Page 178 of 185 FirstFirst ... 78128168176177178179180 ... LastLast
Results 1,771 to 1,780 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1771
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Very much!

    நன்றி திரு. ராகவேந்திரன்.
    வட்டமெல்லாம் பலரும் நேற்று ரசித்தனர் நானும் ரசித்தேன். அவ்வளவு தான். பள்ளிக்கூடத்திலிருந்தே ஒரு பழமான front bencher

    பின்னால் சொல்லி சொல்லி ரசித்துக் கொண்டிருந்தார்கள் நுணுக்கங்களை முன்கூட்டியே anticipate செய்து பேசிக்கொண்டிருந்தனர் என்பதைப் பார்த்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் (இப்பொ 'ங்கொப்பராண வரும் பார்' , இப்பொ 'ஏய்' வரும் பார் - என்பவை எனக்கு கொஞ்சம் இடைஞ்சலாகத் தோன்றின...is it our Parthasarathy who I heard from the back-rows ), ஆனால் தாங்கள் ரசித்ததை உடன் வந்திருப்பவர்கள் தவரவிட்டுவிடக் கூடாது என்ற ஆவலின் வெளிப்பாடு தான் அது என்றும் புரிந்தது.

    பெரியதிரையின் வசீகரமே தனி. மறைந்த பேராசிரியர் T.G.வைத்யநாதன் - ஹிந்துவில் பத்தி எழுத்தாளர் - எழுதிய சினிமா பற்றிய கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு 'images in the dark' - இருளில் பார்வையாளன் கரைந்து larger-than-life பிம்பங்களால் ஆகர்ஷிக்கப்படும் அனுபவத்தைப் பற்றி அதில் சொல்லி இருப்பார். அந்தக் கனியிருப்ப Home-video காய்கவர்ந்தற்று ...என்று முற்றிலும் காய்திட மனம் வரவில்லை - காயின் ஊட்டச்சத்து இல்லை என்றால் நாங்களெல்லாம் எங்கே!

    VCR சகாப்தத்தில் தொலைக்காட்சியில் வந்த தில்லானைப் பதிந்து, பார்த்துப் பார்த்து தேய்த்தபின், வீட்டில் DVD Player வாங்கியதும் வாங்கிய முதல் படம் தில்லானா. சிரிக்கவைத்து, நெகிழவைத்து, ஆஹா-வித்து..முழுவதுமாக சுண்டியிழுக்கும் படம். சிவாஜி படங்களிலேயே அனேகமாக வசனங்களில் தாளகதி உட்பட எனக்கு அனேகமாக பரிச்சயமான படம் என்றால் இதுதான். அதை பெரிய திரையில் காண வேண்டும் என்ற என் நெடுநாள் ஆசை நேற்று நிறைவேறியது. மீண்டும் ஒரு நன்றி.

    நீங்கள் நகைச்சுவையாக சொல்வதுபோல நானும் 'அலைகடலென' கூட்டத்தை எதிர்பார்த்து ஐந்து மணிவாக்கிலேயே வந்து ஸ்கூட்டரை வைத்துவிட்டு, TTK சாலையில் ஒரு சிறு வேலை இருந்ததால் நடந்து போய்விட்டு ஆறு மணி சுமாருக்கு வந்தேன். (நேராக ஆறு மணிக்கு வந்தால், வண்டி நிறுத்த இடம் கிடைத்திருக்காது என்று நினைத்திருந்தேன்!)

    முரளிசாரை வாசலில் பார்த்தேன். ஃபில்ம்நியூஸ் ஆனந்தனின் கண்காட்சியை காட்டினார். பிறகு நன்றியுரையில் கூறியது போல இது மிகுந்த சிரத்தையுடன் தொகுக்கப்பட்ட exhibition என்று தெரிந்தது. சிவாஜி அத்தனை பிறமொழிப் படங்களில் பிரதான/முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார் என்றே எனக்குத் தெரியாது.

    திரு.ராகவேந்திரன், 'தாயே உனக்காக' படம் ருஷ்யமொழி க்ளாஸிக்கான 'Ballad of the Soldieரைத் தழுவி எடுக்கப்படதை எனக்குக் கூறினார். In the context of the function/location என்ன ஒரு சரியான தேர்வு! என் கல்லூரி நாட்களில், இதே ருஷ்ய கலாசார மையத்தின் அரங்கத்தில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன் (அந்த நாள்.. ஞாபகம்.. ).

    ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் sesquicentennary (ஒன்றரை நூற்றாண்டு) விழா என்று அவர் புத்தகங்கள் சிலவற்றை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள. கிறுஸ்துவ தேவாலயங்களில் சாலையோரச் சுவற்றில் கண்ணாடிப்பெட்டிக்குள் விவிலியத்தின் பக்கத்தைத் திறந்து வைத்திருப்பது போல. படிக்காமல் கடந்துபோக முடியாது. அதுபோல அந்தப் பக்கங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். I feel too cruel to mention this now for Gopal to read இனிமையான தற்செயல்.

    திரு.ராகவேந்திரன் தயாரித்துக்கொண்ட உரையுடன் to-the-point நன்றாகப் பேசினார். ருஷ்யாவில் வகுக்கப்பட்ட நடிப்பு முறைகளையும் சுயம்புவாக வெளிப்படுத்தினார் சிவாஜி என்று அவர் சொன்னது - கடந்த சில பக்கங்களில் நாம் பேசிக்கொண்டிருப்பதின் ஒரு கூரை அந்த சபைக்குத் தக்கவாறு பேசியதாகத் தோன்றியது.

    திரு.முரளி தன் வழக்கமான சரளத்துடன் 'தில்லானா'வை contextualize செய்தார். அந்த அரசியல் சூழல், அக்கால சினிமா அழகியல் எதிர்பார்ப்புகளை எவ்வாறு அப்படம் ஏற்றுக்கொண்டது போலவே 'படம்' காண்பித்து ஆனால் சிறப்பாக மீறியது என்று சொன்னார். குறிப்பாக: 'பாட்டு உண்டு - ஆனால் ஹீரோவுக்கு இல்லை. சண்டை உண்டு - கதையில் அந்த நிகழ்வுக்கும் ஹீரோவுக்கும் ஸ்நாநப்ராப்தியே கிடையாது என்றார்.

    படத்தை இன்னும் ஆழ்ந்து ரசிக்க அது பலருக்கு உதவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஹீரோவுக்கு பாட்டு கிடையாதா என்ன, வாய்ப்பாட்டு கிடையாது. APN ரசனை எதிர்பார்ப்புகளுக்கு 'on his own terms' தீனி போட்டார். என்றுமே ரசிகன் மீது பழியைப் போட்டு pander செய்ய வேண்டும் என்ற கீழ்நோக்குப் பார்வை இல்லாமல், தான் நினைத்ததை சிரத்தையோடும், நயத்தோடும் செய்யும் கலைஞர்கள் தான் ரசிகர்களைக் கவர்கிறார்கள்.

    நினைத்துப் பாருங்கள், அந்த சண்டை பற்றி ஒரே இடத்தில் தான் அவனிடம் வசனமாக சொல்லப்படுகிறது - அதற்கு அவன் எத்தனை ஈவிரக்கம் இன்றி பதில் சொல்கிறான் - அவன் ஹீரோ இல்லை - 'குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு' என்று தானே சொல்லும் மனிதன்.

    அதே சமயம் ஹீரோ'வுக்கான punch-dialogueகள் இல்லாமல் இல்லை. கலையில் ஒப்பற்றவன் என்றவாறு வரும் எல்லா வசனங்களும் சண்முகத்தை மட்டும் குறிப்பவை அல்ல என்று குழந்தைக்குக் கூட தெரியும். Punch-வசனங்களில் தன்மையே அது தானே. அந்த வேடத்தை விட்டு விலகி நாயகனின் பிம்பத்தைக் கொண்டாடும் தருணங்கள் அவை. முப்பக்கம் மூடிய மேடையில், நாலாவது சுவராக இருப்பது கலைஞர்கள் வாழும் அந்தக் கதையின் உலகையும், இப்பக்கம் அமர்திருக்கும் ரசிகர்களின் உலகையும் பிரிக்கும் ஒருவித ஒப்பந்தம் மட்டுமே. அந்த ஒப்பந்தத்தை மீறும் தருணங்கள் அவை. அதை படத்தின் சமநிலை குறையாமல் செய்துகாட்டினர் (நாகலிங்கத்துக்கு தண்டனை என்று வைத்தி சொன்னதும் சண்முகம் பேசும் பதில் வசனம்)

    படத்தைப் பற்றி இப்போது எழுதப் போவது இல்லை. திங்கட்கிழமை காலை அதுவுமாக தில்லானா பற்று பேச ஆரம்பித்தால், வேலை செய்தது மாதிரிதான்
    இன்னும் கோபாலின் தொடரின் கடைசி பகுதிகள் வேறு படிக்க backlog இருக்கிறது. I will catch up later this week.

    once again for the memorable show.

    PS1: As I was telling Mr.Murali, there were a couple of cuts and jumps in the DVD and some resolution issues in long-shots. The DVD I have is clearer and complete- so let me know the next time whenever you plan to screen this. 300 படம் சுழற்சிமுறையில் மீண்டும் இதன் முறை 2038ல வரும்னு நினைக்கிறேன்

    PS2: It was nice to meet Parthasarathy again and also great to meet in person the archivist non-pareil Pammalar. Too bad the movie ended too late to leave much time for a catch-up after that.

    PR
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1772
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    By Ganpat

    அப்பப்போ அடிக்கும் காலிங் பெல்,டெலிபோன் மணி,பார்க்கும் ஓவ்வொருவரின் விருப்பதிற்கேற்ப, இடைவேளை விடுதல்(கொஞ்சம் pause செய்.இப்போ வந்துடறேன்).
    வராத விருந்தாளிகளின் திடீர் வருகை,அவர்கள் அடிக்கும் அதிகப்ப்ரசங்கித்தனமான comments,எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாக வேண்டும்.

    (ஆனா இப்போ தியேட்டரிலும் தொல்லை அதிகம்..சமீபத்தில் படம் ஆரம்பித்து இரண்டு நிமிடங்கள் கழித்து திருதிராஷ்டிரன் போல தட்டித்தடவி ,போய் D18,D19 அமர்ந்தால்,உடனே டெலிபோனின் உரத்த சிணுங்கல்.கூடவே "ஆமா தேவராஜ்தான் பேசுகிறேன் !” என்ற கட்டை குரல்..”என்னங்க! படத்தில் கமல் பேரு விசுவநாதன் இல்லையோ?” என்ற இல்லாளின் சந்தேகத்தை நிவர்த்திப்பதற்குள் அதே குரல் “நான் இப்போ தேவி தியேட்டரில் விஸ்வரூபம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.ஆங்..படம் ரொம்ப நல்லா இருக்கு..ம்ம்ம் அப்றம் பேசறேன்!” ன்னு ஒரு சுய வாக்குமூலம் கொடுத்து, காலை கட் செய்ய ஒரு பத்து பேர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.(இடைவேளை போதுதான் பார்த்தேன்.அந்த நபருக்கு பொன்னம்பலம் போல உடல்வாகு.)

    இப்படி சினிமா, கச்சேரி நடுவே, போன் attend செய்து disturb செய்யாதே என சொல்வது
    ,”சுவற்றில் எழுதாதீர்” எனும் அறிவிப்பிற்கு கீழே “சரி” என்று எழுதுவதைப்போல ஆகும் எனபதே பலருக்கு தெரிய மாட்டேன் என்கிறது.

    சரி இனி படம்...

    தமிழில் வந்த மிக சிறந்த ஆறு படங்களை பட்டியலிட்டால் தில்லானா மோகனாம்பாள்(தி.மோ) மற்ற ஐந்திற்கும் மேலே இருக்கும்.

    பூரணம், உன்னதம் எனும் இரு சொற்களுக்கான எடுத்துக்காட்டு தி.மோ.

    இந்தப்படத்தின் உன்னதம் திரு ஏபிஎன். பிள்ளையார் சுழி போடும்போதே ஆரம்பமாகிறது..

    விகடன் அதிபர் திரு வாசனை,ஏபிஎன் சந்தித்து தி.மோ படம் எடுக்க தான் விரும்புவதை சொல்லி ஆசி பெற்று கூடவே அதற்கான காப்புரிமையையும் சுமார் ரூ.ஐயாயிரம் கொடுத்து அவரிடமிருந்து பெறுகிறார்.
    என்னதான் சட்டப்படி விகடன் நிறுவனத்திடமிருந்து உரிமையை பெற்றாலும் அதை ஆக்கியோன் எனும் விதத்தில் திரு கொத்தமங்கலம் சுப்புவிற்கும் மரியாதை செய்ய விரும்பி, அடுத்த நாள் அவர் இல்லம் சென்று விவரம் சொல்லி சில ஆயிரங்களையும் சன்மானமாக கொடுக்கிறார்,அதை பின்னவர் மறுத்து "நேற்றே திரு வாசன் என்னிடம் இதைக்கூறி நீங்கள் கொடுத்த பணத்தையும் தந்து சென்றார்" என சொல்கிறார்.....இது உன்னதம் # 1

    மேதை கோபுலு எப்படி படம் வரைந்தாரோ அதை நிஜமாக்குவதைப்போல,
    ஒவ்வொரு பாத்திரமும் பத்தாண்டுகள் கழித்து படத்தில் நடமாடினார்கள்.இது உன்னதம் #2

    தலைவரை விடுங்கள்.அவர் கடவுள் !

    ஒரு பாலய்யா,ராஜன்,ck சரஸ்வதி,??
    ஒரு தங்கவேலு,ராமதாஸ்,பாலாஜி??
    ஒரு நாகேஷ்,மனோரமா?
    அச்சு அசலாக அப்படியே பாத்திரங்கள் வந்து இறங்கவில்லையா?இது உன்னதம் # 3

    பிரபுராம் சவடால் வைத்தி பற்றி சொன்னார்.
    என்ன ஒரு fluency ,timing and wit?
    என்னப்பா சிக்கல்! எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு கிளம்புங்கோ!
    மகராஜா எழுந்துகொள்ளும்பொது திருப்பள்ளி எழுச்சி வாசிக்கணும்.!!

    “நாங்க கோவிலில் மட்டும் தான் திருப்பள்ளி எழுச்சி வாசிப்போம்”.

    “அதுக்காக ராஜா கோவிலில் போயா படுத்துக்க முடியும்?”

    இந்த timing, மவனே உலகத்தில் எவனுக்குயா வரும்?

    ck சரஸ்வதியிடம்..”இவ்வளவு பெரிய கழுத்து!! எவ்வளவு காலியா இருக்கு?
    ஒரு அட்டிகை போட்டா எவ்வளவு நன்னா இருக்கும்” என tempt செய்வதில் உள்ள wit

    "யாரிந்த பொண்ணு? அரையும் குறையுமா?"
    "shut up! she is the maharani of madanpur!"
    “நினைச்சேன்! நினைச்சேன்!! இப்படி மகாலக்ஷ்மி மாதிரி ஒரு பெண்ணை
    பார்க்கும்போதே நினைச்சேன்!” என்று சொல்வதிலுள்ள fluency

    இந்த யானையை அடக்குவாரே நம் யானைப்பாகன்!

    ஒரு பதரை பார்ப்பது போலல்லவா இவரைப் பார்ப்பார்!

    இந்த பதர் எனும் சொல் இடம் பொருள்,ஏவலுகேற்ப மாறும்.

    பின்னால் மோகனாம்பாள் ஒரு இடத்தில் ஷண்முகம் நடத்தைக்கண்டு கொதித்து,
    அவரையும் ஒரு பதரைப்போலத்தான் பார்ப்பாள்.ஆனால் அது
    காதல் கலந்த தற்காலிக கோபமான பார்வை! காதல் பதர் உடனே மறைந்து விடும்.
    ஆனால் வைத்தியோ ஒரு நிரந்தர பதர்.

    சரி! தலைவரின் நாதஸ்வர வாசிப்பு..??
    அதில் ஒரு முக்கால் பங்கை, நாட்டில் உள்ள அத்தனை வித்வான்களும் கண்டு மகிழலாம்.மீதியை..??
    அவர்கள் பாடமாக வைத்துக்கொண்டு அதன்படி தாங்களும் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    இறைவனுக்கு நன்றி..
    திரு.ஏ.பி.என் னை படைத்ததிற்கு

    திரு.ஏ.பி.என் நிற்கு நன்றி தி.மோ.வை படைத்ததிற்கு

    ஹிந்தி பட அதிபர்களுக்கு நன்றி..
    இதை ஒரு ஷேனாய் வித்வான் படமாக ஹிந்தியில் எடுக்காததிற்கு.

