Page 12 of 24 FirstFirst ... 2101112131422 ... LastLast
Results 111 to 120 of 234

Thread: Writer Sujatha's works

  1. #111
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    சுஜாதாவின் "ஆ" படித்துக்கொண்டிருந்தேன். அதிலிருந்து...

    (டி,வி.யில்) சில கறுப்பர்கள் ராப் பாடிக்கொண்டிருந்தார்கள்.
    "யார் தெச்ச சட்டை..எங்க தாத்தா தெச்ச சட்டை" சந்தத்துக்கு சரியாக வந்தது


    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #112
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    In one of his essays about Lateral Thinking, he gave a fine eg.,

    " A person born in 1958 died at the age of 72 in 1926 ??? "

    If you had read this already, pls...ans. solladeenga...(atleast for time being)

    Others can give it a shot.

    All the best.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  4. #113
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Railway time ?
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  5. #114
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    That was good lateral thinking by you. But RT should be separated by a " : "

    Ans : Hospital Room Number.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  6. #115
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    Finished reading en iniya iyanthirA and meeNdum Jeeno. Excellent writing. Though its a sci-fi, none of the stuff was confusing. I have taken some AI courses - but it is written in a way that even a lay man can understand. The last three episodes of meeNdum Jeeno had me in tears

  7. #116
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by littlemaster1982
    சுஜாதா அவர்களின் உடல் (உடன்) கவிதை இதுவரை படிக்காதவர்களுக்கு இந்தப் பதிவு. சர்வதேச குழந்தைகள் வருடம் அறிவிக்கப்பட்டபோது, அன்னார் எழுதிய கவிதை இது.

    கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
    கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
    பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
    பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்
    சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
    சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
    காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
    கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
    மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
    மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
    கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
    கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
    ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
    ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
    திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்
    தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
    வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
    வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்
    குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
    கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
    சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்
    சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

    Thanks: Keerthivasan
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  8. #117
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    "அனிதாவின் காதல்கள்" .

    தொடர்கதையாக வந்தபோது எதைப்போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரியவில்லை. இது சுஜாதாவின் வழக்கமான கதை வகை இல்லை. சின்னஞ்சிறு கதைகளில்கூட ஒரு வரியில் அல்லது சொல்லில் சுஜாதாவின் சொல்லாட்சியும் 'திடுக்' முடிவும் பிரமிக்கவைக்கும். அப்படி எதுவுமே இல்லாத வெகு சாதாரணக் கதை.
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  9. #118
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by disk.box
    "அனிதாவின் காதல்கள்" .
    குமுதத்தில் வந்த தொடரா இது ?

    அந்தக் காலத்தில்
    "அன்பே சிவம்.

  10. #119
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    "White Noise 2 - The Light" என்ற ஆங்கிலப் படத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்தேன். முதல் காட்சியில், இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவருக்கு 'சி.சி.யூ'வில் இருதயத் துடிப்பு நின்று போகும். உடனே மருத்துவர்கள் நெஞ்சை அழுத்தி, பிசைந்து இருதயத் துடிப்பை மீட்டுகொண்டு வருவார்கள்.

    2008, பிப் 27ஆம் தேதி, சுஜாதாவிற்கு இந்த மாதிரியான ஒரு சிகிச்சையை நான் நேரில் பார்க்க நேர்ந்தது.

    சி.சி.யூ வேறு உலகம். கால்களுக்கு பாலிதீன் உறை அணிந்துகொண்டு, டெட்டால் போன்ற கிருமிநாசினி திரவத்தினால் கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும். 'நீங்க எப்படி உள்ளே வந்தீங்க?' போன்ற பார்வைகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு நோயாளிக்கும் இரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு எல்லாம் சீராக இருக்கிறதா என்று கண்காணித்துக்கொண்டே இருக்க, இரண்டு மூன்று பேர் பக்கத்திலேயே எப்போதும் இருக்கிறார்கள்.

    எல்லா அறைகளுக்கு வெளியிலும் ஒரு மஞ்சள் விளக்கு எரிகிறது. எமர்ஜன்ஸி என்றால் இந்த விளக்கு ஆம்புலன்ஸ் சத்தத்துடன் கண் சிமிட்டுகிறது. உடனே அக்கம்பக்கத்து டாக்டர், நர்சுகளும் உதவிக்கு ஓடி வருகிறார்கள்.

    எதுவுமே தெரியாமல் சுஜாதா படுத்துக்கொண்டிருந்தார். இருதய துடிப்பு சீராக இல்லாமல் இருந்ததை மானிட்டரில் பார்க்க முடிந்தது. இரத்த அழுத்தமும் அதே போல். சீர் செய்வதற்கு மருந்துகளை உடைத்து உடைத்து சலைன் பாட்டிலில் செலுத்துகிறார்கள். மருத்துவர்கள், நர்சுகள் எல்லோரும் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டு தங்கள் வேலையை செய்துக்கொண்டிருக்க, உறவினர்கள், நண்பர்கள் வந்துவிட்டு சோகமாகத் திரும்பிச் செல்கிறார்கள்.

    பக்கத்தில் இருக்கும் நர்சிடம், "ஏதாவது பேசினா அவருக்குக் கேட்குமா?"

    "கேள்கான் பாட்டுனில்லா" என்று மலையாலம் கலந்த தமிழில் பதில்.

    "மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்துபோய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்துவிடுவோமாம். உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்" -- பத்து வருஷம் முன்பு சுஜாதா எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதி.

    பழைய நினைவுகளுடன் எழுந்து மருத்துவமனை காரிடரில் நடந்து போகிறேன். அனுமார் படம், முகம் பார்க்கும் கண்ணாடி, பிள்ளையார் படம் இருக்கிறது. நடுவில் முகம்பார்க்கும் கண்ணாடி எதற்கு என்று யோசிக்கிறேன்.

    ஏதோ ஒரு அறையில் மஞ்சள் விளக்கு கண்சிமிட்டுகிறது. அபாயச் சத்தம் கேட்கிறது. எந்த அறை என்று பார்க்கிறேன். சுஜாதாவின் எதிர் அறை. யாரோ ஒருவர் அழுதுகொண்டே வெளியே வருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்ல சிலர் பின்னாடியே போகிறார்கள். அப்பாவாக இருக்கலாம்.

    இருப்புக் கொள்ளாமல் திரும்பவும் சுஜாதா இருக்கும் இடத்துக்கே செல்கிறேன். எந்தச் சலனமும் இல்லாமல் அப்படியே இருக்கிறார். மருந்துகள் உடைக்கப்படுகிறது, கலக்கப்படுகிறது.

    நர்சிடம், "சி.சி.யூவில் இந்த மாதிரி எவ்ளோ பேர் இருக்காங்க?"

    "நிறைய"

    "இந்த மாதிரி இருக்கறவங்க யாராவது பிழைச்சிருக்காங்களா?"

    "ரொம்ப ரார்... இல்லை," என்று தலையை ஆட்டுகிறார்.

    "சார் இப்ப எல்லாம் சிறுகதை எழுதினா கொஞ்சம் பெரிசா எழுதிடறீங்க. விகடன் கூட 'சற்றே பெரிய சிறுகதை' ன்னு போடறாங்க. முன்னாடி இருந்த அந்த 'நறுக் சுறுக்' இப்ப கம்மியாடுச்சே?"

    "ஆமாம்பா. ஏனோ தெரியலை இப்ப எல்லாம் நிறைய வர்ணிச்சு எழுதணும் போல இருக்கு"

    "நாலாயிர திவ்விய பிரபந்தம் முழுசுக்கும் நீங்க எளிய உரை எழுதணும் சார்"

    "அவ்வளவு முடியுமா தெரியலையே"

    "கல்கில இந்த வாரம் பெரியாழ்வார் பாசுரம் ரொம்ப நல்லா இருந்தது, எப்படி சார் பாசுரங்களைத் தேர்ந்தெடுக்கறீங்க?"

    "ரொம்ப சிம்பிள், பிரபந்தம் புஸ்தகத்துல ஏதோ ஒரு பக்கத்தைத் திறக்கவேண்டியது. எந்தப் பாசுரம் வருதோ அதை எடுத்து எழுதறேன். இந்தப் பெரியாழ்வார் பாசுரம் உடம்பு சரியில்லைன்னா படிப்பாங்க. மரண படுக்கையில் படிக்க கூட பாட்டு இருக்கு தெரியுமோ?"


    அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பிரபந்தம் படிக்கிறேன்.

    எனக்கு நடந்த சில விநோத அனுபவங்களை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியதற்கு, "Your experiences are indeed interesting; Too much of a coincidence is termed a miracle" என்று ஒரு வரி பதில்

    திடீர் என்று 'பீப்' சத்தம் வருகிறது... ஏதேதோ செய்கிறார்கள். அறைக்கு வெளியே மஞ்சள் விளக்கு சத்தம் போடுகிறது. டாக்டர்கள் வந்து நெஞ்சை அழுத்தி இருதயத் துடிப்பை மீட்க முயற்சிக்கிறார்கள்.

    "எங்க புரோடோகால் பிரகாரம் இந்த மாதிரி 30 நிமிஷம் மசாஜ் கொடுத்துப் பார்க்கணும்... அப்பறமாதான் நாங்க டிக்ளேர் செய்வோம்"

    "இப்ப எல்லாம் எதையும் படிக்கறதில்லை; அலுத்துப் போச்சு, ஏதாவது நல்லதா படிச்சயா தேசிகன்?"

    "இல்லை சார்"

    "பாரதி மணி உயிர்மைல 'தில்லியில் நிகம்போத் காட்(சுடுகாடு)'ன்னு ஒரு கட்டுரை எழுதியிருக்கார். படிச்சுப் பார். எப்பவாவதுதான் இது போல நல்ல கட்டுரை கிடைக்கும்."


    30 நிமிடங்கள் முடிந்து, மருத்துவர்கள் கை கிளவுஸைக் கழட்டுகிறார்கள். மசாஜ் கொடுத்தவர்களுக்கு ஏஸியிலும் வியர்த்திருக்கிறது. மருந்து, மாத்திரைகள், எதுவும் பயன் இல்லாமல் சுற்றிலும் கிடக்கிறது.

    யார் யாரோ வந்து பார்க்கிறார்கள், போகிறார்கள். எல்லோர் முகத்திலும் சோகம்.

    கையில் ஒரு பையும், கைப்பேசியுடனும் ஒருவர் வாசலிலேயே நிற்கிறார். என்னைப் பார்த்துவிட்டு அருகில் வருகிறார்.

    "சார் நான் டைரக்டர் ______ சாரோட அஸிஸ்டண்ட். சார் எப்படி இருக்கார்?"

    "பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் போனார்"

    "ஓ!" என்று கைப்பேசியில் தன் டைரக்டரை அழைக்கிறார். அவர் கால்களில் அந்த பாலித்தீன் உறை இல்லை. அவசரமாக வந்திருப்பார்.

    நான் அவரிடம், "சார் கால்களுக்கு உறை அணிஞ்சுக்குங்க. இங்க உள்ள பலர் ரொம்ப கிரிடிகலாக இருக்காங்க"

    தலையை இரண்டு முறை ஆட்டிவிட்டு இரண்டு அடி நகர்ந்துகொண்டார். பத்து நிமிடம் கழித்து அங்கு இருக்கும் ஒரு செக்யூரிடி வந்து நான் சொன்னதையே மீண்டும் அவரிடம் சொல்கிறார். அசிஸ்டண்ட் டைரக்டர் அலட்சியமான பார்வையில், 'எனக்கு எல்லாம் தெரியும் நீ யார் என்னை கேட்பதற்கு?' என்கிற மாதிரி பார்க்கிறார். டைரக்டர் சொல்கேட்டே பழக்கப்பட்டவர், நாம் சொன்னால் கேட்கமாட்டார் என்று எண்ணுகிறேன்.

    மீண்டும் தொலைப்பேசி அழைப்பு. மீண்டும் விசாரிப்பு, மீண்டும் அதே பதில்கள்...

    "நாய் செத்துபோயிடுத்துன்னு கேள்விப்பட்டேன்"

    "ஆமாம்பா 8 வருஷமா எங்க கூடயே இருந்தது. நான் என்ன பேசினாலும் அதுக்குப் புரியும்"

    "அடுத்து இன்னொரு நாய் வாங்கிடுங்க"

    "ஐயோ, No More dogs and fish ன்னு சொல்லிட்டேன், பிரிவை இந்த வயசில என்னால தாங்க முடியலை


    தாங்க முடியாமல் வெளியே வருகிறேன். இவருக்கும் எனக்கும் இடையில் உள்ளது என்ன? ஆண்டாள் திருப்பாவையில் சொன்ன 'ஒழிக்க ஒழியாது' என்பதான உறவா?

    கேள்வி: உலகத்தில் நிலையானது எது சார் ?
    பதில்: மரணம்


    லிஃப்டில் இறங்கும்போது, லிஃப்ட் இயக்குபவர், "சார் எந்த பக்கமா போறீங்க?"

    "வெளியே போகணும்ப்பா.."

    "இல்ல... இந்த லிப்டுக்கு இரண்டு கதவு இருக்கு, இந்தப் பக்கம் திறந்தா வெளிக் கதவு, அந்தப் பக்கம் திறந்தா மார்ச்சுவரிக் கதவு"

    [2008ல் "உயிர்மை" சுஜாதா சிறப்பு மலரில் பிரசுரிக்க எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டதற்காக எழுதியது. பிரசுரமாகவில்லை.]

    தேசிகனின் வலைபதிவிலிருந்து

  11. #120

    Join Date
    Jan 2008
    Posts
    1
    Post Thanks / Like

    Need advice

    Friends,

    I need to present a book to one of my friend for her marriage.

    Any novel by Sujatha on mariage life?

    Regards,
    Giri

Page 12 of 24 FirstFirst ... 2101112131422 ... LastLast

Similar Threads

  1. Illayaraja Works
    By sakaLAKALAKAlaa Vallavar in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 8th April 2014, 01:13 AM
  2. Best script writer
    By shobana_in in forum Tamil Films
    Replies: 28
    Last Post: 12th February 2013, 02:49 PM
  3. Sujatha's Drama
    By aanaa in forum TV,TV Serials and Radio
    Replies: 0
    Last Post: 30th April 2010, 06:35 AM
  4. Sujatha's 'Katradhum Petradhum'
    By thiru5566 in forum Tamil Literature
    Replies: 1
    Last Post: 23rd February 2008, 10:06 PM
  5. SUJATHA'S WORKS
    By VENKIRAJA in forum Tamil Literature
    Replies: 1
    Last Post: 14th May 2006, 11:53 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •