Page 139 of 185 FirstFirst ... 3989129137138139140141149 ... LastLast
Results 1,381 to 1,390 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1381
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சாரின் மேற்காணும் கட்டுரைக்கு சகோதரி சாரதா அவர்களின் பதில் பதிவு.
    இணைப்பு: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post367699
    டியர் முரளி,

    'இரத்ததிலகம்' பற்றிய ஆய்வு மிக அருமை.

    இப்படம் இந்திய சீன போரை மையமாகக் கொண்டதாயினும், போர் முடிந்தபின் எடுக்கப்பட்டது. (உ-ம்; நீங்கள் குறிப்பிட்ட பத்திரிகைச்செய்தி). ஆனால் போர் நடந்துகொண்டிருக்கும்போதே, நடிகர்திலகம் தன் சொந்த செலவில் 'சிங்கநாதம் கேட்குது' என்ற டாக்குமெண்ட்டரி படத்தை எடுத்து இலவசமாக வெளியிட்டார். இந்த டாக்குமென்டரியில் அப்போதைய பிரபல நடிகர்கள் (ஜெமினி, தங்க்வேலு உள்பட பலர்) இலவசமாக நடித்துக்கொடுத்தனர். தியேட்டரில் அரைமணி நேரம் ஒடும் இப்படம் எல்லாதிரையரங்குகளிலும் காண்பிக்கப்பட வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசால் உத்தரவிடப்பட்டு, அதன்படி தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் இடைவேளை முடிந்து, மெயின் படம் துவங்கும் முன்பாக காண்பிக்கப்பட்டது. அதிலும் தேசத்தலைவர்கள் பலர் காண்பிக்கப்பட்டனர். பார்த்த மக்கள் அனைவரும் தேசப்பற்றால் உந்தப்பட்டனர். யுத்தநிதியாக பணமாகவும், பொருட்களாகவும், நகைகளாகவும் அள்ளி வழங்கினர். நாடே ஒன்றுபட்ட நின்ற நேரம் அது. பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன், உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் ஆகியோரைக்கொண்ட பாதுகாப்புக்குழுவில், தி,மு,கவைச்சேர்ந்த நாஞ்சில் மனோகரனையும் இடம் பெற வைத்தார் அண்ணாதுரை.

    ஆனாலும், சுதந்திரம் பெற்றதிலிருந்து நமது பாதுகாப்புக்காக ராணுவத்தை பலப்படுத்த வேண்டும் என்று தேவையில்லாத நேரமாக இருந்ததால், அந்த போரில் இந்தியா தோற்றது. லடாக் பகுதி சீனர் வசமானது. (இந்தியா தோற்ற ஒரே போர் அதுதான்). அதன்பின்னர்தான் அண்டைநாடுகளின் வஞ்சக எண்ணத்தையறிந்த நேரு, ராணுவத்தை பலப்படுத்த முனைந்தார். நேருவின் உடல்நிலை பலவீனப்பட்டதற்கு சீனப்போரில் அடைந்த தோல்வியும் முக்கிய காரணம்.

    இந்நிலையில்தான் இந்திய சீனப் போரை மையமாக வைத்து கண்ணதாசன் இப்படத்தை தயாரித்தார். ஆனாலும் நீங்கள் சொன்ன பலகுறைகளோடு.... தேவையில்லாத, செயற்கையான கல்லூரிக்காட்சிகள். அதோடு 'ஒதெல்லோ' நாடகத்தின் நீளம் அதிகமானதால் திகட்டிப்போனது.

    ஆனாலும் போர்முனைக்காட்சிகள் உணர்ச்சியை ஊட்டின. 'பனி படர்ந்த மலையின்மேலே' பாடலின் ஒரு வரியில்...
    பண்பில் நிறைந்த மகன், வள நாட்டின் மூத்த மகன்,
    இருக்கின்றான் தாயே, ஏங்காதே என்றுரைத்தேன்
    என்ற வரிகளின்போது, தனது அலுவலக அறையில் இருக்கும் தொப்பியில்லாத நேருவைக்காண்பிக்கும்போது நம் உணர்ச்சிகள் எல்லையை மீறும். (ஓடுவது காங்கிரஸ் ரத்தமல்லவா?)

