Originally Posted by
Vankv
தில்லானா மோகனாம்பாள் என்றவுடன் எனக்கு ஞாபகத்தில் வருவது 'கள்ளழகர்' கோயிலும் தான்.
கதை யின் படி 'மறைந்து நின்று' பாடல், அந்த கோயிலின் வாசல் முன் மண்டபத்தில் நடைபெறுகிறது. எங்கள் குடும்பம் முதன் முதலில் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோது அக்கோயிலுக்கு சென்றதும் தி.மோ நினைவுக்கு வந்து, excited ஆகி வாசலை போய் சுற்றிவரப் பார்வையிட்டோம். நாம் foreigners என்று அறிந்து கொண்ட ஒரு 'ad-hoc (!) tourist guide', அங்கு தான் அப்பாடல் காட்சி படமாக்கப் பட்டது என்று சொல்லி தொடர்ந்து அளந்து கொண்டே போனார். நான் நம்பவில்லை, மேலும் அக்கோயில் மண்டபம் சிறியதாகவும் தென்பட்டது. அதை நான் அவரிடம் கேட்க, அவரும், 'இல்லையில்லை அப்பாடல் காட்சி நிச்சயமாக இங்கே இந்த மேடையில் தான் எடுக்கப்பட்டது! பத்மினி அம்மா இங்கே தான் ஆடினாங்க' என்று சொல்லி கையை நீட்டி காட்டினார். அவர் காட்டிய திசையில் நாம் எல்லோரும் பார்க்க, அங்கே, அந்த மேடையில் சர்வ சாதாரணமாக ஒரு ஆடு நின்றுகொண்டிருந்தது! மே!.....