oops! sorry. May be I missed 700 and mentioned Ramana as 700 instead of 800?. This link says Ejamaan as 700.
http://tfmpage.com/forum/1076.17795.04:49:05.html
http://www.tamilspider.com/resources...layaraaja.aspx This one says Devar Magan as 600.
Printable View
oops! sorry. May be I missed 700 and mentioned Ramana as 700 instead of 800?. This link says Ejamaan as 700.
http://tfmpage.com/forum/1076.17795.04:49:05.html
http://www.tamilspider.com/resources...layaraaja.aspx This one says Devar Magan as 600.
A note to Venkiram. Note, this post, like other posts is a comment on your stated opinion in a public forum. I'm restating the obvious because i'm tired of the lame cop-out ennaya kolraanga "personal attack" allegation that usually follows if people run out of points to make
The post by Senthil has given a kili pillai level response which should be more than sufficient to reject your claims, but still.....
How the heck does it become arrogance if i like music more than lyrics? Unga vaazhvin ovvoru asaivum, ennathin ovvoru anuvum Kavipperarasu Vairamuthu saar-kaaga irukkalaam. You might worship lyrics more than anything else. You might be so bankrupt when it comes to music that you will rate singer Krish and Balamurali Krishna in the same pedestal. You may like MSV and S.S Thaman equally. All because of the abject lack of evolution of musical taste (if at all it is present). Fine, go and read some poetry. Illa cinema paattu book vangi padinga. Edho pannunga, unga ishtam. Aana enna vaithukku "music comes first" nu solravana thappa pesareenga? Don't you see the utter bullcrappery in your statement and opinion? Like Maddy has said (and as Senthil has explained above), it is a *fact* - fine, let it be just an opinion. What the hell is your problem with that?
And Vairamuthu's every single tweet reeks of extreme arrogance and hikes up my blood sugar levels and makes me nauseous. Can you request him to show more humility in his tweets? Moondraam Ulaga Bore ayum nirutha sollunga, in the interest of world peace
மேலேயுள்ள செந்தில் என்பவரின் பதிவு... படிக்கும்போதே தூக்கம் வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. நான் பதிலுக்கு என் தரப்பிலிருந்து கருத்துக்களை வைத்தால்தான் சரிப்படுமா? "பெயர்களை திருப்பிப் படித்தால் அர்த்தம் வரா. ஆனால் இசைக்குறிப்புக்களுக்கு உண்டு" என்ற கருத்திற்கு பொழிப்புரை என்ற பெயரில் பிதற்றுவதற்கு பதில் மௌனமாகவே இருந்துவிடலாம். நாயகர்களின் வாயசைக்கும் இசைப்பாடலே செயற்கையான விஷயம் தான் என்றாலும் அதிலும் முடிந்தவரை ஒரு சிறப்பு அவர்களின் பேசும் மொழி. "ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி" - இந்த வரிகள் தரும் உணர்வெழுச்சிக்கு முன்பு அந்தப் பாடலின் எந்த இசைக்குறிப்பும் எனக்கு இரண்டாம் பட்சமே. சில நேரங்களில் பாடல் வரிகள் முன்னெடுத்துச் செல்லும், சில நேரங்களில் இசைக்குறிப்புக்கள், சில நேரங்களில் இரண்டும் இணை கோடுகளாக.. ராக அமைப்பில் ஏறிக்கொண்டிருந்தாலும் "பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது" எங்கே இந்த கவித்துவக் காட்சிப் படலத்தை இசைக்குறிப்பில் மட்டுமே காட்டுங்கள் பார்ப்போம்? ஒவ்வொன்றுக்கும் ஒரு எல்லைக் கோடு வரையறுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். இதுதான் பெரியது எனச் சொன்னால் அது என் பார்வைக்கு பிதற்றல்தான். அகந்தைதான். "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல!" என பாறைகளைப் பார்த்து உரக்கக் கத்துகிறானே ஒரு அப்பாவி - அந்த உணர்ச்சி அந்தப் பாடலுக்கு அமைக்கப்பட்ட பின்னணி இசைக்குறிப்புக்களுக்கு இணையானது என்னைப் பொறுத்தவரை. அந்தப் படத்தின் அச்சாணியே அந்த வசனம்தான். அது சரியாக அந்தப் பாடலிடையே அமைந்து மென்மேலும் மெருகூற்றுகிறது. ராஜாவின் கிடார் ஒலிகள் எனக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு "முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ" வரிகளும் முக்கியம். நூறு, இரு நூறு வருடங்கள் கழித்தும் இது ஒலிக்கப்ப்படும்போது அப்போதும் இந்த இரண்டு விஷயங்களுக்காகவும் புகழப்படும். நிறையச் சொல்லலாம். பாடல் வரிகள், வசனம் இவற்றின் முக்கியத்துவம் உங்கேளுக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் இதெல்லாம் இப்படிச் சொல்லித்தான் ஆகணும் என்ற அவசியமேயில்லை. மொழிகளே இல்லாமல் முழுக்க முழுக்க பின்னணி இசை அல்லது இசை ஆல்பங்கள் செய்யும் தொழிலில் ராஜா ஈடுபட்டிருந்தால் அவரின் இத்தகைய பேச்சை மதிக்க வேண்டியதுதான். ஆனால், கருப்பு வெள்ளை காலம் தொட்டு டிஜிட்டல் காலமான இன்று வரை உச்சப் பாடல்கள் எனப் பட்டியல் இடும் பலவற்றில் பாடல் வரிகள் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் இதுபோன்ற ஒருசார்பான கருத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது ஒரு வகையில் மூளைச்சலவை செய்யும் யுக்தி. எனக்கு கண்ணதாசன் பாரம்பரியமும் வேண்டும். ராஜாவின் பாரம்பரியமும் வேண்டும்.
அனாவசியமாக வைரமுத்துவினை இழுத்து உங்களின் அதிமேதாவித் தனத்தை அடிக்கடி பறைசாற்ற முயல வேண்டாம். என்னை சொற்போரில் வீழ்த்த, படிய வைக்க அது ஒரு மலிவான ஆயுதம். அந்த ஆயுதத்தை ஏந்தி உங்களை நீங்களே பலகீனப் படுத்த முயலவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இல்லை, எங்களுக்கு அப்படி செய்தால் மட்டுமே இருக்கும் உணர்வுகளுக்கு வடிகாலாக அமையும் என நீங்கள் நினைத்தால் நான் குறுக்கிடப் போவதில்லை. என்னமோ வைரமுத்துவினை இழுத்தால் என் குரல்வளையை பிடித்துவிடலாம் என்ற மனப்பால் குடிக்க வேண்டாம்.
வெங்கி, செந்தில்வி.காமின் பதிவு ஒரு அரிதான அற்புதமான பதிவு. சரி, உங்களுக்கு தூக்கத்தை தருகிறது ஓகே, அதேபோல் ராஜாவின் கருத்தும் உங்களுக்கு ஏற்புடையதில்லை ஓக்கே, தேவையில்லாமல் வைரமுத்துவை இழுத்ததும் உங்களுக்கு பிடிக்க்லை அதுவும் ஓகே. ஆனால் உங்களுக்கு கருத்து பிடிக்கலைன்றதுக்காக ராஜாவை அர்ரோகன்ட் ந்னு எப்படி சொல்லப்போச்சு?!? கொஞ்சம் கூட சரியில்லையே! ஏற்கனவே சொன்னதுபோல் அவரின் எழுத்தை வெளியிடும் விழாவில்கூட அவர் அந்த புத்தகத்தை புரொமோட் செய்யாமல் இசையின் சிறப்பை பேசுகிறார், பதிப்பித்தவர் லாபம் பார்க்கணும் என்ற எண்ணம் கூட இல்லாமல்!
http://kali-kaalam.blogspot.in/2012/...g-post_21.html
ithayum padinga pa.