்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தன் குடும்ப கவுரவத்தையும், அந்தஸ்தையும் காப்பாற்றுவதற்காக அந்த அபலை பெண் செய்த மாபெரும் தியாகத்தினை எண்ணி மனம் நெகிழந்து துடிக்கிறார். முத்துராமனுக்கு தன் காதலி இறந்த செய்தி கிடைக்க அவரும் கதறுகிறார். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார்.
ஜானகியின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.
கதை பகுதி அடுத்த பதிவில் முடியும்..
நண்பர்களே,
இந்தப்பதிவோடு இணைக்கப்பட்ட மூன்று புகைப்படங்களை சற்று பாருங்கள் ! உங்களுக்கு அதன் பிண்ணனி புரியும் உடனே ! . அவை வேறு எந்த தருணத்தில் தெரியுமா ?
அந்த போலி சுலோசனா உண்மையை சொல்லும் கட்டம் தான் !
அனைத்தும் பொய் என்று அறிந்ததும் ஒரு அதிர்ச்சி
தன்னுடைய கவுரவம், அந்தஸ்து எல்லாவற்றையும் காப்பாற்றத்தான் அந்த அபலை ஒரு தியாகத்தினை செய்துள்ளாள் என்று அறிந்ததும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி !
உடனே >>> ஓ ஓ.. தன் அருமை பெண் இப்போது நம்மிடையே இலையே. இந்த உலகத்தை விட்டே போய்விட்டாளே என்ற நிலையை மனத்தில் எண்ணி கண்ணீர்.
இந்த மூன்று நிலைகளையும் மின்னல் வேகத்தில் , அதாவது 5 நொடிகள் தான் எடுத்துகொள்கிறார்.
எத்தகைய வியத்தகு வெள்ளிப்பாடு ! பல்கலைகழகம் அல்லவா அவர் ! நடிப்புக்கு ஒரு திலகம் என்று கன்னட நடிகர் திரு ராஜ்குமார் வியந்து போற்றிய ஒரு திலகம் அல்லவா நம்மவர்!
Par magale par - Story - part 7
பார் மகளே பார் - கதை பகுதி - 7
http://i949.photobucket.com/albums/a...Image074-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image075-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image076-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image079-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image080-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image081-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image082-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image083-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image084-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image085-2.jpg
சந்திராவை முத்துராமனால் மறக்க முடியவில்லை. சந்திராவை விரும்பியது ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. எனவே அவரின் அன்பு துளிகூட குறையவில்லை. தன் தாய் காந்தாவையாவது மணந்துகொள் எனறதையும் அவர் ஏற்கவில்லை. எம்.ஆர்.ராதாவை தன் நண்பராக ஏற்றுக்கொண்டு அவர் போகுமிடமெல்லாம் அழைத்து செல்கிறார்.
அவர் பணி காரணமாக ஒரு ஆசிரமத்திற்கு செல்ல அங்கு ஆசிரியராக சந்திராவை பார்த்து அதிற்ச்சி. ஆனால் தலைமை அதிகாரி அவரின் பெயர் சாரதா என்றும் அவர் சிறு வயதிலிருந்தே அங்கு தான் வளர்ந்தவர் என்றது ஒரே குழப்பம். முத்துராமனும் எம்.ஆர்.ராதாவும் அந்த தலைமைகாக்கும் மாதுவிடம் எல்லா நடந்தவைகளையும் சொல்ல இந்த அனைத்தினயும் சந்திரா மறைவிலிருந்து கேட்டு மிகவும் வருந்துகிறாள் . அதிலும் தான் தந்தை நிம்மதி இழந்து தவிப்பதையும் தன் தாய் நோய்வாய்பட்டு கிடைப்பதையும் தன் சகோதரி தன் வழியில் செல்வதையும் கேள்விப்பட்டு ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது, தான் அருகிலிருந்தால் எப்போதாவது அவர்களை பார்க்கும் தவிப்பு ஏற்ப்பட்டுகோண்டே இருக்கும் எனவே அவர்களின் பார்வையிலிருந்தே முற்றிலுமாக சென்றுவிடமேன்று முடிவு செய்து மன்றாட, அவரை கல்கத்தாவிற்கு சென்று சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.
சிவலிங்கமோ முற்றிலும் நிம்மதி இழந்து அமைதியில்லாமல் இருக்கிறார். மகள் தன் அருகில்லில்லை. மனைவியோ படுத்த படுக்கை. தான் செய்த தவறுகளுக்காக வருந்துகிறார்.
எம்.ஆர்.ராதாவிற்கு ஒரு சந்தேகம் எப்போதும் இருந்த வருகிறது. அதாவது தான் பார்த்த பெண் சந்திராதான் என்று ஒரு சந்தேகம். அவர் சதாகாலமும் அந்த ஆசிரமத்தையே சுற்றித்திரிய அப்போது சந்திரா தலைமை அம்மையிடம் உண்மையினை உரைத்து தான் கல்கட்த்தா போகும் செய்தியினை கேட்டு உடனே ஓடோடி முதலில் முத்துராமனிடம் சொல்ல இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் சிவாஜியிடம் சென்று சொல்கின்றனர்.
செய்திகேட்ட சிவலிங்கம் உன்மத்தரைப்போல உற்சாகம் கொண்டு ஓட , ஒரு சாலையில் தற்செயலாக சந்திராவின் கார் ( கல்கத்தா செல்லும் வழியில் ) சிவாஜியை தாக்க, சிவாஜி அடிபட்டு விழ சந்திரா , அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க , அவருக்கு ரத்தம் தேவைப்பட இரு பெண்களுமே அவருக்கு ரத்தம் அளிக்க , உடல் குணமாகி சிவாஜி, தான் செய்த தவறுகளுக்கும் , அந்தஸ்து என்ற மாயையிலுருந்து தான் வெளியே வந்துவிட்டேன் என்று ஒப்புக்கொண்டு , தன் அருமை பெண்கள் இருவரையும் ஒன்று சேர்ந்து பாசத்துடன் இணைத்துகொண்டு, வி.கே.ஆர்.ரிடன் மன்னிப்பு கேட்டுகொண்டு அவருடைய மகனான ராஜனுக்கு மணமுடிக்கிறார் காந்தாவை.
சந்திராவை முத்து கரம்பிடிக்க ...............சுபம்.
அடுத்து நாம் காண இருப்பது--- படத்தின் மற்ற சிறப்பு அம்சங்கள்
Last edited by Gopal.s; 17th May 2014 at 04:36 PM.
-
17th May 2014, 10:49 AM
#1366
Senior Member
Senior Hubber
பார் மகளே பார் வெகு சின்ன வயதில் பார்த்த படம் கோபால்.. .. அதன் பிறகு ஒரு தடவை தான் பார்த்திருக்கிறேன் ந.தியின் பெயர் சிவலிங்கம் என்பது நினைவிலில்லை.
வெகு அழகாகக் கதை எழுதியிருக்கிறீர்கள்..மறுபடியும் படத்தைப் பார்த்தாற்போலவே இருக்கிறது.. அந்த முதல் சீனில் உறைந்து போயிருந்திருக்கிறேன்.. என்ன அழகாக ஸ்டார்ட் அண்ட் பின் மெல்ல மெல்ல ந.தியின் குணாதிசயம்..
கடைசியில் இன்னார் தான் மகள் என்று சொல்லாமலேயே முடித்திருப்பதும் அழகு (அப்படித் தானே)
மிக்க நன்றி..மீண்டும் பார்க்க வேண்டும்..( அந்த லிங்க்ஸ் வேலை செய்யவில்லை..)
-
17th May 2014, 04:39 PM
#1367
Junior Member
Newbie Hubber
பார் மகளே பார் - கதாநாயகன் - சிவாஜி கணேசன்
http://i949.photobucket.com/albums/a...ofImage066.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image026.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image012.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image007.jpg
http://i949.photobucket.com/albums/a...Image005-1.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage048.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage067.jpg
http://i949.photobucket.com/albums/a...Image075-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image076-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image080-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image071-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image073-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image081-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image085-2.jpg
இப்படம் முற்றிலும் நடிகர் திலகத்தை பல கோணங்களில் காணலாம்:
முதல் காட்சியிலேயே நம்மை கவர்ந்துவிடுவார் ! நண்பர்களுடன் பில்லியர்ட்ஸ் ஆடுவது போல துவங்கம் அவர் வரும் காட்சி. ஒரு நடனமங்கை உங்களை பார்க்கவேண்டுமென்று விரும்புகிறார் என்று பணியாளர் சொன்ன உடனே முகபாவம் சற்று கோபமாக மாறி அந்த மனிதரை அனுப்பிவிடும் விதமே நமக்கு ஒரு செய்தி தரும்.....இவர் மற்றவர்களை போல இல்லை..மாறுபட்டவர் என்று !
தன் மனைவிக்கு ப்ரசவ வேதனை என்று செய்தி கிடைத்ததும் ஒரு வேகம்....
மருத்துவமனையில் தன் மனைவியை கண்டதும் ஒரு அன்பான அரவணைப்பு...
அருகில் 2 குழந்தைகளை கண்டதும்...." ஓ இரட்டை பிறவிகளா " என்று உற்சாகம்.
நண்பனின் போக்கு பிடிக்கவில்லை என்பதில் ஒரு தீர்மானமான முடிவு...அவர் அதில் காட்டும் கடுமை..ஒரு கைதேர்ந்த தொழிலதிபர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு...
குழந்தைகளிடம் அளவற்ற அன்பு....அதே சமயம் அவர்களிடம் ஒரு கண்டிப்பு...அவர்களை வளர்க்கும்விதத்தில்
தானாக வளர்த்துகொண்ட அந்தஸ்து என்ற பிடிவாத குணம்....அதனால் வெளிப்படுத்தும் ஒரு பெரிய மனிதனை போன்ற நடை, உடை , பாவனை
பணியாளர் கருணாநிதியிடம் முதலில் கண்டிப்பு.....
தன் பெண் ஒரு நல்ல குடும்பதை சேர்ந்த வாலிபனை மணக்க விரும்புகிறாள் என்றதும் ஒரு உற்சாகம், முத்துராமனிடம் சாதாரணமாக உரையாடத்துவங்கி உடனே தன் போக்கை மாற்றிக்கொள்ளும் விதம்..
ஒரு பெண் தன்னுடையவள் இல்லை என்று வி.கே.ஆர். சொன்னதும் ஒரு சீற்றம்..அதிற்ச்சி...
தன் அருமை மனைவி கூட தன்னிடம் மறைத்துவிட்டாளே என்று வெறுப்பு...
முதல் பெண் விஜயகுமாரி தன் மகள் இல்லை என்ற செய்தி கிடைத்ததும் ஒரு நிம்மதி..
பின் அவளை பற்றிய செய்தி அனைத்தும் தவறானது என்றதும் மீண்டும் பொங்கி எழும் ஒரு தந்தையின் பாசம். அன்பு.
ஆனால் அவள் இறந்து விட்டாளே என்று தாங்கமுடியாத சோகம்..அவலை நினைத்து நினைத்து வாடுவது... மனைவி படுத்த படுக்கையாகிவிட்டாளே என்று துயரம்..இயலாமை....
முடிவில் தன் பெண்ணை கண்டதும் சந்தோஷம்..மகிழ்ச்சி...
நண்பணிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு பழைய நட்பின்படி, தன் பெண்ணை நண்பனின் மகனுக்கே மணமுடித்தல்.............
இப்படி ஒரு கம்பீரத்துடன் துவங்கும் அவர், படிபடியாக தளர்ந்து தான் கொண்ட அந்தஸ்து, கவுரவம்..என்ற கோட்பாட்டிலிருந்து வரும் அவர் தான் படத்தின் நாயகன்...
உண்மையிலேயே தன் சொந்த பெண்ணை பறிகொடுத்தவர் போல துடிக்கும் காட்சி தான் தலை சிறந்த நடிப்பு...
மின்னல் வேகத்தில் அவர் காட்டும் முகமாற்றம் இப்படத்தின் சிறப்பு..
அவருடைய நடை , உடை , பாவனையிலேயே ஒரு பணக்கார தொழிலதிபரின் எல்லா குணாதிசயங்களையும் காணலாம்.
படத்தின் 3/4 பகுதி புகை பிடிப்பது போல ஒரு அமைப்பு... அதில் பாதி பகுதி அதை பிடித்துக்கொண்டே பலவிதமாக பேசும் ஸ்டையில் !
வடநாட்டு ஆடையான குர்தா-பைஜாமா ...இந்த உடையை அவர் பொது வாழ்க்கையில் எப்போதும் பயன்படுத்துவார்...இப்படம் முழுவது அதுதான் அவரின் உடை ! ஒரு அழகான குருந்தாடி கூட.!
34 வயதில் ஒரு நடுத்தர/ வயதான வேடம் செய்ய யாருக்கு தான் துணிச்சல் வரும்...
காதலி...மனைவியுடன் ஆடிப்பாட காதல் பாட்டு கிடையாது....
இப்படி படம் முழுவதும் ஆக்ரமித்துக்கொள்ளும் நம் நடிகர் திலகத்தின் திறமையை பற்றி எழுத ஒரு கட்டுரையே வேண்டும்
காலத்தை வென்ற நடிப்பு... நடிகர்களின் திலகம் தான் இவர் !
Thanks to Irene Hastings.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th May 2014, 08:49 AM
#1368
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
89. Par Magale Par பார் மகளே பார்
வெளியீடு 12.07.1963
தயாரிப்பு –கஸ்தூரி பிலிம்ஸ்
பட்டு எழுதிய பெற்றால்தான் பிள்ளையா என்ற நாடகத்தைத் தழுவியது
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, முத்துராமன், சௌகார் ஜானகி, விஜயகுமாரி, புஷ்பலதா, ருக்மணி,
ராஜன், வி.கே.ராமசாமி, ஏ.கருணாநிதி, தங்கராஜ், ஜெமினி பாலு, கே.கே.சௌந்தர், மற்றும்
புதுமுகம் சோ
மனோரமா, எஸ்.ஆர்.ஜானகி, சீதாலட்சுமி, தாம்பரம் ல்லிதா, எம்.எஸ்.எஸ்.பாக்கியம், ராதாபாய்
மற்றும் பலர்
திரைக்கதை – வலம்புரி சோமனாதன்
வசனம் ஆரூர்தாஸ்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், யோகி சுத்தானந்த பாரதியார்
பாடியவர்கள்
டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எல்.ராகவன், எம்.எஸ்.ராஜு, பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும்
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
பாடல்கள் ஒலிப்பதிவு ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி – மெஜஸ்டிக் உதவி ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ்
வசனம் ஒலிப்பதிவு – லோகநாதன் – நியூடோன், ஜி. மோஹன் – பரணி
ஒளிப்பதிவு உதவி – டி.எஸ்.பாண்டியன், எஸ்.கே.அன்வர்ஜான், ஆர்.விஜயராகவன், கே.எஸ்.மணி
நடனம் – பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், சின்னி-சம்பத்
மேக்கப் – ஹரிபாபு, ரங்கசாமி, கஜபதி, பத்ரையா, கிருஷ்ணராஜ், வீர்ராஜ், எஸ்.வி.மாணிக்கம்.
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், ஒய்.வெங்கட்ராவ்
கலை – கங்கா
செட்டிங்ஸ் – ராம. சண்முகம்
கார்பெண்டர்ஸ் – என்.கிருஷ்ணன், வி.கண்ணன், பாலசுந்தரம்
பெயிண்டிங்ஸ் – ஆர்.முத்து, ஆர்.ராதா, மாணிக்கம்
எலக்ட்ரீஷியன் – டி.என்.பி. மூர்த்தி
ப்ரோக்ராம்ஸ் – வி.சுப்பையா, ஏ.சுந்தர்ராஜன், என்.எஸ்.நாகப்பன்
அவுட்டோர் யூனிட் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் பி.லிட்.
செட் ப்ராபர்டீஸ் – சினி கிராஃப்ட்ஸ்
பப்ளிசிடி – எலிகண்ட்
ஸ்டில்ஸ் – ஏ.சிம்மையா, சி.பத்மனாபன்
ப்ராஸஸிங் – சர்தூல் சிங் சேத்தி
எடிட்டிங் மேற்பார்வை – ஏ.பீம்சிங்
எடிட்டிங் – ஏ.பால்துரைசிங்கம், ஆர்.திருமலை உதவி – பி.எஸ்.பிரகாஷ், ஜி.என்.ரங்கராஜ், பி.ஸ்டான்லி, ஹெச்மோஹன்
புரொடக்ஷன் நிர்வாகம் – எம்.வி. உமாபதி, சிட்டிபாபு
ஸ்டூடியோ – பரணி நிர்வாகம் ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ், நியூடோன்
ஆர்.சி.ஏ. முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
உதவி டைரக்ஷன் – ஆர்.திருமலை, ஜி.எஸ்.மகாலிங்கம், ஆர்.சடகோபன்
கண்டின்யுடி – டி.பி.அருணாசலம், எஸ்.எஸ்.மணி
ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்
தயாரிப்பு – வி.சி.சுப்புராமன்
இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
உதவி கோவர்த்தனம் ஹென்றி டானியல்
டைரக்ஷன் – ஏ.பீம்சிங்
First Release Ad : The Hindu : 10.7.1963
50th Day Ad : The Hindu : 30.8.1963
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th May 2014, 08:52 AM
#1369
Senior Member
Seasoned Hubber
கோபால் சுட்டிக் காட்டியது போல் ஐஹீன் ஹேஸ்டிங்ஸ் ... (உங்கள் இயற் பெயர் என்ன சார்) அவர்களின் விரிவான ஆய்வு ஒன்றே போதும் பார் மகளே பார் திரைப்படத்தின் சிறப்பை எடுத்துரைக்க...
Hats Off Irene Hastings...
Link for Irene Hastings' Post:
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post458344
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post458383
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st May 2014, 07:56 AM
#1370
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
90. Kungumam குங்குமம்
தணிக்கை 19.07.1963
வெளியீடு 02.08.1963
தயாரிப்பு – கே. மோஹன் (மோஹன் ஆர்ட்ஸ்) - ராஜாமணி பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், விஜயகுமாரி, சாரதா, எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், எஸ்.வி.ரங்காராவ், எம்.வி. ராஜம்மா, மனோரமா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், நாகேஷ், ஓ.ஏ.கே. தேவர், ஆர். பாலசுப்ரமணியம் மற்றும் பலர்
கதை நிஹர் ரஞ்சன் குப்தா
திரைக்கதை வசனம் – சக்தி கிருஷ்ணசாமி
இசை – கே.வி. மகாதேவன், உதவி புகழேந்தி
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், உதவி பஞ்சு அருணாச்சலம்
ஒலிப்பதிவு – பாடல்கள் T.S. ரங்கசாமி – மெஜஸ்டிக்
ஒலிப்பதிவு – வசனம் – வி.சி.சேகர் – நெப்டியூன்
ரீ ரிக்கார்டிங் – எஸ்.பி. ராமநாதன், ஏவி.எம்.
மேக்கப் – ஹரிபாபு, ரங்கசாமி, சுந்தரம், ராமசாமி
உடை – பி.ராமகிருஷ்ணன்
நடனம் – ஏ.கே. சோப்ரா, ரத்தன் குமார்
கலை – கே.மோஹன் – மோஹன் ஆர்ட்ஸ், உதவி – ஜெமினி ராமானுஜம், ஏழுமலை
ப்ராசஸிங் – சர்தூல் சிங் சேத்தி
எடிட்டிங் – எஸ். பஞ்சாபி, ஆர். விட்டல்
விளம்பரம் – மோஹன் ஆர்ட்ஸ், எலிகண்ட்
ஸ்டூடியோ – நெப்டியூன், சென்னை 28
ஸ்டில்ஸ் – ஜி.முருகேசன்
புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் – வி.எஸ். ராமு
ஆபீஸ் நிர்வாகம் – சி.பாலசுந்தரம், என்.கிருஷ்ணசாமி
புரொடக்ஷன் மேனேஜர் – முகிலன்
ஒளிப்பதிவு – எஸ். மாருதி ராவ்
டைரக்ஷன் – கிருஷ்ணன் பஞ்சு
குங்குமம் விளம்பர நிழற்படங்கள்.. ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...
First Release Ad : The Hindu : 28.7.1963
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.8.1963
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks