விளையாடு வெறியுடன்..
இது தான் உன் பருவம்
இது தான் உன் தருணம்..
பள்ளி கல்லூரி எல்லாம் முடிந்தபின்
வாழ்க்கை விளையாட்டை எதிர்கொள்ள
இப்போதே தயாராகு..
சோர்வுறாதே..
விழு.. எழு..
Printable View
விளையாடு வெறியுடன்..
இது தான் உன் பருவம்
இது தான் உன் தருணம்..
பள்ளி கல்லூரி எல்லாம் முடிந்தபின்
வாழ்க்கை விளையாட்டை எதிர்கொள்ள
இப்போதே தயாராகு..
சோர்வுறாதே..
விழு.. எழு..
எழு இரு கண் வழி ஆணை
சரி ஆண் சொல் ஒரே விடை
துணை ஆசை எது யோசி
மனை ஏடு இதை வாசி
அத்தனையும் இரண்டெழுத்து
பிரணவம் துவங்கி ஒலி
பிரபஞ்சம் முழுதும் கேள்
ஆக்கம் செய்யும் இனிய எண்
எண்கள் பலவிதமாய்
வாழ்க்கையில் குறுக்கிடுகின்றன..
உங்க அப்பாக்கு எத்தனாவதுகுழந்தை நீ
ஆறு..
உன்னோட ரோல் நம்பர்
நாற்பத்தேழு டீச்சர்..
இளமைப்பருவம் பதினாறிலிருந்து இருபது வரை
இசைபாடும்..
பின்
மதிமயங்கி தேர்தலில் ஓட்டுப் போடும் வயது வர
பணந்தேடி மனமலைய ஆரம்பிக்கும்..
எவ்வளவு வாங்கறே நீ
பத்து..
பத்தாயிரம் போதாதேப்பா
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்..
அப்பத்தான் துணையும்
உன்னிடம் வரும்..
இருபத்தைந்து வயதில்
இணை தேடும் எண்ணம்
நாற்பது வயதில் சோர்வுறும்
நாற்பது என்றாலே
ஒரு கால் சவப்பெட்டியின் மீது தானே..
பின்
வாழ்வின் வயதின் எண்கள் கூடக் கூட
மனதும் முதிரும்..
வாழ்க்கையில் எந்த எண்ணில்
முற்றுப்புள்ளி வருமெனத்தெரியாது..
இருந்தும்
தெரிந்தோ தெரியாமலோ
முக்கியக் காரணியாய்
எண்கள் நடத்துகின்றன வாழ்க்கையை..
வாழ்க்கையை வாழ்ந்து பார்
வழக்கை வாதிட்டு வெல்
வழவழ கொழகொழ வேணா
வழுவாத நெறி உடனிருக்கட்டும்
உடனிருக்கட்டும் என நினைத்து
பத்திரமாய் எடுத்து வந்த
சட்டை, டிஷர்ட்,
ஆஃப்டர் ஷேவ் லோஷன்,
உள்ளாடைகள்
எல்லாவற்றையும் திருப்பி வைத்தாயிற்று.
சூட்கேசை எடுக்கும் போது
அதிகமாய் கனம்..
இருந்த போது சேர்த்த
நினைவுகளால்..
நினைவுகளால் முகம் சிவந்து
கனவுகளால் அதை எதிர்பார்த்து
தீட்டி தீட்டி தினம் கூரேற்றி
பழிக்குப் பழி வாங்கும் பாவி
பாவி..இப்படியா விளையாடுவது
எனச் சொல்லிக்
கன்னம் சிவக்க
கோபத்தில் அழகாய் அகலும்
உன் விழிகளைப் பார்க்கவே
மேலும்
உன்னிடம் விளையாட்த் தோன்றுகிறது..
கொஞ்சம் உற்றுப் பார்க்கையில்
கண்ணோரம் கொஞ்சமாய் ஈரம்..
கைப்பிடித்து கொஞ்சம் இழுத்து அணைத்து
சமாதானம் செய்கையில் இன்னும்
நெகிழ்கிறாய்..
அப்படியே கொஞ்சம்
கிள்ளவும் செய்கிறாய்..
ச்சீப் போப்பா நீ மோசம்
என்கிறாய்..
இன்னும் பிதற்றலாய்
வார்த்தைகள் வர..
அடக்குதற்குத்தெரிந்த வழி ஒன்று தான்..
நான் சொன்னது நிஜம்..
விளையாட்டில்லை..
என் வீட்டில் எனக்குப் பார்த்த பெண்
இன்னும் அழகாயிருக்கிறாள்
உன்னை விட...
எனச் சிரித்தபடி சொல்ல
ஒருகணப் பொழுதில்
சோகம், ஏமாற்றம், வியப்பு உன் கண்ணில்
எந்த நல்ல நடிகையும்
செய்திருக்க மாட்டாள்..
புகைப்படம் வைத்திருக்கிறேன்
பாரேன்
என்றபடி காட்டினால்
அதிலிருந்த அவள் பட்த்தைப் பார்த்த்தில்
கண்ணீர்துளி இருந்த கண்ணில் சிரிப்பு மறுபடி..
படவா எனச் சொல்லி
அவள் அடித்த்து
நெஜமாகவே வலித்தாலும்
கொஞ்சம் சந்தோஷமாக்வும் இருக்கிறது..
இருக்கிறது நம்பிக்கை
இரவில் படுக்கும்போது
இன்னொரு நாளை பார்க்க
இமைகள் திறக்குமென்று
இமைகள் திறக்குமென்று
எதிரே பார்க்கவில்லை..
சமர்த்தாய்க் கால் குறுக்கி
உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு
குட்டி விரலால் துணியை
இறுக்க்க்கப் பிடித்துக் கொண்டு
மிக சீரியஸாக உறங்கிக் கொண்டிருந்த அது
சின்னதாய்த் தொடவும்
டபக்கென கருவண்டுக் கண்ணால்
மலங்க மலங்கப் பார்க்க
’அப்பா’டா பாரு.. என பின்னால் குரல் வர
என்ன நினைத்ததோ
வீல்...
சே..என்ன இது.
.
ஆமாமாம்..
இப்படி தாடி மீசையோட வந்தா
எனக்கே பயம்ம்மா இருக்கு தெரியுமா..
அழாதடா செல்லம்.. அப்பா தானே அட்ச்சுடலாம்..
அவள்
தூக்கிக் கொண்டதும்
மெல்ல
புன்னகை போலக் கொஞ்சமாய்
இதழ் விரித்துப் பின்
படக்கென மூடிக்கொள்ள..
முணுமுணுத்தபடி நகர்ந்தேன் நான்..
‘அம்மாவைப் போல பிள்ளை..”
பிள்ளை வளர்க்கப் பொறுமையில்லை
பெரியவர் பேணிடப் பிடிக்கவில்லை
பெரிதாய் சமூகநல கொள்கையில்லை
பிடித்து வைக்க ஒரு கட்டுப்பாடில்லை
யாருடனோ அவள் தனியே அவன் தனியே
எங்கோ களிக்கின்றனர் குடியும் கூத்துமாய்
பருவமடைந்ததும் துவங்குது இப்பழக்கம்
போதை ஏறி ஆடி முடிவாய் எங்கு எவருடன்
புரண்டு எழுந்தோமென சுத்தமாய் மறந்து
பகலுக்குப் பின் இரவு இப்படியே தொடர்ந்து
புதிய சரித்திரம் சமுதாயம் படைக்கின்ற
புல்லுருவிகள் இவர்கள் (அ)நாகரிக பதர்கள்
புலனின்பமன்றி வேறொன்றறியா உயிரினங்கள்
பகுத்தறியா இவர்கள் பெரும் படிப்பாளிகள்
பேரழிவுப் புயலின் நிச்சய புள்ளி மையங்கள்
புரையோடிப் பரவும் பயங்கர நச்சுக் கிருமிகள்
பட்டணம் துவங்கி பட்டிக்காடடையும் நோய்கள்
புற்றாய் பீடித்த நாசகார நண்டுக்கொடுக்குகள்
பொரித்தெடுப்பாரோ இவர்களை எண்ணெய் கொப்பரையில்
போட்டு வைப்பாரோ பொசுக்கும் அணையா செந்தழலில்
போகட்டும் நரகத்திற்கோ வேறெங்கோ பொருட்டில்லை
பொறுக்கலாமோ நரகமாய் நாட்டை வீட்டை ஆக்குவதை