-
சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்,
சங்கை அறுந்துண்டு வாழ்வோம், உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை--
இந்தப் பாத்திரத்திற்கு வேறு நடிகரை அழைத்திருந்தாராம் ஏ.பி.என். அவர்கள். அந்த நடிகர் நடிகர் திலகத்தின் நாடகக் குழு உறுப்பினர். ஆனால் நடிகர் திலகம் இப்பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து இயக்குநரிடம் விடுத்த ஆலோசனை - ஐயா இப்பாத்திரத்தை தாங்களே ஏற்று நடிக்க வேண்டும். இயக்குநருக்கோ தயக்கம். இருந்தாலும் தயக்கத்தை உதறிவிட்டு தானே ஏற்று நடிக்க முன் வந்தார். நமக்கு காலத்தால் அழிக்க முடியாத சிறந்த காட்சி கிடைத்தது. இதோ காணுங்கள்...
http://www.youtube.com/watch?v=m-xLGALYZyk
-
பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வெச்சாரு - இவரு
போன வருஷம் மழையை நம்பி வெத வெதச்சாரு
ஏட்டுக்கணக்கை மாத்தி மாத்தி எழுதி வெச்சாரு - ஈசன்
போட்ட கணக்கை மாத்தவில்லே போய் விழுந்தாரு ...
என்பது போன்ற கருத்தாழமிக்க வரிகளை கண்ணதாசன் புனைய, நெஞ்சைத் தொடும் ராகத்தை மெல்லிய மெட்டில் மகாதேவன் அமைக்க, சௌந்தர்ராஜன் ஜீவனுள்ள குரலில் பாட, இவர்களின் கடின உழைப்பை திரையில் அங்கீகரித்து உயிர் கொடுத்த நடிகர் திலகத்தின் சிறந்த நடிப்பில் மற்றொரு பாடல்
பாத்தா பசு மரம் படுத்து விட்டா நெடுமரம்
http://www.youtube.com/watch?v=3Fu0546rs1g
-
இதற்கு முன்பும் இதற்கு பின்பும் வராத வர முடியாத நடிகர்கள், காட்சி, உரையாடல், ஒளிப்பதிவு, வேகம்.....
நாகேஷ் என்றால் தருமி, என்று முத்திரை பதித்த படம்... வார்த்தைகளில் அடங்காத வர்ணிக்க முடியாத சிறப்புகளைக் கொண்ட காட்சி
திருவிளையாடல் என்றால் தருமியின் காட்சி இல்லாமலா...
http://www.youtube.com/watch?v=6JRjHh91Gx4
-
நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு, மீனவனை எதிர்பார்ப்பது உண்மையோ பொ்ய்யோ தெரியாது, ஆனால் அநத மீனவன் நடையை நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்.
http://www.youtube.com/watch?v=aTDV10y_Eko&feature=relmfu
-
மாணவனுக்கு சந்தேகம் வந்தால் அறிவில் தெளிவு. கணவனுக்கு சந்தேகம் வந்தால் வாழ்வில் முறிவு. மன்னனுக்கு சந்தேகம் வந்தால்...
வந்தது....
சந்தேகம் தீர்ந்ததா..
தீர்ந்தது...
திருவிளையாடல் போல் அதற்கு முன்னும் பின்னும் ஒரு சிறந்த காவியம் வரப்போவதில்லை என்ற தீர்மானம் பிறந்தது...
அந்த சந்தேகம்... அதற்கான காரணம்...
http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ
-
டி.ஆர்.மகாலிங்கம் ஐயா,
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை, நீ இருக்கையிலே நாங்கள் இருந்ததும் பெரும் சாதனை...
http://www.youtube.com/watch?v=HdhAu6fbeIA
-
எத்தனை ஆண்டுகள், எத்தனை கலைஞர்கள், எத்தனை உழைப்பு, இவற்றின் உருவமே திருவிளையாடல் படைப்பு... இதனைப் பற்றிக் கூற
http://www.youtube.com/watch?v=8BN5bdI0GY4
-
-
Dear Murali sir, noted. Not sure whether to take part in Gowravakkondattam or to immerse in Mylai Jyothi, this Sunday eve.
Dear Pammalar & Raghavendra sir, as usual the info's, stills, links & trivias about Thuli visham & Thiruvilayadal is stunning. Hats off.
-
While looking at the amazing pace in which our NT thread is moving on, i felt this.....
Majority of contribution for most of the threads in this hub comes from youngsters & tech savvy's whereas in our case, majority of contribution comes from seniors, which I'm sure is the pulse of this threads success. Now, that itself is an achievement in its own order, isn't it ??