அன்புள்ள முரளி சார்,
'மனிதரில் மாணிக்கம்' பட்த்தைப்பற்றி எழுதத்துவங்கி 71 தீபாவளி முதல் 74 தீபாவளி வரையிலான கால கட்டத்தை தீர்க்கமாக அலசிவிட்டீர்கள். மிக அருமையான சுவையான விவரங்கள். மதுரை மாநகர் நிலவரங்களை அப்படியே கண்முன் கொண்டு வருகிறீர்கள்.
(மதுரையின் கடந்த கால நிலவரங்கள் பற்றி நீங்களும், சென்னை நிகழ்வுகள் பற்றி சாரதா, ராகவேந்தர் சார், மற்றும் நான், கடலூர் நிகழ்வுகள் பற்றி வாசுதேவன் சார், செல்லை பற்றி சதீஷ் போன்றோர் எழுதுவது போல மற்ற பெருநகரங்களான திருச்சி, சேலம் நகரங்களில் நடிகர்திலகத்தின் திரைப்பட நிகழ்வுகள் பற்றி அப்பகுதி ரசிகர்கள் எழுதினால் சுவையாக இருக்குமே).
மனிதரில் மாணிக்கம், சிவகாமியின் செல்வன் தலைப்புகளைப்போல, தலைவர்களை நினைவு கூர்ந்த இன்னொரு படத்தலைப்பு 'ரோஜாவின் ராஜா'.
திரைப்பட வரலாற்றை எழுதும்போது, அன்றைய அரசியல் சூழலையும் மறவாமல் சேர்த்து எழுதி சுவையூட்டுவது தங்களுக்கே உரிய ஸ்பெஷாலிட்டி. அதைப்படிக்கும்போது மனம் பின்னோக்கிச்சென்று அந்த காலகட்டத்தில் சஞ்சரிக்கிறது.
எல்லோரும் விடுக்கும் வேண்டுகோள்தான் நானும் உங்களுக்கு வைப்பது. அது 'முன்போல அடிக்கடி வாருங்கள், அள்ளித்தாருங்கள்' என்பதுதான்.