-
Thanks Vasu sir
Thanks a lot Vasu for wonderful write up about your experience with our god and shooting of "Padhukaappu". You have all taken 41 years back and made us watching shooting live at Cadallore. Hats off you sir.
What a competition between Vasu sir, Pammalar , Murali sir, Karthik sir, Saradha madam and loved Ragavendran sir for writing about our NT. Thanks guys for making us happy. I always felt like doing "allapparai" in our Madurai on Sunday galas when ever I visit this thread.
Pammalar sir congrats for reaching 2000, hope to congrats on 20000. Hats off to your effort sir.
Cheers,
Satish
-
//அப்படி அந்த இரண்டாம் கட்டத்தில் வெளிவந்த படங்கள் தான் இன்றளவும் அவருடைய மாபெரும் சேனை உருவாகக் காரணமாயிருந்தன.//
அன்புள்ள ராகவேந்தர் சார்,
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நடிகர்திலகத்துக்காக எதையும் செய்யும் ரசிகர் படை உருவானது இந்தக்கால கட்டத்தில்தான். அதற்கு முன் பீம்சிங், பந்துலு காலப்படங்களைப் பார்த்து ரசித்தவர்கள், படத்தையும், நடிகர்திலகத்தின் அபார நடிப்புத்திறமையையும் பாராட்டிப்புகழ்வதோடும், அதற்காக பலமுறை அப்படங்களைப் பார்ப்பதோடும் நிறுத்திக்கொண்டனர்.
அவரையே உயிராக நினைத்து அவரோடு இணைந்திருக்கும், அவர் என்ன சொன்னாலும் கேட்கும் ரசிகர்கூட்டம் உருவானது நீங்கள் குறிப்பிட்ட இரண்டாம் காலகட்டத்தில்தான். குறிப்பாகச்சொல்வதென்றால் 'செல்வம்' பட காலத்திலிருந்து என்று சொல்லலாம். அதனால் அவர்களின் ரசனைக்காகவே படங்களில் கற்பனைக்காட்சிகள் இடம்பெற்று சிறப்புப்பெற்றன.
பாதுகாப்பு படத்துக்கு முன் வந்த 'எங்கிருந்தோ வந்தாள்' படத்தில் ஒரு கற்பனைக்காட்சி (துஷ்யந்தன் - சகுந்தலை) இடம்பெற்றதென்றால், இன்னொரு படமான 'சொர்க்கத்தில்' மூன்று கற்பனைக்காட்சிகள் இடம்பெற்றன ('ஜூலியஸ் சீசர்' நாடகம், 'பொன்மகள் வந்தாள்' பாடல் காட்சி, 'அழகுமுகம் பழகும் சுகம் அறியாத சொர்க்கம் ஆயிரம்' பாடல் காட்சி). இவையனைத்தும் ரசிகர்களுக்காகவே சேர்க்கப்பட்டவை. அப்படி ரசிகர்களுக்காகவே படம் வந்துகொண்டிருந்த வேளையில் நடிகர்திலகத்துக்கு படம் முழுக்க ரோல் இல்லை, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் இவர் அவ்வப்போது வந்து போகிறாற்போல ரோல் என்றதும்தான் ரசிகர்கள் சோர்ந்து போயினர்.
உயர்ந்த மனிதனில் 'என் கேள்விக்கென்ன பதில்' பாடல் நடிகர்திலகத்துக்கு இல்லையென்றதும் ரசிகர்கள் அடைந்த ஏமாற்றம் நமக்குத் தெரிந்ததே.
-
'கடலூர் டைம்ஸ்' பத்திரிகையின் சினிமா நிருபர் மதிப்பிற்குரிய திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்களே,
ஒரு கற்பனையாகத்தான் இத்தகைய அடைமொழியை வைத்து தங்களை அழைத்தேன் என்றாலும், இதற்கு முழுமுதற்தகுதியானவர் தாங்கள் என்பதனை "பாதுகாப்பு" படப்பிடிப்புக்கட்டுரை மூலம் ஆணித்தரமாக நிரூபித்துவிட்டீர்கள். அடேங்கப்பா.....! என்ன ஒரு எழுத்துநடை..., என்ன ஒரு வர்ணணை..., என்ன ஒரு அபார நினைவாற்றல்...! முதலில் வண்டிவண்டியாக என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுக்களைப் பிடியுங்கள் !