    சாவித்திரியின் சீனக்கணவராக வரும் சண்முகசுந்தரத்துக்கு இதுதான் முதல் படம். முதல் படத்திலேயே நடிகர்திலகத்துடன் நடித்ததை அவர் அடிக்கடி பெருமையாகச்சொல்வார். (பின்னர் 'கர்ணனில்' தேரோட்டி சல்லியனாக வந்து, போர்க்களத்தில் கர்ணனின் தேரை பள்ளத்தில் விட்டு விட்டுப்போகும் காட்சிதான் நமக்குத்தெரியுமே).

    படத்தில் இடம்பெறும் இன்னொரு இனிமையான பாடல், புஷ்பலதாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய 'வாடைக்காற்றம்மா... வாடைக்காற்றம்மா, வாலிப வயசு நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா'. அன்றைக்கு இலங்கை வானொலியில் பட்டையைக்கிளப்பிய பாடல்.

    'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல், கல்லூரி ஃபேர்வல் விழா என்று மட்டுமில்லை. எந்த ஒரு பிரிவுபசார நிகழ்ச்சியிலும் ஒலிக்கும் பாடல். அதிலும் அந்த வரிகள்...

    'எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
    எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ'

    அப்படியே மனதை உருக வைக்கும்.

    யாரும் நினைத்துப்பார்க்காத நேரத்தில் இரத்தத்திலகம் படத்தோடு வந்துள்ளீர்கள். இன்ப அதிர்ச்சி.

    'ஆண்டவன் கட்டளை', 'குலமகள் ராதை', 'இரத்தத்திலகம்' பட ஆய்வுகளைத்தொடர்ந்து அடுத்தது என்ன?. எல்லோருக்கும் அதிகம் தெரியாத வடிவுக்கு வளைகாப்பு, கல்யாணியின் கனவன், வளர்பிறை, சித்தூர் ராணி பத்மினி இவற்றில் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1382
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரத்தத் திலகம் காணொளிகள்


    பசுமை நிறைந்த நினைவுகளே Pasumai niraindha



    பனி படர்ந்த மலையின் மேலே



    புத்தன் வந்த திசையிலே போர்



    ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு



    வாடைக் காற்றம்மா



    திரைப்படத்தில் இடம் பெறாத தாழம்பூவே தங்க நிலாவே பாடலைக் கேட்டு மகிழ

    Last edited by RAGHAVENDRA; 23rd May 2014 at 10:49 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks Russellmai thanked for this post
  5. #1383
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    larger than life நடிப்பு முறைகளில் அடுத்ததாக நான் எடுக்க விரும்புவது அவருடைய shakespere நாடக பாணி காட்சிகள். பொதுவாக அக்காலத்தையும் ,இக்காலத்தையும் இணைக்கும் கண்ணி என்பது ceremonial military parade ,marches ,drilling . எக்காலத்திலும் மாற்ற முடியாத நிலைத்தன்மை கொண்டதால் ,shakespere நாடக நடிகர்கள் பின்பற்றும் முறை பெரும்பாலும் இதனை சார்ந்ததே.period படங்கள் சார்ந்த larger than life பாத்திரங்களுக்கு ஏற்ற முறை. கண் முன் பார்த்து பின் பற்ற கூடிய பாரம்பரிய தொடர்ச்சி முறை.

    shakespere நடிகர்களை நான் லண்டன், நியூயார்க் நகரங்களில் நாடகங்கள் பார்க்கும் வழக்கமுடையவன் என்பதால் கூர்ந்து கவனித்துள்ளேன்.

    அவர்கள் நடிக்கும் முறை கீழ்கண்டவாறே அமையும். முறையான பயிற்சியால் ஒவ்வொரு நடிகரிடமும் முறைகள் பெரிதாக மாறாது. ஆனால் உருவ அமைப்பு, குரல், மற்றும் இயற்கை திறமையில் சிறிதே வேறுபாடு தெரியும்.

    உடல் மொழி, கால், கைகள் இயங்கு முறை geometric symmetry கொண்ட change in pace &abruptness in transition என்ற முறையில் அமையும்.Traditional ceremonial military parade /drill /marching முறை சார்ந்தே வகுக்க பட்டிருக்கும்.

    நடைகளின் முறை பெரும்பாலும் quick march ,slow march ,cut the pace ,double march easy march ,mark time ,step forward முறையில் அமையும். ஆனால் command synchrony இல்லாமல் randomness கொண்டு கலையாக்க பட்டிருக்கும்.

