-
18th July 2013, 03:18 PM
#371
Senior Member
Seasoned Hubber
Mala -> appo how did the name Kalai Vaani came? (Saraswathi) i think here also Vaani is a pure tamil name
-
18th July 2013 03:18 PM
# ADS
Circuit advertisement
-
18th July 2013, 05:55 PM
#372
Senior Member
Seasoned Hubber
kalaivani
மலையில் வாழ்வோரை மலைவாழ்நர் என்றனர். இதுபின் மலைவாணர் என்று திரிந்தது.
வாழ்நாள் என்ற சொல், வாணாள் என்று திரிவதையும் அறிந்திருப்பீர்கள்.
இது ழ்+நா = ணா என்பதை உணர்த்தும்.
சோழ + நாடு = (சோழ்)+ நாடு = சோணாடு. சோழ என்பதில் உள்ள அகரம் கெட்டுப் புணர்ந்தது என்பர் இலக்கணியர். அகரம் தொலைந்ததா அல்லது சோழ் என்பதுதான் அடிச்சொல்லா என்கிற ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும். ழ்+ நா = ணா எனற்பாலதை மட்டும் கவனித்துக்கொள்ளுங்கள்.
மலையில் மக்கள் வாழ்கிறார்கள். அதனால் மலைவாழ்நர், மலைவாணர் என்பன பொருத்தமான புனைவுகள்.
கலை என்பதோ உருவற்றது. இடத்தில் வாழ்வதற்கொப்ப, கலையில் மற்றும் கவியில் சிலர் திறன்காட்டியதால், கலைவாணர், கவிவாணர் என்று போற்றப்பட்டனர்.
மலையில் உண்மையில் வாழ்வதைப்போல, கவியும் கலையும் இடங்களல்ல, வாழ்வதற்கு! எனினும் ஒப்புமையாக்கம் நிகழ்கின்றது.
கலையில் வாழ்பவர் - கலையால் வாழ்பவர், கலையில் மிகுந்த புலமை உடையவர் கலைவாணர் என்றுமாயினர். கலையில் தந்துறை போகிய அருங்கலைஞர்! அதேபோல், கவிவாணர்.
பெண்பாலைச் சுட்ட நேர்ந்தபோது, கலைவாணி, கவிவாணி, இசைவாணி என்றெல்லாம் சொற்கள் புனையப்பெற்றன.
வாழ்நர் என்பதிலிருந்து வாணர் தனித்தன்மை (ஒரு சுதந்திரம் போல)பெற்று தனக்குரிய பெண்பால் வடிவையும் பெற்றுக்கொண்டது.
xவாணன் > xவாணி. (where x stands for a preceding word qualifying it)
மலையில் வாழ்வோர் மலைவாணர்.
கலையில் வாழ்பவள், குடிகொண்டிருப்பவள், அதை முன் நின்று இயக்குபவள் கலைவாணி.
வாழ்நர் என்பதுபோல வாழ்நி என்ற பெண்பால் வடிவம் இல்லை.( நான் கண்டதில்லை.)
வாணர் முதலில் திரிந்தமைந்து, பின் வாணி அமைந்ததே காரணம்.
வாழ்நர் என்பது வெறுமனே வாழ்தலைச் செய்பவரையே குறிக்கும், ஆனால், வழக்காற்றின் காரணமாக, வாணர் என்பதற்குத் திறனுடையவர் என்ற பொருள் மேலேறிக்கொண்டுவிட்டது. இதனைப் பொருண்மை உயர்பு எனக் குறிக்கலாம்.
Language progresses from something material to something abstract. The above will also demonstrate this clearly.
note: சங்கதத்திலும் வாணி என்ற சொல் காணப்பெறுகிறது. அது நெயவு, நெயவுத் தறி, வண்டித்தடி, சரசுவதி என்ற பொருள்பல வுடையது. சங்க காலத்தில் கலைவாணி பேச்சாயி எனப்பட்டாள். பேச்சுக்கு ஆயி அல்லது தாய். சங்கதத்தில் கலைவாணி என்னாமல் வாணி என்று மட்டும் முன்னிலை பெற்றுவிட்டது தெரிகிறது. கலை அல்லது கலா என்பது எப்படி சங்கதத்தில் உள்ளதென்று ஆய்வாளர்களுக்கு ஐயப்பாடு உண்டு. சங்கதச் சொல் வாய் என்பதனோடு தொடர்புடையது என்று தெரிகிறது. தமிழ் வாணி வேறு சங்கத வாணி வேறு எனலாம்.
Tamil refers to KalaivANi rather than vANi per se.
Sometimes, words arise from different roots and achieve a similar form. They may also have close or similar meaning. Some such words have been explained in the past. One easy example is parliament and பாராளுமன்றம் now usually நாடாளுமன்றம்.
Skrt vANi is a stand-alone word. You do not have to add kalai or kala to it to make the meaning.
-
20th July 2013, 07:15 PM
#373
Senior Member
Seasoned Hubber
இனி, அவானி, லெவானி, சிவாணி (ஷிவானி) என்னும் வட இந்தியாவில் வழங்கும் பெண் பெயர்களும் சுருங்கி "வானி" அல்லது வாணி என்று வழங்குதலும் உண்டு என்று அறிந்துகொள்ளலாம்.
பவானி என்ற பெயருள்ளவர்களையும் சிலவிடத்து "வாணி" என்பதும் உள்ளதென்று தெரிகிறது. வாணி என்பது மராட்டியத்தில் ஓரிடத்திற்கும் பெயராய் உள்ளது.
சங்கத மொழிச்சொல் " வாணி" வங்காள மொழியில் உருவானதாகச் சிலர் கூறுவர். வற்றிப்போனதாகக் கூறப்பெறும் சரசுவதி யாற்றுக்கும் அதற்கும் தொடர்பு கூறப்படுகிறது. ஆகவே சங்கதச் சொல் வாணிக்கு விரிவான ஆய்வு தேவைப்படலாம்.
சங்கத வாணிக்கு, வாக்(கு) என்பதே மூலமாகக் கூறப்படுகிறது.
இதில் கு என்பது பின்னொட்டு (விகுதி),
நா > நாக்கு.
மோ > மூ > மூக்கு
வாய் > வா > வாக்கு.
வாய் > வாய் நி > வாணி, (வாயினின்று புறப்படும் ஒலி, பேcசு.)
நி என்பது நில் என்பதன் கடைக்குறை.
இது ஆராயத்தக்கது.
Happy research to thiru rsubras with the new-born daughter beside him.
-
20th July 2013, 07:20 PM
#374
Senior Member
Seasoned Hubber
vANi continued/
இனி, அவானி, லெவானி, சிவாணி (ஷிவானி) என்னும் வட இந்தியாவில் வழங்கும் பெண் பெயர்களும் சுருங்கி "வானி" அல்லது வாணி என்று வழங்குதலும் உண்டு என்று அறிந்துகொள்ளலாம்.
பவானி என்ற பெயருள்ளவர்களையும் சிலவிடத்து "வாணி" என்பதும் உள்ளதென்று தெரிகிறது. வாணி என்பது மராட்டியத்தில் ஓரிடத்திற்கும் பெயராய் உள்ளது.
சங்கத மொழிச்சொல் " வாணி" வங்காள மொழியில் உருவானதாகச் சிலர் கூறுவர். வற்றிப்போனதாகக் கூறப்பெறும் சரசுவதி யாற்றுக்கும் அதற்கும் தொடர்பு கூறப்படுகிறது. ஆகவே சங்கதச் சொல் வாணிக்கு விரிவான ஆய்வு தேவைப்படலாம்.
சங்கத வாணிக்கு, வாக்(கு) என்பதே மூலமாகக் கூறப்படுகிறது.
இதில் கு என்பது பின்னொட்டு (விகுதி),
நா > நாக்கு.
மோ > மூ > மூக்கு
வாய் > வா > வாக்கு.
வாய் > வாய் நி > வாணி, (வாயினின்று புறப்படும் ஒலி, பேcசு.)
நி என்பது நில் என்பதன் கடைக்குறை.
இது ஆராயத்தக்கது.
Happy research to thiru rsubras with the new-born daughter beside him.
-
24th July 2013, 07:30 PM
#375
Senior Member
Seasoned Hubber
anthasthu
அந்தஸ்து என்பது அயன்மொழிச் சொல். (Skrt) இது இறுதியில் ஒருவன் எப்படி தகுதிநிலை பெறுகின்றான் என்பதைக் காட்டுவதாகக் கூறுவர். எனவே ஒருவன் கடைசியில் எத்தகுதி அடைகிறான் என்பதைப் பொறுத்தே அவனது அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது என்பது கருத்து,
இதில், அந்தம் = இறுதி. ஸ்தா என்பது நிற்றல் பொருளது. ஸ்தாபன என்பதில் இந்த ஸ்தா உள்ளது.
இந்த அடிச்சொற்கள் மேலை நாட்டுச் சொற்களிலும் உள்ளன. ஆங்கிலத்தில் கூட, தொடர்புடைய சொற்கள் உள்ளன. அந்த - end. ஸ்த - stand
இதற்குத் தமிழ் மூலங்கள் உள்ளனவா?
-
3rd August 2013, 04:48 PM
#376
Senior Member
Seasoned Hubber
virithaaram > visthaaram.
விரிதருதல் என்பது விரிதல், விரிந்துதருதல்,விரிவடைதல் என்று பொருள்படும்.
விரிதரு+அம் = விரிதாரம் என்று அமையும்.
விரிதாரம் - விஸ்தாரம்.
தரு+ அம் = தாரம். root: tharu.
பரு+ அம் = பாரம் என்பதுபோல. root: paru
ஒன்று பருத்துவிடுமாயின் பாரமாகிவிடும்.
எதுவும் நிறுத்தமடையாமல், துருவிச் சென்றுவிடுமானால், துருவு > துரு > தூரம், அது செல்லுமிடம் தூரமாகிவிடும்.
துரு> துருவு : to overcome obstacles and proceed through.
துரு > தூரம்
-
12th August 2013, 12:14 PM
#377
Senior Member
Seasoned Hubber
விரி > வி > வீ.
விரி > வி > வீ.
விரிதரம் > விதரம். (இது விரிசலைக் குறிக்கும் சொல்). cleavage.
இங்கு விதரம் என்பதில் தரம் : தரு+அம் = தரம் என்று ஆனது, தாரம் என்று நீளவில்லை as in previous examples.
விரி+ தி = விரிதி > வீதி.
வீ - separation, removal. .
வீதி = (where the sides are separated from one another with s substantial width in between.)
வீ > வீதல்.
இங்கு நீண்டது, விரி > வீ என.
வீ > வீதி
-
22nd August 2013, 10:21 AM
#378
Senior Member
Seasoned Hubber
a re-look at the word அஸ்திவாரம்
அஸ்திவாரம் என்ற சொல்லுக்கு முன்பு யான் விளக்கம் எழுதி வெளியிட்டுள்ளேன். அதை நண்பர்கள் சிலர் மறந்திருக்க மாட்டார்கள்.
அஸ்திவாரம் போடும்போது, உண்மையில் தரையை அழுத்தி மண்வாருவது நன்கு புலப்படுகிறது.
அழுத்திவாரு - அழுத்திவாரம் - அஸ்திவாரம்;
அழுத்தி - ஆழமாக.
தொடர்வோம்.
-
23rd August 2013, 05:02 PM
#379
Senior Member
Seasoned Hubber
அந்தஸ்து
continued from post no. 375 above.
தழுக்குதல் என்பது ஒரு பழந்தமிழ்ச் சொல். இது ஒருவன் வாழ்வில் வளம்பெற்று உயர்வதையும் குறிக்கும். இதன் அடிச்சோல் "தழு " என்பது. tazukku-tal - to flourish, prosper
அம் என்பது அழகு குறிப்பது .
அம் + தழு + து = அந்தழுத்து > அந்தஸ்து .
இப்படியாக இச்சொல்லுக்கு தமிழ் மூலமும் .காணலாம்.
Here you need to note the ழு> ஸ் change.
அழுத்திவாரு - அழுத்திவாரம் - அஸ்திவாரம் was explained in the previous post. Again: ழு> ஸ் change.
Last edited by bis_mala; 23rd August 2013 at 05:08 PM.
Reason: insert ref
B.I. Sivamaalaa (Ms)
-
24th September 2013, 10:08 AM
#380
Senior Member
Seasoned Hubber
root word "ther"
(தெர்) > தெரி
(தெர் ) > தெருள்
(தெர் ) > தெருள் > தெருட்டு > தெருட்டுதல்.
(தெர்)) > தெருள் > (தெருட்டி) > திருட்டி. > திட்டி.
திட்டி சுற்றிப் போடுதல், கண்திருட்டி.
"Ther" (தெர்)) is the root word.
Words which have gone out of existence in the process of evolution of language are usually shown in brackets.
தமிழில் சொற்கள் (முதனிலை அல்லது பகுதிகள்) ஒற்றைக் குறிலடுத்து ரகர ஒற்றுடன் இயல்வதில்லை, இடைச்சொற்கள் தவிர. ஆயினும் தெளிவின் பொருட்டு இங்கு "தெர்" என்றே காட்டப்பெற்றிருக்கிறது. இறுதியில் உகரம் நின்று "தெரு" எனத் தரப்படின் அவ்வடிவிலான வேறு சொல்லுடன் மயங்குமாதலின்.
Last edited by bis_mala; 24th September 2013 at 06:25 PM.
B.I. Sivamaalaa (Ms)
Bookmarks