Sure sister. Its our pleasure.
Printable View
உடல் மொழி காவியம்-
உத்தம புத்திரனில் ,மாட்டி கொண்ட பார்த்திபனை, குரூரம்,வன்மம், குரோத சிந்தனை இவற்றோடு சுற்றி வருவது. அதே காட்சியில் பத்மினியிடம், காமம் கலந்த வன்மத்துடன் நோக்குவது.
தெய்வ மகனில், தன்னை தானே வெறுக்கும், சுய வெறுப்பின் உச்சமாக, கண்ணாடியில் தன உருவத்தின் மீது தானே காறி உமிழ்வது.
ராஜபார்ட் ரங்கதுரையில், பத்து நிமிட , தங்கையின் கணவனின் இரண்டாவது திருமண காட்சி. வேதனை, வெதும்பல், தன்னிரக்கம், வெறுப்பு, இறைஞ்சல், குற்றம் சாட்டும் குறிப்பு எல்லாம் கலந்த மௌன காட்சி.
அழுகை
நேற்று 20/01/93 அன்று உயர்ந்த மனிதன் முரளி சார்,பார்த்தசாரதி சார்,ராகவேந்தர் சார் ,பம்மலர் சார் ,மகேஷ் சார்,ராதா கிருஷ்ணன் மற்றும் பல முகம் தெரிந்த பெயர் தெரியாத நண்பர்கள் உடன் காணும் பாக்கியம் கிடைத்தது கிட்டத்தட்ட 2 1/2 மணி நேரம் சென்றதே தெரியவில்லை . பல காட்சிகளில் கண்களில் நீர் திரையிட்டது முக்கியமாக திரு ஏவிஎம் சரவணன் சார் அவர்கள் பேசும் போது திரு s .a அசோகன் இறக்கும் காட்சியில் அசோகன் அவர்களுக்கு நடிகர் திலகம் நடிப்பு சொல்லி கொடுத்து ஆனால் அதை திரு அசோகனால் 10 % மாத்திரமே வெளி படுத்த முடிந்தது மேலும் திரு அசோகன் அவர்கள் அதை பற்றி கமெண்ட் வேறு அடித்தார் என்று கூறினார். அந்த காட்சியின் போது நடிகர் திலகம் வெளிபடித்ய முக பாவம் நடிக்க விட்டு அமைதி காத்த பண்பு பார்த்த பின்பு காண்பவர்கள் கண்ணீர் சிந்த வில்லை என்றால் அவர்கள் மனிதர்களா.
அன்பர்களே,
"உடல் மொழி" - இந்த விஷயத்தை வைத்து நிறைய எழுதி வருகிறீர்கள். மிக நன்றாக உள்ளது.
நடிகர் திலகத்தைப் பொறுத்த வரையில், அவரது முதல் படத்திலிருந்தே, அவரது உடல் மொழி நூறு சதவீதம் துவங்கி விட்டது எனலாம். கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவருக்கும் கேட்க வேண்டும் (பார்க்க முடியாது) என்னும் கட்டாயத்தால், நாடகம் என்கிற ஊடகத்திற்கு பெரிய உடல் மொழி தேவைப்படாது; அங்கு வசனம் பேசும் விதம், குரல் ஏற்ற இறக்கம் தான் பெரும் பங்கு வகிக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த ஊடகத்தில் பத்து வருடங்களுக்கு மேல், ஆட்சி - ஆம், அவரது நடிப்பையும், குரல் ஜாலத்தையும் காண, அவர் சென்ற இடங்களிலெல்லாம் கூடிய கூட்டம் அசாதாரணமானது. இப்படிப் பட்ட ஊடகத்திலும், அவர் உடல் மொழியைக் காட்டத் தவறியதே இல்லை. மனோகரா நாடகத்தில், அவர் மனோகரா பாத்திரமல்லாது, வசந்த சேனை, பத்மாவதி பாத்திரங்களிலும் நடித்தார்; "ஜஹாங்கீர்" நாடகத்தில், நூர்ஜஹான் வேடமும் போட்டவர். ஒரு ஆண், பெண் வேடம் வெற்றிகரமாகப் போட வேண்டும் என்றால், உடல் மொழி எந்த அளவிற்குத் தேவைப் பட்டிருக்கும் என்று விளக்கத் தேவையில்லை.