    உடலியங்கு முறை attention ,parade rest ,stand at ease என்று நான்கின் பாற்பட்டு advance ,retire ,left ,right ,retreat முறையில் saluting ,turning motions கொஞ்சம் கப்பலின் இயங்கு முறை சார்ந்ததாக இருக்கும்.

    முகபாவங்கள் மிக இறுக்கமான தன்மை கொண்டு சிறிதே இள க்கம், சிறிதே மிக இறுக்கம் என்ற மூன்று நிலைகளில் slow transition கொண்டதாய் register ஆகும்.

    ஆனால் கண்கள் body motion follow thru மட்டும் இன்றி சிறிதே cautionary alertness கொண்ட inert emotionless vibrations கொண்டு உயிர்ப்புடன் இயங்கும்.

    voice pitch ,tonal modulations என்று ஆராய்ந்தால் mid -flat pitch இல் reciting rhythmically என்ற பாணியில் identifier ,precautionary ,cautionary ,executive ,guided emotional overtone என்ற பெரும்பாலும் parade command முறைமை கொண்ட ஏற்ற இறக்கங்கள் கொண்டதே.

    இதை வைத்து நம் நடிகர்திலகத்தின் ரத்தத்திலகம் பட ஒதெல்லோ ஆராய்வோம்.

    ஒதெல்லோ என்ற ராணுவ தலைவன், வீரன் என்றாலும் ,தன் கோரமான உருவத்தில் தாழ்மையுணர்வு கொண்டதால் உணர்ச்சி வசப்படும் பொறாமை காரன். desdemona தகப்பன் விருப்பம் இல்லாமல் ,அவளை மணந்து இனிய அன்பான மண வாழ்வில் திளைத்தாலும், ஒரு சாதாரண கைக்குட்டையை வைத்து லகோ என்பவன் ,அவளையும் காசயோ என்பவனையும் வைத்து பின்னும் சதி வலையால் சந்தேக பேய் பிடித்தாட்ட ,மனமின்றி, தூங்கும் மனைவியை கொலை செய்ய வரும் காட்சி.(Othello Act 5 scene 2)

    ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.

    முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ பாத்திரத்தில் மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.

    ஒதெல்லோ பாத்திரத்தில் மனமின்றி மனைவியை கொல்லும் நோக்கோடு தடுமாறி, அவள் அழகில் மயங்கி முத்தமிட்டு,தாழ்வு மனப்பான்மையும், பொறாமையும் மிக அவர் தன்னைத்தானே காதலும் இரக்க உணர்வும் தலை காட்டுவதை அடக்க முயலும் முக பாவங்களும் ,நடையிலேயே அத்தனை வசன சாரங்களை உள்வாங்கி புரியும் ஜாலங்களும் ,கைகளை தன் பாவத்தில் பங்கு கொள்ள இணங்க வைக்க முயல்வதும் , நான் ஏற்கெனெவே எழுதிய பின்னணியில் பொருத்தி பார்த்தால் புரியும்.Desdemona முழித்த பிறகு இறைஞ்சும் போது எங்கே இளகி மன்னித்து விடுவோமோ என்று அவர் காட்டும் கடுமை ,தடுமாற்றம் எல்லாமே அவரின் அபார பாத்திர உள்வாங்கலை காட்டும்.
    Last edited by Gopal.s; 23rd May 2014 at 06:31 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #1384
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஒத்தெல்லோ நாடகம்



    உபயம் நெய்வேலி வாசுதேவன் சார்

    ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.
    சிறப்பாகச் சொன்னீர்கள். ஷேக்ஸ்பியர் நாடகத்தை அவர்களுடைய பாணியில் அப்படியே செய்யாமல் தன்னுடைய பிரத்யேகமான திறனையும் ஷேக்ஸ்பியர் நாடகக் குழுவிலல்லாத, பிரிட்டனை சாராத, வேற்று நாட்டவர் அந்நாடகத்தை நடித்தால் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு உடல் மொழியை பிரயோகித்து அதன் மூலமாக அந்நாடகம் நமக்கு அந்நியமாய்த் தோன்றாதிருக்கும் வண்ணம் தன் நடிப்பைப் பயன்படுத்தி உலகத்தில் சிறந்த நடிகர் என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் சான்றையும் படைத்து விட்டார் நடிகர் திலகம்.

    இதே போலத் தான் அந்த ராணுவ நடையையும் அருமையாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். இந்த ராணுவ நடையை பதிபக்தி திரைப்படத்தில் மிக அருமையாக கொண்டு வந்திருப்பார்.

    ராணுவ வீரர்களுக்கு அந்த மிடுக்கு நிரந்தரமாக அவர்களுக்குள் தங்கி விடும். பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில ராணுவ குணாதிசயங்கள் அவர்களை விட்டு இறுதி வரை மாறாது. இதை நாம் பலரை நேரில் காணும் போது தெரிந்து கொண்டிருக்கலாம். விடுமுறையில் ராணுவ வீரர்கள் ஒன்றாக தங்கள் முகாம்களை விட்டு வீடு திரும்ப புறப்படும் போது அவர்களுக்குள் இருக்கக் கூடிய அந்த மகிழ்ச்சியான மனநிலையும் அதே சமயம் அவர்களையும் மீறி அந்த நடையில் ராணுவ மிடுக்கு ஆளுமை செலுத்துவதையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு அதை அப்படியே பாத்திரத்தில் கொண்டு வந்திருப்பார் பதிபக்தி திரைப்படத்தில். தாங்கள் மேலே சொன்ன விஷயங்களை விஷுவலாக தெரிந்து கொள்ள இதோ அந்தப் பாடல்

    Last edited by RAGHAVENDRA; 23rd May 2014 at 10:50 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1385
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    92. Kalyaniyinkanavan கல்யாணியின் கணவன்



    தணிக்கை 13.09.1963
    வெளியீடு 20.09.1963



    கதைச் சுருக்கம்


    கல்யாணி தன் தோழியருடன் ஆற்றில் நீர் விளையாடிக் கொண்டிருக்கும் போது, வெள்ளத்தால் அடித்துச் செல்லப் படுகிறாள்.

    கதிரேசன் அவளைக் காப்பாற்றுகிறான்.

    அன்று முதல் இருவருக்கும் இடையே காதல் வளருகிறது.அதைக் கண்ட கல்யாணியின் தந்தை விஸ்வநாத் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கத் தீர்மானிக்கிறார்.

    கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக கதிரேசனுக்கு ஓர் அனாமதேயக் கடிதம் வருகிறது. அதன் விளைவாக அவன் ஓர் பாழடைந்த பங்களாவுக்குச் சென்று, இருட்டில் இனம் தெரியாத ஒருவனுடன் போரிட நேருகிறது. முடிவு .. முதுகில் கத்தி பாய்ந்த ஒரு பிரேதம் கதிரேசன் காலடியில் கிடக்கிறது!

    மறுநாள் கல்யாணம்!சபையோர் முன்னிலையில் கல்யாணி நடத்தை கெட்டவள் என்று கதிரேசன் குற்றஞ்சாட்டுகிறான்.

    அடுத்த நிமிஷம் இவனைத் தேடி போலீஸார் அங்கு வருகின்றனர். ஆனால் அதற்குள் அவன் மாயமாய் மறைந்து விடுகிறான்!

    அன்று முதல் விஸ்வநாத்தின் குடும்பத்தில் அடுக்கடுக்காய்த் துன்பங்கள் தொடர்கின்றன...!

    இத்தனைக்கும் காரணம் யார்...?

    கல்யாணி கதிரேசன் கதி என்ன...?

    படத்தைப் பாருங்கள் ...

    (பாட்டுப் புத்தகத்தில் உள்ளவாறு)




    படம் தற்போது குறுந்தட்டில் ஒளிக்காட்சிப் படமாக வெளிவந்துள்ளது.


    பங்கு பெற்றுள்ள மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள

    பங்கு பெற்றுள்ள கலைஞர்கள்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், டி.ஆர்.ராமச்சந்திரன், ஓ.ஏ.கே.தேவர், டி.பி.முத்துலட்சுமி மற்றும் பலர்.
    சென்னையில் வெளியான திரையரங்குகள் - காஸினோ, ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி

    கதை வசனம் - வேலவன்
    பாடல்கள் - கவியரசர் கண்ணதாசன்
    இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு
    நடன அமைப்பு - ஹீராலால்
    ஒப்பனை - கஜபதி, பி.வி.ராகவன்
    கலை - சி.கே.ஜான், பழனிவேலு
    ஒலிப்பதிவு - எம்.டி.ராஜாராம்
    ஒளிப்பதிவு - ஷைலன் போஸ்
    படத்தொகுப்பு - ஜி.வேலுச்சாமி
    லேபரட்டரி – எஸ்.வி.நாதன், ஏ.மோகன்
    புரொடக்ஷன் – ஏ.பி. மணி
    விளம்பரம் - மவுலீஸ்
    தயாரிப்பு – பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர்
    திரைக்கதை,இயக்கம் S.M. ஸ்ரீராமுலு நாயுடு

    பாடல்கள்
    1.எனக்கு வாய்க்கும் மாப்பிள்ளை - பி.சுசீலா, கௌசல்யா, கமலா மற்றும் குழுவினர்
    2.விருத்தம் ஐயா நின் கருணை - டி.எம்.சௌந்தர்ராஜன்
    3.சொல்லித் தெரியாது சொல்ல முடியாது - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா
    4.கையிருக்குது காலிருக்குது முத்தையா - டி.எம்.சௌந்தர்ராஜன்
    5.ஆசை கொண்ட மனம் அதோ அதோ - பி.சுசீலா
    6.எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா
    7.தோட்டத்துப் பூவுலே வாசமிருக்கு - ஏ.எல்.ராகவன், கௌசல்யா
    8.கல்யாணப் புடவை கட்டி - பி.சுசீலா
    9.சீதா அக்னிப் பிரவேசம் நடன நாடகம் - தங்கப்பன், பி.லீலா, டி.கமலா குழுவினர்
    10.நொளொன்றும் பொழுதொன்றும் செல்லச் செல்ல - பி.சுசீலா
    11.இதுவும் வேண்டுமடா - டி.எம்.சௌந்தர்ராஜன்

    கல்யாணியின் கணவன் விளம்பர நிழற்படம் – நன்றி ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 20.9.1963



    அரிய நிழற்படம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks Russellmai thanked for this post
  9. #1386
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கல்யாணியின் கணவன் திரைப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை

    நன்றி - http://www.thehindu.com/news/cities/...cle3265936.ece



    CHENNAI » COLUMNS

    March 31, 2012
    BLAST FROM THE PAST

    Kalyaniyin Kanavan 1963

    RANDOR GUY



    Sivaji Ganesan, B. Saroja Devi, M. R. Radha, S. V. Ranga Rao, T. R. Ramachandran, O.A.K. Thevar, A. Karunanidhi, S. Rama Rao, K. V. Srinivasan, T. P. Muthulakshmi, Seethalakshmi, Radhika and Shantha Devi.

    S. M. Sriramulu Naidu had a successful track record, producing and directing movies not only in Tamil but also in Telugu, Kannada, Malayalam, Sinhala and Hindi. Besides, he owned a studio in his hometown Coimbatore and later shifted his activities to Bangalore where for many reasons he was not as successful as he was in his earlier days in his native turf.
    One of the movies he produced and directed under his famous banner Pakshiraja Films for some wealthy friends of Coimbatore was Kalyaniyin Kanavan, with Sivaji Ganesan and Saroja Devi in the lead.
    The heroine Kalyani (Saroja Devi) goes swimming with friends in a river when she is carried away by strong waves. As she struggles, a bold young man Kathiresan (Sivaji Ganesan) saves her — expectedly, the saving of the damsel in distress leads to both falling in love.
    Kalyani's father (Ranga Rao) is impressed by the young man's bravery and wishes to get them married on an auspicious day. Two days before the wedding, the hero receives an anonymous letter inviting him to an abandoned bungalow in the back of beyond. He goes and, in the cover darkness, fights an anonymous foe. At the end of it, he finds at his feet a body with a knife sticking out of its back! He leaves the place hurriedly….
    The next morning, the hero, much to the shock of one and all, screams at the bride saying she is not of good conduct and refuses to go ahead with the wedding rituals. Meanwhile, cops enter the scene, looking for the bridegroom and cleverly he escapes! With the marriage stopped in a dramatic fashion, problems arise in the unhappy father's family. How they are solved and the marriage is performed much to the joy of all forms the rest of the story.
    The story and dialogue were written by Velavan, a fairly popular writer then, while the screenplay was by Sriramulu Naidu. The lyrics were by Kannadasan, and the music was composed by S. M. Subbaiah Naidu. Noted cinematographer Sailen Bose handled the camera. The film was shot at Pakshiraja Studios, Coimbatore.
    The scheming villain was played by the cult figure of Tamil Cinema, M. R. Radha, while S. V. Ranga Rao as the parent was brilliant. Sivaji Ganesan as usual was in his element, well supported by Saroja Devi, one of the most successful star-actors of Indian Cinema. One of the songs rendered off the screen by T. M. Soundararajan and P. Susheela, ‘Enathu Raaja sabhayiley orey sangeetham,' became popular. Ramachandran took care of the comedy assisted by Radhika who played supportive roles and performed dance sequences for a brief period. The two also sang a comedy number (voices A. L. Raghavan and Kausalya,)
    Despite its impressive cast, Kalyaniyin Kanavan did not fare well at the box office.
    Remembered for the excellent performances by Sivaji Ganesan, Ranga Rao, Radha and Saroja Devi, the pleasing music and excellent cinematography.
    Last edited by RAGHAVENDRA; 27th May 2014 at 09:40 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1387
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காணொளிகள்

    எனது ராஜ சபையிலே



    கை இருக்குது காலிருக்குது



    சொல்லித் தெரியாது



    இதுவும் வேண்டுமடா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks Russellmai thanked for this post
  12. #1388
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பராசக்தி '
    படத்துக்கு ' திராவிடநாடு '
    ஏட்டில் வந்த விளம்பரம் .



  13. #1389
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்புச் சகோதரர் ஆவணத் திலகம் பம்மலார் அவர்களின் பொக்கிஷத்திலிருந்து பராசக்தி விளம்பர நிழற்படத்தினை மீள்பதிவு செய்து நினைவூட்டிய யுகேஷ் பாபு அவர்களுக்கு மிக்க நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. #1390
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்னை இல்லம்-1963

    1963 வது வருடம் நடிகர்திலகம் -கே.வீ.மகாதேவன் இணைவில் ஒரு மறக்க முடியாத வருடம். மொத்தம் வந்த பத்து படங்களில் ஆறு படங்கள் மாமாவிற்கு(K.V.Mahadevan).ஒன்று எஸ்.எம்.எஸ்,ஒன்று G .ராமநாதன்,ஒன்று எஸ்.வீ.வெங்கட்ராமன்,ஒன்றே ஒன்று விஸ்வநாதன்-ராமமுர்த்தி.

    பொன்னான வருடம் .இருவர் உள்ளம்,நான் வணங்கும் தெய்வம்,குலமகள் ராதை,குங்குமம்,ரத்தத்திலகம்,அன்னை இல்லம் என்று திரை இசை திலகத்தின் கொடி பறந்து எங்களை திக்கு முக்கில் ஆனந்த களியாட்டம் போட வைத்த வருடம்.

    அன்னை இல்லத்தின் மடி மீது தலை வைத்து பாடல், சிவாஜி,தேவிகா,கண்ணதாசன்,மகாதேவன்,மாதவன் இணைவில் வந்த ஒரு erotic அதிசயம். ஒரு மெல்லிய இனிய இசையில் ,கஹுரஹொ வன்மையை சேர்த்து,ஆயிரம் சர வெடி காமத்தை ஆபாசமில்லாமல் தந்தனர் 60 களின் காதல் கிளிகள்.மெல்லிய வருடலுடன்,(உதட்டிலும்)காதலர்களின் விழைவு நோக்கு கொண்ட பார்வையில் ஆரம்பித்து,போகன் வில்லா மரத்தடியில் காம விளையாட்டு தொடங்கி,காதலர்களுடன் நம் உள்ளமும் உருளும்.சேவல் குரலை நிறுத்தி ,இரவை விடியாமல் வைக்க நம் மனமும் ஏங்கும் .சிவாஜியின் erotic விளையாட்டில் தேவிகா காம விழைவுடன் அள்ளும் பார்வை.அழைப்பு பார்வை.இணக்க பார்வை.கிரக்க பார்வை.

    அய்யய்ய்யோ....காலடிகளின் கலப்புடன் ,காதலர்கள் கலந்து உறவாடுவதை, இன்ப வதையுடன் நாம் கனவோடை கலந்த நினைவில் இருத்தி ,இன்ப வாதையில் துடிப்போம் அல்லவா?
    Last edited by Gopal.s; 29th May 2014 at 05:12 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •