-
காலம் காற்றாய் அல்லவோ பறக்கிறது
குட்டிப் பெண் அன்று பட்டுப்பாவாடையில்
பாட்டி வீட்டில் செட்டுப் பிள்ளைகளுடன்
கொட்டமடித்தது அதிரச இனிப்பு
குமரியாய் உறவுகளை சந்தித்த
கொண்டாட்டம் குலாப்ஜாமுன் தித்திப்பு
மறுவீடு சென்று இரு வீட்டு சீராடியது
மனம் நிறைந்த மைசூர்பாகின் சுவை
மக்களைப் பெற்று அவர் ருசிக்குக் கிளறியது
மங்காத மகிழ்ச்சி தரும் பாதாம் அல்வா
பேரப்பிள்ளைகள் கொறிக்க முறுக்கும் மிக்சரும்
பேரின்பம் தரும் போளியும் பாதுஷாவும்
அக்கரையிலும் தொலைதூர பணியிடங்களிலும்
மக்கள் இன்று - மாட்டிக்கொண்டோம் தனித்தீவில்
கடையில் வாங்கிய பலகாரம் போதுமென
அக்கம் பக்கம் பகிர்ந்துண்டு அருகிருக்கும்
பழுத்த மர நிழலில் சற்றே ஆசுவாசம்
பெற்றவரை பார்த்து ஆசி பெறுதல் பணியாரம்
பண்டிகை கொண்டாடியதாய் நீயும் இன்று
பேர் பண்ணிக்கொள் மனமே வேணாம் பேராசை
-
பேராசை கொண்ட முதலை
குரங்கை
பழத்தைச் சாப்பிடச் சொல்லிச்சா
எனப் பாட்டி ராகத்துடன் சொன்னதை
கேட்டபடி
பாட்டியின் முதுகில்
தூங்கிய குழந்தை
தானே குரங்காக மாறுகையில் புன்னகை புரிந்து
முதலையாய் மாறுகையில்
கொஞ்ச்ம நடுங்கி
புடவையை இறுக்கப் பிடித்தபடி
கண்களை இறுக்க மூடித் தூங்குவதை
வியப்புடன்
பார்த்துக் கொண்டிருந்தன
கதைப் புத்தகத்து முதலையும்
குரங்கும்..
-
குரங்கும் அதன் குறுகுறு கண்களும்
குட்டியை கவ்விச் செல்லும் பாங்கும்
தவழும் நீண்ட அழகிய வாலும்
மெத்தென்ற சிறு கைவிரல்களும்
கூட்டமாய் வாழும் ஓர் ஒழுங்கும்
ஈர்க்கும் சங்கதிகள்தான் எத்தனை
-
எத்தனை ஆண்டுப்பழக்கம்
மறந்து விட்டாயா புவனமகாதேவி..
நட்பு உதவிக்குக் கணக்கு வைப்பதில்லை..
அறியாதவளா நீ..
எல்லோரும் உன்னை அம்மா என்றழைக்க
நான் உன்னை அக்கா என...
என் மகன் உன் ம்கனென
தத்தெடுத்துத்
திருமணமும் செய்வித்தாய்...
எனக்கும் வயதாகிறதே
என்னையும்
மற்றவர்க்ள்
அம்மா என அழைக்க
நான் ஆசைப்பட்டால்
அது குற்றமா..
காலங்கள் மாறும்
மனிதர்கள் மாறுவார்கள் தான்
நீ மாறலாமா..
நான ஆசைப்பட்டதையெல்லாம்
நிறைவேற்றினாய்
எனது குடும்பம்
உன்னால உயர்ந்தது
என எண்ணம் கொண்டிருக்கிறாய்
தவறு தோழி..
என் எண்ணத்தில்
அவர்கள் உயர்ந்தார்கள்..
இருந்தாலும்
என்னை
அவையிலிருந்து நீக்கி விட்டாய்
உன் மனத்திலும் என
மனப்பால் குடிக்கிறாய்...
ஒருவேளை இதெல்லாம் உன் நாடகமா..
எது எப்படியோ
எனது ஆசையும்
உனது முடிவும்
சரியா தவறா என
சொல்லும் காலம்...
இந்த செம்பியன் மாதேவி...
...யார் என
புரியும் அனைவருக்கும்...
-
அனைவருக்கும் திருப்தியா
அப்படியொரு தீர்வு உளதா
அது என்றும் சாத்தியமா
தாத்தன் பேரன் கழுதை
பயணித்த கதை சொல்லும்
சமுதாயத்தின் இயல்புதனை
-
இயல்புதனை மறந்த காலத்தை விட
இருந்த காலம் எப்பொழுது...