'நடிகர் திலகத்தின் படப்பிடிப்பு கட்டுரைகள்' என்கின்ற தலைப்பில் நான் ஒரு கோப்பு(File) வைத்துள்ளேன். அதில் பத்திரிகைகளில் வந்த அவரது பல திரைப்படங்களின் படப்பிடிப்பு கட்டுரைகள் இருக்கிறது. "பாதுகாப்பு" படப்பிடிப்பு கட்டுரை அதில் இல்லை. தங்கள் புண்ணியத்தில் இன்று [27.11.2011] - அதுவும் "பாதுகாப்பு" வெளியான 42-வது தொடக்கவிழா தினத்தன்று - அக்கட்டுரை ஒரு மிகமிக அரிய ஆவணப்பொக்கிஷமாக எனக்கு கிடைத்துவிட்டது. எனக்கு மட்டுமா, இங்கே உள்ள எல்லோருக்கும்தான். இதற்காக தங்களுக்கு எனது எண்ணிலடங்கா நன்றிகள் !
தாங்கள் எழுதியதைப் பார்க்கும்போது, இதுபோன்று கடலூரில் இன்னும் பல நடிகர்திலகத்தின் படங்களின் விரிவான படப்பிடிப்புகள் நடைபெற்றிருக்கக்கூடாதா என்கின்ற ஏக்கம் மேலிடுகிறது. அப்படி நடந்திருந்தால், எத்தனை இதுபோன்ற உன்னதமான கட்டுரைகள் தங்கள் கைவண்ணத்திலிருந்து பளிச்சிட்டிருக்கும்...! Anyway, Hats Off to You Vasu Sir !
ஒரு அருமையான படப்பிடிப்புக் கட்டுரையில் எத்தனை சிறப்பம்சங்களை வழங்கியிருக்கிறீர்கள்...
- தங்கள் ஊரான கடலூர் குறித்த ஒரு மினி Factfile
- வெளிப்புறப் படப்பிடிப்பை தங்களது வருணனையில் எங்களையும் நேரிலேயே பார்க்கவைத்தவிதம்
- அசத்தல் ஸ்டில்ஸ்
- நடிகர் திலகத்தின் எளிமை, பொதுஜனத்தொடர்பு, விளம்பரம்தேடா கொடைக்கரம், நகைச்சுவை உணர்வு போன்ற அவரது அளப்பரிய நற்பண்புகளுக்கு சிறந்த உதாரணங்கள்
- ரசிகப்பிள்ளைகளிடம் அவர் காட்டிய பாசம்-பரிவு
- நண்பர்களிடம் நல்லுறவாக அவர் பேணிய நட்புறவு
என ஒரு மாபெரும் கதாநாயகனுடைய வெளிப்புறப் படப்பிடிப்புக் கட்டுரை எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு இக்கட்டுரை மூலம் இலக்கணத்தை வகுத்துவிட்டீர்கள். உண்மையைச் சொல்கிறன், நானும் நடிகர் திலகத்தின் படப்பிடிப்புக் கட்டுரைகள் பலவற்றை, பல பிரபல சினிமா பத்திரிகைகளில் பல நிருபர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் எழுதியவற்றையெல்லாம் படித்திருக்கிறேன். அந்த அனைத்து கட்டுரைகளையும் தாங்கள் எழுதிய இந்தப் படப்பிடிப்புக் கட்டுரை தூக்கி சாப்பிட்டுவிட்டது.
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பார்த்த "பாதுகாப்பு" படப்பிடிப்பை, அந்த அனுவங்களை, 51வது வயதில் பாதுகாத்துத்தரும் தாங்கள், தங்கள் குடும்பமும், நட்பும் சூழந்து செழித்தோங்க, பல்லாண்டு பல்லாண்டு காலம், இறைவனின்-இதயதெய்வத்தின் அருள் என்ற "பாதுகாப்பு"டன் வளமாக வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன் !
["பாதுகாப்பு" மெகா ஆல்பம் வழக்கம்போல் மிக அருமை !]
ஒரு மினி நகைச்சுவை:
["நம் நாடு" விளம்பரத்தை நமது திரியில் பதிவிடும்போது, யாரேனும் ஏதேனும் சொல்வார்களோ என்ற ஒருவித தயக்கத்துடன்தான் பதிவிட்டேன். ஆனால் வாசுதேவன் ஆகிய தாங்கள் இருக்க எனக்கென்ன கவலை?! உடனேதான் நீங்கள் எனக்கு "பாதுகாப்பு" அளித்துவிட்டீர்களே !!!]
பாசத்துடன்,
பம்மலார்.
-
வாசுதேவன் சார்,
பாதுகாப்பு ஷூட்டிங் பற்றிய நினைவலைகள் அருமை! தாங்கள் 9 வயதில் பார்த்ததை ஏதோ நேற்று நடந்தது போல் அழகாக விவரித்துள்ளீர்கள்!!!
மிக்க நன்றி!
-
டியர் mr_karthik,
நமது வாசு சாருக்கு தாங்கள் பதிவிட்ட பாராட்டுப்பதிவில், தங்களது "பாதுகாப்பு" நினைவுகளையும், அக்காவியம் குறித்த தங்களது கண்ணோட்டத்தையும் மிக அழகுற அளித்துள்ளீர்கள் ! தங்களுக்கு எனது பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
Dear goldstar,
Thanks for your whole-hearted wishes & compliments !
Regards,
Pammalar.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
பாதுகாப்பு
[27.11.1970 - 27.11.2011] : 42வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5111-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
அண்ணன் ஒரு கோயில்
[10.11.1977 - 10.11.2011] : 35வது உதயதினம்
சாதனைச் செப்பேடுகள்
'தீபாவளி முதல்' விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5100-1.jpg
'தீபாவளி முதல்' விளம்பரம் : பேசும் படம் : நவம்பர் 1977
http://i1110.photobucket.com/albums/...GEDC5110-1.jpg
'இன்று முதல்' விளம்பரம் : தினத்தந்தி : 10.11.1977
http://i1110.photobucket.com/albums/...GEDC5095-1.jpg
'NOW RUNNING SUCCESSFULLY' Ad
http://i1110.photobucket.com/albums/...GEDC5101-1.jpg
'வெற்றி நடைபோடுகிறது' விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5104-1.jpg
'குடும்ப சித்திரம்...சிறந்த சித்திரம்' பாராட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5103-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி (திருச்சி) : 27.11.1977
http://i1110.photobucket.com/albums/...GEDC5097-1.jpg
95வது நாளன்று கொடுக்கப்பட்ட விளம்பரம் : தினத்தந்தி : 12.2.1978
http://i1110.photobucket.com/albums/...GEDC5098-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 17.2.1978
http://i1110.photobucket.com/albums/...GEDC5105-1.jpg
தொடரும்....
பக்தியுடன்,
பம்மலார்.
-
-
முத்தான முரளி சார் அவர்களுக்கு,
தங்களுடைய அன்பு பாராட்டுக்களுக்கு என் தலைவணங்கிய கோடானு கோடி நன்றிகளை ஆனந்தக் கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன். நடிகர் திலகம் என்ற சாகரத்தில் மூழ்கி முத்துக்கள் எடுத்த தங்களை போன்ற பழுத்த அனுபவசாலிகளின் அன்புக்குப் பாத்திரமானது நான் செய்த பெரும் பாக்கியம். தங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு என் மனமகிழ்வான நன்றிகளை மறுபடி மறுபடி தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.