Page 3 of 4 FirstFirst 1234 LastLast
Results 21 to 30 of 38

Thread: முயற்சிகள்..

  1. #21
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like


    ஆண்டுக்கு ஒருமுறை
    அவனிடத்தில் நான்
    இப்படிச் சொல்லும்போது பதிலுக்கு
    திருப்பி சொல்வதில் கூச்சப்படுகிறான்
    அப்படியே திருப்பிச்சொன்னாலும்
    எதோ பதிலுக்கு சொல்லவேண்டுமே
    என்ற நிமித்தமாக உதிர்த்துச் செல்கிறான்
    நான் சொல்வதற்கு முன்பாகவே
    அவன் எனக்குச் சொல்லி
    நானும் அவனைப் போலவே திருப்பிச்சொன்னாலும்
    என்னை ஒரு மாதிரியாய் பார்க்கிறான்
    எதற்கும் சொல்லி வைக்கிறேன் இன்று
    அவனிடத்தில்.
    Happy Independence day!
    Last edited by venkkiram; 14th August 2014 at 11:31 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    கிளம்பும் அவசரத்தில்
    கிடைக்கும் வெளிச்சத்தில்
    மழித்தும் மழிக்கப்படாமல்
    தீவுகளாக ஒதுங்கியவைகளை
    தொட்டுணரும் அன்றைய பொழுதில்
    அவை
    மேலும் சற்று
    வளர்ந்திருக்கின்றன.

    Last edited by venkkiram; 2nd June 2015 at 12:33 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. Likes Gopal.s, chinnakkannan liked this post
  5. #23
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    முகம்பார்த்து உறவாடும் ஒரேபிறவியாம் நிறமொழி
    யினம்பார்த்து சுற்றம் பேணுவோர்.

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #24
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    கிளம்பும் அவரசத்தில்
    கிடைக்கும் வெளிச்சத்தில்
    மழித்தும் மழிக்கப்படாமல்
    தீவுகளாக ஒதுங்கியவைகளை
    தொட்டுணரும் அன்றைய பொழுதில்
    அவை
    மேலும் சற்று
    வளர்ந்திருக்கின்றன.
    "ரோம" சாம்ராஜ்யம்.

    என் மூதாதையர் அளித்து சென்ற ஒரே சொத்து

    கரடி போல உடல் முழுதும் வியாபிப்பு.

    மாக் மூன்றாலும் மூணு நாள் மட்டுமே

    பிடரிகாதுமூக்கெங்கும் வியாபிப்பு

    ஒரு புறம் மழித்து மறு புறம் பார்த்தால் சொரசொர



    மஞ்சள் பூசிய முக நண்பன் அடிக்கடி சொல்வது

    மாமனும் அப்பனும் விட்டு சென்ற நில மதிப்பை

    என் உடலில் ரோமங்களாய் சென்னையெங்கும் நிலங்கள்

    முக்கிய முகத்திலிருந்து உடல் அக்குள் பேர் சொல்லா இடங்களிலும்

    வீட்டிலோ மணமான போது இருந்த நபர்களில் ஒன்று குறை

    பழையன கழித்து புதியன பெற இயலாத



    நண்பனிடம் காட்டினேன் மூர்க்கத்தை ,புணரும் வித்தை

    விட்டு செல்லவில்லையோ மூத்தோர்கள்.

    நில மதிப்பு சரிந்து ரோம மதிப்பு உயர்வு

    எந்த உலக சந்தையும் பதிக்கவில்லை இதை
    Last edited by Gopal.s; 27th August 2014 at 08:45 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Likes venkkiram liked this post
  8. #25
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மதுரம் மாமி
    கொள்ளை அழகு
    பொன்னிறம்
    நாலுவீடு தள்ளி தான்..
    முக அழகை விட
    கூந்தல் தான்
    விட்டால் தரை பெருக்கும்
    சின்ன வயது முதல்
    நானும் என் அக்காவும்
    அவர் ரசிகைகள்..

