-
30th September 2013, 08:34 AM
#1181
Senior Member
Seasoned Hubber
-
30th September 2013 08:34 AM
# ADS
Circuit advertisement
-
30th September 2013, 01:35 PM
#1182
Senior Member
Veteran Hubber
பாவமன்னிப்பு ஆவணப் புதையலை அள்ளித்தந்த ராகவேந்தர் சார் அவர்களுக்கும், பம்மலார் சார் அவர்களுக்கும், இதயவேந்தன் வரலாற்றுச்சுவடு இதழின் ஆசிரியர் கா. வந்தியத்தேவன் அவர்களுக்கும் மிக்க நன்றி.
தங்கள் அனைவரின் உழைப்பாலும் வரலாறு புதுப்பிக்கப் படுகிறது.
-
30th September 2013, 02:42 PM
#1183
Junior Member
Newbie Hubber
Originally Posted by
mr_karthik
தங்கள் அனைவரின் உழைப்பாலும் வரலாறு புதுப்பிக்கப் படுகிறது.
வரலாறு புதுப்பிக்க படவில்லை. நினைவுறுத்த படுகிறது.
புதுப்பிக்க படுவது வேறொரு இடத்தில். 1956 இல் ஒரு படம் 150 திரையரங்குகளுக்கு மேல் 50 நாட்கள் ஓடியதாய்.. அன்று முதல் ரிலீசில் படங்கள் 35 திரையரங்குகளுக்கு மேல் வெளியானதே இல்லை.
-
30th September 2013, 04:17 PM
#1184
Senior Member
Seasoned Hubber
1961ம் ஆண்டில் வெளிவந்த, நடிகர் திலகத்தின் புகழ்க் கிரீடத்தில் மற்றோர் வைரக்கல்லாக மின்னும் ...
புனர் ஜென்மம்
அடுத்ததாக...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd October 2013, 09:16 PM
#1185
Senior Member
Seasoned Hubber
பாவ மன்னிப்பு ,,,, நிறைவு செய்யும் முன் ..
இது வரை இணையத்தில் அதிகம் தென்பட்டிராத தகவல் மற்றும் நிழற்படம்
இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை உருவாக்க மெல்லிசை மன்னருக்குத் தேவைப்பட்ட காலம் ஆறு ஆண்டுகளும் 15 நாட்களும் ...
என்ன வியப்பாக உள்ளதா...
இப்படித் தான் மெல்லிசை மன்னர் கேட்கிறார்..
பாவ மன்னிப்பு பாடல் பதிவிற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பாடலை கண்ணதாசன் எம்.எஸ்.வி.யிடம் தந்து ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பயன் படுத்திக் கொள்ள சொல்கிறார். அதை அப்படியே செய்வதாக சொல்லியிருந்தார் மெல்லிசை மன்னர். பாவ மன்னிப்பு படத்தில் ஒரு பாடலுக்கு வெகு நேரமாக யோசித்தும் மெட்டு புலப்படவில்லை. ஹார்மோனியத்தில் கண் வைத்தவாறு யோசனை செய்கிறார் மெல்லிசை மன்னர். கண்ணதாசன் ஆறு ஆண்டுகளுக்கு முன் தந்த பாடல் நினைவுக்கு வருகிறது. அப்பாடலை எடுத்து பார்க்கிறார். சிந்திக்கிறார்.
இரவு நேரங்களில் சாந்தோம் கடற்கரையிலிருந்து மீனவர்கள் முன்னிரவு நேரத்தில் ஏதோ ஒரு பாடலை பாடிய படி பொழுதைக் கழிக்கின்றனர். நெஞ்சை வருடிச் செல்லும் அந்த இனிய பாடல் அவருக்கு நினைவுக்கு வருகிறது. அதனை எண்ணிய படியே அப்போதைக்கு பாடல் பதிவு ஒத்திவைக்கப் படுகிறது. பிறகு மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒரு ஆங்கிலப் படத்திற்கு செல்கின்றனர். திரைப்படம் துவங்கும் முன் ஆங்கிலப் பாடல் அல்லது இசை ஒலிக்கும். அன்று ஒலித்த அந்த இசையைக் கேட்டு அவர்கள் வியப்புறுகின்றனர். அந்த செம்படவர் பாடிய அதே மெட்டில் இந்த ஆங்கிலப் பாடல்... பொறி தட்டுகிறது...
மீண்டும் கவியரசரை அழைக்கிறார்கள். அமர்கிறார்கள். அந்த இரு ட்யூனின் அடிப்படை இனிமையினையும் மென்மையினையும் மட்டும் எடுத்துக் கொண்டு புதியதாக ஒரு மெட்டை உருவாக்குகிறார்கள். கவியரசர் பாடல் வரிகளை சொல்லச் சொல்ல எண்ணி 15வது நிமிடத்தில் பாடல் உருவாக்கம் முடிந்து விட்டது.
ஆறு ஆண்டுகள் 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்ட அப்பாடல் எது ... தெரியுமா...
விடையைச் சொல்ல முயலுங்கள். அது வரை இந்த அபூர்வமான நிழற்படத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd October 2013, 02:34 AM
#1186
Senior Member
Senior Hubber
Athan ennathan avar ennaithaan padal thaan sir
-
3rd October 2013, 05:29 AM
#1187
Junior Member
Senior Hubber
Originally Posted by
rajeshkrv
Athan ennathan avar ennaithaan padal thaan sir
Is it KALANGALEL AVAL VASANTHAM;; my guess.
-
4th October 2013, 08:01 AM
#1188
Senior Member
Seasoned Hubber
ராஜேஷ்,
இச்செய்தியைத் தாங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சரியான விடையைச் சொல்லி விட்டீர்கள். பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th October 2013, 08:02 AM
#1189
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
68. புனர் ஜென்மம் PUNAR JENMAM
தணிக்கை 17.04.1961
வெளியீடு 21.04.1961
தயாரிப்பு – விஜயா பிலிம்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஏ.தங்கவேலு, ராகினி, டி.ஆர்.ராமச்சந்திரன், கண்ணாம்பா, எம்.ஆர்.சந்தானம், சுந்தரிபாய், சாயிராம், பக்கிரிசாமி, புளிமூட்டை ராமசாமி மற்றும் பலர்
தயாரிப்பு – என்.எஸ். திரவியம், விஜயா பிலிம்ஸ்
சங்கீதம் – டி.சலபதிராவ்
துணை டைரக்டர் – கே.எம். நாராயணன்
திரைக்கதை வசனம் – ஸ்ரீதர்
கலை – கங்கா
ஒளிப்பதிவு டைரக்ஷன் – ஏ.வின்சென்ட்
ஒளிப்பதிவு – பி.என். சுந்தரம்
மேக்கப் – ஹரிபாபு, தனக்கோடி, திருச்சி முத்து
நடன ஆசிரியர்கள் – ஹீராலால், மாதவன், ஸோஹன்லால்
ஒலிப்பதிவாளர்கள் – ஏ.கிருஷ்ணன், வி.சிவராம் – வாஹினி, டி.எஸ்.ரங்கசாமி – மெஜஸ்டிக், ஜீவா – அருணாச்சலம் ஸ்டூடியோ
ரிக்கார்டிஸ்ட் – டி..ஏ.ஜகன்னாதன், வாஹினி
பிராசஸிங் – விஜயா லேபரட்டரி – எஸ்.ரங்கநாதன்
செட்டிங்ஸ் – குப்புசாமி, டி..நீலகண்டன், கே.சீனிவாசன்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன்
ஸ்டில்ஸ் – திருச்சி அருணாச்சலம்
விளம்பரம் – எலிகண்ட் பப்ளிசிட்டீஸ்,
டிசைன்ஸ் - கே.நாகேஸ்வர ராவ், பக்தா
தயாரிப்பு நிர்வாகம் – ஏ.வி. சுந்தரம்
நிர்வாகம் – பி.எம்.ராமசாமி
எடிட்டிங் – பி.வி. நாராயணன்
ஸ்டூடியோ – விஜயா - வாஹினி
டைரக்டர் – ஆர்.எஸ். மணி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th October 2013, 08:04 AM
#1190
Senior Member
Seasoned Hubber
பாடல்களின் விவரம்
1. நானில்லை என்றால் ஆட்டமில்லை – கவிஞர் கண்ணதாசன் – சீர்காழி கோவிந்தராஜன், ஜானகி, சரசுவதி
2. எங்கும் சொந்தமில்லை – சுப்பு ஆறுமுகம் – பி.பி. ஸ்ரீநிவாசன்
3. மனம் ஆடுது ஆடுது – அ. மருதகாசி – ஜிக்கி, ஜானகி
4. உருண்டோடும் வாழ்வில் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – சுசீலா
5. கண்ணாடிப் பாத்திரத்தில் கல்லேறு பட்டது போல் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – சுசீலா
6. போதும் சரிதான் மிஸ்டர் – சுப்பு ஆறுமுகம் – பி.பி.ஸ்ரீநிவாசன், ஜிக்கி
7. என்றும் துன்பமில்லை – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – டி.எம். சௌந்தர்ராஜன்
8. உள்ளங்கள் ஒன்றாகி – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – சுசீலா, ராஜா
9. என்றும் துன்பமில்லை – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் - சுசீலா
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks