Dear Thiru.Raghavendra,
தெரிந்தோ தெரியாமலோ உங்களிடத்தில் ஒரு பலவீனம் இருக்கிறது.பிறர் சொல்வதை தவறாக புரிந்து கொள்வதோடு மட்டுமின்றி, அதை உங்கள் இஷ்டத்திற்கு திரிக்கவும் செய்கிறீர்கள்.(எனக்கு மைசூர் போண்டா பிடிக்கும் என்று சொன்னால், Ganpat மங்களூர் போண்டாவின் பரம எதிரி எனபது போல).
ஒரு நிறுவனத்தில் production, engineering, sales, personnel, என்று பல துறைகள் இருக்கும். அனைத்தும் அவசியம்.ஆனால் சிலர் இயல்பிலேயே சில துறைக்குத்தான் சரிபட்டு வருவார்கள்.நான் சொல்ல வந்தது அதுவே."எனக்கு ஊர் ஊராக திரிந்து பொருள்களை விற்கும் மனப்பாங்கு இல்லை" என்று சொல்வதால் நான் sales ஐ மட்டம் தட்டுவதாக அர்த்தம இல்லை.
மகா ஸ்ரீ ஸ்ரீ உ.வே.சா.பரண் மேல் ஏறாதிருந்தால் நமக்கு ஐம்பெருங்காப்பியங்ககள் கிடைத்திரா.அது கூட தெரியாத அப்பாவி இல்லை நான்.மேலும் என் பதிவில் உங்களை பற்றியும் நான் எதுவும் சொல்லவில்லை.எனவே ...
தங்களுடைய விவாதங்களில் என் பெயர் ஏன் அடிபடுகிறது. தெரியவில்லை.
தாங்கள் ஏப்ரல் 2012ல் தான் வந்துள்ளீர்கள். இன்னும் 100 பதிவுகள் வரவில்லை. தங்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன் வந்தவர் வாசுதேவன். இரவு பகலாக உழைத்து இன்று 3000 பதிவுகளை எட்டும் நிலையில் இருக்கிறார். பல்வேறு சொந்த அலுவல்களுக்கிடையில் நாங்கள் - தங்கள் பாஷையில் சொல்வதானால் - பரண் மேல் ஏறு தூசு தட்டி ஆவணங்களை இங்கு பதிவிடுகிறோம். இவற்றின் அருமை தங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அதனை கேலி செய்யும் வகையில் பதிவினை எழுதியது அதிர்ச்சியளிக்கிறது. ஆய்வெழுத எவ்வளவு சிரமம், எவ்வளவு நேரம், எவ்வளவு உழைப்பு தேவைப் படுகிறதோ அதைப் போல் பல மடங்கு, ஆவணங்களைத் தருவதற்கு தேவைப் படுகிறது. இன்றைக்கு ஒரு பழைய பேப்பர், சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பான நாளிதழைத் தேடி எடுத்து பிரதி எடுக்க தேவைப் படும் சிரமங்களை யும் பொருட்செலவையும் சற்றே விசாரித்துப் பாருங்கள், தங்களுக்கு அதனுடைய மதிப்புத் தெரியும். அந்த அடிப்படையில் பார்த்தால் நமது பம்மலார் இதுவரை நமக்கு அளித்துள்ள ஆவணங்கள் - விலை மதிப்பற்றவை என்பது ஒரு பக்கம் - குறைந்த பட்சம் 70 ஆயிரம் ரூபாய்களிலிருந்து ரூ. 1.0 லட்சம் வரைக்கும் மதிப்புப் பெறும். பம்மலார், வாசுதேவன் போன்ற நமது சிவாஜி ரசிக நண்பர்களெல்லாம் பிரதிபலன் எதிர்பார்த்தா செய்கிறார்கள்.
.....என்பது விவாதத்தை திசை திருப்ப நீங்கள் செய்துள்ள ஒரு அதீத கற்பனை மட்டுமே.
ஆனால் யாராவது ஒருவர் போக வேண்டும் எனத் தாங்கள் எழுதியிருப்பது வியப்பை அளிக்கிறது. மற்ற அனைவரும் மன வருத்தங்களை மறந்து மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து நடிகர் திலகத்திற்காக பதிவுகளை இட வேண்டும் என பொதுவாக கேட்டுக் கொள்வார்கள். ஆனால் தாங்களோ யாராவது ஒருவர் போக வேண்டும் என்று பொருள் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள். அல்லது அப்படி எனக்குத் தோன்றுவது தவறா தெரியவில்லை.
மீண்டும் உங்களது திரிக்கும் மனப்பான்மை வெளிப்படுகிறது.நான் கேட்பதெல்லாம் இதுதான்.வாசுவின் 1907 எண் பதிவு நாகரீகமானதா இல்லையா? இதை moderators தீர்மானிக்கட்டும்.அப்படி அதில் தவறில்லை எனும் பட்சத்தில், வனஜா &கோபால் திரும்பி வருவது அவர்கள் இஷ்டம்.அதற்கு மாறாக முடிவெடுத்தால், அதை எழுதியதிற்கு வாசு வருத்தம் தெரிவித்து விட்டுதான் வரவேண்டும் என்பதே.இதை எப்படி நீங்கள் யாராவது ஒருவர் போக வேண்டும் என்று பொருள் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள். என குயுக்தியாக எடுத்துக்கொண்டீர்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
சிலம்பு கண்ணகியுடையதா கோப்பெருந்தேவியுடையதா எனும் வழக்கில், கண்ணகியுடையதே என நிரூபணம் ஆன பிறகு, தவறான தீர்ப்பு அளித்த குற்றத்திற்கு தன் உயிரையே கொடுத்து தன்னை தண்டித்து கொண்டான் பாண்டிய மன்னன்.அதுதான் அந்தகால மனு நீதி..
ஆனால் தவறு எல்லார் பேரிலும் உள்ளது.கண்ணகி சோழ நாட்டை சேர்ந்தவள்.பாண்டிய நாட்டிற்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. பொற்கொல்லனோ நம் இனம். 300 மாதங்களாக இங்கு நம்முடன் பணி புரிகிறான்.எனவே அவனையும் தண்டிக்க முடியாது.ஆகவே சிலம்பு 6 மாதம் அதன் உரிமையாளரான கண்ணகியிடத்தும்,5 மாதம் மகாராணியிடத்தும் 1 மாதம் பொறகொல்லனின் மனைவியிடத்தும் இருக்கவேண்டும் எனும் தீர்ப்பு ..தற்போதய கழக நீதி..
இங்கு வழங்கப்படும் தீர்ப்பை பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி.