-
15th February 2013, 05:45 AM
#2301
Junior Member
Platinum Hubber
சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பதுஅவசியம்.
தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமழ்ச் சமுதாயம் தமிழ் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.
ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.
கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல – தரத்தை மட்டுமல்ல. அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.
கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தையும் காட்ட முடியும்.
மனிதர்களுக்குச் சில குணங்கள் உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் சரியான முறையில் தங்களது சந்ததியினரை வழி நடத்திச சென்றால் அழகான குடும்பத்தினரை உருவாக்க முடியும்.
கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அமைதியில்தான் ஆரம்பமாகிறது. பிறகு இறுதியில் உச்சக்கட்டம் ஏற்பட்டு முடிகிறது.
பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும். பிறர் ரசிப்பதற்காக அல்ல! ஆடலும் பாடலும் அதுபோலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.
குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
கலை எப்போதும் இருக்கும். ஆனால் கலைஞர்கள் இருக்கமாட்டார்கள்.
இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால்தான் எதிர் காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.
சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்துகொள்ளாத்தே இதற்குக் காரணம்.
பதவிகள் எல்லாம் வந்தால் வரும்; போனால் போகும். நான் நடிகனாக இருந்தவன்; அந்த உணர்வை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது.
கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படுவது சிக்கலை ஏற்படுத்துவதற்காக அல்ல; அவசியமான நன்மைகளைப் பெறுவதற்கும் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெருவதற்குமேயாகும்.
ஒரே கட்சி ஆட்சிதான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி, அது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக்க் கூற விரும்புகிறேன்.
-
15th February 2013 05:45 AM
# ADS
Circuit advertisement
-
15th February 2013, 11:09 AM
#2302
Junior Member
Newbie Hubber
மக்கள் திலகத்தின் பொன்மொழிகள் -
கடந்த காலங்களில் மக்கள் திலகம் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து தொகுக்க பட்ட உன்னதமான பொன்மொழிகளின் பதிவுகள் -மிகவும் அருமை .
கண்ணதாசனின் பாடல்களின் ஆய்வுகளும் பிரமாதம் .
நன்றி திரு வினோத் அவர்களே .
-
15th February 2013, 01:44 PM
#2303
Junior Member
Diamond Hubber
படத்தின் பெயர் : பணம் பத்தும் செய்யும். இந்த கௌண்டமணி நடித்த காட்சியின் வீடியோ யாரிடமாவது இருந்தால் தயவு செய்து இங்கே பதிவு செய்யவும்.
Last edited by saileshbasu; 15th February 2013 at 01:58 PM.
-
15th February 2013, 04:04 PM
#2304
Junior Member
Veteran Hubber
Dear Ravichandran Sir,
Thank you for the nice images, of our beloved God with Madam Saroja Devi, Madam Latha, Late Padmini, Ms. Radha Saluja and others, posted in this Thread.
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
Last edited by makkal thilagam mgr; 15th February 2013 at 04:09 PM.
-
15th February 2013, 04:05 PM
#2305
Junior Member
Veteran Hubber
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 4
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகை பி. பானுமதி அவர்கள், "நாடோடி மன்னன்" படத்தில் நடித்தது தொடர்பாக, நமது பொன்மனச்செம்மலுடன் அவராகவே மனத்தாங்கல் கொண்டு, சற்று விலகி இருந்த நேரம் அது. (1957-58 கால கட்டம்).
இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல், நமது மக்கள் திலகம் அவர்கள் பெருந்தன்மையாக, நடிகை பானுமதியை மன்னித்து அவருக்கு தனது அடுத்தடுத்த படங்களில் (ராஜா தேசிங்கு, கலை அரசி, காஞ்சித்தலைவன்) கதா நாயகியாக வாய்ப்பளித்து கவுரவப் படுத்தினார்.
அப்போது அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் உட்பட பல புதுமுக நாயகியர் தமிழ் திரை உலகில் இருந்த போதிலும், பானுமதி அவர்கள் சில படங்களில் கதாநாயகி அல்லாத பத்திரங்களில் நடித்த போதும், அவரை கதாநாயகி பாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்து அவருக்கு தமிழ். திரை உலகில் மீண்டும் வாழ்வளித்தார்.
அது மட்டுமல்லாது, நமது புரட்சித்தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின், அவருக்கு தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமித்து அவரை பெருமைப்படுத்தினார். உடனே பானுமதி அவர்களும் புரட்சித்தலைவரின் இந்த மாண்பினை கண்டு வியந்து தொலைபேசியில் நமது புரட்சித்தலைவருக்கு நன்றி கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
================================================== ================================================== =======
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
-
15th February 2013, 06:41 PM
#2306
Junior Member
Platinum Hubber
ARTICLE FROM DECCAN CHRONICLE
Romance and Tamil cinema always go hand in hand, for it’s our on-screen stars who have made us reach out for the tissues through the years with their trendsetting sizzling chemistry. There have been numerous pairs who have charmed the silver screen in hundreds of Tamil movies. But a few of them have made a lasting impression and conserved a place in the hearts of millions of viewers. On Valentine’s Day, DC presents K’town’s 10 hottest jodis who have scorched the screen right from the MGR-Sivaji times.
MGR – Saroja Devi
The evergreen on-screen pair of the late 50s through a decade was Makkal Thilagam MG Ramachandran and Abhinaya Saraswathi Saroja Devi. The hot couple who began with Naadodi Mannan had back-to-back super hits and went on to give a series of 26 blockbusters including Anbe Vaa, Enga Veettu Pillai and Padagotti. Saroja Devi even made a fashion statement with her trendy choice of saris, blouses, ornaments and hairstyles which inspired many women to follow it.
Last edited by esvee; 15th February 2013 at 06:47 PM.
-
15th February 2013, 07:50 PM
#2307
Junior Member
Diamond Hubber
Originally Posted by
makkal thilagam mgr
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 4
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகை பி. பானுமதி அவர்கள், "நாடோடி மன்னன்" படத்தில் நடித்தது தொடர்பாக, நமது பொன்மனச்செம்மலுடன் அவராகவே மனத்தாங்கல் கொண்டு, சற்று விலகி இருந்த நேரம் அது. (1957-58 கால கட்டம்).
இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல், நமது மக்கள் திலகம் அவர்கள் பெருந்தன்மையாக, நடிகை பானுமதியை மன்னித்து அவருக்கு தனது அடுத்தடுத்த படங்களில் (ராஜா தேசிங்கு, கலை அரசி, காஞ்சித்தலைவன்) கதா நாயகியாக வாய்ப்பளித்து கவுரவப் படுத்தினார்.
அப்போது அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் உட்பட பல புதுமுக நாயகியர் தமிழ் திரை உலகில் இருந்த போதிலும், பானுமதி அவர்கள் சில படங்களில் கதாநாயகி அல்லாத பத்திரங்களில் நடித்த போதும், அவரை கதாநாயகி பாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்து அவருக்கு தமிழ். திரை உலகில் மீண்டும் வாழ்வளித்தார்.
அது மட்டுமல்லாது, நமது புரட்சித்தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின், அவருக்கு தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமித்து அவரை பெருமைப்படுத்தினார். உடனே பானுமதி அவர்களும் புரட்சித்தலைவரின் இந்த மாண்பினை கண்டு வியந்து தொலைபேசியில் நமது புரட்சித்தலைவருக்கு நன்றி கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
================================================== ================================================== =======
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
மதிப்புக்குரிய செல்வகுமார் சார்
அவர்களுக்கு
மகத்தான மாமனிதர் மக்கள் திலகத்தின் சிறப்புக்களை பறைசாற்றும் நிகழ்வுகளை தாங்கள் பதிவிட்டு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------------
-
15th February 2013, 07:56 PM
#2308
Junior Member
Diamond Hubber
திரு. வினோத் சார்,
கவியரசு பாடல்கள் பற்றி தாங்கள் பதிவிட்ட கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. பாராட்டுக்க்கள்.
எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------
-
15th February 2013, 08:32 PM
#2309
Junior Member
Platinum Hubber
புரட்சித்தலைவர் புகழை வெளிபடுத்தும் மக்கள்திலகம் திரியில் நீண்ட கால முயற்சிக்கு பின்பு உள்ளே வரும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது
முதலிள் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் அவர்களை வணங்குகிறேன்
இதுவரை திரியில் பதிவிடும் அனைத்து நண்பர்களையும் வணங்குகிறேன்
நானும் திரியில் இடம்பெற்றதில் பெருமை கொள்கிறேன்
-
15th February 2013, 08:35 PM
#2310
Senior Member
Diamond Hubber
நன்றி வினோத் சார் மற்றும் திரு.ரூப்குமார் சார்
Bookmarks