-
26th August 2012, 06:40 PM
#1
Senior Member
Veteran Hubber
நிலவே முகம் காட்டு...!!!!
/after admiring the pics by madhuppappaa... am following the footsteps
My third attempt, en karppanai kuthirai odikondirukkiradhu
idhu semma mokkaiyaana kadhai... spoiler alert...!!!!!!!!! /
1
நல்ல பௌர்ணமி இரவு...
ச்சிக்குமா இந்தா ஒரு வாய் சாப்டிட்டு தூங்குவியாம்... கவிநயா தன் மகள் ரோஜாவுக்கு பால்சாதம் ஊட்டிக்கொண்டிருந்தாள்...
விண்டோ வழியே தெரிந்த நிலாவைப் பார்த்து, மம்மி அந்த நிலவுக்கு அந்த பக்கம் என்னமா இருக்கும்... என்று தன் கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்தாள் ரோஜா...
அங்க ஒரு நிலாராஜா இருக்கானாம்...
'நிலாரஜாவா..ஆ..ஆ.' என்று கண்கள் விரிய கேட்டாள் ரோஜா...
ம்ம்ம்ம் ஆமாண்டி கண்ணு, நிலாராஜா, தன்னோட நிலாராணிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கானாம்...!!!!!!!
யாரு மம்மி அந்த நிலாராணி ...
நீதாண்டி கண்ணு...
'நானா..ஆ..ஆ..ஆ..' என்று குதித்தாள் ரோஜா...
கவி night shift போனும் dinner செஞ்சியா இல்லையா.. கூவினான் ஸ்ரீஷன்...ம்ம்ம்ம் வந்துட்டேன்... நீ படுத்துப்பியாம் அம்மா இப்போ வந்திடறேன் என்ன...
அந்த machine-இல் இரண்டு மாத்திரையை போட்டு சிறிது தண்ணீரை ஊற்றினாள், அந்த பச்சை button-ஐ அழுத்தினாள், ஐந்தே நிமடத்தில் 'பொலக்'கென்ற சத்தத்துடன் இரண்டு இட்லி வந்து விழுந்தது...
நிலாவைப் பார்த்துக்கொண்டே இருந்தாள் இந்த குட்டி நிலா... பார்த்துக் கொண்டே இருக்கையில் நிலாவில் ஒரு முகம் தெரிந்து மறையே, ரோஜா ஆச்சர்யத்தில் ஆழ்ந்தாள்...
மம்மி மம்மி கம் ஹியர் மம்மி நிலாராஜா தெரியறான்...
என்னடி சொல்றா அவ,
ஒன்னும் இல்ல சும்மா கதை சொல்லிட்டு இருந்தேன்,
ஏண்டி நவ் இட் இஸ் 2312, இந்த காலத்திலும் நிலாகதைலாம் சொல்லிட்டு என்ன இதெல்லாம்... டெல் சம்திங் இண்டரஸ்டிங்...
இதெல்லாம் செய்யணும் ஸ்ரீ, எவ்ளோ வருஷம் ஆனா என்ன, kids has to enjoy certain things இல்லையா... என்று புன்னகைத்து 'நீ கெளம்பு இப்போ' என்று கணவனை வழியனுப்பினாள் கவி...
அடுத்தடுத்த நாட்களில் நிலாவுடன் பேசிக்கொண்டே தூங்கினாள் ரோஜா...
மெல்ல நிலா மறைய தொடங்க, ரோஜா, 'அம்மா என்னமா நிலா குட்டி ஆகிட்டே இருக்கு என்று சோகமாய் கேட்டாள்...
ஒன்னும் இல்லடி கண்ணு, நிலாராஜா, நிலாராணிக்கு... என்று ஆரம்பிக்க
'எனக்காம்மா..' என்று எதிர்ப்பார்ப்புடன் கேட்டாள் ரோஜா
'ஹஹஹஹா... ஆமா ஆமா உனக்கு தான்...' என்று தலைய வருடிவிட்டு... 'உனக்கு நெறையா jewellery, dress-லாம் வாங்கிட்டு வர அடிக்கடி out of station போய்டுவான், தூரமா போக போக சின்னதா தெரிவான்...' என்று சமாதனம் கூறினாள் கவி...
'ஓ ஹோ...சீக்கிரம் வர சொல்லுமா நிலாராஜாவ'
'சரி சரி.. sleep now.. என்று iMusic-இல் ஒரு மெலடி ஸாங் போட்டு விட', அழகாய் தூங்கினாள் ரோஜா...
அன்று இரவு நிலாவை பார்க்க வந்த ரோஜா, 'மம்மி, ஹோ நோ மம்மி' என்று அலற... என்னவோ ஏதோ என்று பதறிக்கொண்டு வந்தாள் கவி, 'என்னடி ஆச்சு'...
'நிலாராஜாவ காணும் மம்மி...' என்றவுடன்,,
இன்னிக்கு அம்மாவாசை-ஓ அதான் என்று யோசித்துவிட்டு,
ஹோ அதுவா, நிலாராஜா உன் கூட hide and seek விளையாடுறான்... நீ வேணா பாரு இன்னும் கொஞ்ச நாள்ல நீயே கண்டுபிடிப்ப...
சொல்லிவைத்தாற்போல் அதுவும் நடந்தது... வளர்பிறையும் ஆரம்பிக்க, 'அம்மா நான் கண்டுபுடிச்சிட்டேன் பாரு' என்று வெற்றிப்புன்னகையுடன் கூறினாள் ரோஜா...
இப்படியே நிலவை ரசித்தே வளர்ந்தாள் ரோஜா...
இப்பொழுது இருவது வயது, நிலாராஜா இன்னும் அவள் மனதில் ஒளிவீசிக்கொண்டுதான் இருந்தான்...
தோழி பூஜா, 'ஏண்டி ஏதோ சின்ன வயசுல நிலாராஜா அப்படின்னு கதை சொல்லியிருகாங்க உங்க மாம், இன்னும் நிலாராஜானு ஒருத்தன் வருவான் உன்ன அங்க கூட்டிட்டு போவான்னு 2327la சொல்லுறது, கொஞ்சம் too much-ஆ இல்ல' என்றாள்...
பூஜா, logicaa யோசிச்சா நீ சொல்றது கரெக்ட், பட் இப்படி யோசிச்சு பாரு, இங்க நாம இருக்கறப்போ, நிலவுக்கு அந்த பக்கம் யாராச்சும் இருக்க மாட்டாங்களா என்ன ... and NASA has proved the existence of living things there.... பூஜாவால் பதில் சொல்ல முடியவில்லை தான்...!!!!!!!!!!!!!!!
Last edited by Madhu Sree; 27th August 2012 at 10:50 PM.
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!
-
26th August 2012 06:40 PM
# ADS
Circuit advertisement
-
26th August 2012, 06:53 PM
#2
Senior Member
Veteran Hubber
2
வாரத்திற்கு ஒரு முறை கூடும் meeting-ர்க்கு ராஜா சந்திஷ் வந்தான், உயரம் பத்தடி இருக்கும், ஆஜானுபாகுவாய், சுருள் சுருளாய் முடியுடன், கம்பீரமாய் வந்து உட்கார்ந்தான் சந்திஷ்... பால் நிறமே மங்கலாய் தெரியும் அவன் பக்கத்தில்...
இவர்களின் பாஷையோ ஜாமூன்...
'அஷிஷ்மா அஷிஷ்மா', 'ஜாமூன்' பாஷையில் உட்காருங்கள் என்று அர்த்தம்...
'ஜாலீஷ்ஷா சந்திஷ்', அதாவது ராஜா சந்திஷ்க்கு வணக்கம் கூறினான் தளபதி யாக்ஷான்...
(இனி 'ஜாமூன்' பாஷை இங்கே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)
'நாம இங்க மறைஞ்சு மறைஞ்சு வாழ்ந்தாலும், பூமியிலிருந்து satelittes-லாம் அனுப்பி நம்மள கண்டுபிடிக்கிறதுல அவங்களுக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷமாம்...
செவ்வாயிலிருந்து திசை மாறி வந்த ஜந்துக்கள் தானே மனிதர்கள்... தங்களுது பூர்வீகமே தெரியாத இவர்கள் நம்மளை கண்டுபிடிப்பதா' என்றான் யாக்ஷான்...
'யாக்ஷான், பொறுமை, உனக்கு பூமி ஜந்துக்களை பிடிகாதென்பது எமக்கு தெரியும், அதற்காக இப்படியா' என்று வெண்மையான பற்கள் தெரிய வசீகரமாய் சிரித்தான் சந்திஷ்...
'ராஜா சந்திஷ்க்கு தெரியாதது ஒன்றும் இல்லை, இங்கே நாம் இருப்பது தெரிந்தால், அந்த ஜந்துக்கள் இங்க வர நேரிடும்...' பதற்றமாய் கூறினான் யாக்ஷான்..!!!!!!.
'சரி வந்தால் என்ன ஆகும்......'
'புரட்சி செய்வது தங்களுக்கு பிடித்திருக்கலாம், ஆனால், பகையை சம்பாதிப்பது ராஜாவுக்கு அழகில்லை' என்று பீடிகை போட்டான் யாக்ஷான்
'பகையா' என்று புருவம் உயர்த்தினான் சந்திஷ்...
'amstrong இங்கு வந்து இறங்கிய போதே, ராஜா marsidon கூறினது ஞாபகம் இருக்கட்டும், நம் ஆட்சி சரியில்லை எப்படி ஒரு மனித ஜந்து நம்மிடத்தில் வரலாமென்று நம்மிடம் கேள்வி கேட்டது தங்களுக்கு தெரியாததில்லை...'
நெற்றியை தேய்த்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தான் சந்திஷ்.. 'யாக்ஷான், கொஞ்சம் நாட்கள் பொறுத்திருப்போம், மறுபடியும் நம் வழியில் இந்த மனித ஜந்துக்கள் வந்தால் நாம் என்ன செய்யலாமென்று யோசிப்போம்'...
'ஆகட்டும் ராஜா' என்று சபை கலைந்தது...!!!!!
Last edited by Madhu Sree; 27th August 2012 at 10:50 PM.
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!
-
26th August 2012, 08:26 PM
#3
Senior Member
Senior Hubber
ஷ் ருப்..யம்மி..(தமிழ் பாஷையிலேயே நல்ல ஆரம்பம்..தொடருங்கள் )
-
26th August 2012, 08:32 PM
#4
Senior Member
Diamond Hubber
-
26th August 2012, 08:45 PM
#5
Senior Member
Senior Hubber
எப்படிப்படமெல்லாம் போடறது..
-
26th August 2012, 08:48 PM
#6
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
எப்படிப்படமெல்லாம் போடறது..
எந்தப் படம் போடறீங்களோ அதோட URL-ஐ காப்பி செஞ்சு அதுக்கு முன்னாலே [IMG] போட்டு பின்னாலே [/IMG] போட்டா படம் வந்துடும்.
for example if this is the URL http://fullodia.com/sites-pic/867/13...wallpaper1.jpg
அதுக்கு முன்னும் பின்னும் நான் சொன்ன HTML tags போட்டால் படமாகத் தெரியும். இல்லாவிட்டால் லிங்க் ஆக தெரியும்.
-
26th August 2012, 08:51 PM
#7
Senior Member
Veteran Hubber
madhupappaa.. enakku chandhishkkum ippadi oru link
anyhow I always had this kind of thought...
btw, yes oru thodakkadhaiyaa ezhudhalaamnu but siruthodarthaan mindla iruku...
mega thodar ungala pola, matrum nam hubin members, maadhiri jaambavaaangal-aal thaan saathiyam...
btw, idhu night enakku dhideernu nilavapathappooo thonichu, sudden spark again, semma flow, sarasaranu 4 episodes ezhudhitten,
morning ezhundhu paaththaa armstrong irandhu news.... (whatteee coincidenc ) RIP neil armstrong
ippo kudhirai sandippanudhu naaalaikku office leave thaan.. night thirumbavum kadhai ezhudha mood varum appo ezhudhikkalaamnu konjam break potu vechirukken...
PS:
madhu pappaa, enakku andha pic roumba pidichirundhudhu, adhaan select panni poten... kadhaikku roumba poruthamaana picaa manasula pattudhu
Last edited by Madhu Sree; 26th August 2012 at 08:56 PM.
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!
-
26th August 2012, 08:54 PM
#8
Senior Member
Diamond Hubber
மயிலம்மா..
எழுதிய நாலு எபிசோடுல ரெண்டுதானே இங்கே இருக்கு ... மீதி ரெண்டு எங்கே ?
( அதான் இந்த ரெண்டுன்னு வாழைப்பழ ஜோக அடிக்கக் கூடாது )
-
26th August 2012, 08:56 PM
#9
Senior Member
Veteran Hubber
CK, nandri am trying to improve ...
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!
-
26th August 2012, 08:57 PM
#10
Senior Member
Veteran Hubber
madhuppaappaa... mmmm podaren... audience resposne paarththu podalaamnu borenu sollittaaa adhukku mela kashtappaduththa venddaamnu...
idho podaren...
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!
Bookmarks