அடுத்த ஆண்டு அகவை அறுபதாகும் காதல் இளவரசனுக்கு நாற்பது ஆண்டு ஆசை.தன்னை தலைவரின் வாரிசாக நிலைநிறுத்துவதே.அதற்கு ஒரு முக்கிய யோக்கியதாம்சம் தான் ஒரே ஒரு சரித்திரப்படத்திலாவது நடிப்பதே.அதற்கு வடிகாலாக அவர் தேர்ந்தெடுத்து மருதநாயகம்.ஆனால் அதுவோ நகர மாட்டேன் என்கிறது.அதுவும் உலக நாயகன் இப்போ இருக்கும் நிலையில் இவர் ஒரு A4 தாளை எடுத்து தந்தை பெரியாரை வணங்கி முதல் எழுத்து எழுதினாலே உலகின் எதோ ஒரு கோடியில் ஏதோ ஒரு இனமோ,மதமோ சேர்ந்த குழுவினர் தங்கள் எண்ண வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டு இதை எதிர்க்க தயாராகி விடுகின்றனர்.ம்ம்ம் எந்த financiar க்கு மொட்டை போட ப்ராப்தமோ?