    அவரும்
    பார்த்துப் பார்த்துத் தலைசீவுவார்..
    ஏதோ மூலிகையாம்..
    அடர்த்தியாக
    கொட்டாமல் இருப்பதைப் பார்த்து
    கல்லூரி செல்லும் வயதில்
    இருந்த எங்களுக்கு
    நம நம என்றிருக்கும்..
    பின் பக்க ப்ளவுஸின்
    வெட்டுப்பட்ட் இடத்துடன்
    நின்றுவிடும் முடி மீது
    கோபம் கோபமாய் வரும்..
    இருப்பினும் பழகிவிட்டது..
    அவரிடமே சொல்வோம்
    உங்களோட கூந்தலிருக்கே
    எனச் சொன்னால் சிரிப்பார்..
    எங்கள் மீதும் பாசம் அவருக்கு

    காலப் போக்கில்
    கல்யாணம் ஆகி
    நான் துபாய், என் சகோதரி யுஎஸ் எனச்
    சென்றுவிட
    ஒருசில வருடம் கழித்து மதுரை வந்தால்
    மதுரம் மாமி வீடு இல்லை..
    வேறுயாரோ வாங்கி விட்டார்களாம்
    அம்மாவிடம் கேட்டால் தெரியாதுடி
    எப்பவோ காலி பண்ணிட்டுப்போய்ட்டா என்றவள்
    பாவம் ரொம்ப க் கஷ்டப் பட்டா
    மொதல்ல புருஷன்..
    குழந்தைதான் இல்லையோன்னோ..
    அப்புறம் இவளுக்குத் தான்..
    என்னம்மா ஆச்சு..
    இரு நீயே நேர்ல பாரு
    அண்ணா நகர் தான்
    நாளைக்குப் போலாம்..

    அந்த ஃப்ளாட் போய் பெல்லடித்து
    கால்மாற்றி கால்மாற்றி நின்று
    இன்னும் குட்டையாயிருந்த
    கூந்தலைத் தடவியபடி நின்றதில்
    கதவு திறக்க
    கண்களின் வழியாக நெஞ்சினுள் இடி..

    மாமி தான்
    ஆனால் மொட்டை அடித்து..
    இல்லை இல்லை
    முடி கொட்டிவிட்டது போலும்
    முக்காடாய் சேலையிட்டு
    வாடி க்லா எப்பவந்த உள்ளவா
    மாமி வாங்கோ என அம்மாவிடமும்..
    அமர்ந்து கை பற்றினேன்..
    மாமி என்னாச்சு

    என்னமோ வியாதி..
    கீமோ பண்றேன்னு சொல்லி..
    ம்ம் எல்லாம் கொட்டிப் போச்சு..
    ரொம்பப் பெய்ன் டி..
    தாங்கத்தான் முடியலை..
    இப்போ பெட்டர்..

    மாமி ரொம்ப அழகா இருக்குமே மாமி
    எனக்குத் தாங்கலை..எனச் சொல்ல
    போறதுடி போ..முடி தானே..
    தானா வந்துச்சு
    பாத்துக்கிட்டேன்
    போகணும்னு ஆசப்பட்டுச்சு
    போய்டுச்சு எனச் சொல்லி
    வெளிறிச் சிரித்தாள்..
    Last edited by chinnakkannan; 25th August 2014 at 01:12 PM.

  9. Likes venkkiram liked this post
  10. #26
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like


    அந்த ஒரு...

    இங்கே
    முக்கியமானதாக
    எதையோ சொல்லநினைத்தேன்
    மறந்தே விட்டேன்
    எதை சொல்லநினைத்தேன்
    என்பதை என்னால்
    யோசிக்கவே முடியாவண்ணம்
    புதுப்புது எண்ண நீர்க்குமிழிகள்
    தொடர்ச் சங்கிலியாய்
    மேலெழுந்து கொண்டே
    மனதை
    திக்குமுக்காட வைக்கின்றன
    இவை என்று அடங்கும்
    எப்போது மறந்துபோனதை
    மீட்டெடுக்கப் போகிறேன் என்பதற்கு
    இப்போதைக்கு உத்திரவாதமில்லை
    காலம் அதன் திசையில்
    மனதைக் கடத்திச் செல்கிறது
    இனி அதன் எதோ ஒரு புள்ளியில்
    மறந்துபோனது எட்டிப்பார்க்கும்
    ஆனால் அப்போது
    இதே சூழ்நிலை அமையப்பெறுமா
    காலம்தான் அதற்கான
    இன்னொரு திரைக்கதையையும்
    எழுதி வைத்திருக்கும்
    நான் இதுவரை வாசித்திராத
    புதியதொரு பக்கத்தில்..
    Last edited by venkkiram; 18th October 2014 at 06:58 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. Likes kirukan liked this post
  12. #27
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,795
    Post Thanks / Like
    யதார்த்தம்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  13. #28
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    நன்றி pp மேடம்!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  14. #29
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like


    சுடலையும் லெட்சுமியும் சில மனிதர்களும்...

    அன்று காலை ஆறரைமணி இருக்கும்
    என்னச் சத்தம் எனத் தூக்கம் கலைத்து
    வாசல் வெளியே வந்து பார்த்தால்
    நம்ம லெட்சுமி செனைபிடிக்க கன்னங்கரேரென
    ஒரு காளையை ஓட்டிவந்திருந்தார் அசலூர்க்காரர்
    சுடலை என்பது அதற்கு வைக்கப்பட்ட பெயராம்
    லெட்சுமியை ஓட்டிவந்து பண்ணையாள்
    விளக்குக்கம்பத்தில் கட்டி அப்பா சித்தப்பா என மூவரும்
    அதை அசையாமல் பிடித்துக்கொள்ள
    சுடலையை பணிக்கு ஆயத்தமாக்கினார் காளைக்காரர்
    ஏதேனும் உதவிசெய்தால்தான் இங்கே
    நிற்க முடியும் என்றெண்ணிய என்னை
    இதையெல்லாம் நீ பார்க்கக் கூடாதென்று
    அப்பா விரட்ட சித்தப்பாவோ வாய்க்குள்ளேயே சிரித்தார்
    அவசர அவசரமாக மாடிப்படியேறி மேலிருந்த
    கொட்டகையின் சில கீற்றுகளைத் தூக்கிவிட்டு
    ஆர்வத்தோடு பார்க்க ஆரம்பித்தேன்
    சுடலையின் முதற்பாய்ச்சலுக்கு மிரண்டு
    திமிறி நகர்ந்தது சாதுவான லெட்சுமி
    பிடித்துக்கொண்டிருந்த மூவரும்
    மூன்று திசையில் வேகமாக தள்ளப்பட்டார்கள்
    லெட்சுமி அசையாமலிருக்க இம்முறை கழுத்தில்
    மாலைக்கயிறுகட்டி கம்பத்தோடு இறுக்கிவிட்டிருந்தார்கள்
    அடுத்த கொஞ்சநேரத்தில் சுடலை ஐந்தாறுமுறை
    லெட்சுமிமேல் வேகப்பாய்ந்து அடங்கியது
    ஒரே மாதத்தில் பலன் தெரியவருமென
    அப்பாவிடம் உறுதிசெய்தார் காளைக்காரர்
    லட்சுமியின் தோளைத் தட்டிக்கொடுத்தே கொல்லைக்கு
    நம்பிக்கையோடு அழைத்துச்சென்றார் பண்ணையாள்
    சுடலையை பராமரிப்பதிலேயே நிறைய செலவாகிறதென
    காளைக்காரர் எவ்வளவு புராணம் பாடியும்
    கேட்ட பணத்தை கொடுக்காமல் பேரம்பேசி
    குறைத்து கொடுத்ததில் அப்பாவுக்கு மகிழ்ச்சி
    கீழத்தெரு தெக்குத்தெருவென எங்கூரிலேயே
    அன்றைய தினத்தில் அடுத்தடுத்து அழைத்துச்
    செல்லப்படும் இடங்களை நோக்கி தளர்ந்த
    நடையோடு தனது எஜமானரைப் பின்தொடர்ந்தது சுடலை.
    Last edited by venkkiram; 27th December 2014 at 10:05 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  15. #30
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,795
    Post Thanks / Like
    பாவம் சுடலை, இல்லையா?
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Page 3 of 4 FirstFirst 1234 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •