Page 95 of 401 FirstFirst ... 45859394959697105145195 ... LastLast
Results 941 to 950 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #941
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #942
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நமது மக்கள் திலகம் அவர்களுடைய திரியில் தினமணியில் பொய் செய்தி மன்னர் திரு தீனதயாளன் அவர்களுடைய கற்பனையில் உருவாகி வெளியிட்டுள்ள ஒரு மகா மெகா புளுகு திரியில் பகிர்ந்திருன்தது. பொதுமக்கள் படிக்கும் திரிகளில் இது போல பொய் செய்திகளை வருவதால் படிப்பவர்கள் அதனை தவறாக உண்மை என நினைக்கும் நிலை உருவாகலாம் என்ற காரணத்தால் அதற்க்கு விளக்க உரை எழுதியிருக்கிறேன். அதனை திரி நண்பர்களுக்கு இங்கு பகிர்ந்துள்ளேன்.




    Quote Originally Posted by Shahriyar Akbar View Post
    நடிகை சாவித்திரிக்கு பணமும் வீடும் கொடுத்த தங்கத் தலைவன்

    from dinamani

    சாவித்ரி-18. ஏமாற்றத்தின் பள்ளத்தாக்குகளில்!
    By பா. தீனதயாளன்
    First Published : 05 September 2015 10:00 AM IST

    ஜெமினியை நாயகனாக நடிக்கச் செய்து சாவித்ரி தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் மூலம் நாலு லட்சம் லாபம் வந்தது. சிவாஜியிடம் செல்லாமல் ஜெமினியை வைத்தே தொடர்ந்து பல சினிமாக்களை சாவித்ரி தயாரித்து இயக்கி இருக்கலாம்.

    பிராப்தம் உருவான நேரத்தில் எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு நிகராக, ஜெமினி கணேசனுக்கும் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.

    சாவித்ரி உடன் பிறவா சகோதரர் சிவாஜியை முழுதாக நம்பி களத்தில் இறங்கினார். கடைசியில் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது!

    காதலன் கணேசனும் நிரந்தரமாக சாவித்ரியைக் காப்பாற்றவில்லை. ‘பாசமலர்’ அண்ணன் கணேசனும், பிராப்தத்துக்குப் பின்னர் சாவித்ரியை அடியோடு மறந்து விட்டார்.

    --------------ஆனாலும் சாவித்ரி தேடிப் போகாமலே, காப்பாற்றுங்கள் என்று கேட்காமலே, ஒரே ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்தார்.

    பொன்மனச்செம்மல். வள்ளல். மக்கள் திலகத்தைத் தவிர, அவர் வேறு யாராக இருக்க முடியும்?

    மகாதேவிக்காக வேட்டைக்காரன் கொடுத்த பரிசு! பொது மக்களுக்குத் தெரியாது. கருணையிலும் கண்ணியம். இரக்கத்திலும் ரகசியம்!
    திரு தீனதயாளன் அவர்களின் அருமையான கற்பனையில் உருவான ப்ராப்தம் கதை

    ப்ராப்தம் திரைப்படம் பார்த்தால் தெரியும் எந்தளவிற்கு படம் சிக்கனமாக எடுக்கப்பட்டதென்று !

    ஆடம்பர காட்சிகள் இல்லை....ஆடம்பர உடைகள் இல்லை....ஊட்டி கோடை போன்ற இடங்களில் கூட காட்சி அமைப்புகள் இல்லை...!

    ப்ராப்தம் எடுக்கும்போது திருமதி சாவித்திரி மிக பெரிய கோடீஸ்வரிகளில் ஒருவர்.

    அப்படிப்பட்டவர் எந்த ஆடம்பர காட்சிகளோ, பாடல்களோ, அமைப்புகளோ, உடை அலங்காரங்களோ இல்லாமல் மிகவும் சிக்கனமாக ( அதுவும் தமது சம்பளத்தில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே சாவிதிரிக்காக வாங்கி நடித்தார் நடிகர் திலகம் ) ப்ராப்தம் படம் எடுத்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார் .....என்று மறைமுகமாக நண்பர் தீனதயாள் ஒரு கட்டுகதையை அவிழ்த்து விட்டுள்ளது பெரும் வியப்பு.

    எப்படி பட்ட ஒரு புளுகு மூட்டையை இவர் அவிழ்த்து விடுகிறார் என்று !

    சமீபத்தில் திருமதி சாவித்திரி புதல்வியார் அவர்களிடம் திருமதி சாவித்திரி அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் வீடும் பணமும் கொடுத்ததாக ஒரு செய்தி உள்ளதே என்றபோது...அவர் கூறிய பதில் "அம்மா சாவித்திரியிடம் இதனை பற்றி யாரும் கேட்டு இனி தெரிந்துகொள்ள முடியாது என்கின்ற நம்பிக்கையில், தைரியத்தில் இப்படி பல கட்டு கதைகளை கூறுவது வழக்கம்தானே என்று புன்வுருவளோடு கூறியுள்ளார் !

    கற்பனைகதைகளை தொடர்ந்து எழுதட்டும் அவர்கள் விருப்பம்...ஆனால் நடிகர் திலகம் அவர்களை குறைத்து எழுதும் போக்கு கண்டிக்கத்தக்கது.

    சாவித்திரி அவர்கள் பற்றிய உண்மையான தகவல் கொண்ட புத்தகம் "சாவித்திரி - கலைகளில் ஓவியம் " நாஞ்சில் இன்பா எழுதியுள்ளார். சாவித்திரி மகளுடன், உறவினருடன், திரை உலகில் சாவித்திரி அவர்களுடைய நெருங்கி பழகியவர்களுடன் உரையாடி புத்தகம் எழுதியுள்ளார்.

    அந்த புத்தகத்தில் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் சுமதி என் சுந்தரி திரைப்படத்துடன் ப்ராப்தம் திரைப்படம் ஒரே நாளில் வெளியானது. ஆயினும் ப்ராப்தம் திரைப்படம் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வெளியிட்ட அனைத்து திரை அரங்கிலும் 4 வாரங்களுக்கு குறையாமல் ஓடியது.

    அதிகபட்சமாக மதுரை சிந்தாமணியில் 67 நாட்கள் ஓடியது.

    ஸ்ரீ சாவித்திரி ப்ரோடக்ஷேன் சார்பில் தயாரிக்கப்பட்ட ப்ராப்தம் திரைப்படம் எடுக்க செலவு சுமார் ஆறு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய்.(app. Rs. 6,40,000 ) தமிழகத்தில் ப்ராப்தம் வசூல் செய்த தொகை பதினைந்து லட்சத்தை தாண்டியுள்ளது (Over Rs. 15,00,000 வசூல் தகவல் உபயம் : திரு பம்மலார்)

    ஜெமினியோடு கருத்துவேறுபாடு குழந்தை உள்ளம் திரைப்படம் சாவித்திரி தயாரித்தபோதே உருவானது..காரணம் திரு ஜெமினி அவர்கள் சாவித்திரியை திருமணம் செய்த பிறகும் குழந்தை பிறந்த பிறகும் மதுரையில் பரந்த மீன்கொடியில் தம் கண்களை கண்டார் என்பது தமிழ் திரை உலகறிந்த விஷயம். நடிகர் திலகம் அவர்கள் இதனை திரு ஜெமினியுடன் உரையாடி ஞாயம் கேட்கப்போக இருவருக்கும் சிறிது மனகசப்பு உண்டானது உலகம் அறிந்தது - இது உண்மை !

    மேலும் சில உண்மையான தகவல்கள் பார்க்கலாம் - இதை திருமதி சாவித்திரி அவர்களுடன் நல்ல முறையில் நேர்மையான தொடர்பில் இருந்த எவரிடம் கேட்டு விசாரித்து கொள்ளலாம் !

    அப்போது தெரியும் நண்பர் தீனதயாள் அவர்கள் அவிழ்த்து விட்டுள்ள கதையின் நம்பகத்தன்மை பற்றி -

    திருமதி சாவித்திரி 1981 மே 11, பெங்களுரு சாளுக்ய ஹோட்டல் அறையில் மயங்கி நினைவற்று போனார். பெங்களுரு லேடி க்ரூசன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள செய்தனர். ஹைபோ கிளி சமிக்கு கோமா நிலை.

    அவரை அங்கிருந்து தனி விமானம் மூலம் திரு குண்டுராவ் அவர்களை தொடர்புகொண்டு சென்னைக்கு கொண்டு வர உதவியவர் திருமதி சரோஜாதேவி.

    17-05-80 தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட திருமதி சாவித்திரியை லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு நேராக கொண்டுசென்று வைத்தியம் தொடங்கப்பட்டது அவர் நினைவு திரும்புவதற்கு. வைத்தியம் செய்தது பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள் குழு.

    ஜூன் மாதம் மூன்றாவது வார இறுதி 1981 வரை அங்கு இருந்து பிறகு அவரை அதே நிலையில் சாவித்திரி ஆரம்பகாலத்தில் வாங்கிய அண்ணா நகர் வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்தார் திரு ஜெமினி கணேசன். அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியதன் பிரயசிதமாக அத்தனை செலவையும் தாமே செய்தார் ஜெமினி.

    டிசம்பர் 22, நிலைமை மிக மோசமாக அவரை மீண்டும் லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 26 டிசம்பர் 1981 உயிர் நீத்தார் நடிகையர் திலகம் ! அவரை அவரது சொந்த அண்ணா நகர் வீட்டில் அதாவது முதன் முதலாக இவர் எந்த வீட்டில் இருந்து ஜெமினியை மணக்க வெளியே வந்தாரோ அந்த வீட்டில் வைத்தே இறுதி காரியங்கள் நடைபெற செய்தார் ஜெமினி...

    இதுதான் உண்மையான நிகழ்வு !

    இதில் இருந்தே சாவித்திரிக்கு எந்த வீடும் பணமும் யாரும் கொடுக்கவில்லை என்பது தெள்ளம் தெளிவாக தெரிகிறது !

    திரு தீன தயாளன் அவர்கள் கற்பனை கதை மன்னன் என்பதற்கு இன்னொரு சான்று.

    ஜெமினி கணேசன் அவர்கள் தொடர்ந்து பல வருடங்கள் ஒரு டஜன் படங்களில் தொடர்ந்து நடித்தார் என்பது. அப்படி ஒரு உலக அதிசயம் நடக்கவே இல்லை.

    திரு ஜெமினி அவர்கள் 1972இல் அதிக பட்சமாக 13 படங்களில் நடித்தார். அதில் ஆறு படங்கள் ஒன்று முதல் மூன்று வருடங்களாக படபிடிப்பு நடக்காததால் குறித்த நேரத்தில் வெளியீடு தள்ளிப்போன படங்கள் !
    1969 இல்10 படங்கள்
    1970 இல் 6 படங்கள்
    1071 இல் 4 படங்கள்
    1972 இல் 13 படங்கள்
    1973 இல் 6 திரைப்படங்கள்
    1974 இல் 4 படங்கள்
    1975 இல் 3 படங்கள்
    1976 இல் 5 படங்கள்
    1977 இல் 3 படங்கள் ,
    1978 இல் 2,
    1979 இல் 1,
    1980 1 ( மலையாளம் மட்டும் தமிழ் இல்லை )
    1981, 1982 படங்கள் இல்லை

    நடிகர் திலகம் அவர்கள் நடித்த படங்கள்

    1969 - 9 படங்கள்
    1970 - 9 படங்கள்
    1971 - 10 படங்கள்
    1972 - 7 படங்கள்
    1973 - 9 படங்கள்
    1974 - 6 படங்கள்
    1975 - 8 படங்கள்
    1976 - 6 படங்கள்
    1977 - 8 படங்கள்
    1978 - 9 படங்கள்
    1979 - 7 படங்கள்
    1980 - 6 படங்கள்
    1981 - 7 படங்கள்
    1982 - 13 படங்கள்
    1983 - 8 படங்கள்
    1984 - 10 படங்கள்
    1985 - 8 படங்கள்
    1986 - 7 படங்கள்
    1987 - 10 படங்கள்

    எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் எத்தனை விதமாக ரசனை மாறினாலும் நடிகர் திலகம் அவர்களுடைய மார்க்கெட் உடல் நிலை ஒத்துழைத்த வரை என்றும் உச்சத்தில் மட்டுமே இருந்தது என்பதன் சான்று அவர் நடித்த படங்களின் எண்ணிக்கைகள் !

    திரு தினமணி தீனதயாலுவின் கற்பனை கதை மட்டுமே அன்றி உண்மை எள்ளளவும் இல்லை என்பது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வருகிறது !

    அப்பட்டமான புளுகு மூட்டை இவர் தொடர்ந்து நடிகர் திலகத்தை இறக்கி எழுதி வருவது, இவரது கற்பனை கதைகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்கு புரியும் !

    எதற்குதான் இந்த கேடுகெட்ட பொழைப்போ இந்த தீனதயாளுவிர்க்கு என்பது தெரியவில்லை.

    நடிகர்திலகம் பற்றி தவறான பொய் செய்தி தொடர்ந்து புளுகும் பொய் செய்தி மன்னன் தினமணி திரு தீனதயாளன் கற்பனை கதை இங்கு பதிவானதால் நான் ஒரு ரசிகன் என்ற அடிப்படையில் இங்கு அந்த செய்தி படிக்கும் வெளி மக்கள் தவறாக நினைத்துவிடகூடாது என்பதால் இந்த உண்மை விளக்கம் கொடுக்க நேர்ந்தது !

    RKS
    Last edited by RavikiranSurya; 15th December 2015 at 07:27 PM.

  4. #943
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    image courtesy: Pammalar
    நவம்பர் 23 .. மறக்க முடியாத நாள்.
    தமிழ் சினிமா வரலாற்றில் தன்னிகரில்லா கலைஞனாக, கலைஞர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் நடிகர் திலகம் நடித்த ஆலயமணி 53 ஆண்டுகளுக்கு முன் இந்நாளில் தான் வெளியானது. அப்போதே இது போன்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் ஜொலித்து உச்சியில் சென்று அமர்ந்து விட்டார் மக்கள் தலைவர். மனதுக்குள் மிருகம் ஆட்கொண்டால் மனம் எப்படியெல்லாம் அலைபாயும் என்பதை உளவியல் ரீதியாக புட்டுப்புட்டு வைத்த படம் ஆலயமணி. குறிப்பாக நடிகர் திலகம்-கே.சங்கர்.ஜாவர் சீதாராமன் ..என்ன ஒரு கூட்டணி.. பிரமிப்பூட்டும் திரைக்கதை வசனம், நுட்பமான காட்சியமைப்புகளுடன் கூடிய இயக்கம்... உலக நடிகர்களுக்கெல்லாம் பாடம் வகுக்கும் இலக்கண நடிப்பு..



    ரசிகர்களெல்லாம் சும்மா ஒண்ணும் சிவாஜியை தெய்வமாகக் கொண்டாடவில்லை.. இந்தப் படத்தைப் பார்த்தால் அதில் உள்ள உண்மை தெரியும்... அதில் உள்ள ஆழம் புரியும்..



    சிவாஜி கணேசன் என்பது வெறும் சொல்லல்ல..

    உணர்வின் உருவம்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #944
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    நேற்று உங்களுடைய ஸ்பெஷல் நாள் போல. சும்மா பிய்த்து உதறி விட்டீர்களே! நமக்கு மிகவும் பிடித்த 'நல்லொதொரு குடும்பம்' படத்தின் தலைவர் போன் காட்சியை தங்கள் எழுத்தின் மூலம் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே! அருமை! அருமை!

    எனக்கு 'நல்லதொரு குடும்பம்' படத்தின் முதல் பாதி இன்னும் இன்னும் ரொம்பப் பிடித்தமானது. 'அறிவாளி' படத்தின் அடங்காத குதிரையான பானுமதியை தலைவர் அவர் போக்கிலேயே சென்று அதே போன்று வேண்டுமென்றே ஈகோ காட்டி நடித்து அடக்குவார்.

    'நல்லதொரு குடும்ப'த்தில் நடிகர் திலகம், வாணிஸ்ரீ இருவருமே ஒருத்தருக்கொருத்தர் சளைக்காமல் அவரவர்கள் ஈகோவால் அடிக்கடி பிய்த்து பிடுங்கிக் கொள்வார்கள். ஆனால் ஒருவர் மேல் ஒருவர் அசாத்திய அன்பு வைத்திருப்பார்கள். குலமா குணமா ஆலமரக் காட்சியில் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் நடிப்பில் போட்டி போடுவார்களே. அதற்குப் பிறகு இதில்தான் நடிப்புப் போட்டி. நடுவில் பல படங்கள் சிறப்பாக இருந்தாலும் நல்லதொரு குடும்பத்தில் நடிப்பு இன்னும் அம்சம்.

    அதுவும் முதல் பாதியில் கேட்கவே வேண்டாம். நொடிக்கு நொடி நீயா நானா போட்டிதான். 'பெரிய இது' என்று வாணிஸ்ரீ பொருமுவதும்....'போடி திமிர் பிடிச்சக் கழுதை' என்று தலைவர் பதிலடி கொடுப்பதும் செம கலக்கல். வாணிஸ்ரீ இவரிடம் சண்டை போட்டுக் கொண்டு (அதாவது திருமணத்திற்கு முன்னால்) வீட்டை விட்டுக் கிளம்பியதும் தலைவர் தனியே வாணிஸ்ரீயைத் திட்டி அதே சமயம் புலம்பித் தீர்க்கும் காட்சிகள் இருக்கிறதே! சலிக்காத இன்பக் காட்சிகள் அவை. அதே போல தேங்காய் மனைவியான மனோரமாவை தேங்காய் முன்னாலேயே வீட்டில் மெடிக்கல் செக்-அப் செய்யும் காட்சி வெகு யதார்த்தம். தேங்காய் பண்ணுவது ஓவர் என்றாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. தலைவர் வீட்டிலிருந்து கிளினிக்கிற்கு டாக்டராகச் செல்லும் அழகே அழகு.

    எங்கள் ஊர் ரமேஷ் தியேட்டரில் 45 நாட்களுக்கும் மேலாக அமர்க்களமாக ஓடியது நல்லதொரு குடும்பம். 'இமயம்' பாடலி தியேட்டரில் ஜூலை 21 ரிலீஸ் ஆன 3 நாட்களுக்கு முன்பு தான் 'நல்லதொரு குடும்பம்' திரைப்படத்தை ரமேஷிலிருந்து எடுத்தார்கள் என்று நினைவு. அதுவரை 'நல்லதொரு குடும்ப'த்தைப் பார்த்து தீர்த்து விட்டோம். 'கண்ணா உன் லீலா வினோதம்...சிந்து நதிக்கரையோரம்.....சச்சச்சா.....செவ்வானமே' என்று ராஜாவின் இசையில் அமர்க்களமான பாடல்கள். ஆனால் தலைவருக்கான சோலோ பாடலான 'பட்டதெல்லாம் போதுமாம் பட்டினத்தாரே' பாட்டில் இளையராஜா கொஞ்சம் கோட்டை விட்டிருந்தார். இந்தப் பாடல் சுமார் ரகமே. கொஞ்சம் ஏமாற்றம் தந்தது.

    நல்ல படத்தை நினைவு கூர்ந்து காட்சிகளையும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள். எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். இந்த 17ம் பாகத்தில் தங்களுடைய பங்கு மகத்தானது. அது போல ஆதவன் ரவி, தம்பி செந்தில்வேல் இவர்கள் பங்கும் பாராடப்பட வேண்டியது. திரி அமர்க்களமாகச் செல்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது இப்படியே தொடர வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #945
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    ஆலயமணி நினைவூட்டலுக்கு நன்றி. தலைவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் போட்டோ தூள். அந்த மெஜஸ்டிக் லுக் உடைக்கே ஆயிரமாயிரமாய் அள்ளிக் கொடுக்கலாம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #946
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //சிவாஜி கணேசன் என்பது வெறும் சொல்லல்ல..

    உணர்வின் உருவம்...//

    //ரசிகர்களெல்லாம் சும்மா ஒண்ணும் சிவாஜியை தெய்வமாகக் கொண்டாடவில்லை.. இந்தப் படத்தைப் பார்த்தால் அதில் உள்ள உண்மை தெரியும்//

    சத்தியமான வாக்கியங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #947
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Neyveli Vasudevan Sir,

    Very Good Morning to you !

    I have been on continuous travel officially across India.

    I just saw the previous posts.

    Really appreciate the way, you are shouldering the responsibility along with Mr. Senthilvel, Mr. Raghavender, Mr. Muthayyan Ammu , Mr. Siva etc.,

    It is really a commendable and appreciable noble work that you all are doing considering them as our duty.

    Thanks a million for the same.

    Also, though belated Wishing you a very happy and cheerful birthday. Wishing our Thalaivar's noble soul will bless you with all laurels and prosperity.


    Best Regards
    RKS

  9. Likes Georgeqlj liked this post
  10. #948
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    (From Mr.Ganesh Venkatraman's Face Book Post)

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #949
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    Dear vasu sir,presently bear with me,I dont have the facility in writing in Tamil.I know it will be much better.
    THE UNCOMMON GOD & a common man.
    Vadivukku valaikaappu is still one of the memorable movie,which I havent seen so far ?!I was studying 2nd standard.

    Before we started going to night show,on a rare day,my parents have planned to go for the movie.My mother had told me to get some vegetables from my grandmother in the next street.She had planned to completer the cooking .I was supposed go thro the main road.While walking ,a man in his cycle with much speed had hit me and my leg was caught in the wheel.With fear and panic ,instead of stopping,the cyclist continued his ride. My left leg main bone cracked and few pokes had pierced in my leg.I was in bed for six months and somehow became normal.But the six months was a period when I was more linked to NT.I was in bed and enjoyed songs,(NO SCHOOL FOR THAT a MONTHS)nd the visitors will compulsorily bring PAATTU PYTHTHAGAM of latest NT movies,whether they bring fruits or not.
    THAVAPUDHALVAN is another memorable movie!

  12. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Subramaniam Ramajayam, Georgeqlj liked this post
  13. #950
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தரிசனம்-1. இரு மலர்கள்.
    ----------------------------
    தொடர்கிறது...
    ---------------

    நான் எழுதிய கவிதை ஒன்று.

    "மனிதனைப் பார்த்து
    காலம் கேட்கிறது...
    என்ன கிழித்து விட்டாய் நீ..?
    தினமும் நாட்காட்டியிலிருந்து
    ஒரு தேதியைத் தவிர!"

    -காலம், சுந்தரைப் பார்த்து
    இப்படியெல்லாம் கேலிக்
    கேள்வி கேட்க அவன்
    வாய்ப்பளிக்கவில்லை.

    வியர்வை சிந்தி உழைத்தான்.

    ஜெயித்தான்.

    அவனது வெற்றிச் சிரிப்பு
    ஒவ்வொன்றையும் தன் புன்னகையோடு துவக்கி வைத்தாள்... சாந்தி.
    ----------------

    சாந்தி,சுந்தரைச் செல்லமாகக்
    கடிந்து கொண்டாள்.. விழாவில்
    சற்றும் எதிர்பாராவண்ணம்
    தன்னை பேச அழைத்த குறும்புக்காக.

    சுந்தரும் அவளை வியந்துதான்
    போகிறான்..அவள் மிக அழகாக
    விழாவில் பேசியதை நினைத்து.

    ஒன்று தவறாமல் அத்தனை
    விழாக்களுக்கும் அவன் தன்னுடன் அவளை அழைத்துச்
    சென்றதால், அவன் பேசுவதை
    கவனித்துக் கவனித்துத் தனக்கும் பேசும் திறமை
    வந்து விட்டதாகப் பணிவுடன்
    தெரிவிக்கும் சாந்தியை
    நெகிழ்வோடு அணைத்துக்
    கொள்கிறான் சுந்தர்.

    "உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு நான்
    வாழல சாந்தி. நீ என்னை
    வாழ வைக்கிறே."

    இனிமையில் ஊறிக் கிடந்த
    உள்ளத்திலிருந்து வந்து விழுந்த
    தித்திப்பு வார்த்தைகள்.

    இந்தக் காட்சியில் வரும் ஒரு வசனத்தை நம் நடிகர் திலகம் பேசும் அழகு..

    அப்பப்பா...!

    "அவள் அன்பினால் அவனைத்
    திணற வைத்தாள்"ன்னு கதைகள்ல படிச்சிருக்கேன்.
    அப்ப அதை நினைச்சு சிரிப்பேன்." என்று தொடரும்
    வசனம்.

    கதையில் படித்ததை சாந்தி
    மூலமாக நேரடியாக அனுபவிக்கிற பரவசத்தில்
    வெளிப்படும் வார்த்தைகள்.

    என்னமாய்ப் பேசியிருக்கிறார்..
    தலைவர்?

    அதிலும், " அவள் அன்பினால்
    அவனைத் திணற வைத்தாள்"
    என்று சொல்வதைக் கவனியுங்கள்.

    ஒரு கதையை ஆழ்ந்து படிக்கையில், அதில் நமக்குப்
    பிடித்துப் போன வரிகள்
    நம் நினைவடுக்குகளில்
    ஆழப் பதிந்து விடும். அந்த
    வரிகளை உச்சரிப்பதில்
    நமக்கு ஒரு ஆர்வமும்,
    எந்த நேரத்தில் அந்த வரிகளை
    உச்சரிக்க நேர்ந்தாலும் அதில்
    ஒரு ஜாக்கிரதை உணர்வும்
    ஏற்பட்டு விடும்.

    அந்த ஆர்வத்தையும், ஜாக்கிரதை உணர்வையும்
    நடிகர் திலகத்தின் உச்சரிப்பில்
    உணரலாம்...

    மெய்சிலிர்க்க.
    ------------------

    கீதா காத்திருக்கிறாள்.

    கீதா-
    சுந்தர் கட்டிலில் சொன்ன
    காதல் கவிதைக்கு, கருணையுடன் சாந்தி தந்த
    தொட்டில் பரிசு.

    சாந்தி-சுந்தர் ராஜாங்கத்தின்
    குட்டி ராணி.

    இரவு படுக்கப் போகும் முன்
    வழக்கமாக அப்பா, அம்மாவுக்குத் தரும் முத்தங்களைக் கொடுப்பதற்காக கண்விழித்துக்
    காத்திருக்கிறாள்.

    கன்னங்கள் ஆவலோடு
    காட்டப்படுகின்றன.

    முத்தங்கள் ஆசையோடு
    வழங்கப்படுகின்றன.
    -----------------

    கீதாவின் பள்ளியில், அவளது
    வகுப்புக்கு புதிய ஆசிரியை
    வரப் போவதாக பேச்சு அடிபடுகிறது.

    வகுப்பறைக்குள் நுழையும் பழைய ஆசிரியை, தான் வேறு வகுப்புக்குப் போகப் போவதாகவும், புது ஆசிரியை அந்த வகுப்புக்கு வரப் போவதாகவும் தெரிவிக்க..
    குழந்தைகள் ஆனந்தக் கூச்சலிடுகின்றன.

    அந்தக் கூச்சல் பொறுக்காத
    பழைய ஆசிரியை, குழந்தைகளைக் கடுமையாகக்
    கடிந்து கொள்ளும் போது
    புது ஆசிரியை உள்ளே நுழைகிறார்.

    அந்தப் புது ஆசிரியை-நம்
    பழைய உமா.

    கீதாவின் அருகிலுள்ள பெண்
    குழந்தை, பழைய ஆசிரியை
    மீதுள்ள கோபத்தில் மேசை
    மீதிருந்த கீதாவின் புத்தகத்தை
    எடுத்து வீசுகிறது.

    அந்தப் புத்தகம், உமாவின் மீது
    மோதி விழுகிறது. எடுத்துப்
    பிரித்துப் பார்க்கிற உமா, புத்தகத்தில் கீதாவின் பெயரைப்
    பார்த்து அவளிடம் வருகிறாள்.

    கீதாதான் புத்தகத்தை எறிந்தாள்
    எனக் கருதி அவளிடம் கேட்க, அவள் தான் எறியவில்லை என்கிறாள்.

    "பொய் சொல்லக் கூடாது."

    தெரியும் டீச்சர். எங்க அப்பா
    சொல்லிருக்காரு".

    -அங்கே சுந்தரின் கதாபாத்திரம்
    கம்பீரமாகிறது.

    மேலும் உமா, கீதாவுக்கு பொய்
    சொல்லுதல் தவறென்று அறிவுரை வழங்க... கீதா
    அழுகிறாள்.

    அழுததால் அவள்தான் குற்றவாளியென உமா தீர்மானிக்க,மீண்டும் தான்
    இல்லை என கீதா மறுக்க..
    "நீ இல்லையென்றால் வேறு
    யார்?" என உமா கேட்க, கீதா
    மௌனம் சாதிக்க, நிஜமாகவே
    புத்தகத்தை வீசீய பெண் குழந்தை எழுந்து தான் தான்
    எறிந்ததாக ஒத்துக் கொண்டு
    அழ, உமா கீதாவிடம் இதை
    ஏன் முன்னமே சொல்லவில்லை என விசாரிக்க, கீதா சொல்கிறாள்...

    "எப்பவும் அடுத்தவங்களைப்
    பத்தி கோள் சொல்லக் கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க".

    - அங்கே, சாந்தியின் கதாபாத்திரம் கம்பீரமாகிறது.
    ---------------

    அடுத்த வேளைச் சோற்றுக்கு
    வழியில்லாதவன் வீடும்
    குஷியாயிருக்கிறது என்றால்
    அந்த வீட்டில் குழந்தைகள்
    இருக்கின்றன என்று பொருள்.

    எல்லோரையும் மகிழ்வாக்க
    அத்தனை வீடுகளுக்கும் தானே
    போக முடியாத கடவுள்,
    குழந்தைகளை அனுப்பி வைத்தான்.

    கீதாவை, சுந்தர் வீட்டுக்கு
    அப்படித்தான் அனுப்பினான்.

    கீதாவோடு தானும் ஒரு குழந்தையாய் மாறி, சாந்தியும்
    கணவனிடம் வேடிக்கை செய்து
    விளையாடுகிறாள்.

    சுந்தருக்கு உமா அனுப்பிய
    ஏமாற்ற வெடி பெரிதாய் வெடிக்கவில்லையோ?
    சாந்தியும், கீதாவும் கொளுத்தும்
    ஆபத்தே இல்லாத அன்பு
    மத்தாப்புதான் ஜொலிக்கிறதோ?
    சுந்தர் வீட்டில் தினமும் தீபாவளிதானோ?
    -------------------

    "மகராஜா.. ஒரு மகராணி"
    - சும்மா நேரங் கடத்த
    உபயோகமாகும் பாட்டல்ல.
    ஒரு அற்புதம் நிறைந்த
    ஆறு வருஷ இல்லறத்தின்
    நாலு நிமிஷ இசைச்
    சுருக்கம்.

    இன்னுமொரு அவதாரம் எடுத்து வர யுகக் கணக்கில் காத்திருக்கவில்லை..
    காக்க வைக்கவில்லை..
    - நடிகர் திலகம்.

    கால் மணி நேரம், அரை மணி
    நேரத்திற்கு ஒரு அவதாரமெல்லாம் எடுக்க
    முடிகிறது.. அவரால்.

    கண் அகட்டி, வாய் விரித்து,
    மனித பொம்மையாய் தானும்
    மாறி அவர் செய்யும் விளையாட்டுகளும், அது கண்டு மகிழ்ந்து பூரிக்கும்
    அந்தக் குழந்தையும்.,

    தன்னை வருத்திக் கொண்டு
    கலை செய்து, காண்போரை
    மகிழ்வாக்கிய காலம் வென்ற
    கலைஞன் நடிகர் திலகத்திற்கும், அவரால் கால
    காலமாக மகிழும் நமக்குமான
    எடுத்துக்காட்டுகள்.


    ( ...தொடரும்...)
    Last edited by Aathavan Ravi; 23rd November 2015 at 08:46 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •