Quote:
தில்லானாவை திடுதிப்பென்று எடுத்து விட்டார்களே
- பேசும் படம் இதழில் ஒரு வாசகர் கேள்வி... இந்த கேள்வி தமிழ்நாட்டிலிருந்து கேட்கப் படவில்லை. அவர்கள் தியேட்டரில் ஓட்டுவதற்கென்ன என்று பொய்யும் புரட்டும் பேசியும் ஏசியும் வந்தவர்களுக்கு உண்மை நிலையை உணர்த்தவே அந்தக் காலத்தில் இந்த பதில் அமைந்தது. பேசும் படம் பத்திரிகை நடுநிலையான பத்திரிகை என்பதற்கு எந்த சான்றும் தேவையில்லை. அவர்களின் பத்திரிகையில் பல சந்தர்ப்பங்களில் நடிகர் திலகத்தின் படங்களை விமர்சித்துள்ளார்கள். அப்படிப்பட்ட இதழில் பிப்ரவரி 1969 இதழில் வெளியான கேள்வி பதில் இது. பாருங்கள்..ஏராளமான ரசிகர்களின் உள்ளக்கிடக்கையினை எதிரொலித்தது இக்கேள்வி. சாந்தியில் வெள்ளி விழா கண்டிருக்க வேண்டிய படம்.