-
26th May 2007, 08:12 AM
#41
Senior Member
Devoted Hubber
Dear Friends,
Few friends who are blinded by their Tamil Veery, do not accept Historical Truths, but keep on blinly repeating old False perceptions again and again. In their eagerness they do not mind attacking Hinduism which belonged to theier Forefathers and they have accepted all its writings.
Just because Missionaries and missonary oriented Pavanars and Caste oriented Maraimalai wrote articles which has no intrinsic worth, do not change the truths. Detailed research opinion on these nonsense TaniTamil researchers have been given in Naan Marai post. I respect them, and just want to leave them, but when U want to spread Venom I AM Forced to put articles lik this, which is no pleasure.
Mala says
Hindus believe in many things including deities. They also believe in maharishis. What evidence is there to say that Maharishis existed? A mere mention of their name in some religious book. Similarly, the names of four Tamil vedas are mentioned in Tamil literature. So we can believe the statement, just like you believe in the existence of those rishis because of some statement in some religious book.
We have Panini BCE450,and Tholkappiyam CE100Grammers belons to Maharishi tradition for which no other Language in the world do not have any equivalent till now. Sangam Literuture names few Rishis and quotes Vedas and many Puranic details. They are enough for Straght and Honest RESEARCHERS.
-
26th May 2007 08:12 AM
# ADS
Circuit advertisement
-
28th May 2007, 06:56 AM
#42
Senior Member
Devoted Hubber
Tamil Literature - Chronology
SANGAM PERIOD
Author Work
... aga nAnURu
... ainguRu nURu
kaliththogai
kabilar kuRaNYippabAttu
... kuRundhogai
nakkirar thirumurugARRuppadai
perungunRup perungAsikkanAr malai padugadAm
mAnguti marudhanAr madhuraik kansi
muththAmak kaNNiyAr porunNARARttup padai
kadiyalUr uruththiran kaNNanAr perumbANARRuppadai
nappUdhanAr mullaip pAttu
... puRanNAnURu
... padhiRRup paththu
... paribAdal
naththAdhanAr siRubANARRuppadai
tholkAppiyar tholkApiyam
anthology naRRinai
nakkIrar nedunalvAdai
kadiyalUr urttiran kaNNanar pattinappAlai
Works of 2nd C. AD
Author Work
ilangOvadigaL silappadhigAram
thiruvaLLuvar thirukkuRaL
Works of 4th C. AD
Author Work
nallAdhanAr thirukkadugam
kUdhalUr kizhAr mudhumozhik kaaNYi
Works of 5th C. AD
Author Work
kabila thEvar innA nARpadhu
pUdhaNY sEndhanAr iniyavai nARpadhu
poygaiyAr kalavazhi nARpadhu
Works of 6th C. AD
Author Work
kaNNan kUththanAr kAr nARpadhu
kAraikkAl ammaiyaar aRpudhath thiruvandhAdhi
peruvAyin muLLiyAr AsArak kOvai
kaNitha mEdhaviyAr ElAdhi
UmuvAdhiyAr aindhiNai ezhubadhu
mAran poraiyanAr aindhiNai aimbadhu
kaNNambUdhanAr thiNaimozhi ambadhu
kaNitha mEdhaviyAr thinaimAlai nURRaimbadhu
thirUmular thirumandhiram
kAraikkAl ammaiyAr Umuththa thiruppadhigam
? muththoLLAyiram
munRuRaiyaraiyanAr pazhamozhi nAnURu
pullaNG kAdanNAr kainNnNilai
kAriyAsAr siRubansoomulam
? nAladiyAr
vizhambi nAkanAr naaNmaNikkadigai
Works of 7th C. AD
Author Work
? paandikkOvai
anthology thevAram
anthology nAlAyira divya prabhandam
Works of 8th C. AD
Author Work
konguvEzhir perungadhai
iraiyanAr iraiyanAr agapporuL
Works of 9th C. AD
Author Work
kambar irAmayaNam
avin^AyanAr avinNayam
mANikka vAsagar thirukkOvaiyAr
sEramAn perumAL nAyanAr thirukkayilAya NYAna ulA
? hamizh neRi viLakkam
perundhEvanAr mAvindham
perundhEvanAr pAradha veNbA
? vaLaiyaabadhi
aiyanNAriththanAr puRapporuL veNbA mAlai
thiruththakka thEvar sivaga sindhAmaNi
? nandikkalambaham
aRivANar pancha marapu
Works of 10th C. AD
Author Work
? pazhanikkOvai
? vAmana saridhai
amidhAbadhiyudhaivar amidhAbadhi
nambi andAr nambi athisaya piLLaiyAr pirabandhangaL
? kundalagEsi
? thiruppadhi kOvai
pingalar pingala nigandu
ubEndhiraach sAriyAr singEndhira mAlai
thOlAmozhith thEvar cULAmaNi
-
28th May 2007, 11:14 AM
#43
Senior Member
Seasoned Hubber
Re: Tamil Literature - Chronology
Originally Posted by
devapriya
SANGAM PERIOD
Author Work
... aga nAnURu
... ainguRu nURu
kaliththogai
kabilar kuRaNYippabAttu
... kuRundhogai
nakkirar thirumurugARRuppadai
perungunRup perungAsikkanAr malai padugadAm
mAnguti marudhanAr madhuraik kansi
muththAmak kaNNiyAr porunNARARttup padai
kadiyalUr uruththiran kaNNanAr perumbANARRuppadai
nappUdhanAr mullaip pAttu
... puRanNAnURu
... padhiRRup paththu
... paribAdal
naththAdhanAr siRubANARRuppadai
tholkAppiyar tholkApiyam
anthology naRRinai
nakkIrar nedunalvAdai
kadiyalUr urttiran kaNNanar pattinappAlai
Works of 2nd C. AD
Author Work
ilangOvadigaL silappadhigAram
thiruvaLLuvar thirukkuRaL
Works of 4th C. AD
Author Work
nallAdhanAr thirukkadugam
kUdhalUr kizhAr mudhumozhik kaaNYi
Works of 5th C. AD
Author Work
kabila thEvar innA nARpadhu
pUdhaNY sEndhanAr iniyavai nARpadhu
poygaiyAr kalavazhi nARpadhu
Works of 6th C. AD
Author Work
kaNNan kUththanAr kAr nARpadhu
kAraikkAl ammaiyaar aRpudhath thiruvandhAdhi
peruvAyin muLLiyAr AsArak kOvai
kaNitha mEdhaviyAr ElAdhi
UmuvAdhiyAr aindhiNai ezhubadhu
mAran poraiyanAr aindhiNai aimbadhu
kaNNambUdhanAr thiNaimozhi ambadhu
kaNitha mEdhaviyAr thinaimAlai nURRaimbadhu
thirUmular thirumandhiram
kAraikkAl ammaiyAr Umuththa thiruppadhigam
? muththoLLAyiram
munRuRaiyaraiyanAr pazhamozhi nAnURu
pullaNG kAdanNAr kainNnNilai
kAriyAsAr siRubansoomulam
? nAladiyAr
vizhambi nAkanAr naaNmaNikkadigai
Works of 7th C. AD
Author Work
? paandikkOvai
anthology thevAram
anthology nAlAyira divya prabhandam
Works of 8th C. AD
Author Work
konguvEzhir perungadhai
iraiyanAr iraiyanAr agapporuL
Works of 9th C. AD
Author Work
kambar irAmayaNam
avin^AyanAr avinNayam
mANikka vAsagar thirukkOvaiyAr
sEramAn perumAL nAyanAr thirukkayilAya NYAna ulA
? hamizh neRi viLakkam
perundhEvanAr mAvindham
perundhEvanAr pAradha veNbA
? vaLaiyaabadhi
aiyanNAriththanAr puRapporuL veNbA mAlai
thiruththakka thEvar sivaga sindhAmaNi
? nandikkalambaham
aRivANar pancha marapu
Works of 10th C. AD
Author Work
? pazhanikkOvai
? vAmana saridhai
amidhAbadhiyudhaivar amidhAbadhi
nambi andAr nambi athisaya piLLaiyAr pirabandhangaL
? kundalagEsi
? thiruppadhi kOvai
pingalar pingala nigandu
ubEndhiraach sAriyAr singEndhira mAlai
thOlAmozhith thEvar cULAmaNi
These dates are tailored to push Tolkappiyam and KuraL to the dates that you wish them to be placed.. You cannot prove any specific date except to blabber. Manickavasagar has been pushed forward to the later date. As such, the whole list is wrong and is to be rejected.
Please give the workings for Manickavasagar's date. We do not want the conclusions of others. We want the workings behind the conclusions, including the reasons for those workings. Not just hearsay blabbers like this chappie said this and that chappie said that. You know what we want? Well, let's have it.
-
17th August 2007, 12:17 PM
#44
Senior Member
Devoted Hubber
Development of Tamil WRITING AND Thani Tamil
தனித்தமிழ் என்னும் போலி - (1) - பி.கே.சிவகுமார்
[மிஸ்.தமிழ்த்தாய்க்கு நமஸ்காரம் (நன்றி: சுஜாதா) சொல்லி அவளருள் வேண்டி இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.]
முன்னுரை:
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்- கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்றவர் நம் மஹாகவி. அந்த மஹாகவியின் பார்வையில் பார்க்கும்போது, தமிழுக்கு கலைச்சொல்லாக்கம் (அறிவியல் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சொற்களைத் தமிழ்ப்படுத்துவது) அவசியமான ஒன்று என்பதிலே யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. "நான் கெட்-அப் பண்ணி பிரஷ் பண்ணி பிரேக்ஃபாஸ்ட் பண்ணி அப்புறம் ஆபிஸுக்குக் கம் பண்ணேன்" என்பது போன்ற தொலைகாட்சிப் பதுமைகள் பேசுகிற தமிங்கலம் குறைக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. "இயன்ற வரை தமிழிலே பேச வேண்டும்" என்றும் மஹாகவி நமக்கு வழி காட்டியிருக்கிறார். எனவே, நல்ல தமிழில் பேசவோ பேச முயலவோ வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நல்ல தமிழ் என்பது தனித்தமிழ் இல்லை. தனித்தமிழ் நம் மரபும் இல்லை என்று எழுதினால், நம்மில் சிலர் அதை கலைச்சொல்லாக்கத்துக்கு எதிர்ப்பு என்றும், தமிங்கலத்திற்கு ஆதரவு என்றும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். எனவே முதலில் தனித்தமிழ் என்றால் என்னவென்று பார்ப்போம்.
தனித்தமிழின் தோற்றமும் வரையறையும்:
சூரிய நாராயண சாஸ்திரி என்கிற தன் பெயரைத் தனித்தமிழ்ப்படுத்திக் கொண்ட பரிதிமாற்கலைஞரும், சுவாமி வேதாசலம் என்கிற தன் பெயரைத் தனித்தமிழ்ப்படுத்திக் கொண்ட மறைமலையடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகள் எனலாம். தன் பெயரைத் தமிழ்ப்படுத்துவதாக எண்ணி சூரிய நாராயண சாஸ்திரியார் சூரிய= பரிதி, நாராயண= மால் என்று வேறு சமஸ்கிருதச் சொற்களில் அமைத்துக் கொண்டது ரஸமான விஷயம்தான் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வதை இங்கு நினைவில் கொள்ளலாம். இவர்கள் இருவரும்தான் வடசொற்களே கலக்காமல் முதலில் தனித்தமிழில் எழுதத் தலைப்பட்டவர்கள். பரிதிமாற் கலைஞர் மறைந்த பிறகு- 1916 முதல் மறைமலையடிகள் தனித்தமிழில் பேசுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் சென்றார். வடமொழிச் சொற்களைத் தவிர்க்கிற தனித்தமிழ் இயக்கத்தினர்- கிரந்த எழுத்துகளையும் (ஜ, ஷ, ஸ, முதலியன) வடமொழி எழுத்துகள் என்று சொல்லித் தவிர்க்க ஆரம்பித்தனர். இதிலே பெருஞ்சித்திரனார் போன்றவர்கள், பெயர்களைக் கூடத் தனித்தமிழ்ப்படுத்தத் தலைப்பட்டனர். எனவே, இதிலிருந்து தனித்தமிழ் என்பது- 'வடமொழிச் சொற்கள் என்று தனித்தமிழ் இயக்கத்தினர் நம்புவதையும், கிரந்த எழுத்துகளையும் நீக்கி எழுதுவது' என்று புரிந்து கொள்ளலாம். இந்தத் தனித்தமிழ் குறித்து நம் இலக்கண நூல்கள் என்ன சொல்கின்றன, தனித்தமிழ் ஆதிகாலம் தொட்டே நமது மரபா என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிப்பது இக்கட்டுரையின் நோக்கம் எனலாம்.
தொல்காப்பியம்:
தமிழில் நமக்குக் கிடைத்திருக்கிற மிகத் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் என்று அழைக்கப்படுகிறார். (நூலின் பெயரால் அல்லது பாட்டின் பெயராலேயே ஆசிரியரை அழைக்கிற மரபு தமிழில் இருந்திருக்கிறது என்பதைத் தொல்காப்பியர் என்கிற பெயரின் மூலமும், "செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" பாடல் புகழ் செம்புலப் பெயனீரார் மூலமும் அறிகிறோம். அவர்களின் இயற்பெயர் மறைந்துபோய் அவர்களின் இறவாத படைப்புகளின் பெயர்களால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று சொல்வோரும் உண்டு.) தமிழில் தொல்காப்பியத்திற்கு முன்னும் இலக்கண நூல்கள் இருந்ததை நாம் தொல்காப்பியம் மூலம் அறிகிறோம். ஆனால், அந்த இலக்கண நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. தமிழின் முதல் நூல் அகத்தியம் என்றும் அதன் வழி வந்த வழிநூல் தொல்காப்பியம் என்றும் கூறுவர். தொல்காப்பியத்தின் காலத்தை நிச்சயமாக அறுதியிட்டுக் கூற இயலாது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தொல்காப்பியத்தின் காலம் "கிறிஸ்து சகாப்தத்தின்" (Christian Era) ஆரம்பத்தை ஒட்டி இருக்கலாம் (early centuries of the christian era) என்று சொல்வது பெருந்தவறான கணிப்பாக இருக்க முடியாது என்கிற கூற்றைச் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி முன்வைக்கிறது. டாக்டர் மு.வ. போன்றவர்களோ தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று நிச்சயமாகக் கூறுகிறார்கள். இந்த விவரங்களிலிருந்து, இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டியது பின்வரும் விஷயங்கள் தான்: 1.நம் கையில் கிடைத்திருக்கிற தமிழின் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். 2.அது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. 3.அந்தத் தொல்காப்பியத்திலும் அதன்பின்னர் வந்த இலக்கண நூல்களிலும் தனித்தமிழ் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிவது தனித்தமிழ் நல்லதா, நம் மரபா என்று புரிந்துகொள்ள உதவும்.
திசைச்சொல்லும் வடசொல்லும் வளர்த்த தமிழ்:
வடமொழிச் சொற்களைத் தவிர்த்து தனித்தமிழில் எழுத வேண்டும் என்று சொல்கிறார்களே (கிரந்த எழுத்துகளைத் தவிர்க்கிற விஷயத்திற்குப் பின்னர் வருவோம்.), அதுதான் நல்ல தமிழ் என்று சொல்கிறார்களே- நமது மரபு அதுதானா, தொல்காப்பியக் காலத்தில் அப்படித்தான் இருந்ததா என்றெல்லாம் ஆர்வத்துடன் பார்க்கப் போனால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தொல்காப்பியர் சொற்களை வகைப்படுத்தும்போது அவற்றை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்காகப் பிரிக்கிறார். இயற்சொல்லும் திரிசொல்லும் இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டவை. எனவே, அவற்றைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். பல திசைகளிலிருந்து (பல மொழிகளிலிருந்து) தமிழில் வந்து கலந்த சொற்களைத் திசைச்சொற்கள் எனலாம். தமிழ்நாட்டின் தெற்கிலிருக்கும் இந்துமா கடல் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்று நம்பப்படுகிறது. அங்கிருந்த பல நாடுகள் கொடுந்தமிழ் நாடுகள் என்று அழைக்கப்பட்டன. எனவே, திசைச்சொல் என்பது கொடுந்தமிழ் நாடுகளிலிருந்தும் பண்டைத்தமிழ் நாடு தொடர்பு கொண்டிருந்த பிற நாடுகளிலிருந்தும் தமிழுக்கு வந்து சேர்ந்த சொற்கள் எனலாம்.
உதாரணமாக, பின்வரும் பழம்பாடல் பண்டைத் தமிழ்நாடு தொடர்பு கொண்டிருந்த பதினேழு பிற நாடுகளைப் பற்றிச் சொல்கிறது:
சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடும்குசலம்
தங்கும் புகழ்த் தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே.
(1. சிங்கள நாடு, 2. சோனக நாடு, 3. சாவக நாடு, 4. சீன நாடு, 5. துளுவ நாடு, 6. குடகு நாடு, 7. கொங்கண நாடு, 8. கன்னட நாடு, 9. கொல்ல நாடு, 10. தெலுங்கு நாடு, 11. கலிங்க நாடு, 12. வங்க நாடு, 13. கங்க நாடு, 14. மகத நாடு, 15. கடார நாடு, 16. கவுட நாடு, 17. கோசல நாடு)
பிற்காலத்தில் இஸ்லாமியர், ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர், டச்சு நாட்டவர், ஃபிரெஞ்சு நாட்டவர், யூதர்கள் என்று மேலும் பல நாட்டவர்கள் தமிழ்நாட்டுடன் கொண்ட வணிகத் தொடர்புகளாலும், பிறத் தொடர்புகளாலும் இன்னும் பல திசைச்சொற்கள் தமிழில் சேர்ந்தன. தமிழ் அவற்றை வரவேற்று அனுமதித்து தன் மொழியின் ஒரு பகுதியாக உவகையுடன் ஏற்றுக் கொண்டது. திசைச்சொற்கள் தொல்காப்பியத்திற்கு முன்பிருந்தே தமிழில் இருந்தன என்றும் அறிய வருகிறோம். உதாரணமாக, 'அந்தோ' என்ற வார்த்தை சிங்களத்தில் இருந்து வந்தது என்றும், சிக்கு ("சிக்கெனப் பிடித்தேன்" என்கிறது நம் பக்தி இலக்கியம்) என்பது கன்னடத்திலிருந்து வந்தது என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
எனவே, பிறமொழிக் கலப்பின்றி எழுத வேண்டும் என்று சொல்கிற வாதம் திசைச்சொற்களைத் தூக்கிப் போட வேண்டும் என்று சொல்வதற்கு ஒப்பானது. பொதுமக்களிடையே மிகவும் பிரபலமாகி நாள்தோறும் புழக்கத்தில் இருந்து வருவன இத்தகைய திசைச்சொற்கள். சினிமா, கவர்னர், பார்லிமெண்ட் ஆகியன ஆங்கிலத்திலிருந்து வந்த திசைச்சொற்களுக்கு சில உதாரணங்களாகும். அறிவியல், தொழில்நுட்ப, வணிக வார்த்தைகளுக்குக் கலைச்சொல்லாக்கம் செய்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் இலக்கண மரபின்படி நம்மிடையே ஊறிப்போன திசைச்சொற்களை தமிழின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வதுமாகும். அப்படிச் செய்யாமல் திசைச்சொற்களையும் தமிழ்ப்படுத்தி நாம் உருவாக்குகிற தனித்தமிழ், பொதுமக்களிடமிருந்தும் அன்றாட வாழ்விலிருந்தும் அன்னியப்பட்டதாகும். கலைச்சொல்லாக்கம் என்று வரும்போதுகூட பெரிதும் பழக்கப்பட்டுப் போன திசைச்சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் சரியான மரபாகவும், மொழியை வாழவும் வளரவும் வைக்கிற அணுகுமுறையாகவும் இருக்கும். எனவே, பல ஆண்டுகளாகத் தமிழில் ஏற்கனவே புழங்கி பொதுமக்களிடையே பிரபலமான திசைச்சொற்களை தமிழ் என்கிற பெயரில் மாற்ற முயல்வது, தமிழின் இலக்கணமும் மரபும் அறியாதோர் செய்கிற அறிவுபூர்வமற்ற செயல் ஆகும்.
இலங்கைத் தமிழில் பன் என்பது (Bun) பான் என்றும், காப்பி என்பது கோப்பி என்றும், கோர்ட் என்பது கோட் என்றும், ஷர்ட் என்பது சேட் என்றும், டார்ச் என்பது ரோச் என்றும், டவல் என்பது துவாய் என்றும் திரித்து எழுதப்படுகிறது. இவையெல்லாம் திசைச்சொற்களின் திரிபுகளே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகள் எல்லாம் தமிழ் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
இனி, வடசொல்லுக்கு வருவோம். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழில் வடசொற்கள் (சமஸ்கிருதம் வடமொழி என்றும், சமஸ்கிருதச் சொற்கள் வடசொற்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.) கலந்து புழங்கி வருகின்றன. தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களை இருவகையாகப் பிரிக்கின்றனர். அவை, தற்சமம் மற்றும் தற்பவம் ஆகும்.
தற்சமம் என்பது இரண்டு மொழிகளுக்கும் பொதுவான எழுத்துகளால் ஆன சொற்களைத் தமிழில் வரும்போது அப்படியே ஏற்றுக் கொள்வது. உதாரணமாக, அமலம், கமலம், காரணம், காரியம் என்று சில வார்த்தைகளைத் தமிழாசிரியர் சொல்வர் பாருங்கள், இவையெல்லாம் வடமொழி வார்த்தைகள் என்றே நம்மில் பெரும்பாலோர்க்குத் தெரியாது. இவற்றின் மூலம் சமஸ்கிருதமாக இருக்கலாம்; தமிழாகவும் இருக்கலாம். அதாவது, இத்தகைய வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கலாம். அல்லது, தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்குப் போய் இருக்கலாம். ஒரு சொல்லின் ஆரம்பத்தை (origin) ஆராய்கிற முறைக்கு "வேர்ச்சொல் ஆராய்ச்சி" (Etymology) என்று பெயர். தொல்காப்பியர் கூட சொற்களின் மூலத்தைத் தெளிவாகக் கண்டுபிடித்துவிட முடியாதென்று சொல்கிறார் என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி சொல்கிறது. டாக்டர் கால்டுவெல் போன்ற ஒரு சிலரின் முயற்சிகளைத் தவிர, தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியானது அனுமானத்தின் அடிப்படையிலும், கற்பனையின் அடிப்படையிலுமானவை என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சுருங்கச் சொன்னால் இத்தகைய ஆராய்ச்சிகளால் பெரிதும் பயனொன்றும் இல்லை. பிற மொழிகள் மீது வெறுப்பையும், தன் மொழியின் மீது அறிவுபூர்வமற்ற உணர்வுபூர்வமான பற்றையும் (இது பலநேரங்களில் மொழி வெறியாக மாறக்கூடிய ஆபத்துடையது) வளர்க்கவே இவை உதவும்.
"ஹேஷ்யம்" என்கிற வார்த்தைக்குப் பொருள் கேட்ட நண்பர் ஒருவர், hypothesis என்பதை அச்சொல் குறிக்கிறதா என்று கேட்டிருந்தார். அச்சொல் hypothesis-ஐக் குறிக்குமானால், அதற்கு முன்னூகம் என்னும் அழகானச் சொல் இருப்பதாகவும் எழுதியிருந்தார். ஹேஷ்யம் என்கிற சொல்லுக்கு, ஊகம் என்றும் மேலோட்டமான கணிப்பு என்றும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பொருள் சொல்கிறது. ஆனால், பாருங்கள் முன்னூகம் என்ற சொல் பாதித் தமிழ் மட்டுமே என்றும் வாதிட முடியும். ஊஹனா (Uhana) என்கிற சொல் சமஸ்கிருதத்திலும் இதே பொருளில் வழங்கப்படுகிறது. சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி கூட "ஊகனம் (Ukanam) என்பதையே ஊகம்" என்று சொல்லி அதன் மூலம் (origin) தமிழ் இல்லை என்கிறது. எனவே, தனித்தமிழ் இலக்கணப்படிப் பார்க்கப் போனால், முன்னூகம் என்ற சொல் முழுத்தமிழ்ச்சொல் இல்லையென்று ஆகிவிடும். ஆனால், தமிழ் என்று பார்க்கப்போவோமேயானால், ஹேஷ்யம், முன்னூகம் என்ற இரண்டுச் சொற்களையுமே தமிழ் என்று எடுத்துக் கொள்ள முடியும். மேலும் ஊகம், ஹேஷ்யம் என்ற சொற்கள் முன்னூகம் என்ற சொல்லைவிட வெகுஜனப் புழக்கத்தில் அதிகம் இருந்திருப்பதால் எளியோரும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் அவற்றை முன்னூகத்திற்குப் பதில் பயன்படுத்துவது உபயோகமாக இருக்கலாம். இப்படித்தான், நாம் தனித்தமிழ் என்கிற பெயரில் எழுதுகிற பல சொற்களின் மூலம் தமிழாக இல்லாமலிருப்பதை நாம் பார்க்க முடியும். தனித்தமிழ் என்று போர்டு போட்டுக் கொண்டு, பிறமொழிச் சொற்களைத் தவிர்க்க இயலாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்பதை விட, தமிழில் கலந்துவிட்ட திசைச்சொற்களையும் வடசொற்களையும் தமிழாக ஏற்றுக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துகிற நல்ல தமிழில் எழுதுவது உத்தமம் என்று நான் நம்புகிறேன்
வடமொழிச் சொற்களின் இன்னொரு வகை தற்பவம் என்று அழைக்கப்படுகிறது. தமிழின் ஒலிக்கேற்பத் திரிந்து ஒலிக்கும் சொற்கள் தற்பவம் என்று சொல்வர். உதாரணமாக, ஹரன் பிரசன்னா என்பதைத் தமிழில் அரன் பிரசன்னா என்று எழுதுவது, ஹரி என்பதைத் தமிழில் அரி என்
-
17th August 2007, 12:22 PM
#45
Senior Member
Devoted Hubber
Tamil
CONTINUATION
வடமொழிச் சொற்களின் இன்னொரு வகை தற்பவம் என்று அழைக்கப்படுகிறது. தமிழின் ஒலிக்கேற்பத் திரிந்து ஒலிக்கும் சொற்கள் தற்பவம் என்று சொல்வர். உதாரணமாக, ஹரன் பிரசன்னா என்பதைத் தமிழில் அரன் பிரசன்னா என்று எழுதுவது, ஹரி என்பதைத் தமிழில் அரி என்று எழுதுவது என்று சொல்லலாம். எனவே, இதனுள் ஆழமாகச் செல்லாமல், மேலோட்டமாகக் கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுதுவது என்று பொருள் கொள்ளலாம். அதாவது, இச்சொற்களைத் தமிழ் என்று ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் எழுதும்போது கிரந்த எழுத்துகளை நீக்கியும் எழுதக்கூடிய சொற்கள் எனலாம். கிரந்த எழுத்துகளை நீக்கி எழுதுவதுதான் சரியா? அதைப் பின்வரும் பகுதியில் பார்ப்போம்.
கிரந்த எழுத்துகளும் தமிழ் எழுத்துகளே:
கல்வெட்டுகளின் மூலம் கிடைத்திருக்கும் வரலாற்றுப் பூர்வமானச் சான்றுகளைக் கொண்டு ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் பின்வரும் உண்மைகளை வெளிக்கொணருகின்றனர்:
1. தமிழ் பிராமி எழுத்துகள் அசோகன் காலத்தையொட்டிய பிராமி எழுத்துகள்தான். தமிழ் பிராமி எழுத்துகள் எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டபோது வளைவு சுழிவுகள் பெற்று பரிணாம வளர்ச்சியில் வட்டெழுத்தாக ஆனது.
2. பிராமி எழுத்துகளிலும் தமிழ் முற்காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஔவையார் தமிழ் பிராமி எழுத்துகளில்தான் எழுதியிருப்பார் என்ற முடிவுக்கு வரலாம்.
3. தமிழ் எழுத்துகள் வடநாட்டிலிருந்து வந்த (பிராமி) எழுத்துகளிலிருந்துதான் உருவானவை என்கிற உண்மை சிலத் தமிழறிஞர்களுக்குக் கசப்பாக இருப்பதால், இதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
4. தமிழ் எழுத்துகளிலிருந்து பிராமி எழுத்துகள் உருவானதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால், பிராமி எழுத்திலிருந்து தமிழ் வட்டெழுத்து உருவானதற்குச் சான்றுகள் இருக்கின்றன.
5. இப்போது இருக்கும் தமிழ் எழுத்துகள் கிரந்தத்தோடு தொடர்புடையன. கிரந்த எழுத்துகள் ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்பட்டவை. தென்பிராமியிலிருந்து கிரந்தம் மூலமாக வட்டெழுத்துகள் வந்தன. பிறகு வட்டெழுத்து தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப் பட்டது. ஆனால், பத்தாம் நூற்றாண்டிற்குப் பின் வட்டெழுத்து அழிந்து, கிரந்த எழுத்து பல்லவர் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரைக்கும் இருந்துள்ளது.
மேற்கண்ட வரலாற்று உண்மைகளை ஆராயவும் பொருள் காணவும் நாமும் கல்வெட்டியலாளராகவோ அறிஞராகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மேற்கண்டவற்றிலிருந்து, குன்சாக, தமிழ் எழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து (வடமொழி எழுத்து) உருவானவை என்றும் கிரந்தத்துடன் ஏறக்குறைய ஆறாம் நூற்றாண்டு காலம் முதல் தொடர்புடையவை என்றும் சாதாரண I.Q. உள்ள எவரும் கூடப் புரிந்து கொள்ள முடியும். எனவே, கிரந்த எழுத்தைத் தமிழ் இல்லையென்று ஒதுக்கினால், மற்றெல்லா தமிழ் எழுத்துகளையும் கூட தென்பிராமி மற்றும் கிரந்தம் ஆகியவற்றின் வழியே வந்தவை என்று சொல்லித் தூக்கி எறிந்துவிட முடியும். ஆனால், தனித்தமிழ்ப் பிரியர்கள் அதைச் செய்யாமல், கிரந்த எழுத்துகளை மட்டும் வடமொழி என்று சொல்லி நீக்கிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிரந்த எழுத்துகளை ஒதுக்கி எழுதுவதுதான் சரியான தமிழ் என்பதற்கு வரலாற்றுபூர்வமாக உண்மையும் இல்லை என்று இதன்மூலம் விளங்குகிறது. எனவே, எதற்காக கிரந்த எழுத்துகளை ஒதுக்க வேண்டும்.
தொல்காப்பியத்திற்குப் பிறகு பல இலக்கண நூல்கள் தமிழில் வந்திருக்கின்றன. அவற்றுள் திவாகரம் (9ஆம் நூற்றாண்டு), பிங்கலம் (10ஆம் நூற்றாண்டு), நன்னூல் (13ஆம் நூற்றாண்டு), உரிச்சொல் நிகண்டு (14ஆம் நூற்றாண்டு), சூடாமணி நிகண்டு (16ஆம் நூற்றாண்டு) ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பவணந்தி முனிவர் (பவணநந்தி என்ற பெயர் திரிந்து பவணந்தி ஆகியது என்பர்) என்னும் சமணத்துறவியால் பதிமூன்றாம் நூற்றாண்டின் முன்பகுதியில் எழுதப்பட்டதாக கணிக்கப்படும் நன்னூல் மிகவும் புகழ் பெற்றது. "முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ" என்கிற புகழ் பெற்றது நன்னூல். அதாவது, நன்னூல் எழுதப்படுவதற்கு முன்னிருந்த இலக்கண நூல்கள் நன்னூல் வந்தவுடன் முக்கியத்துவம் இழந்துவிட்டன என்னும் அளவிற்கும், நன்னூல் எழுதப்பட்டதற்குப் பின் வந்த இலக்கண நூல்கள் எதுவும் நன்னூலுக்கு இணையாக மாட்டா என்றும் சொல்லும் அளவிற்கும் நன்னூல் சிறப்பு மிக்கது என்று போற்றப்படுகிறது. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஔ என்பன வடமொழிக்கும் தமிழிக்கும் பொது உயிர் எழுத்துகள். வடமொழியில் மெய்யெழுத்து முப்பத்தேழு. அவற்றுள் க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்ற பதினைந்து மெய்கள் வடமொழிக்கும் தமிழுக்கும் பொது எழுத்துகள் என்று நன்னூல் சொல்கிறது. கிரந்த எழுத்துகளை வடமொழி என்று நாம் ஒதுக்குவது சரியென்றால், இருமொழிகளுக்கும் பொதுவான இந்த எழுத்துகளையும் வடமொழி என்று ஒதுக்கிப் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் சரியான "தனித்தமிழாக" இருக்க முடியும்.
அதுமட்டுமில்லை, சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி உட்படத் தமிழின் அகராதிகள் கிரந்த எழுத்துகள் கலந்த வார்த்தைகளைத் தமிழ் வார்த்தைகளாகவே கருதி, அவற்றைக் கிரந்த எழுத்துகளைக் கொண்டே பாவித்து, பொருள் தந்திருக்கின்றன. எனவே, கிரந்த எழுத்துகள் தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்தன என்று நாம் அறிய முடிகிறது.
தொகுப்புரை:
"தனித்தமிழ் என்பது தமிழ் இலக்கண நூல்கள் சொல்லுவது; அதுதான் சரியான தமிழ்" என்கிற மாயை நம்மில் பெரும்பாலோரிடையே நிலவுகிறது. எனவே, இக்கட்டுரையில் தமிழ்மொழியின் வரலாற்றுப் படியும், மரபுப் படியும், இலக்கணப்படியும், தனித்தமிழ் தமிழ் அல்ல என்று சான்றுகளுடன் நிறுவ முயன்றிருக்கிறேன். எனவே, இப்போது நமக்கு நல்ல தமிழ் என்பது திசைச்சொற்களும் வடசொற்களும் கலந்து வரக்கூடியதுதான் என்று புரிகிறது. தனித்தமிழ் என்பது வரலாற்று ரீதியாகவும், இலக்கண ரீதியாகவும் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் புரிகிறது. சமஸ்கிருதம்- தமிழில் சொற்றொகுதியை (vocabulary) அதிகப்படுத்த உதவியது என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி சொல்வது போலவே, பிற மொழி திசைச்சொற்களும் சொற்றொகுதியை அதிகப்படுத்த உதவும் என்று நாம் புரிந்து கொண்டால், இத்தகைய வசதிகள் (more than one way to describe a word) மொழிக்கு எவ்வளவு செழுமை சேர்க்கும் என்பதைச் சுலபமாக உணர இயலும். அதுமட்டுமல்ல, சங்ககாலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கம் தோன்றுகிற வரை, தமிழர்கள் எல்லா மொழிகளிலும் உள்ள, வாழ்க்கைக்கு உதவுகிற வார்த்தைகளை வரவேற்கிற ஏற்றுக் கொள்கிற பெருந்தன்மையாளர்களாக இருந்து வந்திருப்பதைப் பார்க்கிறோம். தமிழ் இவ்வளவு காலம் உயிரோடு இருப்பதற்கும், தழைப்பதற்கும் தமிழ் பிறமொழி வார்த்தைகளை இப்படி ஏற்று அரவணைத்துக் கொள்வது ஒரு பெரிய காரணம் எனலாம்.
மேற்கண்டவாறு- இலக்கண ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும்தான் தனித்தமிழ் எவ்வளவு போலியானது என்று பார்த்தோம். நவீன வாழ்வில் வாழுகின்ற நாம், நடைமுறை வாழ்வில் பயன்படுத்துகிற பிற மதிப்பீடுகளின் சார்பில் தனித்தமிழை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று சுருக்கமாகப் பார்ப்போம். இதுபற்றி நெத்தியடியாக ஏற்கனவே பலர் எழுதியுள்ளனர். நாம் இரண்டு ஜாதிகளின் கலப்பு மணத்தை ஆதரிக்கிறோம். இரண்டு பொருளாதாரங்களின் கலப்பை (முதலாளித்துவம் + பொதுவுடைமை = சோஷலிஸம்) ஆதரிக்கிறோம். இரண்டு விதைகளைச் சேர்த்து அமோக விளைச்சலுக்கு வீரியமிக்க கலப்பு விதைகளைக் கண்டுபிடிக்கிறோம். கலப்பு உரங்கள் நமக்கு மகசூலில் சாதனை செய்ய உதவுகின்றன. பல கலாசாரங்கள் பயில்வோரிடமும், பல மொழிகள் பேசுவோரிடையேயும் புழங்குகிறோம். இப்படி நவீனத்துடன் தொடர்பு கொண்டு, தன்னை மாற்றிக் கொள்ளாத எதையும் பத்தாம் பசலி என்றும், வாழ்க்கைக்குதவாத பழமையானது என்றும் கூறுகிறோம். ஆனால் தமிழுடன் மட்டும் பிறமொழிச் சொற்கள் கலக்கக்கூடாது என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். தனித்தமிழ் பேசிக் கொண்டிருந்தால், தமிழையும் விரைவில் வாழ்க்கைக்குதவாதது என்று தூக்கி எறிந்துவிட வேண்டி வரலாம்.
இலக்கியத்திற்குத் தனித்தமிழ் உதவுமா? ஜெயகாந்தன் இதை ஏற்கனவே தன்னுடைய "தமிழும் தனித்தமிழும்" கட்டுரையில் "தனித்தமிழ்தான் தமிழ் எனில் இலக்கியம் படைக்க லாயக்கற்ற மொழி தமிழ் என்றாகும்" என்று சொல்லி விளக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன் இங்கே NPR-வில் (National Public Radio) ஓர் எழுத்தாளரின் நேர்காணல் கேட்கிற வாய்ப்புக் கிடைத்தது. அந்த எழுத்தாளர் "Spanglish" (Spanish + English) என்கிற மொழியில் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இப்படி நவீன வாழ்வில் மொழியானது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஓர் ஊடகம் என்கிற அளவிலேயே மதிக்கப்படுகிறது. இனத்தூய்மை பேசுபவர்களை இனவெறியர்கள் (racist) என்று அழைக்கிற மானுட மதீப்பீடுகளை நாம் பின்பற்றுகிறோம். மொழித்தூய்மையைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னால், வரலாறு நம்மை மொழிவெறியர்கள் என்று பின்னாளில் அழைக்கக் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல தமிழ் (திசைச்சொற்களும் வடமொழிச் சொற்களும் கலந்த தமிழ்) பேச, எழுத சொல்வதுதான் நடைமுறைக்கு உகந்ததாக இருக்க முடியுமே தவிர தனித்தமிழ் பயில வேண்டும் என்று சொல்வது எதற்கும் உதவாது.
எனவே, அறிவுபூர்வமாக சிந்திப்போர், எதன் அடிப்படையிலும் தனித்தமிழ் பேசுவோர் முன்வைக்கிற கூற்றுகளை ஏற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் நிறைய யோசிக்க வேண்டும்.
இக்கட்டுரையை எழுதப் பயன்பட்ட நூல்கள்:
1. ஐராவதம் மகாதேவன் நேர்காணல் - செப்டம்பர் 2003 குமுதம் தீராநதி இதழ்
2. Tamil Lexicon Volumes - University of Madras Publication
3. பிழையின்றி நல்ல தமிழ் எழுதுவது எப்படி - ஜெ.ஸ்ரீசந்திரன் - வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17
4. நன்னூல் காண்டிகையுரை - அ.மாணிக்கம் - பூம்புகார் பதிப்பகம், சென்னை - 18.
5. தமிழும் தனித்தமிழும் - ஜெயகாந்தன் ---> (In TAB encoding) http://www.tamil.net/people/pksivakumar/tamil.htm
6. தமிழ்ப்படுத்துதலும் தமிழ் மனமும் - நாகூர் ரூமி --> http://www.tamiloviam.com/html/Exclusive50.asp
7. பொருந்தாக் காமம் - பி.கே.சிவகுமார் --> http://www.thinnai.com/pl07030310.html
8. தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர் மு.வ. - சாகித்திய அக்காதெமி வெளியீடு
9. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - க்ரியா வெளியீடு
10. மண்டல புருடர் வழங்கிய சூடாமணி நிகண்டு (பதினொன்றாம் தொகுதி) - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு.
-
19th August 2007, 08:50 PM
#46
Senior Member
Devoted Hubber
சிலப்&
சிலம்பிலே திருமணக்காட்சி
தமிழர் திருமண முறை பற்றி அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் ஒன்றும்
கைகொடுக்கவில்லை. அவற்றில் ஒன்றிரண்டிலே உவமைப் பொருளாகத் திருமணம் பற்றிச்
சொல்லப்படுகிறது. திருமணத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தும் செய்யுள் ஒன்றுகூட
இல்லை. தொல்காப்பியத்திலே திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது என்றாலும் அதிலும்
மேலெழுந்தவாரியாகச் சுட்டிச் சொல்லப்படுவதன்றி விரிவாகக் கூறப்படவில்லை. திருமணக்
காட்சியை முழுமையாகக் காட்டும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதிலே காப்பிய
நாயகி, நாயகனான கண்ணகி - கோவலன் திருமணம் பற்றிக் கூறப்படுகிறது. அது
வருமாறு:
"யானை யெருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகர்க் கீந்தார் மணம்
அவ்வழி
முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம்
வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள்மங்கல அணி
யெழுந்தது
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
முனைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்
காதலாற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதறு கெனவேத்எதிச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார் தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டு
உழையதா வெப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒருதனி ழி உருட்டுவோ னெனவே
(மங்கல வாழ்த்துப் பாடல்)
மங்கல வாழ்த்துப் பாடலுள் வரும் "வானூர் மதியஞ் சகடு அணைந்த நன்னாள்"
என்பதற்கு "வானத்திலுள்ள ரோகிணி என்னும் நட்சத்திரத்தை சந்திரன் கூடிய நன்னாள்"
என்றுதான் பொருள் சொல்லப்படுகிறது. இதிலே புலவருலகில் கருத்து
வேறுபாடிருக்கவில்லை.
மணணுலக அருந்ததி
ரோகிணிக்கும் சந்திரனுக்குமுள்ள உறவு மனைவிக்கும் கணவனுக்குமுள்ளது போன்றது
என்று கதை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ரோகிணியைச் சந்திரன் கூடிய நாளே
திருமணத்திற்கான நன்னாள் என்று கருதி அந்நாளிலே கண்ணகி-கோவலனுக்குத்
திருமணம் செய்தனர் அவர்களின் பெற்றோர்- என்கிறார் இளங்கோவடிகள்.
இன்னும் "சாலியொரு மீன் தகையாள்" என்கிறார் கண்ணகியை. கற்புக்குக் கடவுளாக
அருந்ததி என்னும் நட்சத்திரத்தைக் குறிப்பிடுன்றன இந்து சமய காப்பியங்கள்.
அதையொட்டியே கண்ணகி அருந்ததியோடு ஒப்பிடப்படுகிறாள். விண்ணுலகில் கற்புக்குக்
கடவுள் அருந்ததி என்றால் மண்ணுலக மாதர்க்குக் கற்புக்கொரு கடவுளாவாள்
கண்ணகியென்பது சிலம்பு தந்த சேர முனிவரின் பிரகடனம். இது பாரதப் பெருநாடெங்கும்
பரவியுள்ள இந்துக்களின் நம்பிக்கையாகும். கவே இதுவும் தமிழருக்கேவுரிய திருமணச்
சடங்கல்ல.
இன்னும், "மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட", கண்ணகியைக் கைப்பிடித்துக்
கோவலன் புரோகிதன் வளர்த்த தீயை வலம் வருகிறான் என்பதும் இளங்கோ தரும்
திருமணச் செய்தி. "மாமுது பார்ப்பான்" என்பதற்கு, பிதாமகன் (பிரம்மதேவன்) என்றும்
"புரோகிதனுமாம்" என்னும் பொருள் கூறுகின்றார் அடியார்க்கு நல்லார். பிரம்மா நால்
வேதங்களைத் தந்தவன் என்பது பரத கண்டமெங்குமுள்ள இந்துக்களின் பொது
நம்பிக்கை. அதனால் இந்துக்களாகவுள்ள தமிழர்களும் இதை நம்புகின்றனர்.
"மாமுது பார்ப்பான்" என்பது புரோகிதனை மட்டும் குறிப்பதாகக் கொண்டு, அவன் வேத
வழிப்படி திருமணத்தை நடத்தி வைத்தான் என்று பொருள் கொள்ளத் தூண்டும் வகையிலே
"புரோகிதனுமாம்" என்கிறார் அடியார்க்கு நல்லார். இது ராயச்சிக்குரியது.
"மாமுது பார்ப்பான்" என்பதற்குப் பிரம்ம தேவன் என்று மட்டுமே பொருள் கொண்டால்
இடர்ப்பாடெதுவுமில்லை. மாறாக, "புரோகிதன்" என்பது மட்டுமே கொண்டால், அவன்
வயதால் முதியவன் என்று நம்பியாக வேண்டும்.
பொக்கை வாய்ப் புரோகிதர்
பற்களை இழந்த பொக்கை வாய்ப் பார்ப்பானை புரோகிதத்திற்கு அழைக்கக்கூடாது என்பது
இந்துக்களாகவுள்ள தமிழரின் நம்பிக்கை. "பல்லு போனால் சொல்லும் போம்" என்பதும்
பழமொழி. வடமொழி மந்திரம் உந்தியிலிருந்து எழுந்து வாய் வழி ஒலிப்பதாகும்.
அதனால்தான் அது மந்திர மொழி எனப்படுகிறது. அதிலேதான் புரோகிதம்
நடத்தப்படவேண்டும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. பல்லில்லாதவன் மந்திரஞ் சொன்னால்
சொற்களின் வலிமை போய்விடுமாம்! பொய்ப்பல் கட்டிக்கொள்ள வசதியில்லாத காலத்தில்
பிறந்த சிலப்பதிகாரம் தலால், "மாமுது பார்ப்பான் மறைவழி" என்பதற்கு பிரம்மதேவன்
தந்த வேதங்களில் சொல்லியுள்ள மந்திரங்களை யோதி புரோதிகன் திருமணத்தை
நடத்தினார் என்று சொல்வதுதான் முறையாகும்.
கண்ணகி கோவலன் திருமணம் தமிழர் இன வழி அல்லாமல் நால்வருணப்
பாகுபாட்டின்படி வணிகருக்குரிய முறையில் நடந்ததாகவும் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.
ளவானூர் மதியம்" என்பதிலிருந்து "காண்பார்கண் நோன் பென்னை" என்பது
வரையுள்ள வரிகளுக்கு,
" மதியம் சகடணைந்த நான்னாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள்
வணிகர்களுக்குக் கூறிய நெறியிலே சடங்கு காட்ட இவர் இங்ஙனம் தீவலஞ் செய்கின்ற
இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாதுகாண் என்பாராய்."
என்பது அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம்.
சிலம்பில் படும் புரோகிதர்
இதுவரை கூறியவற்றால்-குறிப்பாக , சிலம்பு தந்த அடிகளாரும், அதற்கு விளக்கம் தந்த
அடியார்க்கு நல்லாரும் காட்சிப்படுத்தும் கண்ணகி-கோவலன் திருமணமானது வேத
(இந்து) மதத்தவருக்கு, அவர்களிலேயும் நால்வருணங்களிலே மூன்றாவது வருணத்தவரான
வணிகருக்குரிய நெறிப்படி நடந்ததென்பது உறுதிப்படுகிறது. இதிலே அந்நாளிலும்
இந்நாளிலும் தமிழ் இனத்தவருக்கே உரிய திருமணக்காட்சியில் சடங்காகிவிட்ட தாலி
அணிவிப்பது குறிப்பிடப்படாததால், சிலப்பதிகாரக் காலத்தில் அவ்வழக்கம் இல்லையென்று
கிவிடாது.
கண்ணகி-கோவலன் திருமணத்தில் வேத வழியிலிருந்து வேறுபட்ட -விரோதப்பட்ட அல்ல
- இனவழிப்பட்ட மணமகள் கழுத்தில் மணமகன் தாலியணிவிக்கும் சடங்கும் நடந்திருக்கும்
என்பதற்கு சிலப்பதிகாரத்திலுள்ள வேறு காதைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது.
சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல் 127-ல் "ஈகையரிய இழையணி மகளிர்" என
வரும் சொற்றொடருக்கு,
"மகளிர்க்கு மங்கல அணி ஒழியப் பிறவெல்லாம் நீக்குதற்கு உரியவாதலின் ஈகையறிய
இழைபெற்றார்" என்கிறார் பழைய உரைகாரர்.
சங்க இலக்கியமான நெடுதல் வாடையிலும், "ரந்தாங்கிய அவர் முலையகத்துப் பின்னமை
நெடுவீழ தாழத் துணைதுறந்து" என்று வருகிறது. இதற்கு
" முன் முத்தால் செய்த கச்சுச்சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது
குத்தலபுல் அமைந்த நெடிய தாலி நாண் ஒன்று மட்டுமே தூங்க"
என்று உரையெழுதியுள்ளார். புலவர்கெளல்லாம் உச்சி மேற்கொண்டு போற்றும்
நச்சினாக்கினியர்.
சிலம்பில், "அகலுள் மங்கல அணியெழுந்தது" என்னும் வரிக்கு, "ஊரிலே மாங்கல்ய
சூத்திரம் வலஞ்செய்தது" என்கிறார் அருபத உரைகாரர். மற்றும் கணவன் கோவலன்
பிரிந்த வருந்தத்தால் அணிகல்னகளையும் அலங்காரத்தையும் துறந்து வாழும் கண்ணகியை
பாதாதி கேசமாக வருணிக்குமிடத்து, கழுத்தண்டை வரும்போது "மஙகல அணியிற்பிறிதணி
மகிழாள்" என்கிறார் இளங்கோவடிகள்.
பிற அணிகளை அகற்றிவிடட்ட கண்ணகி, கணவன் இன்னும் உயிர்வாழ்கிறான்
என்பதற்கு அடையாளமாகவுள்ள மங்கல அணியான மாங்கல்யம் ஒன்றை மட்டும்
அணிந்திருந்தாளாம். அது ஒன்றுமட்டுமே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்ததாம்.
வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதையில் சேரன் செங்குட்டுவனுக்கு நல்லணிகளோடு
கண்ணகி காட்சியளித்ததைக் கூறுமிடத்தும், " நாவலம் பொன் இழை" கழுத்தில்
இருந்ததாக இளங்கோ அடிகள் கூறுகிறார்.
திரும்பவும் கூறுகிறேன். சிலம்பில் திருமணத்தைக் காட்சிப் படுத்துமிடத்து கண்ணகி
கழுத்தில் கோவலன் தாலியணிவித்ததைக் கூறாமல் விட்டது, அது வேத வழிப் பட்டதாக
அல்லாமல் தமிழர் இனவழிப்படடதாக இளங்கோ கருதியதால்தான்.
நன்றி
மபொ சிவஞானம்
தமிழர் திருமணம்
பூங்கொடி பதிப்பகம்
-
31st October 2007, 07:06 AM
#47
Senior Member
Devoted Hubber
sangam period Tamilnadu
இலம்பாடிழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக்குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும்
அரைக்கமை மரபின மிடற்றுயாக்குநரும்
மிடற்றமை மரபின அரைக்குயாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
(புறநானூறு பாடல் 378
வரிகள் 13 - 21முதலில் இந்தப் பாடலுக்கு எனக்குத் தெரிந்த வரை பொருள் சொல்லிவிட்டுப் பின்னர் இதில் இருந்து தோன்றும் எண்ணங்களை/கருத்துகளைச் சொல்கிறேன்.
இலம் பாடு - வறுமை; இல்லை என்பதால் படும் பாடு. வறுமை என்பதற்கு மிக அழகான தமிழ்ச்சொல்.
இழந்த - நீங்கிய
என் இரும் பேர் ஒக்கல் - என் மிக மிகப் பெரிய சுற்றத்தவர்
விரல் செறி மரபின - விரலில் அணிந்து கொள்ள வேண்டிய அணிகலன்களை (நகைகளை)
செவித்தொடக்குநரும் - காதில் தொடுத்துக் கொண்டவர்களும்
செவித்தொடர் மரபின - காதில் தொடுத்துக் கொள்ள வேண்டிய நகைகளை
விரற்செறிக்குநரும் - விரலில் அணிந்து கொண்டவர்களும்
அரைக்கமை மரபின - இடுப்பில் அணிந்து கொள்ள வேண்டியவைகளை
மிடற்று யாக்குநரும் - கழுத்தில் கட்டிக் கொண்டவர்களும்
மிடற்று அமை மரபின - கழுத்தில் அணிய வேண்டியவைகளை
அரைக்கு யாக்குநரும் - இடுப்பில் கட்டிக் கொண்டவர்களும்
(என நின்ற அவர்கள்)
கடுந்தெறல் - மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)
இராமன்
உடன் புணர் - உடன் வாழும்
சீதையை
வலித்தகை - வலித்த கை என்று பிரித்தால் மிகுந்த வலிமை மிகுந்த கைகளை உடைய, வலித் தகை என்று பிரித்தால் வலிமையில் சிறந்த
அரக்கன் - இராவணன் என்று பெயர் சொல்லவில்லை. ஆனால் அரக்கன் என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார் புலவர்
வௌவிய ஞான்றை - கவர்ந்து சென்ற போது
நிலஞ்சேர் மதரணி - நிலத்தில் வீசப்பட்ட அணிகலன்களைக்
கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை - கண்ட குரங்கின் சிவந்த முகங்களைக் கொண்ட பெரிய கூட்டம்
இழைப்பொலிந்தாங்கு - அணிகலன்களை (இடம் மாற்றித் தம் உறுப்புகளில்) அணிந்து கொண்டதைப் போல (இருந்தது)
அறாஅ அருநகை - (அதனைக் கண்டு) நிறுத்த முடியாத அளவிற்குப் பெருஞ்சிரிப்பை
இனிது பெற்று இகுமே - இனிமையுடன் பெற்று சிரித்துக் கொண்டிருந்தேன்.
***
வறுமையில் இருந்த தம் சுற்றத்தார் ஒரு அரசன் தந்த பரிசில்களால் தம் வறுமை நீங்கிய போது அப்போது தான் முதன்முதலாகப் பார்க்கும் அணிகலன்களை இடம் மாற்றி அணிந்து கொண்டது குரங்குகள் நகைகளை இடம் மாற்றி அணிந்து கொண்டதைப் போல் மிக்க நகைச்சுவையாக இருந்தது என்கிறார் இந்தப் புலவர்.
இலம்பாடு இழந்த என்று சொல்லும் போது மிக்க சுவையுடன் இருக்கிறது. 'இல்லை என்னும் பாடு இனி ஒழிந்தது' என்ற மகிழ்ச்சி நன்கு தொனிக்கிறது.
என் இரும் பேர் ஒக்கல் என்ற போது தன் சுற்றத்தார் என்னும் பாச உணர்வும் சுற்றம் தழால் (சுற்றத்தைக் காப்பாற்றுதல்) என்னும் பெருங்குணமும் நன்கு காட்டப்படுகின்றன. பொருள் வந்த போது தானும் தன் குடும்பத்தாரும் மட்டுமே அனுபவிக்காமல் தன் மிகப்பெரிய சுற்றத்தவர்கள் எல்லாம் அதனை அனுபவிக்கக் கொடுத்து அதில் மகிழும் புலவரின் அருங்குணம் தெரிகிறது.
'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப்பெருங்கிளை இழைப்பொலிந்தாங்கு' என்ற நான்கு அடிகளால் வால்மீகி இராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் வரும் கதைப்பகுதியைச் சொல்கிறார். இந்தத் தொன்மம் ஆதிகாவியமாகிய வால்மீகியின் வடமொழி நூலில் தான் முதன் முதலில் வந்தது என்று சொல்வோம். அந்த ஆதிகாவியத்தில் வருவதற்கு முன்பே சங்ககாலப் புலவராகிய இவருக்கு இந்தத் தொன்மம் தெரிந்து இருந்திருக்கிறது.
உவமை அணியின் இலக்கணமே 'தெரியாத ஒன்றிற்கு தெரிந்த ஒன்றை உவமையாகச்' சொல்லுவதே. இங்கே சுற்றத்தவரின் நிலையைச் சொல்லும் போது குரங்குகளின் நிலையை உவமையாகக் காட்டுவது இந்தத் தொன்மம் புலவருக்கு மட்டும் இல்லாமல் இந்தப் பாடலை அரங்கேற்றும் அவையில் இருப்பவருக்கும் இந்தப் பாடலைப் படித்து அனுபவிக்கும் வாய்ப்பு உடையவருக்கும் இந்தத் தொன்மம் தெரிந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.
இப்படி பெரும்பாலாவருக்குத் தெரிந்த கதையாக இராமாயணக்கதை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. கம்பனின் காலத்தில் காவிய வடிவை அது பெற்றிருந்திருக்கலாம். அவ்வளவே.
இராமன் சீதை என்று கதையின் தலைவன் தலைவி பெயரைச் சொன்ன புலவர் வில்லனின் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சங்ககாலத்திலேயே சீதையைக் கவர்ந்தவன் அரக்கன் என்ற கருத்து நன்கு நிலை நாட்டப்பெற்றிருந்தது என்று காட்டுகிறது.
சீதையின் நகைகளைக் கண்டபடி அணிந்தவர்கள் குரங்குகூட்டத்தினர் என்று மிகத்தெளிவாகச் சொல்லியிருப்பதும் கவனத்திற்குரியது.
தமிழர்களை அரக்கர்கள் என்றும் குரங்குகள் என்று வடநூலார் இராமாயணத்தில் எழுதியிருக்கிறார்கள் என்ற கருத்து மிகுந்த வலிவுடன் நம்மிடையே இருக்கிறது. சீதையை வௌவியவன் அரக்கன் என்று இந்தத் தமிழ்ப்புலவர் சங்ககாலத்திலேயே சொல்லியிருக்கிறார். வௌவியவன் தமிழன் என்றால் அவனை அரக்கன் என்று குறிப்பாரா? அவனை அரக்கன் என்று குறித்துவிட்டு இராமனையும் சீதையையும் பெயருடன் குறிப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று தானே?
தமிழர்களைக் குரங்குகள் என்று சொன்னார்கள் என்ற கருத்தும் இந்தப் பாடலினால் அடிபட்டுப் போகிறது. சங்கத் தமிழ்ப் பாடலிலேயே குரங்குகள் என்று தெளிவாக இருக்கிறது.
வன நரர்களை (காட்டு மனிதர்களை) வானரர்கள் (குரங்குகள்) என்று வால்மீகி இராமாயணம் சொல்லிவிட்டது என்றதொரு கருத்தும் இருக்கிறது. அந்த க்ருத்தின் வலிமையும் இந்தப் பாடலுக்கு முன் அடிபட்டுப் போகிறது.
தமிழர்களையோ மற்ற இனத்தவர்களையோ குரங்குகள் என்று வடநூலார் சொல்லவில்லை. இந்த தொன்மத்தின் படி அவை குரங்குகளே; அப்படித் தான் சங்ககாலத்திலும் தொன்மம் சொல்லப்பட்டிருக்கிறது; பின்னர் மற்ற காவிய இராமாயணங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.
இந்த ஒரு பாடல் எடுத்துக்காட்டால் இராமாயணம் ஆரிய திராவிட போரின் காவிய உருவம் என்றும் ஆரியர்கள் திராவிடர்களைக் கேவலமாக எழுதியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படும் கருத்துகள் தூள் தூளாகிவிட்டன என்று சொல்லமாட்டேன். அந்தக் கருத்துகளுக்கும் தரவுகள் இருக்கலாம். பலர் ஆராய்ந்து சொன்னவைகளை அப்படி எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் அவை சொல்லும் கருத்துகளுக்கு எதிராக இப்படி ஒரு புறநானூற்றுப்பாடல் இருக்கிறது. அந்தத் தரவினைக் கண்டு நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.
http://koodal1.blogspot.com/
-
16th December 2008, 07:25 PM
#48
excellent link.
Thank you.
Bookmarks