    தற்கால தமிழ் பட அதிபர்களுக்கும் நன்றி,
    தி.மோ வை ரீமேக் செய்யாமல் இருப்பதற்கு.

    நண்பர்கள் முரளி, கோபால்,ராகவேந்தர்,பிரபுராம்,வாசுதேவன் ஆகியோருக்கு என் அன்பு மற்றும் நன்றி,
    for inspiring me to write..

    (
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1773
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    PR

    Jokes apart, அந்தக் கதைக்களன்/காலம் நடனக்கலைஞர்களின் அன்றைய சமுதாய நிலை இன்னைக்கு நிறைய பேருக்கு முழுசா புரியாது இல்லை?

    வடிவாம்பாள் ஒரு முன்னாள் கலைஞர்னு கேள்விப்படுறோம்.
    "இப்படி போகுற இடத்துல எல்லாம் பகையை சம்பாதிச்சுக்கிறியேம்மா....நமக்கு நாலு பெரிய மனுஷாலோட தயவு தேவை"ன்னு உண்மையா நினைக்குறா. மோகனா நடனத்துல பெரிய ஆளா வரணும்னும் ஆசைப்படுறா.

    அந்த கதைக்காலம் ஒரு cusp of eras (இருவேறு காலகட்டங்கள் சந்திக்கும் நேரம்).

    பிரபுக்களின் - அதாவது தனவான்களின் - ஆதரவில் கலைஞர்கள் தழைக்கும் காலம் மறைந்து. கச்சேரிக்கு காசு, சபாக்கள் என்று கலைஞர்கள் மக்களிடம் (கிட்டத்தட்ட) நேரடியாக பணம் பெற்று சம்பாதிக்கும் காலம்.

    இது மாபெறும் மாற்றம். சமூக சரி/தப்பு'கள் இங்கங்கென மாறு காலம் (an era of flux in the economic order and thus the attendant social values).

    பலநூறு வருடங்களாக இயங்கும் விதம் மாறுகிறது

    (will make one digressive post next to emphasize this point)



    This post is admittedly a bit digressive. The purpose is to give the social context of the time-are of ThillAna.
    Most of you are well aware of this, but I feel the youngsters who watch the movie now may receive it a tad too simply and thus under-appreciate the setting. Hence this post.

    புறநாற்றில் ஒரு புலவர்

    கை அது கடன் நிறை யாழே
    மெய் அது புரவலர் இன்மையின் பசியே

    புரவலர் இல்லை என்றால் பசி தான்.

    ஒரு அரசனை ஒரு புலவர்: 'பாண் பசிப் பகைஞன்' என்கிறார் (பாணர்களின் பசிக்கு பகைவனாம்)

    (முதல்) ஔவையார் ஒரு மன்னன் இறந்ததைப் பாடும்போது பாணர்களின் பாத்திரத்தில் துளை விழுந்துவிட்டது என்று பாடுகிறார்.

    பலநூறு வருடங்களாக இப்படித் தான் கலைஞர்கள் வாழ்ந்தார்கள்.

    நொபேல் பரிசுபெற்ற ப்ரித்தானிய தத்துவ எழுத்தாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் : "பிரபுக்களுக்கு கலை எவ்வளவு கடன்பட்டது என்பதை நாம் இன்றைய ஜனநாயகக் காலகட்டத்தில் மறக்க அனேக வாய்ப்புண்டு" என்றார் (in these days of democracy, one is apt to forget the debt art owes to aristocracy).

    நாம் இன்றைய சமூக அமைப்பில் நின்று கொண்டு அன்றைய சமூக நிலைகளை நினைத்து, மேலோட்டமாக தீர்ப்பு வழங்கும் வேலையை எவ்வளவு எளிதாகச் செய்கிறோம்!

    இந்த அமைப்பு எவ்வளவு தூரம் தொடர்கிறது. 20 ம் நூற்றாண்டு வரையிலும் கூட.

    இந்தக் கால மாற்றத்தில் சிக்கிக்கொண்ட இன்னொருவர் பாரதியார்! எட்டயபுரம் ஜமீந்தாரை (மகாராஜா!) அண்டி இருந்தார். அவருக்கு புகழ்பாட்டுக்கள், சீட்டுக்கவிகள் எழுதிப் பிழைத்தார்.அவர் சுபாவத்துக்கு அது சரிவரவில்லை. விலகி அவரை (மறைமுகமாகத்) திட்டி எழுதினார். பிறகு மறுபடியும் வழியின்றி அவரிடமே போய் நிற்க வேண்டிய நிலைமை (தன் வாழ்நாளில் இருண்ட காலமாக இதைப் பற்றி எழுதுகிறார்).

    மதுரை சேதுபதி பள்ளியில், சுதேச மித்திரன் பத்திரிகையில் என்று பிழைப்புக்கு ஏதாவது செய்யவேண்டிய நிலைமை. எதுவும் சரிவரவில்லை.

    பாஞ்சாலி சபதம் சமர்ப்பணத்தில் கூட இப்படி எழுதுகிறார்.

    தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகிற பிரபுக்களுக்குமா இந் நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகிறேன்.


    பிரபுக்களின் காலம் முடிந்துவிட்டது என்று பாரதியாராலேயே கூட முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் பாருங்கள். அப்படிப்பட்ட ஒரு காலமாற்றம் நிகழ்கிறது.