ரகசியமாய்ப்
பக்கத்து கிளாஸ்மேட் கொடுத்த
மயிலிறகை
புத்தகத்தில் இரவில் ஒளித்து வைத்துவிட்டு
கண்ணை இறுக்க மூடி
தூக்கம் வரும் வரை
இரவெல்லாம் சாமியை வணங்கி
காலையில் பார்த்தால்
வளராமல் போக
கண்ணீல் குளம் கட்டி அழுத போது..
ஸ்ஸ் பச்சமிளாகா பிடிக்காது தெரியுமல்
ஏன் போட்ட
எனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய
ஏண்டி நா போடவேஇல்லையே
எனப் பதறித்
தண்ணீர் தந்த அம்மாவிடம்
கண் சிமிட்டிச் சிரித்த போது...
பருவ நிலைக்கேற்ப
மாறுதலடைந்ததால்
கண்களில் கொஞ்சம் கனவு,
கொஞ்சம் பூரிப்பு
கொஞ்சம் நாணமாய்த் தலைகுனிதல்,
மற்றவர் கொஞ்சம் வியந்து பார்க்கையில்
ஏற்பட்ட பெருமிதம்...
கண்ணாடி காட்டும் முக அழகில்
ஏற்படும் மெலிதான கர்வம்...
எதற்கும் குறைவில்லை..
இவ இவ்ளோ அழகா இருக்காளேங்க்
எப்ப படிப்ப முடிப்பாளோன்னு
ரொம்ப பயம்மா இருக்கு
அம்மா சொல்ல
அப்பா நல்லா பிஜியே படிக்கட்டும்
வேலை கிடைத்தாலும் சரிதான்..
இந்தக்காலத்தில் அழகு மட்டும் கூடாதுடி..
படிப்பும் வேண்டும் என்று சொன்ன போது
வயதை மறந்து ஓடிச் சென்று
அப்பாவை கட்டிக் கொண்டு
தாங்க்ஸ்பா சொன்ன போது...
இயல்பாகத் தானிருந்தேன்...
கல்லூரியிலும் பின் வேலையிலும்
எல்லோரிடமும் சகஜமாகத் தான் பேச்சு..பழக்கமெல்லாம்..
பின்..எப்படி..
கடங்காரா.. எங்கிருந்து வந்தாயடா..
பொருத்தமெல்லாம் சரியா இருக்காம்..
இந்தா பையன் ஃபோட்டோ..
பிடிச்சிருந்தா வரச்சொல்லட்டா..
அப்பா காட்டிய புகைப்படத்தில்
உன்னைப்பார்த்ததில்...
கொஞ்சம் முகம் மலர ...
நாணமும் உடன் வர
உள்ளே ஓடி
வழ்க்கம் போலக் கண்ணாடி பார்க்கையில்
தெரிந்தது மாற்றம் துல்லியமாக..
இன்னொன்றும் புரிந்த்து..
அது நிரந்தரம் என.......
***..
-
நிரந்தரம் என நினைத்து ஆணவம்
நிலைமை புரியாமல் அட்டகாசம்
நின்று யோசிக்காமல் அவசர ஓட்டம்
நிலைக்காது இந்த வெத்து ஆட்டம்
-
ஆட்டம் இப்போது தான் ஆரம்பம்
என நினைக்கையில்
பொசுக்கென முடிவதும்..
ஆட்டம் முடிந்தது என எண்ணுகையில்
மறுபடி ஆரம்பிப்பதுமாய்...
நீள் தொலைக்காட்சி த் தொடரைவிட
நீண்ட தொடர் கதை தான்..
ஆரம்பம்
கதை வசனம் முடிவு என
எல்லாவற்றையும்
ஒளித்து வைத்திருப்பவன்
மேலே உள்ளவன்
-
உள்ளவன் சுமக்கிறான் பொறுப்பு
செல்வம் செழுங்கிளை தாங்க
மேதமை இம்மானிடம் ஓங்க
தைரியம் முன்னால் நடக்க
-
நடக்க நடக்க
நாராயணன் செயல்
என
அடிக்கடி சொல்வாள் பாட்டி...
அம்மா
நடகக நடகக
அவ்ர் செயல் என்பாள்
மேலே பார்த்துக் கொண்டு..
எனில் புருஷன் பெயரைச்
சொல்லக் கூடாதாம்...
சில வருடங்களாக
நானும்
நடக்க நடக்க நாராயணன் துணை
என்கிறேன்..
என் மேலதிகாரியின் பெயர்
பத்ரி நாராயணன்..