ஒரு படத்தில், துவக்கத்திலிருந்து, கடைசி வரையில், முதல் படத்திலிருந்து கடைசி படம் வரை உடல் மொழியில் ஜமாய்த்தவரின் பிரதாபங்களை எழுதுவதென்றால், அதற்கு ஒரு ஜென்மமும், ஆயிரம் ஆட்களுமே போதாதே!
என் நினைவுக்கு உடனே வருவது -
பராசக்தி:- முதலில், சென்னைக்கு வந்து ஹோட்டல் அறையில், அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்தவுடன், வேர்த்து, சட்டென்று டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்வது; நிறைய சொல்லலாம்;
தூக்குத் தூக்கி:- "கோமாளி" வேட எபிசோட் முழுவதும்; கடைசியில் நீதி மன்றத்தில், தனக்காக வாதாடத் துவங்கும் போது - "மாசுண்டாள் உமது மகள் ... தெய்வம் பொறுக்குமா இத்திருக்கூத்தை?" என்று முடிக்கும் கோபம், அவமானம், ஆத்திரம், போன்ற ரசங்களைக் கொணர்ந்த அந்த கர்ஜனை;
ராஜா ராணி- "சேரன் செங்குட்டுவன்" - இந்த ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட காட்சியைப் பலரும் பேசி சிலாகித்தாகி விட்டது. இந்த ஷாட்டை எடுக்கும் முன், நடிகர் திலகம் அந்த செட் முழுவதையும் ஒரு முறை நோட்டம் விட்டு, பின்னர் சுற்றி ஏகப்பட்ட கோடுகளைப் போடச் சொன்னாராம். யாருக்கும் புரியவில்லை; பின்னர், ராஜ சுலோச்சனாவை, நான் பேசும் வசனங்களில் வரும் அந்தந்த இரசங்களுக்கு / உணர்ச்சிகளுக்கு ஏற்ப சரியான ரியேக்ஷனைத் தரச் சொல்லி விட்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல் இங்குமங்கும் இலேசாக நடந்து கொண்டு பேசினாராம். அதை விட, ஒவ்வொரு வர்ணனையாக விவரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது கைகளின் அபிநயத்தை கவனியுங்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வசனத்தைப் பேசுவது கடினம் என்றால், அதை அந்தந்த உணர்சிகளுக்கேற்ற பாவங்களுடன் நடிப்பது தான் மிக மிகக் கடினம். இதே படத்தில், சாக்ரடீஸ் பாத்திரத்தில் வரும் போது, வரும் அந்த வயதான பாத்திரத்தின் உடல் மொழி; கூடவே, ஒரு தத்துவ ஞானிக்குரிய உடல் மொழி.
வணங்காமுடி:- தர்பாரில், தனக்கு பதிலாக, தன்னுடைய நண்பன் தான் பாடகன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, தங்கவேலுவைப் பாடப் பணித்து, அவர் பாடுவதற்கு யோசிக்க, அவர் அடி வாங்கிய அந்தக் கணமே, "ஆ...ஆ...ஆ... பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பலன் தருமா?" என்று துவங்கும் பாடலில், அந்த "ஆ...." விற்கு, அவர் காட்டும், கோபமும், ஆத்திரமும், அப்பப்பா! அதாவது, இந்த பாவங்களைக் காட்டிக் கொண்டே பாடத் துவங்க வேண்டும்! கிட்டத்தட்ட, முப்பது வருடங்களுக்கு முன்னர் இந்தப் படத்தை வட சென்னை "பாரத்" திரை அரங்கில், காலைக் காட்சியாகப் பார்க்கும் போது, இந்த நடிப்பிற்கு, எழுந்த கைதட்டல், விண்ணையே அதிர வைத்தது, இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
இப்படி எத்தனையோ சொல்லலாம். ஒரு ஜென்மம் போதாதே!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
உடல் மொழிக் கவிதை:-
அவரது கண்கள் "ஒளி வீசும் கண்கள்" என்று கூறுவர். எத்தனையோ சொல்லலாம். குறிப்பாக, "ஆட்டுவித்தால் யாரொருவர் (அவன்தான் மனிதன்)" பாடலில், பாடல் முழுவதிலும், கண்களில் மட்டுமே சோகத்தைத் தாங்கி, பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியவர்; "தெய்வ மகன்" விஜய் பாத்திரத்தில், கண்களில் குழந்தைத் தனத்தைக் காட்டியிருப்பார். அதே படத்தில், கோவிலில், தன் தாயை நோக்கி, ஏக்கத்தைக் கண்களில் காட்டிய விதம்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
UDAL MOZHI
------------
In Julious Ceaser drama in Sorkam....
From the very begining with the majestic walk, then after lisening the advice from one of his subordinates, just raise his hand then move to another man, the sharpness in his eyes..... definitely no one can do even 10% of this. Action and reaction at the same time, no BGM except his shoe sounds. what a wonderful scene.
Mr Parthasarathy Sir,
Your analysis on various expression of our action god
is simply superb. Pls continue in your own style.
2012 நவம்பருக்குமுன்னர் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய திரிகள் நாளுக்கு நாள்
விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் பக்கங்கள் அதிகரித்துக்கொண்டு போனது பார்பதற்கும் படிப்பதற்கும்
மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கடந்த 3 மாதகாலமாக நடிகர்திலகம் சிவாஜி கணேசன் திரிகள்
தொய்வடைந்த நிலை காணப்படுகிறது
கள உறவு பம்மலர் அவர்கள் லைபிரரி ஒன்றில் பழைய பத்திரிகைகளை பார்வையிட்டு முன்னைய சிவாஜி படங்களின்
விபரங்களை சேகரித்திருப்பதாக தகவல் அறிந்தேன் இனி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரிகள் களை கட்ட
தொடங்கும் என நினைக்கின்றேன்
நான் என்னிடம் இருந்த சில ஆவணங்களை பதிவிட்டேன். மேலும் ஒரு சில ஆவணங்கள் உண்டு அவற்றை பதிவிடலாம் என்றால்
எனது பதிவிடும் பாவனை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏன் என்று தெரியவில்லை. நிர்வாகத்திற்கு தனிமடல் அனுப்பியிருந்தேன்
ஆனால் எதுவும் நடக்கவில்லை ஏனைய hub உறவுகள் உதவுவார்கள் என நினைத்தேன் ஆனால் ஒருவருமே இதுபற்றி
எதுவும் செய்யவில்லை.
உடலை அசைக்காமல் ஒரு உறுப்பும் அசையாமல் உடல் மொழியை மொழிந்தவரும் நடிகர் திலகம் மட்டும் தான். இரு காட்சிகள் ... திருவிளையாடல் பாட்டும் நானே பாடல் காட்சியில் நானசைந்தால் அசையும் என்று கூறி விட்டு ஒரு விநாடி கண் மட்டும் அடித்து விட்டு அதற்குப் பின் உடலசைவைத் தொடங்குவார் என்றால் அன்னையின் ஆணை படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் உடலசைவின்றியே உடல் மொழியைப் பறை சாற்றும் உன்னத நடிகரென்பதை அன்னையைப் போல் ஒரு தெய்வமுண்டோ பாடலில் நிரூபிப்பார். நான் ஏற்கெனவே முன்பொரு முறை கூறியது போல் அன்னையின் அருமையை அவள் இல்லாத போது மனிதன் அதிகம் உணர்கிறான் என்பதை அந்தப் பாடலில் தன் முகத்தின் மூலம் கூறி விடுவார். உடலசைவின்றி அமர்ந்து கொண்டு அன்னையின் உடலை வெறித்துப் பார்த்தவாறே துக்கம் தொண்டையை அடைக்க அன்னையின் பெருமையை உணர்த்தும் அந்தக் காட்சியைப் போன்று இது வரை வேறு தமிழ்த்திரைப் படங்களில் பார்க்க முடியவில்லை.