    ('ச்சே மகாகவியை இந்த சமூகம் இப்படி பண்ணிடுச்சே' என்று மேலோட்டமாக அங்கலாய்த்து நகர்ந்துவிடுகிறோம். ஆனால் அந்தக்கால சமூக மாற்றங்களைப் பொதுவாக நாம் ஆராய்வதில்லை. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Madras Institute of Development Studies) சேர்ந்த பேராசிரியர் வெங்கடாசலபதி பாரதியாரின் காலம் பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார் - அதில் தான் இந்தக் கோணத்தைப் படித்தேன்.)

    Now coming to ThillAnA

    வடிவாம்பாள் நினைப்பதில் என்ன தவறு?

    அவள் பார்த்து வளர்ந்த உலகம் அது. இன்று கச்சேரிக்கு சம்பளம் பேசி 'லேசில் கையெழுத்து'ப் போடாத கெட்டிக்காரி அவள். ஆனாலும் இந்தப் 'புது உலக'த்தின் நியாய/அநியாயங்கள் அவளுக்கு முழுவதுமாகப் புரியவில்லை.

    ஜில்ஜில்-லையும் நினைத்துப் பாருங்கள். என்ன ஒரு அசாத்திய திறமைக்காரி, தன்னம்பிக்கை உள்ளவள். ஆனாலும் முறையான திருமணம் என்பது அவளுக்கு இல்லை. 'உங்க ஆளு சண்டியன்' என்று சண்முகம் குறிப்பிடும் அந்த நாகலிங்கம் 'திருந்தி வருவான்' என்று அவள் நம்புவதாகப் படம் முடிகிறது. நெஞ்சை அறுக்கிறது அல்லவா அவள் நிலை?

    digression within digression

    மோகனாவும், சண்முகமும் எவ்வளவு எளிதாகத் துவண்டு விடுகிறார்கள். தன் சுயநலத்துக்காக சண்முகம் எத்தனை அசட்டையாக கையெழுத்துப் போடுகிறான். ஜில்ஜில் வாழ்க்கையை விடவா இவர்களுக்கு இடர்களும், சவால்களும்? சொல்லியும் சொல்லாமலும் பல ஏமாற்றங்கள். அவற்றை எவ்வாறு சமாளிக்கிறாள். இத்தனைக்கும் அவள் கலை 'உயர்ந்தது அல்ல' என்ற கீழ்நோக்குப் பார்வை வேறு. சகலகலாவல்லி என்று சண்முகம் அவளை அறிமுகப்படுத்திகிறான், ஆனால் அவளை நாம்கூட இரண்டாம்பட்சமாகத் தானே நினைக்கிறொம்.அதை நாமும் கூட கேள்வி கேட்பதில்லை. சண்முகத்தின் கத்திகுத்துக்கு பதறுகிறோம். சகலகலாவில்லி'க்கு பல் உடைந்தால் சிரிக்கிறோம்.

    கொட்டகையில் அவள் சண்முகத்தை ஆழ்ந்து ரசித்ததை விடவா யாரும் ரசித்துவிடப் போகிறார்கள் ('ஆமாம் ராசா'). அவளுக்கு வாசித்ததை விட படம்நெடுகிலும் சண்முகம் யாருக்காகவாவது அத்தனை ஆத்மார்த்தமாக வாசித்தானா?


    Back to வடிவாம்பாள்

    தன் மகளை, ஒரு முன்னனிக் கலைஞனுக்கு வாழ்க்கைப்படுவதை விட ஒரு தனவந்தனின் ஆசைநாயகி ஆக்க இந்த அம்மாள் விரும்பிகிறாரே - என்று மட்டும் மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. கலைஞர்கள் யாரையாவது சார்ந்தே வாழவேண்டியவர்கள் என்பதே அவள் காலம் அவளுக்குப் போதித்த வாழ்க்கைமுறை.

    தன் மகள் நல்ல நாட்டியக்காரியாக பெயர் பெற வேண்டும் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அவள் ஒரு பெரிய மனுஷனின் 'ஆதரவு' கிடைக்க வேண்டும் என்று அவள் நினைப்பது.

    இதில் ஒன்று உயர்ந்த நோக்கம் என்றும், இன்னொன்று தாழ்வானது என்றும் நாம் நினைப்பது - இன்றைய மனநிலையில் இருந்தே. அந்தத் தாய்க்கு இரண்டும் ஒன்றே.

    அந்தக் காலத்து நாட்டியக்காரி, தனக்கு சரிவர அப்படி ஒரு ஆதரவு கிடைக்கவில்லை, அது தன் குழந்தைக்கு நிகழ்ந்துவிடக் கூடாது என்று அவள் நினைக்கிறாள் என்றும் கொள்ளலாம்.

    "என் கண்ணு! நீ ஒருத்தி கஷ்டப்படுற, உன்னால நாங்க எல்லாம் சுகப்படுறோம்" என்று ஒரு வசனம் வரும் (ஞாயிறு ஸ்க்ரீனிங்கில் இது கட்!) - அவளை மகாராஜாவின் 'தங்கையை' பார்க்க அனுப்பும் ஆயத்தக் காட்சி. அவள் நோக்கம் வேறு என்றாலும் அந்த வாஞ்சை பொய் அல்ல என்றே நினைக்கத் தோன்றும்.

    தனக்குத் தெரிந்த நல்வழியில் குழந்தையைச் செலுத்தவும்,தனக்கு கைகூடாதவை அவளுக்குக் கிடைக்கவேண்டும் என்று அவள் விரும்புவது இயல்புதானே.


    ஆனால் (தனியாக வாத்தியார் வைத்து இங்க்லீஷ் சொல்லிக்கொடுக்கப்பட்ட) மோகனா காலமாற்றத்தை உணர்ந்தவள். பழைய சட்டகத்தை முற்றிலும் நிராகரித்து முன்செல்ல முடியும் என்ற நம்பிக்கை உடையவள். அது தான் சண்டை.

    சண்முகமும் வடிவாம்பாள் போல சிந்தனை உடையவன் தான். அவன் சந்தேகப்பேர்வழி, அவசரக்காரன், (மேரி சொல்வது போல) 'நாதஸ்வரம் தவிர ஒன்றும் தெரியாதவன்' என்பதெல்லாம் வாஸ்தவம். ஆனால் அந்தக் காலச் சூழலில் நாட்டியக் கலைஞர்களின் வாழ்க்கைத் தேர்வுகள் இவ்வாறு தான் இருக்கும் என்றே பொதுவான கருத்து. அதனால் தான் சிறு விஷயங்களைக் கூட அவன் சந்தேகிக்கிறான். அவனாலும் மோகனாவின் தீர்க்கமான மனநிலையை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியவில்லை.

    பாவம் மோகனா - தன் காலத்தைத் தாண்ட முனைபவர்கள் அனைவரும் படும் சிரமங்களில் மிகக் காட்டமான - 'நேசர்களின் புரிதலின்மை'யை அனுபவிக்கிறாள்.

    இவற்றைக் கருத்தில்கொண்டு பார்த்தால், இந்தக் கதையை இன்னும் நன்றாக ரசிக்கலாம் என்று தோன்றுகிறது.

    ஜில்ஜில் பற்றியும், நாகப்பட்டினம் கொட்டகையை ஏபிஎன் காட்டிய விதத்தையும் இன்னும் விரிவாக எழுதலாம்...பிறகொருமுறை
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1774
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Ganpat

    கலைஞர்கள் புரவலர்கள் பற்றிய கருத்து பரிமாற்றங்கள்..

    19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தோன்றி வரும் தலைமுறைகள் பட்ட /படும் அவதி மனித இனத்தில் வேறு எப்பொழுதும் நடந்திருக்க வாய்ப்பில்லை.

    முதலில் கலாசார மாற்றம்
    .பிறகு ஆட்சி முறை மாற்றம்.
    பிறகு விஞ்ஞான மாற்றம்.
    பிறகு தொழில் நுட்ப மாற்றம்
    தற்பொழுது பொருளாதார மாற்றம் ..
    இதனூடே பின்னிப்பிணைந்துள்ள கலாசார மாற்றம்.
    என ஒரு நூற்றிருபது ஆண்டுகளுக்குள் சுனாமி போன்ற மாற்றங்கள்..

    பல தலைமுறைகளாக கலைஞர்களை ஆதரிப்பது எனும் பெயரில் நாட்டிலுள்ள செல்வந்தர்கள் அவரவர் வசதிக்கேற்ப பெண்களை சீரழித்து வந்தனர்.இது ஒரு வடிகட்டிய அயோக்கியத்தனம்.இதற்கு தேவதாசி எனும் ஒரு இனிப்பு தடவிய பெயர் வேறு!!இது தேவரடியார்கள் என மருவி மேலும் என்னென்னவோ ஆகி, இவ்வினத்தவர் ஆண்களுக்கு இசைந்தால் இசைசொல்லாகவும்,மறுத்தால் வசை சொல்லாகவும் ஆகிப்போனது.1920 களில் இதை எதிர்த்து,ஒழிக்க கோரி சென்னை சட்ட சபையில் ஒரு சரித்திர புகழ் பெற்ற விவாதம்.Dr.Muthulakshmi Reddy அம்மையார் கடுங்கோபத்துடன் விவாதம் செய்ய காங் தலைவர் திரு சத்யமூர்த்தி அவர்கள் தேவதாசி முறை சமுதாய சுமுகமான போக்கிற்கு அத்தியாவசியமானது அதை நீக்குவது பேராபத்து என்றும் பேச,எழுந்தார் அம்மையார்.."மதிப்பிற்குரிய சத்யமூர்த்தி அவர்கள் தங்கள் குடுமபத்திலிருந்து ஒரு பெண்ணை இந்த நல்ல முறைக்கு நாட்டின் நன்மை கருதி அனுப்பி வைக்க இசைந்தால் இந்த மசோதாவை நான் வாபஸ் பெறுகிறேன் என கர்ஜிக்க முன்னவர் முகத்தில் ஈயாடவில்லை.அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு தேவதாசி முறையும் ஒழிந்தது.

    சரி இனி மோகனாவின் கதை.
    அவள் ஒரு குணவதி.தன் இனத் தொழிலை வெறுப்பவள்.சண்முகத்திடம் ஒரு நல்ல மனிதன் மற்றும் கலைஞனைக்கண்டு அவனை நேசிக்கிறாள்.அவனும் அப்பாவி.மோகனாவின் நிலை அறிந்து அவளை நேசிக்கிறான்.
    ஆனால் இயல்பு காரணமாக அவ்வப்பொழுது சந்தேகம் தலை தூக்குகிறது.அதன் அடிப்படையில் அமைந்தது தான் இந்த திரைக்கதை.இதில் வடிவு எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்திடமிருந்து தூர எடுத்து செல்லவும்,ஜில் ஜில்
    எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்தின் அருகே கொண்டு வரவும் மட்டுமே கதை மாந்தர்களாக தோன்றுகின்றனர்.
    வடிவு தன மகளின் அழகையே மூலதனமாக பார்க்கிறாள்.அவள் கலையைப்பற்றி அவ்வளவு அக்கறையில்லை.ஆனால் மகளின் மனதை மாற்ற அவள் நேசிக்கும் கலையையே ஒரு tool ஆக பயன் படுத்தி அவளை வெற்றிகொள்ள பார்க்கிறாள் முடிவில் தோல்வி அடைகிறாள்.அவளுக்கு தன survival மட்டுமே top priority.

    இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)

    எனவே வடிவு எனும் பாத்திரம் ஒன்றும் போற்றத்தக்க ஒன்றல்ல.சுயநலம் மிகுந்து தன மகளின் வாழ்வும் தன் வாழ்வு போல ஆவதில் தவறில்லை என நினைக்கும் தாய்.இந்தப்போக்கை,சண்முகம் எனும் ஒரு அற்புத கலைஞனை ,சுந்தர புருஷனை பார்ப்பதற்கு முன் வேண்டுமெனில் ஓரளவு நியாயப்படுத்தலாம்.ஆனால் தன மகள் அவனுடன் மனைவி எனும் பெருமையுடன் இணைவதை விட ,ஒரு செல்வந்தனுடன் தாசி எனும் பட்டத்துடன் இணைவதே தனக்கு நல்லது எனும் கருத்தில் செயல்பட்ட அவள் ஒரு வில்லியே!
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #1775
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    PR

    Quote Originally Posted by Ganpat View Post
    இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)
    ரமாமணியாரின் சுய-அபிப்ராயத்தில் தவறென்ன கண்டீர்?
    கலையில் மேல்-கீழ், உயர்ந்தது/தாழ்ந்தது என்ற தீர்மானங்கள் எங்கிருந்து வருகின்றன?

    கர்நாடக சங்கீதத்தோடும், பரநாட்டியத்தோடும் ஒன்றி ரசிக்க முடியாதவர்களுக்கு ஒரு உலகமே இருந்தது என்று ஏபிஎன் சிறப்பாக பதிவு செய்கிறார். குதிர குதிர பாய்ச்சலு...இங்கே கொட்டாயில கூச்சலு

    அவளை ரசிக்க சனம் உண்டு: அவுஹ ஆடுனாத்தான் பாப்பாஹளா, நான் ஆடுனா கண்ணை மூடிக்குவாஹளா

    படாடோபம் மிக்க உயர்குடிகள் அங்கு வருவதே இழிவாக நினைக்கிறார்கள். மாமனார் கடம்பவனம் மருமகன் 'ஏன் அங்கே வந்திருக்கிறான்' என்பதை அங்கு வரும்வரை முழுவதுமாக அறியவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது. கோச்சுவண்டி அங்கு வந்து நிற்பதே, சிங்கபுரம் மைனர் கூத்தாடும் இடத்துக்கு வந்ததே அவருக்கு அசூயை ஏற்படுத்துகிறது!

    "வருசாவருசம் இங்கன நான்தான் ஆடிக்கிட்டு கிடந்தேன்...இந்த வருசம் என்ன நினைச்சாரோ செட்டியாரு திருவாரூர்லேர்ந்து புதுசா ஒரு செட்டைக் கொண்டுவந்து இறக்கிட்டார்..ஏஏன்" என்று வெகுளியாக இழுத்துக் கேட்கிறாள்

    "அந்த மோகனாங்கி என்னமாத்தான் ஆடுறாஹன்னு பார்த்துட்டு வாரேன்" என்று வீம்பாக சொல்லிச் செல்கிறாள்

    I find it moving. நினைத்துப் பாருங்கள்: மோகனாவுக்கும் பலகண்ணாடி அலங்கார முதல் ஃப்ரேம்...ரமாமணி'க்கும் அலங்காரம் செய்துகொண்டு தயாராகும் முதல் ஃப்ரேம்! மேடையில் ஆட ஆயத்தமாக இருக்கும் அலங்காரங்களுடன் சென்றவள்- கசப்பின் சுவடே தெரியாமல் பூரணமாக ரசிக்கத் துவங்கிவிடுகிறாள்!

    என்ன ஒரு உயர்ந்த ஜீவன்!
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1776
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks Russellmai thanked for this post
  9. #1777
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography series

    129. Gurudhakshinai குருதட்சணை





    தணிக்கை 02.06.1969
    வெளியீடு 14.06.1969

    தயாரிப்பு - ஸ்ரீ கஜலக்ஷ்மி ஃபிலிம்ஸ், மதராஸ்

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயல்லிதா, பத்மினி, டி.எஸ்.பாலையா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.நம்பியார், கே.ஏ.தங்கவேலு, டி.ஆர்ராமச்சந்திரன், எஸ்.ராமாராவ், பி.டி.சம்பந்தம், எஸ்.வி.சஹஸ்ரநாம்ம், செந்தாதமரை, மனோரமா, ரமாபிரபா, ஜி.சகுந்தலா, டி.என்.சிவதாணு, எஸ்.ஆர்.தசரதன், குண்டு கருப்பையா, மாஸ்டர் பிரபாகர், மாஸ்டர் விஜயசங்கர் மற்றும் பலர்.

    மேக்கப் - ரங்கசாமி, தனகோடி, கோபால், ராமு, மாணிக்கம், நாராயணசாமி, பெரியசாமி, திருநாவுக்கரசு, பத்மனாபன், தக்ஷிணாமூர்த்தி, சேதுபதி, கோவிந்தன், ரவி

    ஆடை அலங்காரம் - பி.ராமகிருஷ்ணன், தம்பு, ஸ்ரீனிவாசன், சி.கே.ஹரி,

    ஸ்டூடியோ நிர்வாகம் - டி.வி.வைத்தியநாதன்

    புரோகிராம்ஸ் - ஏ.சுந்தர்ராஜன், எம்.எம்.சுந்தரம், எஸ்.பி.பாலு, இஸட்.எஸ்.ஜி. மைக்கேல்

    ஃபுளோர் இன்சார்ஜ் - எம்.வெள்ளைச்சாமி, எம்.ஜக்கிரியா, கே.முத்தையா

    அரங்க நிர்வாகம் - பி.எஸ்.காளிமுத்து, வி.வள்ளியப்பன்
    அரங்க நிர்மாணம் - ஜி.மதுரை, என்.கிருஷ்ணன், கே.வீர்ராகவன்
    அரங்க ஓவியம் - ஆர்.முத்து, வி. பரமசிவம்
    அரங்க அலங்காரம் - பிலிமோகிராஃப்ட்ஸ்
    மோல்டிங் - எம்.சிதம்பரம், பி.ஜெயராமன்
    எலக்ட்ரிக் சூபர்வைஸர் - சி.என்.புருஷோத்தமன்
    எலக்ட்ரிக் சீஃப் - டி.எம்.தக்ஷிணாமூர்த்தி
    லைட் ஷிஃப்ட் - ஜி.பொன்னுச்சாமி, சி.கிருஷ்ணன், ஆர்.தேசிங்கு நாயுடு, டி.தர்மலிங்கம்
    ஸ்டில்ஸ் - முருகப்பன்- எம்.ஆர்.பிரதர்ஸ்
    டிசைன்ஸ் - பக்தா
    டைட்டில் கார்ட்ஸ் - கே.எஸ்.ஆர்ட்ஸ்
    விளம்பர நிர்வாகம் - மின்னல் - சாந்தி ப்ப்ளிசிடி சர்வீஸ்
    விளம்பர அச்சகம் - ஆஸ்பி லித்தோ ஒர்க்ஸ்
    புரொடக்ஷன் நிர்வாகம் - எஸ்.வி.ராஜகோபால், டிஎன்.ராஜகோபால்
    நிர்வாகம் - கே.என்.வைத்திநாதன்
    அவுட்டோர் யூனிட் - ஸ்ரீ விஜயலக்ஷ்மி போட்டோ சவுண்ட்ஸ், சென்னை - 18.
    பிரிண்டட் அண்டு பிராஸஸ்டு அட் ஜெமினி கலர் லாபரட்டரி, சென்னை - 6.

    ஸ்டூடியோ - ஸ்ரீ சாரதா ஸ்டூடியோஸ் - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ் - ஸோல் புரொப்ரைட்டர் ஸ்ரீ ஏ.எல்.ஸ்ரீனிவாசன்
    நடன அமைப்பு - பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்
    பின்னணி பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
    மூலக்கதை - வீர. பழனியப்பன்
    பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
    சங்கீதம் மேற்பார்வை - திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்
    சங்கீதம் - புகழேந்தி
    ஒலிப்பதிவு - டி.சிவானந்தம்
    பாடல்கள் - ரீரிக்கார்டிங் - ஒலிப்பதிவு மேதை டி.எஸ்.ரங்கசாமி
    கலை - கங்கா
    எடிட்டிங் - டி.ஆர். நடராஜன்
    ஆபரேடிவ் காமிராமேன் - எஸ்.வி.பத்மனாபன், ஏ.பி.ராமானுஜம்
    ஒளிப்பதிவு டைரக்டர் - கே.எஸ்.பிரசாத்
    உதவி டைரக்ஷன் - எஸ்.ஆர்.தசரதன், எம்.கருப்பையா, தஞ்சை மதி
    தயாரிப்பு - சி.பரமசிவம் - முருகு
    அஸோஸியேட் டைரக்டர் - கே.கே.ஸம்பத்குமார்
    திரைக்கதை வசனம் டைரக்ஷன்- - ஏ.பி.நாகராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  11. #1778
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    குருதட்சணை விளம்பர நிழற்படம். நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  13. #1779
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    குருதட்சணை சிறப்பு செய்திகள்

    1. இப்படம் பெற வேண்டிய வெற்றியைப் பெறாததற்குக் காரணம், கதைக்காகக் கூட இன்னொருவர் காலில் நடிகர் திலகம் விழுவதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதாக ஒரு எண்ணம் பரவியிருந்தது.
    2. ஓராங்கிரகமடி கன்னி பாடலில் நடிகர் திலகத்தின் அற்புதமான கரகாட்டம் நம்மை பேருவகையில் ஆழ்த்தும்.
    3. திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்களின் உதவியாளர் புகழேந்தி தனியாக இசையமைத்த படங்களில் ஒன்று. என்றாலும் இப்படத்தில் கே.வி.எம். அவர்கள் மேற்பார்வையில் புகழேந்தி இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
    4. தன்னை விட பலசாலியான ஒருவரிடம் சண்டை போடும் காட்சியில் சிறிதும் செயற்கையின்றி தந்திரத்தால் மோதி வீழ்த்துவதாக வந்த காட்சியமைப்பு, நடிகர் திலகத்தின் நடிப்பு மட்டுமின்றி சண்டைக்காட்சிகளும் மிக இயல்பாக இருக்கும் என்பதை உணர்த்தியது. மறு வெளியீட்டின் போது இச்சண்டைக்காட்சிக்காகவும் கரகாட்டத்திற்காகவுமே ரசிகர்கள் பலமுறை பார்த்தனர்.
    5. படத்தின் டைட்டில் காட்சியில் முக்கியமான நடிக நடிகையரின் புகைப்படம் இடம் பெற்றது.














    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  15. #1780
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    குருதட்சணை - காணொளிகள்

    Athoram maramirukku



    paaru paaru nalla pparu



    oraam giragamadi kanni



    Ondre ondru ulagam ondru



    ketti melam kotta vachu



    title song paaru paaru

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •